இவன் வேட்டைக்கு உகந்தவனா, இவன் மரபணுக்கள் வேட்டுவ வீரியம் கொண்டவனவா என்று தரம் பிரிந்து பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தால், ஆண்களுக்கு வேட்டையின் தங்கள் திறமையை நிரூபவித்துக்காட்ட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது.
ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனையே இருந்தது. புலி, சிங்கம், ஓநாய் மாதிரி மனிதன் பரம்பரை வேட்டுவன் அல்லவே. இவன் குரங்கு வம்சாவழியிலிருந்து வந்தவனாயிற்றே. குரங்குகள் பெரிதாய் வேட்டையாடாதே. அப்படியே பார்த்தாலும், இயல்பில் எல்லா ஜீவராசிகளிலுமே ஆணை விட பெண் தானே அதிக திறமையாய் வேட்டையாடும். இவனோ ஆண், ஆனால் வேட்டையில் சிறந்து விளங்கினாலே ஒழிய பெண் இவனோடு கூடமாட்டாள் என்கிற நிலைமை….ஆனால் இவனுடைய மரபணுக்கள் லேசுபட்டவை இல்லையே…..எந்த சூழ்நிலையிலும் தன்னை மீட்டுருவாக்கம் செய்து ஜெயித்துக்கொண்டே இருக்க முயல்வது தானே இவற்றின் ஸ்பெஷாலிட்டி……அதனால் மீண்டும் தம்மை புதுபித்துக்கொண்டன ஆணின் மரபணுக்கள். எப்படி என்று தானே கேட்குறீர்கள்:
இயற்கையின் பொது விதி: ஆண் பால் தான் பெண்ணை தேடி கண்டு பிடித்து கூட வேண்டும். அதனால் இயல்பிலேயே ஆண்களுக்கு தொலை தூரம் துணை தேடி போகும் தன்மை உண்டு. இன்றும் கூட இளவட்ட ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டாலே, ஏதாவது வண்டி பிடித்து அக்கம் பக்கத்து ஊர்களுக்கு போய் அங்கிருக்கும் பெண்களை எல்லாம் தரிசித்துவிட்டு வருவதையே ஒரு ஸ்வாரசியமான பொழுது போக்காய் வைத்திருக்கிறார்களே….அது தான் இயல்பான ஆடவர் குணம். இதற்காகவே ஆண்பால் மூளையில் தூரம், திசை, ஆகியவற்றை எடைபோட வல்ல பிரத்தியேக மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பெண்பால் மூளையில் அவ்வளவு வலிமையாக இருப்பதில்லை. அதனால் தான் இன்றும் கூட பெண்களால் திறந்த வெளிகளில் திக்கு திசை அனுமானிக்க முடிவதில்லை. ஏதாவது நில குறிகள் (landmarks) இருந்தால் அவற்றைவைத்து இடங்களை அடையாளம் கண்டு கொள்ள முயல்கிறார்கள் பெண்கள். இப்படி இயற்கை துணை தேடலுக்காக ஆண்களுக்கு இயல்பாக அருளிய இந்த மூளை மையத்தை தான் ஆண்கள் மிக சாமார்த்தியமாக இரை தேடவும் பயன் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். போக போக இதில் செம்மை தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாறி போனார்கள்
இயற்கையின் அடுத்த அமைப்பு: ஆண்களின் மூளை இருக்கும் “உருவம் அறிந்து பொருத்தும் தன்மை” இதை stereognosis என்போம். கலவியின் போது பெண்பால் பெரிதாய் மூளையை பயன்படுத்த வேண்டி இருப்பதில்லை. சும்மா வெறுமனே அசையாமல் இருந்தாலே போதும். ஆனால் ஆணின் பணியோ ரொம்பவே நுனுக்கமானது. உடல் பாகங்களை மிக சரியாக ஒரிங்கிணைத்து, பொருத்தினாலே ஒழிய இனவிருத்தி ஏற்படாது. ஆக ஒரு ஜீவராசி தழைப்பதும், சுவடே இல்லாமல் மறிப்பதும் ஆணின் ஸ்டீரியோகுனோஸிஸ் என்கிற இந்த திறமையை பொருத்து தான். அதனால் இயற்க்கை ஆணின் மூளைக்கு மட்டும் இப்படி உருவங்களை உணரும் பிரத்தியேக மையத்தை அமைத்திருக்கிறது. குரங்காய் இருந்த போது இந்த மையத்தை வெறுமனே துணை சேர்க்கைக்காக பயன்படுத்தியவன், மனிதனாய் மாறி மாமிச வேட்டைக்கு போகும் போது, இதே மையத்தை ஆயுதம் தயாரிக்க பயன்படுத்த ஆரம்பித்தான். இதனால் மனித குலமே கூடுதல் பிழைக்கும் திறனை பெற்றது
