Tuesday, May 25, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? 34

என்ன ஸ்நேகிதிகாள், ஆண் மூளையின் வடிவமைப்பில் இருக்கும் வித்தியாசங்களை தெரிந்துக்கொண்டாயிற்றே. இனிமேல், “அவன் ஏன் என்னை மாதிரி நிறைய பேச மாட்டேன்றான், அவன் கவலையா இருந்தா நான் உடனே கவனிச்சு, என்ன ஏதுனு விசாரிக்கிறேனே, நான் அப்செட்டா இருந்தா மட்டும் ஏன் அவன் கண்டுக்கவே மாட்டேன்றான்? ..ஏதாவது வாக்குவாதம்னா உட்கார்ந்து பேசாம ஏன் ஓடி போயிடுறான்….” என்பது மாதிரியான உங்கள் கேள்விக்கு தெளிவு பிறக்கட்டும்.

ஒன்று. உங்களை மாதிரி வள வள என்று வார்த்தை சுத்தமாய் அவனால் பேச முடியாது, காரணம் அவன் ஆண் என்பதால், அவன் மூளையில் பாயும் டெஸ்டோஸ்டீரோன் அவன் மொழி மையத்தை சின்னதாக்கிவிடும்.

இரண்டு: உங்களை போல முகபாவம் உணர்ந்து, மூடை புரிந்துக்கொள்ளும் தன்மை அவனுக்கு இல்லை. இப்படி ஒரு தன்மை அவனுக்கு இருந்தால், அவன் சிறந்த வேட்டுவனாக இருந்திருக்க முடியாது. அதனால் இயற்கை இந்த மையத்தை மைனஸ் செய்து விட்டிருக்கிறது அவம் மூளையில்

மூன்று: நீங்கள் ஸ்ருதி உயர்த்தி, கீச், கீச் என்று கத்தி பேசி, உங்கள் தரப்பு ஞாயத்தை என்னதான் தெளிவாக எடுத்து சொன்னாலும், அதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் விட்டால் போதும் என்று “எஸ்கேப்” ஆகிவிடுகிறானே ஆண், அது ஏன் தெரியுமா? அவன் வேட்டுவ மூளையை பொறுத்தவரை, “கீச் கூச்சல் = ஆபத்தான் மிருகம் அட்டாக் பண்ணப்போகுது, அதனால் மகனே எஸ்கேப்!” அதனால் தான் நீங்கள் என்ன மெனக்கெட்டு உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும், தலைவர் பாட்டுக்கு அபவுட் டர்ன் அடித்து போயே போய் விடுகிறார்.

இப்படி இருக்கும் இவனை எப்படி கையாள்வதாம்?

முதலில், அவனிடம் ரொம்ப தொண தொண என்று பெண்களிடம் பேசுவதை போல பாரகிராஃப் பாரகிராஃபாய் பேசாதீர்கள். இந்த மாதிரி விளாவரியான பேச்சு, பெண்களுக்கு ஸ்வாரசியமாய் இருக்கும், ஆனால் பாவம், ஆணின் குட்டி சைஸ் மொழி வழ மையத்தை திக்கு முக்காடவைத்து விடும். உதாரணத்திற்கு பெண்கள் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும், ஆண்கள் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். பெண்கள் ஒரே அழுமூஞ்சி சீரியலை தினம் தினம் பார்த்துக்கொண்டிப்பார்கள். எல்லாம் நீட்டி முழக்கி பேசும் முழம் முழமான டையலாக்குகள். சம்மந்தமே இல்லாத பின்ணணி இசை வேறு, ஏடாகூடமான அங்கிளில் எல்லாம் கேமிரா சுற்றி, வெற்று ஷாட்டுகளில் நேரத்தை வீணடித்திருந்தாலும், கொஞ்சமும் சலைக்காமல் பெண்கள் இந்த பிதற்றலை பார்க்கிறார்களே, ஏன்? பிகாஸ் அவர்களுக்கு மொழி வள மையம் பெரிசு, அதற்கு தீனி போடுவது போல, எச்சசெச்சமாய் பேசினாலும், பேசுவதை கேட்டாலே, பெண்களுக்கு பிடித்துவிடுகிறது.

