Friday, April 24, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 15

என்ன சிநேகிதிகளே, ஆண்களை ஆன் ஆஃப் செய்யும் சிக்னல் சிஸ்டமான இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை சரியாகக் கையாளப் பழகிக்கொண்டீர்களா? நீங்கள் உறவுக்காக ஊக்குவிக்க விரும்பும் ஆணின் எதிரில் இ.விக்களை அள்ளி விடுவதும், ஒத்து வராது என்று ஒதுக்க முயலும் ஆண்களிடம் இ.விக்களை அடக்கி வாசிப்பதுமாய், போன வார ஹோம் வொர்க்கை சரியாக செய்து பழகி இருந்தீர்கள் என்றால், லெட் அஸ்கோ டு அடுத்த லெசன்.

இந்தப் பாடத்தை கைனெஸ்திக்ஸ் என்போம், அதாவது அசைவுகளின் அறிவியல். போயும் போயும் அசைவுகளில் என்னத்த பெரிய அறிவியல் இருந்துவிட போகிறது என்று நீங்கள் இளக்காரமாகக் கூட நினைக்கலாம், ஆனால் மேட்டர் என்ன தெரியுமா? மனித நடவடிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும் பெரிய பெரிய அறிவியல் சமாசாரங்கள் ஒளிந்திருக்கின்றன.

மனிதர்களை விலங்கியல் ரீதியாக சோஷியல் மிருகங்கள் என்றுதான் பாகுபடுத்துகிறார்கள். அறிவுக் கூர்மை அதிகமுள்ள பிராணிகளான, யானை, டால்ஃபின், குரங்கு, சிம்பான்சி, கொரிலா, பொனோபோ மாதிரியானவையும் சோஷியல் மிருகங்கள்தான். இந்த வகை மிருகங்களில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? இவற்றுக்கு எல்லைகள் தெரியும். இவைகளுக்கு ``இது என் ஏரியா, இங்கே எனக்கு மட்டும் தான் இடம்'' என்கிற பிரதேச மனப்பான்மை அதாவது டெரிடோரியல் பிகேவியர் உண்டு.

மனிதர்களுக்கும் இந்த பிரதேசக் குணம் உண்டு. எப்படித் தெரியுமா? நம்மை அறியாமலேயே நம்மைச் சுற்றி நான்கு எல்லைக் கோடுகளை வைத்திருக்கிறோம் நாம். அதில் முதலாவது பப்ளிக் இடைவெளி என்கிற Public Distance. முற்றிலும் அன்னியர்களுடன் பேசும் போது நான் விட்டு நிற்கும் இடைவெளி தான் இந்த பப்ளிக் இடைவெளி. இந்த எல்லை நின்று ஆரம்பத்தில் பேசும் மனிதரை நமக்கு பிடித்துப் போனால், அல்லது அவரை நாம் நம்ப ஆரம்பித்தால், அடுத்து நாம் அனுமதிக்கும் நெருக்கம் தான் சோஷியல் இடைவெளி, என்கிற Social Distance. அதாவது, கொஞ்சம் பரிச்சயமான நபர்களுடன் பேசிக் கொள்ள என்று நாம் உபயோகிக்கும் நெருக்கம்.

இதற்கு அடுத்து வருவதுதான் பர்சனல் இடைவெளி என்கிற அருகாமை. இது நமக்கு மிகவும் நன்றாகப் பரிச்சயமான, மிகவும் நம்பகத்திற்கு உண்டான நபர்களை மிக அருகில் வைத்து நாம் உறவாடும் இடைவெளி.

இந்த எல்லையைத் தாண்டிய பிறகு வரும் மிக நெருக்கமான டைட் குளோசப் தான் இண்டிமேட் இடைவெளி Intimate Distance, என்கிற அன்னியோன்னியம். இது தாய், சேய், நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகிய உரிமையானவருக்கு மட்டுமே உள்ள நெருக்கம்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த நான்கு இடைவெளிகளுமே உண்டு. நம்மை அறியாமலேயே நாம் எல்லோருமே அநிச்சையாக கடைப்பிடிக்கும் சமூக விதி இது. நமக்கு அதிகம் தெரியாதவர் என்றால் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவோம். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் ஒரு அடி கிட்டேயும் போய் பேசுவோம். ரொம்பத் தெரிந்தவர் என்றால் முகத்திற்குப் பக்கத்திலேயே போய், நின்று பேசுவோம். மிக மிக நெருக்கமானவர் என்றால் மூச்சுக்காற்று அவர் மீது படும் அளவிற்கு நெருங்கிப் போய் பேசுவோம்.