இப்படி இயறக்கையில் ஏற்கனவே இருந்த அமைப்புக்களை வைத்து ஆண் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டாலும், அடிப்படையில் இவன் வேட்டுவ வம்சாவழி இல்லை…..அதனால் வேட்டைக்குண்டான குறி பார்த்தால், வேகம் உணர்தல், திட்ட மிட்டு கூடி வேட்டையாடுதல், சமிஞ்சையின் மூலமாய் இரைக்கு தெரியாமல் உரையாடிக் கொள்ளுதல், என்பது மாதிரியான மற்ற மையங்கள் அவன் மூளையின் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்த மையங்கள் இல்லாமல் வேட்டையாட முடியாதே! இதற்க்காக புது புது மையங்களை மூளையில் உருவாக்கினாலோ, மூளையின் சுற்றளவு பெரிதாகிவிடும். மூளையின் சுற்றளவு ரொம்பவும் பெரிதாகிவிட்டால் மனித பெண்ணின் இடுப்பு வழியாக இந்த பெரிய தலையை பிரசவிப்பது என்பது பெரும் பாடாகிவிடும். இதுவே பெரிய இக்கட்டாகி போனது. மூளையில் புது மையங்களும் வேண்டும், ஆனால் மூளையின் மொத்த சுற்றளவும் பெரிதாகாமல் பிரசவத்திற்கு தோதான சைஸிலேயே இருக்க வேண்டும் என்றால்………..அதற்கும் ஒரு வழியை கண்டு பிடித்தன ஆணின் மரபணுக்கள்: பேச்சுக்கு உண்டான மையத்தை ஒரு வேட்டுவன் ரொம்பவும் பயன் படுத்த முடியாதே…….அவன் பலநாட்கள் அமைதியாய் பதுங்கி இருந்து தானே வேட்டையாடவே செய்வான், ஆக எப்படியும் பேச்சு அவனுக்கு உதவ போவதில்லை. அடுத்து முகத்தை பார்த்து உணர்வை புரிந்துக்கொள்ளும் மையமும் வேட்டையின் போது ரொம்பவும் தேவை படாது………அப்புறம் இவன் பாட்டிற்கு “அய்யோ பாவம் இந்த குட்டி மான்.” என்று முகம் பார்த்து உருக ஆரம்பித்துவிட்டான் என்றால் வேட்டையை கொட்டை விட்டு விடுவான், அப்புறம் இவன் குட்டிகள் பட்டினி கிடக்க நேரிடலாம். அதனால் இந்த முகத்தை பார்த்து ஃபீல் செய்யும் மையமும் அவனுக்கு அவ்வளவாக தேவை படவில்லை. ஒரே சமயத்தில் பல விஷயங்களை போட்டு மனதில் உலப்பிக்கொண்டே இருந்தாலும் அவனால் வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. அதனால் multi tasking மையமும் ஒரு வேட்டுவனுக்கு தேவை இல்லை. பல நாட்களுக்கு ஏக மனதாய் ஒரே குறியாய் கவனம் சிதறாமல் காத்திருந்தால் தான் அவன் வேட்டையில் வெற்றி பெறவே முடியும்……..ஆக கூட்டி கழித்து பார்த்தால், மொழி மையம், முகபாவத்தை கிரகிக்கும் மையம், பலவிஷயங்களை ஒரே சமயத்தில் ஒரிங்கிணைத்து யோசிக்கும் மையம் ஆகியவை எல்லாம் வேட்டைக்கு தேவைபடவில்லை. அதனால் இந்த மையங்களுக்காக அதுவரை ஒதுக்கிய இடத்தை பெரும்பாலும் காலி செய்துவிட்டு, வேட்டைக்கு வேண்டிய புதிய தேர்ச்சிகளை வெற்றிடங்களில் நிரப்பின ஆண்களின் மரபணுக்கள்.
இந்த மாற்றங்களினால் மனித ஆண் கை தேர்ந்த வேட்டுவன் ஆனான். ஆனால் அதற்கு மேல் பெண்களின் மனதையோ, முக பாவத்தையோ புரிந்துக்கொண்டு இனிமையாய் பேசும் தன்மையை அவன் இழந்து விட்டான். இரை கிடக்கிறதோ இல்லையோ, ஒரே இலக்கை துரத்திக்கொண்டு போய், தவமாய் தவம் கிடந்து அதில் பெரிய ஸ்வாரசியம் உணரும் விசித்திரமான குணத்தையும் பெற்றான். அதனால் ஆண் பெண் என்கிற இந்த இரண்டு பாலினத்திற்கும் பெரிய மன இடைவெளி உருவாக ஆரம்பித்தது. அதற்கு மேல் ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்ளுவது கடினமாகிவிட்டது. அனால் புரிந்துக்கொள்வதை விட, பிழைத்துக்கொள்ளுதல் அந்த காலத்தில் முக்கியமாக பட்டதால் ஆணின் மூளை மாற்றங்களை பெண்கள் சட்டை செய்துக்கொள்ளவில்லை…………உணவு கொண்டு வரும் வரை எல்லாமே ஷேமம் தான் என்று இருந்து விட்டார்கள். ஆனால் போக போக ஆணின் மூளை மாற்றத்தினால் பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்தன………அவற்றைபற்றி எல்லாம்………..
தமிழில்
தமிழோடு விளையாடியதன் விளைவுகள்....