இதுவே ஆண்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை கவனியுங்கள். அதிகம் பேசாத விளையாட்டு, அல்லது அளந்து பேசுகிற செய்தி தொகுப்புக்கள், அல்லது சத்தமே இல்லாத செக்ஸ் சேனல் என்று தான் ஆண்கள் பார்ப்பார்கள். அதெல்லாம் இல்லையே, எங்க வீட்டு தாத்தா கூடத்தான் பெண்கள் பார்க்கும் நெடுந்தொடர்கள் பார்க்கிறார்…அதுவும் ரொம்ப ஆர்வமாய் என்கிறீர்களா? பின்னே, தாத்தாவுக்கு வயதாகிவிட்டதால் டெஸ்டோஸ்டீரான் குறைந்து போயிருக்கும்….அதனால் தான் அவர் பெண்கள் பார்க்கும் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்.

இளைமை துடிப்புள்ள, டெஸ்டோஸ்டீரான் ததும்பும், எந்த நிஜ ஆண்மகனுக்கு நெடுந்தொடர் பார்க்க பிடிக்காது. வசனம் குறைவான, விறுவிறுப்பாய் நகருகிற, ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிற காச் மூச் படங்களை தான் அவர்கள் மனம் நாடும். All because of the high testosterone!

தொலைகாட்சி நிகழ்ச்சிக்கே இது தான் நிபந்தனை என்றால், அவரை ஸ்மார்டாக கையாள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சிம்பிள்….நிமிடத்திற்கு நூறு கிலோ வார்த்தை என்றெல்லாம் கொட்டி பேசாமல், அவனிடம் அளந்து பேசுங்கள். பாயிண்டு பாயிண்டாய் சுருக்கமாய் சொல்லுங்கள். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி மொக்கை போடாதீர்கள். ஒரு தடவை சொன்னாலும் ஒழுங்காக சொன்னீர்கள் என்றால் தலைவருக்கு புரியும். ஆனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்னீர்கள் என்றால் நிச்சயம் கோட்டை விடுவார்கள். அதனால், லைட்டாய், நச்சென்று பஞ்ச் டயலாக் மாதிரி பேசி விட்டு போங்கள். மிக துல்லியமாய் ஆண்களின் மனதில் பதிந்து விடும்.

அடுத்து: முக பாவம். பெண்களிம் மூளை பிள்ளை வளர்ப்பிற்கென்றே பிரத்தியேக அம்சங்களை கொண்டது. பல குழந்தைகளை ஒரு சேர வளர்க்கும் தாய்க்கு, குழந்தை பேசாவிட்டாலும், அதன் முக பாவத்தை வைத்து, அதன் மனதை புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் ஆணூம் இதே போல முகபாவத்தை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவனாய் இருந்தால், அவன் வேட்டையின் போது கவனம் சிதறிபோகக்கூடும். அயோ பாவம் குட்டி மான், என்ன பாவமா பாக்குது, இதை போய் கொல்லுவதா? என்று இவன் முகம் பார்த்து ரியாக்ர்ட் செய்துவிட்டால் இவனை நம்பி இருக்கும் இவன் பிள்ளைகளின் கதி அதோகதியாகி விடுமே. அதனால் தான் அவம் மூளையில் முக பாவத்தை உணரும் மையம் அளவில் சிறியதாகிவிட்டிருந்தது. இந்த சின்ன ஜாடைகிரகிப்பு மையத்தை வைத்து க்கொண்டு அவன் எப்படி உங்கள் மூடை மிக துல்லியமாக புரிந்துக்கொள்வான்? அதனால் அவனே புரிந்துக்கொண்டு வந்து, “ஆசை கிளியே கோபமா?” என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பான் என்று எதிர்ப்பார்த்து ஏமாறாதீர்கள். அவனுக்கு முக ஜாடையின் நுனுக்கங்கள் தெரியாது. ஏதோ ”ஒரு மாதிரி இருக்கா ” என்ற அளவில் தான் புரியும். ஒரு மாதிரி என்றால் எக்சாக்ட்டாய் எந்த மாதிரி என்பதை எல்லாம் நீங்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாய் புரியவைக்க வேண்டும். அவன் புரிந்துக்கொள்கிறானோ இல்லையோ, கோபமாய் இருந்தாலும் கொஞ்சம் நேரம் பிகு செய்து விட்டு, “நான் கோபமா இருக்கேனே, ஏன்னு கேட்க கூடாதா?” என்று நீங்களே டியூஷன் வேறு எடுத்தாக வேண்டும். இப்படி நீங்கள் பயிற்றுவித்தால் போக போக அவனுக்கே லைட்டாய் புரிய ஆரம்பிக்கும், இவள்
இந்த கோணத்தில் முகத்தை வைத்துக்கொண்டு இப்படி விழிகளை திருப்பினால் அதற்கு இது தான் அர்த்தம் என்று!