அதெல்லாம் சரி, இதை வைத்து ஆண்களை எப்படி ஹாண்டில் செய்வதாம் என்று தானே கேட்கிறீர்கள். இந்த கைனெஸ்திக்ஸ் தகவல் உங்களுக்கு இரண்டு விதத்தில் உதவும்.

ஒன்று, ஆண் உங்கள் பிரதேசத்தினில் எப்படி பிரவேசிக்கின்றான் என்பதை வைத்து அவன் உள் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அறிமுகமானதும் பவ்யமாய் உங்கள் எல்லைக் கோடுகளை மதித்து எட்ட நின்று பேசுகிறான் என்றால் ஓ.கே. நீங்கள் அனுமதித்து, அல்லது ஊக்குவித்ததினால் பக்கத்தில் வந்து நின்று பேசினால் என்றாலும் ஓ.கே.
ஆனால் சினிமா ஹீரோ அறிமுக காட்சியிலேயே ஹீரோயினை அப்படியே கட்டிப்பிடித்து ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் பாணியில் எவனாவது முதல் சந்திப்பிலேயே உங்கள் இண்டிமேட் இடைவெளிக்குள் பிரவேசித்து, அவன் மூச்சுக்காற்று உங்கள் மேல் படும் அளவிற்கு மிகச் சமீபமாய் வந்து நின்றால், உஷார், நிஜமான ஆபத்திலிருந்து காப்பாற்றதான் அப்படிச் செய்தான் என்றால், இட்ஸ் ஓகே. ஆனால் இதுதான் சாக்கு என்று காய்ந்த மாடு மாதிரி உங்கள் மேல் பாய்கிறான் என்றால், நாட் அட் ஆல் ஓகே!

சில ஆண்கள் அறிமுகமாகும் போது சமர்த்தாய் தங்கள் எல்லை அறிந்து தள்ளி நின்று, ``சே இவன் நல்ல பையன்ப்பா!'' என்ற சர்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள். பிறகு வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நைசாக எல்லை தாண்டி வந்து அத்து மீற முயல்வார்கள். ``தெரிந்து செய்கிறானா, தெரியாமல் செய்துவிட்டானா?'' என்று நீங்களே கூட குழம்பிப்போவீர்கள்! ஆனால் விஷயம் இது தான், நீங்கள் அந்த நெருக்கத்தை அனுமதித்திராவிட்டால், அவ்வளவு அருகாமை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், நோட் தட் பாயிண்ட், அவன் எல்லை தாண்டிவிட்டான் என்று அர்த்ம். அது தெரிந்தா தெரியாமலா என்பது வேறு விஷயம். அதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க எல்லாம் நேரத்தை வீணடிக்காமல், உடனே விலகிக்கொள்ளுங்கள். ``கொஞ்சம் ஒதுங்குங்க'' என்று தெளிவாக சொல்லுங்கள் ``என்னடா பண்ணுற நீ, முண்டம்?'' என்று ஒருமுறை முறையுங்கள். நீங்கள் அந்த நெருக்கத்தை விரும்பவில்லை என்பதை அந்த ஆசாமி புரிந்துகொள்வான்.

அதையும் மீறி,மீண்டும் மீண்டும் எவனாவது உங்கள் இண்டிமேட் இடைவெளியை நெருங்கிக்கொண்டே இருந்தான் என்றால், இது தான் செக்ஷுவல் ஹராஸ்மெண்ட் எனப்படும் பாலியல் துன்புறுத்தல். Public Distance என்பதை பெரிய குற்றமாய்த்தான் இந்திய குற்றவியல் பிரிவு கருதுகிறது. அதனால் உங்கள் பள்ளியில், கல்லூரியில், வேலை இடத்தில் உள்ள தலைமை அதிகாரியிடம் போய்ப் புகார் கொடுங்கள். இந்த தலைமைப் பொறுப்பு வகிக்கும் நபரே இப்படி எல்லை மீறுகிறாரா, பெண்கள் எல்லோரும் சேர்ந்து போர்க் கொடி தூக்குங்கள்! இது ஆண் எல்லை மீறும் போது எடுக்கும் நடவடிக்கை.