Monday, September 12, 2011
Friday, March 18, 2011
டெஸ்டோஸ்டீரான் ததும்பும் ஆண்
மனித பெண் உடல் ரோமங்களை இழந்ததில் சுகம் அதிகம் உணர ஆரம்பித்தாலும், இதுலும் ஒரு அசவுகரியம் இருந்தது. குரங்கு பாணீயில் உடல் முழுக்க ரோமம் இருந்த போது, குட்டி அம்மாவை பற்றிக்கொள்ள இது ரொம்பவே சவுகரியமாய் இருந்தது. இன்றும் குரங்குகுட்டிகள் அம்மாவின் வயிற்றை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், அம்மா மரத்திற்கு மரம் தாவினாலும் விழுந்துவிடாமல் பத்திரமாகவே இருக்கும். ஆனால் மனித பெண்ணுக்கு உடல் ரோமம் நீங்கியதால், அவள் குட்டியின் பாடு திண்டாட்டம் ஆகிபோனது. இதனால் அங்கே இங்கே தாவும் வேலையை எல்லாம் நிறுத்திக்கொண்டு, குழந்தை சுயமாய் நடக்கும் வரை அம்மா அதன் பக்கத்திலேயே இருந்து பராமறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படி பெண்கள் எல்லாம் பிள்ளை பராமறிப்புக்கு முதலிடம் கொடுத்து, ஒரே இடமாய் இருக்க ஆரம்பிக்க ஆண்களின் நிலை இதற்கு நேர்மாறாய் இருந்தது. அவனுடைய கைகளுக்கு புதிய நுனுக்கங்கள் சாதியமாகிவிட, இந்த கைகளை வைத்துக்கொண்டு அவனால் சும்மாவே இருக்க முடியவில்லை. அதனால் கை வேலைபாடுகள் பலவற்றை செய்ய ஆரம்பித்தான்…….சிப்பிகளையும் கற்களையும் தேய்த்து ஆயுதங்களை உருவாக்கினான். இந்த ஆயுதங்கள் சின்ன சின்ன வேட்டைகளுக்கு உகந்ததாய் அமைந்துவிட, வேட்டை மனித ஆணின் இஷ்ட பொழுதுபோக்காய் மாற ஆரம்பித்தது.
குரங்காய் இருந்தவரை மனிதர்கள் அவ்வளவாக வேட்டையாடி இருக்கவில்லை. ஆனால் மனிதர்களாய் மாற ஆரம்பித்தபோதோ, பெரிதாகிக்கொண்டே இருந்த அவர்களது மூளைக்கு கூடுதல் போஷாக்கு தேவைபட்டது. அப்போதென்று பார்த்து உலகெங்கும் The Great Ice Age என்று சொல்லப்படும் கொடும்பனிக்காலம் பரவிவிட, தாவரங்கள் எல்லாம் பனியில் பட்டுப்போயின. தாவிரபட்ஷிணியாய் வாழ்வது சிரமமான காரியமானது. அதனால் மனிதர்களில் ஒரு பிரிவினர் மட்டும், மாமிச பட்சினிகளாய் மாறினார்கள்.
காய்கனிகளை போல மாமிசம் மரத்தின் காத்துக்கொண்டிருக்காதே, அவற்றை வேட்டையாடி கொண்டு வரவேண்டுமே. கொடும்பனிகாலத்தின் குளிர், பெரிதாகிக்கொண்டிருந்த மனித மூளையின் எரிபொருள் தேவை, கொஞ்சமாய் சாப்பிட்டாலும் நெடுநேரத்திற்கு சக்தி கொடுக்கும் மாமிச புரதத்தின் fuel economics…….இவை எல்லாமாய் சேர்ந்து மாமிசத்தின் மவுசை அதிகரித்திருக்க, இந்த காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப மனித பெண்களும் தங்கள் துணை தேர்வு விதிகளை வளைந்து உருமாற்றினார்கள். அதுவரை ஆணின் துணையை வெறும் சுகத்திற்காக மட்டுமே நாடிய பெண்கள் வரலாற்றின் முதல் முறையாக உணவிற்க்காக ஆண்களை அண்டி பிழைக்க ஆரம்பித்தார்கள். இதனால் அதிக உணவை (மாமிசத்தை) வேட்டையாட தெரிந்தவனையே பெண்கள் எல்லோரும் பெரிதாய் விரும்பி உறவாட முயல,”வேட்டுவ வீரியம்” ஆணின் கலவியல் வெற்றியலை நிர்நியிக்க ஆரம்பித்தது.
இன்றும் அந்தமானில் வாழும் ஜாரவா பழங்குடியினரிடையே இந்த மரபு நடைமுறையில் இருக்கிறது. ஜாரவா பெண்களை மணக்க விரும்பும் ஆண், தானே போய் வேட்டையாடிய கறியை தன் கையாலேயே பக்குவமாய் சமைத்து, பெண்ணுக்கு கொடுப்பானாம். அவன் கொண்டுவந்த கறி பிடித்திருந்தால் தான் பெண் அவனை தேர்ந்தெடுத்து, கூடிவாழ்வாளாம்.