மூன்றாவது: குரலின் ஸ்ருதி. அவன் வேட்டுவ மூளைக்கு தெரிந்ததெல்லாம், கீச் ஸ்ருதி என்றால் பெரும் ஆபத்து என்பது மட்டும் தான். அதனால் அவனிடம் பேசும் போது உச்ச ஸ்தாயிக்கு குரலை உயர்த்தாமல், கீழ் ஸ்தாயிலேயே பேசி முடிங்கள். நீங்கள் குரலை உயர்த்தினால் அவன் அட்டாக் செய்ய பார்ப்பான், அல்லது எஸ்கேப் ஆக பார்ப்பான். அப்புறம், “நான் பாட்டுக்கு இங்க லோ லோனு கத்துறேன், ஏன்னு கேட்காம அடிக்க வர்றான் பார்/அப்படியே போறான் பாரு, என் மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல்” என்றெல்லாம் புலம்பி பிரயோஜனம் இல்லை. நீங்கள் லோ டோனில் பேனினால் பயன், லோ லோ என்று பேசினால், நோ யூஸ்.

ஆக, கூட்டி கழித்து பார்த்தால், ஆண்களிடம் பேசும் போது, பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நாகரீகங்கள் இவை தான்: கொஞ்சமாய், டூ தி பாயிண்டாய், மலர்ந்த முகமாய், கலகலப்பான ஸ்தாயியில் பேசுதல் வேண்டும்.

அதெப்படி எப்பயுமே இப்படியே பேச முடியுமா? சீரியஸா ஏதாவது பேசும் போது, இதை எல்லாம் நியாபகமா வெச்சிக்க முடியும்? என்கிறீர்களா….நியாயம் தான்….ஆனால் என்ன செய்வது ஆணின் மூளை மாதிரி வேறு மாதிரி ஆயிற்றே. பெண்ணிடம் பேசும் போது இத்தனை நெளிவு சுளிவுகள் பார்க்க வேண்டியதில்லை. ஆணிடம் பேசும் போதோ, அவனுக்கு தகுந்த படி பேசினால் மட்டுமே அவன் மனதில் பதியும். அதிலும் அவன் நல்ல மூடில் இருக்கும் போது, நீங்கள் எந்த விதிகளை கைபிடிக்காவிட்டாலும், கொஞ்சமாவது அவன் காதில் விழும். அவன் மோசமான மனநிலையில் இருக்கும் போது தான் நீங்கள் மறக்காமல் டெக்னிக்கை பயன் படுத்தி அவனிடம் பேச வேண்டும்.

திடுதிடுதிப்பென்று ஒரு நாள், அதுவும் அவன் மோசமான மூடில் இருக்கும் போது இப்படி டெக்னிக்காய் பேச வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதனால் தான் பொதுவாகவே இதே ரீதியில் பேசுவதையே உங்கள் நிரந்தர பழக்கமாக்கிக்கொண்டீர்கள் என்றால், தீவிர சந்தர்பங்களிலும் தங்கு தடையின்றி மிக சரியாக உங்கள் பேச்சு அவன் மனதில் பதியும்.