இரண்டு, ஆனால் சில சமயத்தில் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, தங்கள் எல்லைக்கோடுகளை மீறி ஆண்களிடம் பழகிவிடுவது உண்டு. நண்பன், சகா, சகோதரன், மகன், ஊழியன் என்று எந்தவிதமான ஆரோக்கியமான உறவாக இருந்தாலும் சரி, இது போன்ற புற உறவுகள் பர்சனல் இடைவெளி வரை மட்டுமே இருக்க முடியும். இதை மீறி, அபரிமிதமான அன்பின் கொப்பளிப்பில், மிக அருகில் போய், உங்கள் மூச்சு, அந்த ஆணின் மீது படும்படி நீங்கள் இடைவெளியை குறைத்துக் கொண்டால், அது அநாகரிகம் மட்டும் அல்ல, பெரிய ஆபத்தும் கூட.

இதில் என்ன பெரிய அநாகரிகம், நட்பில் இதெல்லாம் சகஜம் தானே. என்றோ, இதில் என்ன ஆபத்து என்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் என்ன தெரியுமா? தகுந்த இடைவெளி தாண்டி நீங்கள் நெருங்குவதே, அந்த ஆணைத் தூண்டி, ஊக்குவிப்பதாகும், குழந்தை, காதலன், கணவன் ஆகிய மூன்று நிலைகளைத் தவிர வேறு எந்த நிலையில் உள்ள நபர்களும் இந்த நெருக்கத்தை அனுபவிப்பது ஆபத்தே.
உங்களைப் பொறுத்தவரை, ``சும்மா லேசா சாய்ந்தேன், முகம் கிட்ட வந்துடுச்சு. இதெல்லாம் ஒரு தப்பா?'' என்று நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பு என்ன தெரியுமா? ``இத்தனை அருகில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால், நீ உடனே மோகம் கொள்வாயாக'' என்ற ரீதியில் தான் அவன் நரம்புமுனைகள் இயங்குகின்றன. அதற்கு அவன் பொறுப்பல்ல. இப்படி அவன் நரம்பு வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே நீங்கள் அவனை நெருங்கி ஆசை காட்டுவது அநாகரிகம் தானே.

அதனால் தான் எல்லாக் கலாச்சாரங்களிலும், தாயும் மகனும் என்றாலும் கூட, வயதிற்கு வந்த பையன் தாயை ரொம்ப நெருங்குவதும், அவள் பக்கத்தில் படுப்பதும், அவள் முந்தானையே கதி என்று இருப்பதும் மிக அதிகபட்ச தடைக்குள்ளாகின்றன. அதே போல், வயத்திற்கு வரும் நிலையிலுள்ள மகளைத் தகப்பன் நெருங்குவதும் தவறாக கருதப்படுகிறது.

பெற்றவர்களுக்கும் பிள்ளைக்குமே போதிய இடைவெளி விட்டுப் பழகுவது தான் நாகரிகம் என்கிற போது, மற்ற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள விரும்பும் ஸ்நேகிதிகள், ஆண் பெண் உறவில் நீங்கள் சரியான எல்லைகளை கடைப்பிடிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுடன் பரிச்சயம் கொண்ட ஆண்கள் உங்கள் எல்லைகளை மதித்துப் பழகுகிறார்களா என்று பாருங்கள். புற உறவுகளில் இந்த எல்லை நிர்ணயம் ரொம்பவே முக்கியம். ஆனால் அகவுறவில்... எல்லை தாண்டி தீவிரவாதம் செய்வதே சுவாரசியம். அதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