ஆனால் வேட்டை என்பது சாதாரண காரியம் இல்லையே. வெகு தூரம் நடந்து, தன்னை விட பெரிய வலிய மிருகங்களை கொன்று, அதன் கறியை சுமந்து, காடு மேடு, மலைகளை கடந்து குகைக்கு திரும்ப வேண்டுமே……..இவ்வளவு கடுமையான உழைப்பை செய்ய வேண்டுமானால் அவனுக்கு ஒலிம்பிக்ஸ் வீரனை மாதிரியான கட்டுமஸ்தானான உடல் தேவை படுமே. இன்றைய ஒலிம்பிக்ஸ் வீரர்கள் நெஸாய் ஹார்மோன் ஊசிகளை போட்டு, உடம்பை செயற்க்கையாக உப்பி புடைக்க வைத்து, வீரியத்தை கூட்டிக்கொள்கிறார்கள். அந்த காலத்தில் இந்த தில்லு முல்லுக்கெல்லாம் வழியே இல்லையே…..நேர்மையாய், இயற்க்கைமுறைபடி, அவனவன் உடம்பில் இவனே அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலை பெரிதாக்கிக்கொண்டாலே ஒழிய வேட்டையில் அவன் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்த தேவைக்கு ஈடு கொடுத்து, மனித ஆணின் மரபணுக்கள் மருவிக்கொண்டே இருக்க, அவன் உடல் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஆணின ஹார்மோனை அதிகமாய் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
இந்த டெஸ்டோஸ்டீரோன் இருக்கிறதே, அது ரொம்பவே ஸ்வாரசியமான ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் ஆண்மைக்கே காரணம். சொன்னால் ஆட்சரியப்படுவீர்கள்: ஜனிக்கும் போது, எல்லா கருக்களுமே பெண்ணாய் தான் உருவாகின்றன. இன்றும் மனித கருக்கள் அனைத்துமே ஆரம்ப காலத்தின் பெண் வடிவாய் தான் இருக்கின்றன. ஆறு வாரம் இப்படி பெண்ணாய் கருவரை வாசம் செய்த பிறகு தான், Y குரோமோசோம் இருக்கும் கருக்கள், டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த டெஸ்டோஸ்டீரோன் அந்த கருவின் உடல் முழுக்க பரவி, ஏற்கனவே பெண்ணாய் இருக்கும் இந்த கருவை, வேறில் இருந்து நுனி வரை, rewiring செய்து ஆண்மை படுத்திவிடுகிறது. இப்படி masculinize செய்யபடுவதால் தான் ஆண் உருப்புக்கள், ஆண்மைத்தனமான உடல் அமைப்பு, ஆண் என்கிற பாலியல் அடையாளம் எல்லாம் ஏறபடுகின்றன.
இப்பேற்பட்ட மகிமைகள் வாய்ந்த இந்த டெஸ்டோஸ்டீரோனை தான் ஆதிகால ஆண்களின் உடல்கள் மிகவும் அதிகமாய் சுரக்க ஆரம்பித்தன. இதனால் மனித ஆண் மனித பெண்ணை விட மிக உயரமாய், வலிமையாய், தேக உறுதி கொண்டவனாய் மாற ஆரம்பித்தான்.
இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான் ததும்பும் ஆணை தேர்ந்தெடுத்தால் தான் தனக்கு தன் குட்டிகளுக்கும், உணவு, பாதுகாப்பு, எல்லாம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், அதிக டெஸ்டோஸ்டீரோன் இருக்கும் ஆணோடு கூடினால் தானே அதற்குண்டான மரபணுக்களை இவள் குழந்தைகள் பெற முடியும்……….அப்போது தானே அடுத்த தலைமுறையும் சுபிட்சமாய் வாழ முடியும்.
ஆக தன் உணவு என்கிற அண்மைகால அனுகூலத்தை விட, அடுத்த தலைமுறைக்கான மரபணு தேர்வு என்கிற தொலைநோக்கு அனுகூலமும் இதில் ஒளிந்திருந்ததால் பெண்கள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் ஆண்களாய் பார்த்து தேர்ந்தெடுத்து உறவு கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் ஆண்களுக்குள் ஒரு டெஸ்டோச்டீரோன் போட்டி தலையெடுக்க ஆரம்பித்தது……… ஆனால் துரதுஷ்டவசமாய் இதற்கு சில பக்க விளைவுகள் ஏற்பட, அதனால் மனித வரலாற்றில் பல புது திருப்பங்கள் உருவாயின.
இப்படி பெண்கள் எல்லாம் பிள்ளை பராமறிப்புக்கு முதலிடம் கொடுத்து, ஒரே இடமாய் இருக்க ஆரம்பிக்க ஆண்களின் நிலை இதற்கு நேர்மாறாய் இருந்தது. அவனுடைய கைகளுக்கு புதிய நுனுக்கங்கள் சாதியமாகிவிட, இந்த கைகளை வைத்துக்கொண்டு அவனால் சும்மாவே இருக்க முடியவில்லை. அதனால் கை வேலைபாடுகள் பலவற்றை செய்ய ஆரம்பித்தான்…….சிப்பிகளையும் கற்களையும் தேய்த்து ஆயுதங்களை உருவாக்கினான். இந்த ஆயுதங்கள் சின்ன சின்ன வேட்டைகளுக்கு உகந்ததாய் அமைந்துவிட, வேட்டை மனித ஆணின் இஷ்ட பொழுதுபோக்காய் மாற ஆரம்பித்தது.