உங்களுக்கான, இந்த வார ஓம் ஒர்கே இது தான். உங்களுக்கு தெரிந்த ஆண்களிடம், காச் மூச் என்று உச்ச ஸ்ருதியில் வாய்க்கு வந்த படியெல்லாம் பேசி பாருங்கள். அவர்களின் ரியாக்ஷன் என்ன, நீங்கள் சொல்வதை புரிந்துக்கொள்கிறார்களா? ஏற்றுக்கொள்கிறார்களா? அந்த இடத்திலேயே இருந்து உங்களளை பேச விடுகிறார்களா? என்று கவனியுங்கள்.

அடுத்து, மேல் சொன்ன டெக்னிக்கின் படி, பாயிண்டு பாயிண்டாக, மத்யஸ்தாயிலில், கேஷுவலாக பேசிப்பாருங்கள். ஒரே விஷயத்தை ரிபீட் செய்யாமல், மொக்கை போடாமல், விளையாட்டாய் பேசிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணி நேரம் பேசினாலும், அட்டென்ஷனில் இருக்கிறார்களா இல்லையா? நீங்கள் சொன்னதை ஏற்றூக்கொள்கிறார்களா? நீங்கள் சொன்னதெல்லாம் அவர்கள் மனதில் பதிகிறதா என்று கவனியுங்கள்.

இப்படி இரண்டு விதத்தையும் நீங்களே பரிசோதித்து பார்த்துவிட்டு, நிஜத்தை புரிந்துக்கொள்ளுங்கள்……அப்போது தன் உங்களுக்கு ஊர்ஜிதமாகும், ஆண்களிடம் பேசுவதற்கென்றே ஒரு பிரத்தியேக டெக்னிக் இருக்கிறது. அந்த டெக்னிக்கை பயன் படுத்தினால் தான் ஆடவர் குலத்தில் உங்கள் பாச்சா பளிக்கும். இப்படி எல்லாம் செயற்கையாய் டெக்னிக்குகள் பயன் படுத்த எனக்கு பிடிக்காது, நான் இயல்பாய் பேசுவது போலத்தான் பேசுசேன் போங்க, என்று ஆட்சேபிக்கிறீர்களா? நோ பிராப்ளம். இந்த போஸ்ட் மார்டன் யுகத்தின் அதி நவீன யுத்திகள் வேண்டாம், நான் கற்கால மனிதனின் மொட்டை முனை ஆயுதங்களை வைத்தே சமாளித்துக்கொள்கிறேன் என்றால், you are welcome to use your own devices.

கூரான ஆயுதங்கள் இருந்தால் சீக்கிரம் சாதிக்கலாம் என்று யோசிக்கும் முற்போக்கு பெண்ணா நீங்கள்? இந்த டெக்னிக்கை உங்கள் வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஆண்களிம் மீதும் பிரயோகித்து பாருங்கள். மேலும் மேலும் பயின்றூ அதில் எக்ஸ்பர்ட் ஆக முயலுங்கள். இதுவே உங்கள் இயல்பான உரையாடல் நுனுக்கமாகிவிட்டால் ஆண்களை ஹாண்டில் செய்வது உங்களுக்கு மிக சுலபமாகிவிடும்.

இந்த உரையாடல் யுத்தியை முதலில் கற்று தேர்ந்து விட்டீர்கள் என்று இனி அடுத்து வருவது…….என்னவாக இருக்கும், உங்களால் யூகிக்க முடிகிறதா?

Friday, May 7, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? 33

உருப்படியான ஆணை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பற்றி இத்தனை வாரங்களாக பார்த்தோம். இப்படி எல்லாம் ஜலித்து புடைத்து, ஆய்ந்து பரிசோதித்து தான் ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டுமா? சும்மா அப்பா அம்மா சொல்லுகிற ஏதோ ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டினால் ஆகாதா? என்று நீங்கள் கூட யோசிக்கலாம்.