Saturday, April 18, 2009

மிஸ் பிளாங்க் ப்பீடி


இந்த படத்தில் தெரியும் அந்த பழுப்பு நிற சட்டை போட்ட பெண்ணின் பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் அவர் செய்த காரியத்தை என்னால் மறக்கவே முடியாது.
இந்த பெண் இந்தோநேஷியாவில் மேற்கு கடைகரை பகுதியில் உள்ள, பிளாங் பீடி என்ற ஊரில் வாழும் ஒரு மீனவ குடும்பத்தலைவி.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இவரது ஊரே ஒட்டு மொத்தமாய் கடலுக்குள் போய்விட்டது.
தப்பிப்பிழைத்த சிலரில் இந்த பெண்ணும் ஒருவர். இவர் வாழ்ந்த ஆச்சே தொகுதியில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால், மத்திய அரசாங்கத்தால் உடனே உதவி/நிவாரணம் வழங்க முடியாத நிலை. உதவிக்கு யாருமே வராத போதும், இந்த பெண், தனியாக நின்று தன் ஊர் மக்களை காப்பாற்றினாராம். அதன் பிறகும், தன் சொந்த செலவில் ஜகார்தாவிற்கு போய், அரசாங்க அதிகாரிகளிடம் பேசி, தன் ஊர் மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்லி, உதவிகளை பெற்று வந்திருக்கிறார்.
இவர் எடுத்துக்கொண்ட சிரமங்களை பார்த்து தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர, இப்போது, “பாலி பீச்” என்கிற புதிய சிற்றூரே அங்கு நிருவப்பட்டுள்ளது.
பாலிபீச்சின் அழகான மரவீடுகளை தான் இந்த படத்தில் பார்க்கிறீர்கள்!

இப்போது இந்த பெண்மணி, பலகாரம் செய்து விற்கும் சிறு தொழில் செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து அந்த கிராமத்தின் பெண்களும் வேலை செய்வதால் எல்லோருக்கும் வருமாணம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

ஷிண்டோ!




இந்தோநேஷியாவில் இஸ்லாம் தான் மிக பிரபலமான மதம். இந்த இஸ்லாமிய பெண்களுக்கு மிக பிரபலமான பெயர் என்ன தெரியுமா? ஷிண்டோ, அல்லது ஷிந்தா.
”பெயர் கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டால் அவர்கள் சொன்னது “இந்த பெயர் உங்கள் ஊர் பெயர் தான். ராமாயணத்தில் வரும் கதாநாயகி இருக்கிறாளே....” என்றார்கள்.
”ராமாயண கதாநாயகியா, சீதா!” என்றேன்.
“அதே தான், எங்கள் ஊரில் சீதாவை ஷிண்டோ என்று தான் சொல்வார்கள், சில ஏரியாக்களில் ஷிந்தா என்றும் சொல்வார்கள்” என்றார்கள்
”ஆனால், நீங்கள் இஸ்லாமியராயிற்றே, சீதாவின் பெயரை வைத்திருக்கிறீர்களே?” என்றால், விசித்திரமாக பார்க்கிறார்கள், “ஏன் அதனால் என்ன, வைக்கக்கூடாதா?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
இந்தோசேஷியாவில் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களுமே மிக பிரசித்தம். எல்லோருக்குமே இவை தெரிந்திருக்கின்றன. எல்லோருமே இஸ்லாமியர்களாக இருதாலும், இந்த கதைகளை, “எங்க ஊர் பாரம்பரியமாக்கும்” என்று மத வேறு பாடுகள் கருதாமல் ஆசையாக கேட்கிறார்கள், நிறைய சமஸ்கிருத சொற்களை சரளமாக உபயோகிக்கிறார்கள்
உதாரணத்திற்கு, அந்த ஊர் பாஷையில், மனைவியை ஸ்திரி என்றும் கணவனை ஸ்வாமி என்றும் குறிப்பிடுகிறார்கள்.

வயதிற்கு வருவது

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினை பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!

Tuesday, April 7, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 14

ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ளும் ஸ்நேகிதிகாள், பெண் சும்மா இருந்தாலும், அவளை வேட்டை ஆடி வெல்ல முயல்வது தான் ஆணின் இயல்பு, என்கிற பேஸிக் சைக்காலஜியை புரிந்துக்கொண்டீர்களா?

ஆணின் ஆட்டவிதி இது தான் என்றால் பெண் எப்படி இயங்கினால் அவளுக்கு நல்லது?