குரங்காய் இருந்தவரை மனிதர்கள் அவ்வளவாக வேட்டையாடி இருக்கவில்லை. ஆனால் மனிதர்களாய் மாற ஆரம்பித்தபோதோ, பெரிதாகிக்கொண்டே இருந்த அவர்களது மூளைக்கு கூடுதல் போஷாக்கு தேவைபட்டது. அப்போதென்று பார்த்து உலகெங்கும் The Great Ice Age என்று சொல்லப்படும் கொடும்பனிக்காலம் பரவிவிட, தாவரங்கள் எல்லாம் பனியில் பட்டுப்போயின. தாவிரபட்ஷிணியாய் வாழ்வது சிரமமான காரியமானது. அதனால் மனிதர்களில் ஒரு பிரிவினர் மட்டும், மாமிச பட்சினிகளாய் மாறினார்கள்.
காய்கனிகளை போல மாமிசம் மரத்தின் காத்துக்கொண்டிருக்காதே, அவற்றை வேட்டையாடி கொண்டு வரவேண்டுமே. கொடும்பனிகாலத்தின் குளிர், பெரிதாகிக்கொண்டிருந்த மனித மூளையின் எரிபொருள் தேவை, கொஞ்சமாய் சாப்பிட்டாலும் நெடுநேரத்திற்கு சக்தி கொடுக்கும் மாமிச புரதத்தின் fuel economics…….இவை எல்லாமாய் சேர்ந்து மாமிசத்தின் மவுசை அதிகரித்திருக்க, இந்த காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப மனித பெண்களும் தங்கள் துணை தேர்வு விதிகளை வளைந்து உருமாற்றினார்கள். அதுவரை ஆணின் துணையை வெறும் சுகத்திற்காக மட்டுமே நாடிய பெண்கள் வரலாற்றின் முதல் முறையாக உணவிற்க்காக ஆண்களை அண்டி பிழைக்க ஆரம்பித்தார்கள். இதனால் அதிக உணவை (மாமிசத்தை) வேட்டையாட தெரிந்தவனையே பெண்கள் எல்லோரும் பெரிதாய் விரும்பி உறவாட முயல,”வேட்டுவ வீரியம்” ஆணின் கலவியல் வெற்றியலை நிர்நியிக்க ஆரம்பித்தது.
இன்றும் அந்தமானில் வாழும் ஜாரவா பழங்குடியினரிடையே இந்த மரபு நடைமுறையில் இருக்கிறது. ஜாரவா பெண்களை மணக்க விரும்பும் ஆண், தானே போய் வேட்டையாடிய கறியை தன் கையாலேயே பக்குவமாய் சமைத்து, பெண்ணுக்கு கொடுப்பானாம். அவன் கொண்டுவந்த கறி பிடித்திருந்தால் தான் பெண் அவனை தேர்ந்தெடுத்து, கூடிவாழ்வாளாம்.
ஆனால் வேட்டை என்பது சாதாரண காரியம் இல்லையே. வெகு தூரம் நடந்து, தன்னை விட பெரிய வலிய மிருகங்களை கொன்று, அதன் கறியை சுமந்து, காடு மேடு, மலைகளை கடந்து குகைக்கு திரும்ப வேண்டுமே……..இவ்வளவு கடுமையான உழைப்பை செய்ய வேண்டுமானால் அவனுக்கு ஒலிம்பிக்ஸ் வீரனை மாதிரியான கட்டுமஸ்தானான உடல் தேவை படுமே. இன்றைய ஒலிம்பிக்ஸ் வீரர்கள் நெஸாய் ஹார்மோன் ஊசிகளை போட்டு, உடம்பை செயற்க்கையாக உப்பி புடைக்க வைத்து, வீரியத்தை கூட்டிக்கொள்கிறார்கள். அந்த காலத்தில் இந்த தில்லு முல்லுக்கெல்லாம் வழியே இல்லையே…..நேர்மையாய், இயற்க்கைமுறைபடி, அவனவன் உடம்பில் இவனே அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலை பெரிதாக்கிக்கொண்டாலே ஒழிய வேட்டையில் அவன் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்த தேவைக்கு ஈடு கொடுத்து, மனித ஆணின் மரபணுக்கள் மருவிக்கொண்டே இருக்க, அவன் உடல் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஆணின ஹார்மோனை அதிகமாய் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
இந்த டெஸ்டோஸ்டீரோன் இருக்கிறதே, அது ரொம்பவே ஸ்வாரசியமான ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் ஆண்மைக்கே காரணம். சொன்னால் ஆட்சரியப்படுவீர்கள்: ஜனிக்கும் போது, எல்லா கருக்களுமே பெண்ணாய் தான் உருவாகின்றன. இன்றும் மனித கருக்கள் அனைத்துமே ஆரம்ப காலத்தின் பெண் வடிவாய் தான் இருக்கின்றன. ஆறு வாரம் இப்படி பெண்ணாய் கருவரை வாசம் செய்த பிறகு தான், Y குரோமோசோம் இருக்கும் கருக்கள், டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த டெஸ்டோஸ்டீரோன் அந்த கருவின் உடல் முழுக்க பரவி, ஏற்கனவே பெண்ணாய் இருக்கும் இந்த கருவை, வேறில் இருந்து நுனி வரை, rewiring செய்து ஆண்மை படுத்திவிடுகிறது. இப்படி masculinize செய்யபடுவதால் தான் ஆண் உருப்புக்கள், ஆண்மைத்தனமான உடல் அமைப்பு, ஆண் என்கிற பாலியல் அடையாளம் எல்லாம் ஏறபடுகின்றன.