இதில் ஒரு பெரிய சூட்சமமே இருக்கிறது. உலக ஜீவராசிகள் அனைத்திலுமே பெண் தான் தனக்கு வேண்டிய ஆணாய் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளூம். எந்த ஜீவராசியிலும் ஆண் பெண்ணை தேர்ந்தெடுப்பதே கிடையாது. இதை தான் டார்வின் செக்ஷுவல் செலக்ஷன் என்றார். அதாகப்பட்டது, பெண் இனம் ஆண்களை தர பரிசோதனை செய்து, “தி பெஸ்ட்” ஆணை மட்டுமே கலவிக்கு தேர்வு செய்யும். இப்படி நடக்கும் கலவியல் தேர்வில் ஜெயிக்கவே ஆண் மிருகங்கள் அழகழகான் கவர்ச்சி உருப்புக்களை வளர்த்து பெண் இனத்தை ஈர்க்க பார்க்கின்றன. ஆண் சிங்கத்தின் அழகான பிடரி, ஆண் மயிலின் அழகான தோகை, ஆண் சேவலின் அழகான கொண்டை, ஆண் யானையின் நீளமான தந்தம்…..அவ்வளவு என்ன ஆர்ஜண்டீனாவின் நீல அலகு வாத்தின ஆணுக்கு தான் உலகிலேயே மிக நீளமான ஆணுருப்பு, முழுதாய் அரை மீட்டர் நீளம்…..எல்லாம் எதற்காக? பெண்களை கவர்ந்து பாலியல் தேர்வில் வெற்றி பெறுவதற்காக!

இப்படி பெண் பாலியல் தேர்வை நடத்துவதும், ஆண் அதில் பங்கெடுத்து வெற்றி தோல்வியை சந்திப்பதும் தான் ஆரம்ப கால மனிதர்களுக்குமே நடைமுறையாக இருந்தது. உதாரணத்திற்கு இராமாயண சீதாயை எடுத்துக்கொள்வோமே….மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே ஸ்ரீ ராமன் வந்தாலும், அன்னலும் நோக்கி, அவளும் நோக்கியிருந்தாலும், அவள் சும்மா ஒன்றும் அவனை தேர்ந்தெடுக்கவில்லையே. ”மஹா விஷ்ணு அவதாரமாவது மண்ணாங்கட்டியாவது, முதல்ல சிவ தனுசை ஒடச்சி காட்டு, அப்புறம் நீ பாஸா ஃபெயிலானு நான் முடிவு பண்ணுறேன்”, என்று கறாராகத்தானே பாலியல் தேர்வை நடத்தினாள்.

அந்த கால இந்திய பெண்கள் எல்லாம் தற்தம் காதலனை/கணவனை இப்படி நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தேர்வு செய்ததினால் தான், முந்தைய கால இந்திய ஆண்களுக்கு வீரம் அதிகமாக இருந்தது. அதனால் தான் வெளிநாட்டு ஆசாமிகளிடம் நாம் தோற்காமல் இருந்தோம். ஆனால் போக போக, இந்திய பெண்கள் இந்த பாலியல் தேர்வு முறையை கைவிட்டு, பெட்டி பாம்பாய் அடங்கி போய், தராதரமே பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் கண்டவனுக்கும் கழுத்தை நீட்ட ஆரம்பித்தார்கள்…..அப்போதிலிருந்து இந்திய ஆண்களிம் வீரியம் குறைந்து போனது, வெளிதேசத்து ஆண்களுக்கு ஒட்டு மொத்த தேசமே அடிமை ஆகி போனது!