ஒரு வேளை அந்த பெண்ணுக்கு அந்த ஆணை பிடித்திருக்கிறது என்றால், இவள் அவனை ஊக்குவித்தாக வேண்டும், இல்லை என்றால் உறவே ஏற்படாமல் போகக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் பெண் ஆணை ஆதரிக்கும், “எனக்கு ஓக்கே” என்கிற சிக்னலை வெளிபடுத்தி ஆக வேண்டும்.

இதற்கு நேர்மாறாய் அந்த ஆணை அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்று வையுங்களேன். இவள் தப்பித்தவறி, தன்னை அறியாமல் லேசாய் கொஞ்சம் ஓகே என்பது போல ஜாடை செய்தாலும் போச்சு, தலைவர் செம ஸ்பீடில் முற்றிகை இட வந்து, கடைசியில், “ஆரம்பத்துலேர்ந்தே எனக்கு விருப்பமில்லை” என்று, இந்த பெண் என்ன சமாளிக்க முயன்றாலும், வெறுப்பு, விரோதம், மனஸ்தாபம் என்று தேவை இல்லாத வம்புகள் பலதும் வந்து சேரும்.

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் பெண்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இந்த ”சிக்னல் சிஸ்டம்”.

எல்லா உயிரினத்திற்குமே, தன் இனத்தோடு உறவாடுவதற்கென்றே சில பிரத்தியேக சிக்னல்கள் உண்டு. உதாரணத்திற்கு நாய், தனக்கு யாரையாவது பிடித்திருந்தால், தன் வாலை ஆட்டிக்கொள்ளும், பூனைக்கு யாரையாவது பிடித்திருந்தால், பக்கத்தில் வந்து உராயும், குரங்கிற்கு யாரையாவது பிடித்திருந்தால், பேன் பார்த்து விடும்….இப்படியாக அந்தந்த இனத்திற்கு என்று பிரத்தியேகமாய் சில “ஓகே,” சிக்னல்கள் உண்டு.

மனிதர்களிலும் இப்படி சில சிக்னல்கள் உண்டு. ஒரு ஆண் தன்னை நெருங்கி வரும் போது, பெண் அவனை பார்த்து தலை குனிந்து நாணி, கோணி, சிரித்து, ஓரப்பார்வை பார்த்து, இடுப்பை மிகையாக அசைத்து, தன் ஆடைகளை தேவை இல்லாமல் சரி செய்தால் அதற்கு என்ன அர்த்தம்?
அட அவளுக்கு சிரிப்பு வந்தது சிரிச்சா,
நேரா பார்க்க கூச்சம் அதனால் ஓரக்கண்ணால பார்த்தா,
டிரெஸ் விலகி இருக்கும் அதனால அதை ஒழுங்கு செய்திருப்பா,
அவ இடுப்பை அவ அசைச்சா தப்பா?
என்று எல்லாம் நாம் ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும், நம் அனைவருக்குமே தெரியும், ஒரு பெண், ஆணின் எதிரில் இப்படி எல்லாம் செய்தால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான், “எனக்கு ஓகே, I am available”

இந்த வகையான ”நான் ரெடி” சிக்னலை இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து, அந்த பெண், அவள் உடலை மிக கவர்ச்சியாக வளைத்து, ஆட்டி, பெண்ணின அடையாள உருப்புக்களான, மார்பகம், இடுப்பு, ஆகியவற்றை ஓவராய் வெளி படுத்தினால் அது இன்னும் கொஞ்சம் உரக்கவே “நான் ரெடி” எனறு சொல்வதாகிறது.

உதாரணத்திற்கு சினிமாவில் வருகிற கவர்ச்சிப்பெண் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோமே. அவள் எப்படி உடை உடுத்துகிறாள், எப்படி தன் உடலை, உதட்டை அசைக்கிறாள், எப்படி பேசுகிறாள் என்று மிக கூர்மையாக கவனித்து பாருங்களேன். உடம்பை கவர்ச்சியாக வெளிபடுத்தும் இருக்கமான உடை, தன் இடுப்பை அதிகமாக ஆட்டி ஒரு நடை, ஓவராய் உதட்டை குவித்து, கொஞ்சி கொஞ்சி பேசும் விதம், எல்லாமே, மேலும் மேலும், “ரெடி, ரெடி, “ என்று சொல்லும் இன்விடேஷன் டிஸ்ப்லே INVITATION DISPLAYக்கள்.