இப்பேற்பட்ட மகிமைகள் வாய்ந்த இந்த டெஸ்டோஸ்டீரோனை தான் ஆதிகால ஆண்களின் உடல்கள் மிகவும் அதிகமாய் சுரக்க ஆரம்பித்தன. இதனால் மனித ஆண் மனித பெண்ணை விட மிக உயரமாய், வலிமையாய், தேக உறுதி கொண்டவனாய் மாற ஆரம்பித்தான்.
இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான் ததும்பும் ஆணை தேர்ந்தெடுத்தால் தான் தனக்கு தன் குட்டிகளுக்கும், உணவு, பாதுகாப்பு, எல்லாம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், அதிக டெஸ்டோஸ்டீரோன் இருக்கும் ஆணோடு கூடினால் தானே அதற்குண்டான மரபணுக்களை இவள் குழந்தைகள் பெற முடியும்……….அப்போது தானே அடுத்த தலைமுறையும் சுபிட்சமாய் வாழ முடியும்.
ஆக தன் உணவு என்கிற அண்மைகால அனுகூலத்தை விட, அடுத்த தலைமுறைக்கான மரபணு தேர்வு என்கிற தொலைநோக்கு அனுகூலமும் இதில் ஒளிந்திருந்ததால் பெண்கள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் ஆண்களாய் பார்த்து தேர்ந்தெடுத்து உறவு கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் ஆண்களுக்குள் ஒரு டெஸ்டோச்டீரோன் போட்டி தலையெடுக்க ஆரம்பித்தது……… ஆனால் துரதுஷ்டவசமாய் இதற்கு சில பக்க விளைவுகள் ஏற்பட, அதனால் மனித வரலாற்றில் பல புது திருப்பங்கள் உருவாயின.
Labels:
ஆனந்த விகடன் தொடர்
Monday, January 31, 2011
கைக்கார மனிதன்
எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று.
கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது.
மற்ற மிருகங்களுக்கு இந்த பிரச்சனையே இல்லை……பெண்ணை பார்த்தோமா? போட்டியிட்டு, மற்ற ஆண்களை விரட்டிவிட்டு அவளை ஓரம் கட்டினோமா? அவள் பின்னால் போய் லபக் என்று பிடித்து, படக்கென்று புணர்ந்து, மடக் என்று மரபணுக்களை முதலீடு செய்தோமா, சிம்பிள்! மேட்டர் ஒவர், என்று செயல் படுகின்றன மற்ற மிருகங்கள்.
ஆனால் மனிதர்களுக்கு இந்த முறை ஒத்துவரவில்லை. முதலில் மனித பெண்ணை போய் பின்னாலிருந்து பிடித்தெல்லாம் உறவுக்கொள்ளவே முடியாத நிலை. காரணம் இவள் மற்ற ஜீவராசிகளை போல நான்கு காலில் நடப்பதில்லையே. இவள் தான் மிக புதுமையாக இரண்டு காலில் நிமிர்ந்து நடக்கிறாளே. நடந்தால் நடந்து விட்டு போகட்டும், அதற்கும் செக்ஸுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இதில் தான் பிரச்சனையே!
நான்கு காலில் நடக்கும் விலங்குகளுக்கு கர்பப்பை மல்லாந்த நிலையில் இருக்கும், அதனால் புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது. இப்படி படிந்துகிடக்கும் இந்த கர்ப்பப்பையினுள் மரபணுக்களை செலுத்தினால் அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது, அதனால் மகசூல் அதிகாக இருக்கும். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள். இவள் கர்பப்பையும் இதனால் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு, செங்குத்தாகவே இருக்கிறது. இந்த நிலையில் இவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும்…..அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது?
ஆனால் இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்திற்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன. கைகளை வேறூ வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது, இதனால் மற்ற மிருகங்களை விட மிக வேகமாய் முன்னேற முடிந்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கலவியின் போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை. அந்த சமயத்திற்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுத்து, மல்லாந்த நிலைக்கு மாற வேண்டி இருந்தது. அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்த பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும்……. அவ்வளவு நேரத்துக்கெல்லாம் சும்மா படுத்து கிடக்க முடியாது, சுத்த போர்! என்று பெண் முரண்டு பண்ணினால் மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ்! ஆக பெண்ணை எப்படியாவது மதிமயக்கி, மல்லாந்து கிடப்பதை ஸ்வாரசியமாக்கினாலே ஒழிய மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பில்லை.