ஆக பெண்கள் இயற்கையின் பிரதிநிதிகள். இயற்கை தன் “சர்வைவல் ஆஃப் தி ஃபிட்ட்டெஸ்ட்” நிபந்தனையை பெண்களை கொண்டே அமல் படுத்துகிறது. அதனால் தான் உலகின் எல்லா ஜீவராசியிலும் பெண்ணே பாலியல் தேர்வுகளை முடிவு செய்கிறது. ஐந்தறிவு இருக்கும் ஜீவன்களே இவ்வளவு உஷாராக இன தேர்வு செய்யும் போது, ஆறு அறிவு இருப்பதாக நினைத்துக்கொள்ளூம் மனித பெண், இன்னும் எவ்வளவு உஷாராக தன் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆக, இது வரை சொன்ன அத்தனை துணை தேர்வு குறிப்புக்களையும் வைத்து, மிக எச்சரிக்கையாய், ஆணை அலசி சிறந்தவனாய் ஒருவனை பார்த்து choose செய்து விட்டீர்களா? வெரி குட்! இனி இவனை எப்படி கை ஆள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆனால் அதற்கு முன்னால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான அறிவியல் ரகசியம் ஒன்று! ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்? இதென்ன பிரமாதம், சின்ன குழந்தை கூட சொல்லுமே, இருவருக்கும் பிறப்புருப்பு வெவ்வேறாக இருக்கிறது, அது தானே என்கிறீர்களா? அது சரி, இந்த பிறப்புறுப்புக்கள் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன? அந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தீர்களா? இதற்கு காரணம் ஆண் உடம்பில் ஊறும் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரு ஹார்மோன்.

நாம் இந்த தொடரில் ஏற்கனவே பேசிய சமாசாரம் தான், இருந்தாலும், உங்களுக்காக ஒரு சின்ன கதை சுருக்கம்: ஜனிக்கும் போது எல்லா மனித குழந்தைகளுமே பெண் பாலாய் தான் ஜனிக்கின்றன. அந்த குழந்தையின் மரபணுக்களில், ஒரு Y குரோமோசோம் இருந்தால், அந்த கருக்கு 6 வாரங்கள் ஆகும் போது இந்த Y குரோமோசொம், அந்த பொடியனின் உடம்பில் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த டெஸ்டோஸ்டீரோன், அந்த குட்டி உடம்பு முழுக்க பறவி, ஏற்கனவே பெண் வடிவமாய் இருக்கும் அவன் உடம்பையும் மூளையையும் ரீவையரிங் செய்து ஆண்மை படுத்தி விடும். இது என்ன புது கதையா இருக்கே, ஆதாரமில்லாம நான் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க தோன்றுகிறதா?

ஆதாரம் 1: ஆண்களுக்கு இருக்கும் முலைகள். எப்படியும் இவன் தான் பாலே கொடுக்க போவதில்லையே, அப்புறம் எதற்காக அவனுக்கு முலைகள்? ஏன் என்றால், அவன் தோல் உருவான ஆரம்ப நாட்களிலே அவன் உடம்பு பெண் வடிவாய் இருந்ததால், முலைகளும் அமைந்து விட்டிருந்தன. அதற்கு அப்புறம் தானே அவன் ஆணாய் மாறினான்? அதனால் முலைகள் அப்படியே தங்கிவிட்டன!

ஆதாரம் 2: சில குழந்தைகளுக்கு இந்த ஆண்மை படுத்தும் படலம் முழுமை பெறாமல், பாதியிலேயே நின்று விடுவதுண்டு…..அப்போது பிறப்புருப்பிலோ, மூளையிலோ, பாலினமாற்றம் முழுமை பெறாமல் அரை குறையாக இருப்பதினால், பிறந்து வளர்ந்த பிறகும் இந்த பாலியல் அடையாள கோளாறூகள் தொடர்வது உண்டு.

ஆக தகுந்த அறிவியல் ஆதாரங்களை வைத்து நமக்கு இப்போது தெரியும் பாலியல் உண்மை: இந்த ஆண் என்பவன் தன் தாயின் கருவில் இருந்த அந்த ஆரம்ப 6 வாரங்களுக்கு பெண் பாலாய் தான் இருந்தான். அதற்கு பிறகே ஆணாய் மாறினான். இப்படி பாலின மாற்றம் ஏற்பட்ட போது, அவன் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது போலவே அவன் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் முதல் மாற்றம்: அவன் மூளையின் மொழி மையம் சின்னதாகி போனது. முகத்தை பார்த்து ‘என்ன மூடில் இருக்கிறாள் இவள்?” என்று கண்டு பிடிக்கும் மூளையின் பாகமும் அவனுக்கு சிறுத்துவிட்டது. இதை போலவே குரலை வைத்து ஒருவரின் மனநிலையை யூகிக்கும் தன்மையும், ஒரே சமயத்தில் பல தகவலகளை ஒரிங்கிணைத்து யோசிக்கும் தன்மையும் அவனுக்கு இல்லாமல் போனது.