இந்த மாதிரியான இன்விடேஷன் டிஸ்பிளேவை பார்த்தால், பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓஹோ, இவள் ஒரு மாதிரி போல என்று நீங்கள் உடனே, உங்களை அறியாமலேயே ஒரு முடிவிற்கு வந்து விடுவீர்கள். அந்த பெண்ணை அவ்வளவாக மதிக்க உங்களுக்கு தோன்றாது. தன் உடலால் காரியங்களை சாதித்து கொள்வாளோ என்று நீங்களே கூட அவளை சந்தேகப்படுவீர்கள்.

பெண்களே இப்படி வெறும் வெளி தோற்றத்தை வைத்து, அந்த பெண்ணின் கலவியல் ஒழுக்கத்தை இவ்வளவு நுனுக்கமாய் ஆராயும் போது, இப்படிப்பட்ட பெண்ணை ஒரு ஆண் பார்த்தால், அவன் என்ன முடிவிற்கு வருவான்?

ரொம்ப மெனக்கெட்டு தன்னை கூடுதல் கவர்ச்சியாய் காட்டிக்கொண்டி, இப்படி வேண்டி, வேண்டி, இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுக்கிறாள் எனறால் என்ன அர்த்தம்? என்னை பார்த்தால் அவளுக்கு ஆசை, என்னுடன் இருக்க அவளுக்கு சம்மதம், அப்படியானால் என் திருப்பணியை நான் துவக்கி விடலாம் போல, என்று துணிந்து தைரியமாய் அந்த பெண்ணை நெருங்கி தொட்டு, உறவு கொண்டாட முயல்வான் ஆண்.

இதுவே, ஏதாவது தேசத்தின் தலைமை பதவியை வகிக்கும் பெண்ணை உதாரணமாய் எடுத்துக்கொள்ளுங்களேன். அல்லது தலைமை பதவி வகிப்பவனின் மனைவியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோமே. லேட்டஸ்ட் ஹிட் மிஷேல் ஒபாமாவை எடுத்துக்கொள்ளுங்கள். மிஷேல் எப்படி உடை அணிகிறார்? எப்படி, உடலை அசைக்கிறார்? எப்படி பார்க்கிறார்? எப்படி நிற்கிறார்? எப்படி நடக்கிறார்? தன் உதட்டை எப்படி அசைக்கிறார், எப்படி பேசுகிறார்?

கவனமாய் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இப்படி தலைமை நிலையில் இருக்கும் பெண்கள், நாணி கோணி, ஓரப்பார்வை பார்த்து கள்ள சிரிப்பை எல்லாம் சிரிப்பதே இல்லை. நாணாமல், கோணாமல், இடுப்பையோ, உதட்டையோ அஷட கோணத்தில் ஆட்டாமல், அப்படியே ஸ்திரமாய் நின்று, நேருக்கு நேர் பார்த்து, தெளிவான குரலில் கணீர் என்று பேசுகிறார்கள். தங்கள் மார்பையோ, வேறு எந்த பெண்ணின் அடையாள குறி பாகத்தையோ, மிகைபடுத்துவதோ, வெளிபடுத்துவதோ இல்லை. ஆக கூட்டி கழித்து பார்த்தால், இந்த வகை உயர் அந்தஸ்து பெண்கள் யாரும் மானவாரியாய், எல்லோருக்கும் எதிரில் இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுப்பதே இல்லை. இந்த மாதிரி பெண்களை பார்த்தால் பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றூகிறது? ஏஞ்சலா மார்கெல், எலிசபெத் ராணி, மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், போன்ற வெளிநாட்டு பெண்களாகட்டும், சோனியா காந்தி, கிரண் பேடி, பர்க்கா தத், மாதிரியான நம்மூர் பெண்களாகட்டும், இந்த வகை பெண்களை பார்க்கும் போது, பெண்களான உங்களுக்கே, “சே சே, ரொம்ப பெரியவங்க, அவங்க கிட்டயே போக முடியாது” என்று தோன்றிவிடும். உங்களுக்கே இப்படி தோன்றீனால், இவர்களை பார்க்கும் ஆண்களுக்கு என்ன தோன்றூம்?