மனித இனத்திற்கு மட்டும் இப்படி ஒரு வினோத தேவை இருந்ததால் தான் இயற்கை மனிதர்களுக்கு மட்டும் என்று சில பிரத்தியேக மாற்றங்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாக தானே இருக்கிறது. ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவு தானே பெண் எலிக்கும். ஆனால் மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பதில்லையே. பருவம் அடைந்த பிறகு மனித ஆணுக்கு பெண்ணை காட்டிலும் அதிகமான உடல் ரோமம் முளைத்து விடுகிறதே. ஆக மனிதர்களை பொருத்த வரையில் பெண்ணுக்கு உடம்பில் முடி மிக குறைவு, இருப்பதும் மிக மிக சன்னமானதே. ஏன் இந்த வித்தியாசம்? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பான்சியில் கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாதே……பெண் ஆண் இரண்டுக்குமே ஒரே மாதிரியான தோல்முடி தானே அவற்றுக்கு. மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம்?
ரோமம் அடர்த்தியாக இருந்தால் தொடுதல் உணர்வை துல்லியமாய் கிரகிக்க முடியாது. இதுவே ரோமம் குறைவாக இருந்தால் தொடுகை உணர்வு சுகமாய் தோன்ற ஆரம்பிக்கும். ரோமம் குறைவான மனித பெண்ணின் தோலை தொட்டு, தடவி, வருடி, மென்மையாக உராசினால் போதும்….அவள் நரம்புகளில் மின்சாரம் அதிகமாய் பாய, மூளை கிளர்ச்சிக்குள்ளாகிறது, அவள் மதி மயங்கி ரொம்ப நேரத்திற்கு அறை தூக்கத்தில் படுத்தே கிடப்பாள். இந்த அவகாசத்திற்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் நல்ல மகசூல் கிடைக்குமே!
ஆனால் இதுலும் ஒரு பிரச்சனை இருந்தது. வெறுமனே பெண்ணின் உடல் ரோமங்களை நீக்கினால் மட்டும் போதாதே. அவள் தோலை பதமாய் கையாளும் பக்கவம் ஆணுக்கும் இருந்தாக வேண்டுமே. இது ஒரு புதிய தேவையாக உருவாகிவிட, இதுவே கலவியல் தேர்வுக்குண்டான ஒரு கோட்பாடாகவும் மாறியது. தன்னை மென்மையாக தொட்டு, வருடி, களிப்புற செய்த ஆண்களையே பெண்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டி மாதிரி தன்னை கையாண்ட ஆண்களை பெண்களை கழற்றிவிட ஆரம்பிக்க, கேட்க வேண்டுமா? கைபதம் இருந்த ஆண்களின் மரபணுக்கள் மட்டுமே பெருவாரியாக பரவின.
இதனால் போக போக ஆண்களுக்கு கைகளின் லாவகம் அதிகரித்துக்கொண்டே போனது…………. இந்த லாவகம் எல்லாம் வெறுமனே பெண்களை தொட்டு தடவுவதற்க்காக மட்டும் இன்றி, மற்ற விஷயங்களுக்கும் பிரயோஜனப்பட்டதால், கல்லை தேய்த்து கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள் மனிதர்கள். இந்த ஒரு சின்ன மாற்றம் மட்டுமே பெரிய பரிணாம வளர்ச்சியை தூண்டிவிட, அதுவரை, குரங்காய் இருந்தவர்கள் மனிதர்களாக மாற ஆரம்பித்தார்கள். இந்த நிலை மனிதர்களை நாம் இன்றும், ஹோமோ ஹேபிலிஸ் Homo habilis, (கைக்கார மனிதன்) என்றே அழைக்கிறோம் என்றால் பாருங்களேன், இந்த கைகளின் மகிமையை! இந்த பரிணாம வளர்ச்சிக்கு காரணமே மனித பெண்ணின் கலவியல் தேர்வு தான் என்றால் அது இன்னும் ஆட்சரியமாக இல்லை?
கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது.
மற்ற மிருகங்களுக்கு இந்த பிரச்சனையே இல்லை……பெண்ணை பார்த்தோமா? போட்டியிட்டு, மற்ற ஆண்களை விரட்டிவிட்டு அவளை ஓரம் கட்டினோமா? அவள் பின்னால் போய் லபக் என்று பிடித்து, படக்கென்று புணர்ந்து, மடக் என்று மரபணுக்களை முதலீடு செய்தோமா, சிம்பிள்! மேட்டர் ஒவர், என்று செயல் படுகின்றன மற்ற மிருகங்கள்.
ஆனால் மனிதர்களுக்கு இந்த முறை ஒத்துவரவில்லை. முதலில் மனித பெண்ணை போய் பின்னாலிருந்து பிடித்தெல்லாம் உறவுக்கொள்ளவே முடியாத நிலை. காரணம் இவள் மற்ற ஜீவராசிகளை போல நான்கு காலில் நடப்பதில்லையே. இவள் தான் மிக புதுமையாக இரண்டு காலில் நிமிர்ந்து நடக்கிறாளே. நடந்தால் நடந்து விட்டு போகட்டும், அதற்கும் செக்ஸுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இதில் தான் பிரச்சனையே!