இவை எல்லாம் பெண் உருவாய் இருந்த போது அவன் மூளையில் இருந்த மையங்கள் தான். ஆனால் அவன் மூளையினுள் டெஸ்டோஸ்டீரோன் பாய்ந்த பிறகு இந்த மையங்கள் மறைந்து அதற்கு பதிலாக, பொருட்களை லாவகமாக கையாளும் தன்மையும், துள்ளியமாய் குறி பார்க்கும் தன்மையும், திசைகளையும், தூரங்களையும் யூகிக்கும் தன்மைகளும் அவனுக்கு புதிதாய் ஏற்பட்டன…..

இந்த தன்மைகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டும் ஏன் இருக்கின்றன? பெண்களுக்கு ஏன் அவ்வளவாக இல்லை? என்கிறீர்களா?

சபாஷ்! சரியான கேள்வி. அதற்கு பதிலும் ரொம்ப ஸ்வாரசியமானதே. மனித புணர்ச்சியில் பெண்ணுக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவள் சும்மா இருந்தாலே போதும். ஆனால் ஆணூக்கோ, உடல் பாகங்களை ஒருங்கிணைத்து செயல் பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அவனுக்கு இந்த co-ordination சரியாக வரவில்லை என்றால், அவன் இன பெருக்கத்திற்கே லாயக்கி அற்றவனாய் போய் விடுவானே. அதனால் தான் மனித ஆணுக்கு மட்டும், இந்த கண், கை, உருவ ஒருங்கினைப்பு ரொம்பவே அவசியமான ஒரு தேவை. இந்த தேவையை அனுசரித்து தான் இயற்கை அவனுக்கு இதற்குண்டான மூளை இனைப்புக்களை புதிதாக உருவாக்கி தருகிறது. இப்படி கலவியல் தேர்வில் வெற்றி பெற இயற்க்கை இவனுக்கு கொடுத்த, இந்த பொருத்தி ஆளும் தன்மையை தான் மனித ஆண் ஆயுதம் செய்யவும், வேட்டை ஆடவும் பயன் படுத்திக்கொண்டான். இந்த மூளை மாற்றங்கள் எல்லாம் அவனை ஒரு நல்ல வேட்டுவனாக்க உதவின.

இந்த வேட்டுவ மூளை அவனை திறமையாக வேட்டையாடி வம்சம் வளர்க்க வைத்தாலும், ஒரு பெண்ணிடம் நைசாக பேசி, அவள் முக ஜாடையை புரிந்துக்கொண்டு நடக்கும் பக்குவமெல்லாம் இல்லாதவனாய் அவனை இது மாற்றிவிட, பாவம் ஆண்கள்……அப்போதிலிருந்தே பெண்களிடம் பேச்சில் தோற்று போக ஆரம்பித்தார்கள்.