“இது ரொம்ப ஹை கிளாஸ் பொம்பளை, நம்ம எல்லாம் எம்மாத்திரம், நம்ம ரேஞ்ன்சுக்கு ஒத்து வராது,” என்று அந்த பெண்ணை மரியாதை கலந்த பயத்துடன் மட்டும் தான் பார்க்க முடியுமே தவிற, அவள் மேல் காதலோ, ஆசையோ, இச்சையோ கொள்ள முடியாது.

அது ஏன் அப்படி? மிஷேல் ஒபாமாவும் கவர்ச்சியான பெண் தானே, இல்லாமலா பராக் ஒபாமா ஓடி ஓடி காதலித்து கைபிடித்தார்! அப்படி இருந்தும், மிஷேலை பார்த்தால், மற்ற ஆண்களுக்கு ஆசை வரவில்லையே? இதுவே, யாரோ ரோட்டில் போகிற கவர்ச்சியான பெண் என்றால் ஆசை பட்டு அசடு வழிகிறார்களே ஏன்?

ஏன் என்றால் மிஷேல் இன்விடேஷன் டிஸ்ப்ளே எதையுமே வெளிபடுத்துவதில்லை. காரணம் யாரையும் இனி கவர வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

ஆனால் சாமானிய பெண்கள் அறிந்தோ, அறியாமலோ, இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்துவிடுகிறார்கள். அது உடனே ஆண்களை கவர்ந்து விடுகிறது. அதனால் ”நீ அழைப்பு விடுத்தாய், அதனால் நான் ஆஜரானேன்” என்ற ரீதியில் ஆண்கள் அந்த பெண்ணை அணுக ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆண்களிம் இயல்பு இப்படி இருக்கும் போது, அவன் எதிரில் போய் இப்படி இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்வது அறிவாகுமா என்று யோசிக்க தோன்றினாலும், இதில் ஒரு பெரிய விசித்திரம் என்ன தெரியுமா? பெண்கள் சும்மா இருந்தாலும், அவர்களை சுற்றியுள்ள கலாச்சரம், பெண்ணை இப்படிப்பட்ட இ, டி யை கொடுக்கவே வற்புறுத்துகிறது. உதாரணத்திற்கு நம்மூரையே எடுத்துக்கொள்வோமே. நம்மூர் பெண்கள் இன்னமும் அச்சம், நாணம், மடம், பயிற்பையே பெண்ணின் உயரிய குணங்களாக கட்டி காப்பாற்ற முயல்வதே, கலாச்சர பாரம்பரியம் என்ற மூட நம்பிக்கையில் தானே. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இந்த அச்சம், நாணம், மடம், பயிற்பு ஆகிய நான்குமே, இன்விடேஷன் டிஸ்ப்ளேக்கள் தான்! இந்த நான்கு குணங்களை ஒரு பெண் வெளிபடுத்தினாலே, அவளது கவர்ச்சிவிகிதம் கூடி விடுகிறது!

ஆக இந்த இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதை பொருத்து, ஆணின் ரியாக்ஷனும் மாறிவிடுகிறது. நிறைய இ.வி இருந்தால், ஈஷிக்கொள்வதும், இ, வி யே இல்லை என்றால், ஒதுங்கி விடுவதும் தான் ஆணின் இயல்பு.

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகளே, உங்கள் இ, வி களை கவனியுங்கள். உங்களுக்கு பிடித்த, நீங்கள் ஊக்குவிக்க முயலும் ஆண்களிடம் இந்த இ, விக்களை வெளிபடுத்தினால், உங்கள் உறவு சூடு பிடுக்கும். நீங்கள் தப்பித்தவறி, கண்டவர் எதிரில் உங்கள் இ.விக்களை வெளிபடுத்தினாலும் போச்சு, பத்தி எறிய ஆரம்பித்துவிடும். அதனால் இந்த சிக்னல் சிஸ்டத்தை மிக ஜாக்கிரதையாக கையாளப்பழகுங்கள். இது தான் உங்களுக்கான இந்த வார ஓம் வர்க்!