நான்கு காலில் நடக்கும் விலங்குகளுக்கு கர்பப்பை மல்லாந்த நிலையில் இருக்கும், அதனால் புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது. இப்படி படிந்துகிடக்கும் இந்த கர்ப்பப்பையினுள் மரபணுக்களை செலுத்தினால் அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது, அதனால் மகசூல் அதிகாக இருக்கும். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள். இவள் கர்பப்பையும் இதனால் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு, செங்குத்தாகவே இருக்கிறது. இந்த நிலையில் இவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும்…..அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது?
ஆனால் இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்திற்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன. கைகளை வேறூ வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது, இதனால் மற்ற மிருகங்களை விட மிக வேகமாய் முன்னேற முடிந்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கலவியின் போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை. அந்த சமயத்திற்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுத்து, மல்லாந்த நிலைக்கு மாற வேண்டி இருந்தது. அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்த பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும்……. அவ்வளவு நேரத்துக்கெல்லாம் சும்மா படுத்து கிடக்க முடியாது, சுத்த போர்! என்று பெண் முரண்டு பண்ணினால் மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ்! ஆக பெண்ணை எப்படியாவது மதிமயக்கி, மல்லாந்து கிடப்பதை ஸ்வாரசியமாக்கினாலே ஒழிய மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பில்லை.
மனித இனத்திற்கு மட்டும் இப்படி ஒரு வினோத தேவை இருந்ததால் தான் இயற்கை மனிதர்களுக்கு மட்டும் என்று சில பிரத்தியேக மாற்றங்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாக தானே இருக்கிறது. ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவு தானே பெண் எலிக்கும். ஆனால் மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பதில்லையே. பருவம் அடைந்த பிறகு மனித ஆணுக்கு பெண்ணை காட்டிலும் அதிகமான உடல் ரோமம் முளைத்து விடுகிறதே. ஆக மனிதர்களை பொருத்த வரையில் பெண்ணுக்கு உடம்பில் முடி மிக குறைவு, இருப்பதும் மிக மிக சன்னமானதே. ஏன் இந்த வித்தியாசம்? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பான்சியில் கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாதே……பெண் ஆண் இரண்டுக்குமே ஒரே மாதிரியான தோல்முடி தானே அவற்றுக்கு. மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம்?
ரோமம் அடர்த்தியாக இருந்தால் தொடுதல் உணர்வை துல்லியமாய் கிரகிக்க முடியாது. இதுவே ரோமம் குறைவாக இருந்தால் தொடுகை உணர்வு சுகமாய் தோன்ற ஆரம்பிக்கும். ரோமம் குறைவான மனித பெண்ணின் தோலை தொட்டு, தடவி, வருடி, மென்மையாக உராசினால் போதும்….அவள் நரம்புகளில் மின்சாரம் அதிகமாய் பாய, மூளை கிளர்ச்சிக்குள்ளாகிறது, அவள் மதி மயங்கி ரொம்ப நேரத்திற்கு அறை தூக்கத்தில் படுத்தே கிடப்பாள். இந்த அவகாசத்திற்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் நல்ல மகசூல் கிடைக்குமே!
ஆனால் இதுலும் ஒரு பிரச்சனை இருந்தது. வெறுமனே பெண்ணின் உடல் ரோமங்களை நீக்கினால் மட்டும் போதாதே. அவள் தோலை பதமாய் கையாளும் பக்கவம் ஆணுக்கும் இருந்தாக வேண்டுமே. இது ஒரு புதிய தேவையாக உருவாகிவிட, இதுவே கலவியல் தேர்வுக்குண்டான ஒரு கோட்பாடாகவும் மாறியது. தன்னை மென்மையாக தொட்டு, வருடி, களிப்புற செய்த ஆண்களையே பெண்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டி மாதிரி தன்னை கையாண்ட ஆண்களை பெண்களை கழற்றிவிட ஆரம்பிக்க, கேட்க வேண்டுமா? கைபதம் இருந்த ஆண்களின் மரபணுக்கள் மட்டுமே பெருவாரியாக பரவின.
இதனால் போக போக ஆண்களுக்கு கைகளின் லாவகம் அதிகரித்துக்கொண்டே போனது…………. இந்த லாவகம் எல்லாம் வெறுமனே பெண்களை தொட்டு தடவுவதற்க்காக மட்டும் இன்றி, மற்ற விஷயங்களுக்கும் பிரயோஜனப்பட்டதால், கல்லை தேய்த்து கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள் மனிதர்கள். இந்த ஒரு சின்ன மாற்றம் மட்டுமே பெரிய பரிணாம வளர்ச்சியை தூண்டிவிட, அதுவரை, குரங்காய் இருந்தவர்கள் மனிதர்களாக மாற ஆரம்பித்தார்கள். இந்த நிலை மனிதர்களை நாம் இன்றும், ஹோமோ ஹேபிலிஸ் Homo habilis, (கைக்கார மனிதன்) என்றே அழைக்கிறோம் என்றால் பாருங்களேன், இந்த கைகளின் மகிமையை! இந்த பரிணாம வளர்ச்சிக்கு காரணமே மனித பெண்ணின் கலவியல் தேர்வு தான் என்றால் அது இன்னும் ஆட்சரியமாக இல்லை?
Labels:
ஆனந்த விகடன் தொடர்
Subscribe to:
Posts (Atom)