இந்த பாழாய் போன இயற்கை ஏன் இப்படி ஆண்களின் பேச்சு மையத்தை சின்னதாக்கி தொலச்சிதோ, என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது…..என்ன செய்வது மனித பெண்ணின் இடுப்பு எலும்பின் இடுக்கு வழியே பிரசவிக்க வேண்டுமானால் குழந்தையின் தலை ஒரு குறிப்பிட்ட சைஸ்ஸில் இருந்தால் தான் முடியும். மனிதர்களோ குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள்….சிங்கம், புலி, மாதிரி மாமிச பட்சினிகளாய் இருந்தால், பரம்பரை பரம்பரையாக வேட்டையாடிய பழக்கத்தில் மூளையும் ரெடிமேடாய் வேட்டைக்கென்றே வடிவமைக்கபட்டதாய் இருந்திருக்கும். மனிதனோ பழம் தின்னி குரங்கு வகையை சேர்ந்தவன்…..ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மின் ஏற்பட்ட ஒரு கொடும்பனி காலத்தின் போது, பஞ்சம் பிழைக்க அவன் உணவு முறையை மாற்றினான்……திடீரென்றூ மாமிச பட்சினியாய் மாறினான்…..இதை அனுசரித்து, அவன் மூளையினுள் சில புதிய வேட்டுவ மையங்களை உருவாக்க வேண்டிய அவசர கட்டாயம் இயற்கைக்கு. இந்த புதிய மையங்களை மூளையில் நிருவினால், அப்போது தலை சுற்றளவு பெரியதாகிவிடுமே? அதிலும் ஒரு பிரச்சனை, பிரசவத்தின் போது இடுப்பு எலும்பில் அகலத்திற்கு உட்பட்டே சுசுவின் தலை இருந்தாக வேண்டும். அதனால் தான் வேட்டையின் போது அதிகம் தேவை படாத, மொழி, முகம் பாவம், குரல் ஸ்ருதி உணரும் ஏரியாக்கள் எல்லாம் அவுட். அதற்கு பதிலாக வேட்டுவ ஏரியாக்கள் இன்!

ஆணின் மூளை மாற்றங்களை புரிந்துக்கொள்ளாத பெண்கள், “இவன் ஏன் என்னை போல சரளமாக பேச மாட்டேன் என்கிறான்? என் முகத்தின் பாவத்தை இந்த முட்டாள் புரிந்துக்கொள்ளவே மாட்டானா?” என்றெல்லாம் கவலை படுகிறார்கள்.

அவனுக்கு நிறைய பெண் சவகாசம் இருந்திருந்தால், “ஓகோ, பெண்கள் எல்லோரும் இப்படி தானா?” என்று அவன் அந்த அனுபவத்திலாவது புரிந்துக்கொண்டிருப்பான். பெண்களோடு அதிகம் பழகாத உத்தம புத்திரனாக அவன் இருந்தால் போச்சு, பெண்களின் இந்த வாய் மொழியும், உடல் மொழியுமே போதும் அவனை திக்கு முக்காக்கிவிட!

ஆகையால், ஸ்நேகிதிகாள், உங்கள் ஆணை ஹாண்டில் செய்ய, நீங்கள் முதலில் அவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்…..அவன் டெஸ்டோஸ்டீரோனால் மாற்றியமைக்க பட்ட ஒரு புது பிறவி. அவன் உங்களை மாதிரி இல்லை. உங்களை போலவே அவனும் பேசணும், புரிஞ்சிக்கணும், அன்பை வெளிபடுத்தணும் என்றெல்லாம் அவனிடம் ஓவராய் எதிர்ப்பார்க்காதீர்கள். இதை எல்லாம் அவனால் செய்ய முடியாது, காரணம் இதற்கு உண்டான மூளை மையங்களே அவனுக்கு அவ்வளவாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச மொழி மையத்தை வைத்து கொண்டு, ஏதோ அவனால் முடிந்தது, கொஞ்சம் சொதப்பலாக பேசினாலும், “பரவாயில்லை, இத்துனூண்டு மொழி மையத்தை வெச்சிக்கிட்டு, எனக்காக சிரமப்பட்டு இவ்வளவு பேசுகிறானே” என்று அவன் முயற்சிக்கு மதிப்பெண் கொடுங்கள். அவனை அவனாகவே இருக்க அனுமதியுங்கள். வித்தியாசங்களை மதித்து, அவனை ஏற்றுக்கொள்ள உங்களை தயார் படுத்திக்கொள்ளூங்கள்….

Understand his biology. இயற்கையாகவே அவனுக்கு இருக்கும், இந்த இயலாமைகளை புரிந்துக்கொண்டு, அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்…..அப்புறம் பாருங்கள், அவனை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸியாகிவிடும் என்று!