உருப்படியான ஆணை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பற்றி இத்தனை வாரங்களாக பார்த்தோம். இப்படி எல்லாம் ஜலித்து புடைத்து, ஆய்ந்து பரிசோதித்து தான் ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டுமா? சும்மா அப்பா அம்மா சொல்லுகிற ஏதோ ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டினால் ஆகாதா? என்று நீங்கள் கூட யோசிக்கலாம்.
இதில் ஒரு பெரிய சூட்சமமே இருக்கிறது. உலக ஜீவராசிகள் அனைத்திலுமே பெண் தான் தனக்கு வேண்டிய ஆணாய் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளூம். எந்த ஜீவராசியிலும் ஆண் பெண்ணை தேர்ந்தெடுப்பதே கிடையாது. இதை தான் டார்வின் செக்ஷுவல் செலக்ஷன் என்றார். அதாகப்பட்டது, பெண் இனம் ஆண்களை தர பரிசோதனை செய்து, “தி பெஸ்ட்” ஆணை மட்டுமே கலவிக்கு தேர்வு செய்யும். இப்படி நடக்கும் கலவியல் தேர்வில் ஜெயிக்கவே ஆண் மிருகங்கள் அழகழகான் கவர்ச்சி உருப்புக்களை வளர்த்து பெண் இனத்தை ஈர்க்க பார்க்கின்றன. ஆண் சிங்கத்தின் அழகான பிடரி, ஆண் மயிலின் அழகான தோகை, ஆண் சேவலின் அழகான கொண்டை, ஆண் யானையின் நீளமான தந்தம்…..அவ்வளவு என்ன ஆர்ஜண்டீனாவின் நீல அலகு வாத்தின ஆணுக்கு தான் உலகிலேயே மிக நீளமான ஆணுருப்பு, முழுதாய் அரை மீட்டர் நீளம்…..எல்லாம் எதற்காக? பெண்களை கவர்ந்து பாலியல் தேர்வில் வெற்றி பெறுவதற்காக!
இப்படி பெண் பாலியல் தேர்வை நடத்துவதும், ஆண் அதில் பங்கெடுத்து வெற்றி தோல்வியை சந்திப்பதும் தான் ஆரம்ப கால மனிதர்களுக்குமே நடைமுறையாக இருந்தது. உதாரணத்திற்கு இராமாயண சீதாயை எடுத்துக்கொள்வோமே….மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே ஸ்ரீ ராமன் வந்தாலும், அன்னலும் நோக்கி, அவளும் நோக்கியிருந்தாலும், அவள் சும்மா ஒன்றும் அவனை தேர்ந்தெடுக்கவில்லையே. ”மஹா விஷ்ணு அவதாரமாவது மண்ணாங்கட்டியாவது, முதல்ல சிவ தனுசை ஒடச்சி காட்டு, அப்புறம் நீ பாஸா ஃபெயிலானு நான் முடிவு பண்ணுறேன்”, என்று கறாராகத்தானே பாலியல் தேர்வை நடத்தினாள்.
அந்த கால இந்திய பெண்கள் எல்லாம் தற்தம் காதலனை/கணவனை இப்படி நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தேர்வு செய்ததினால் தான், முந்தைய கால இந்திய ஆண்களுக்கு வீரம் அதிகமாக இருந்தது. அதனால் தான் வெளிநாட்டு ஆசாமிகளிடம் நாம் தோற்காமல் இருந்தோம். ஆனால் போக போக, இந்திய பெண்கள் இந்த பாலியல் தேர்வு முறையை கைவிட்டு, பெட்டி பாம்பாய் அடங்கி போய், தராதரமே பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் கண்டவனுக்கும் கழுத்தை நீட்ட ஆரம்பித்தார்கள்…..அப்போதிலிருந்து இந்திய ஆண்களிம் வீரியம் குறைந்து போனது, வெளிதேசத்து ஆண்களுக்கு ஒட்டு மொத்த தேசமே அடிமை ஆகி போனது!
ஆக பெண்கள் இயற்கையின் பிரதிநிதிகள். இயற்கை தன் “சர்வைவல் ஆஃப் தி ஃபிட்ட்டெஸ்ட்” நிபந்தனையை பெண்களை கொண்டே அமல் படுத்துகிறது. அதனால் தான் உலகின் எல்லா ஜீவராசியிலும் பெண்ணே பாலியல் தேர்வுகளை முடிவு செய்கிறது. ஐந்தறிவு இருக்கும் ஜீவன்களே இவ்வளவு உஷாராக இன தேர்வு செய்யும் போது, ஆறு அறிவு இருப்பதாக நினைத்துக்கொள்ளூம் மனித பெண், இன்னும் எவ்வளவு உஷாராக தன் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஆக, இது வரை சொன்ன அத்தனை துணை தேர்வு குறிப்புக்களையும் வைத்து, மிக எச்சரிக்கையாய், ஆணை அலசி சிறந்தவனாய் ஒருவனை பார்த்து choose செய்து விட்டீர்களா? வெரி குட்! இனி இவனை எப்படி கை ஆள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
ஆனால் அதற்கு முன்னால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான அறிவியல் ரகசியம் ஒன்று! ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்? இதென்ன பிரமாதம், சின்ன குழந்தை கூட சொல்லுமே, இருவருக்கும் பிறப்புருப்பு வெவ்வேறாக இருக்கிறது, அது தானே என்கிறீர்களா? அது சரி, இந்த பிறப்புறுப்புக்கள் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன? அந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தீர்களா? இதற்கு காரணம் ஆண் உடம்பில் ஊறும் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரு ஹார்மோன்.
நாம் இந்த தொடரில் ஏற்கனவே பேசிய சமாசாரம் தான், இருந்தாலும், உங்களுக்காக ஒரு சின்ன கதை சுருக்கம்: ஜனிக்கும் போது எல்லா மனித குழந்தைகளுமே பெண் பாலாய் தான் ஜனிக்கின்றன. அந்த குழந்தையின் மரபணுக்களில், ஒரு Y குரோமோசோம் இருந்தால், அந்த கருக்கு 6 வாரங்கள் ஆகும் போது இந்த Y குரோமோசொம், அந்த பொடியனின் உடம்பில் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த டெஸ்டோஸ்டீரோன், அந்த குட்டி உடம்பு முழுக்க பறவி, ஏற்கனவே பெண் வடிவமாய் இருக்கும் அவன் உடம்பையும் மூளையையும் ரீவையரிங் செய்து ஆண்மை படுத்தி விடும். இது என்ன புது கதையா இருக்கே, ஆதாரமில்லாம நான் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க தோன்றுகிறதா?
ஆதாரம் 1: ஆண்களுக்கு இருக்கும் முலைகள். எப்படியும் இவன் தான் பாலே கொடுக்க போவதில்லையே, அப்புறம் எதற்காக அவனுக்கு முலைகள்? ஏன் என்றால், அவன் தோல் உருவான ஆரம்ப நாட்களிலே அவன் உடம்பு பெண் வடிவாய் இருந்ததால், முலைகளும் அமைந்து விட்டிருந்தன. அதற்கு அப்புறம் தானே அவன் ஆணாய் மாறினான்? அதனால் முலைகள் அப்படியே தங்கிவிட்டன!
ஆதாரம் 2: சில குழந்தைகளுக்கு இந்த ஆண்மை படுத்தும் படலம் முழுமை பெறாமல், பாதியிலேயே நின்று விடுவதுண்டு…..அப்போது பிறப்புருப்பிலோ, மூளையிலோ, பாலினமாற்றம் முழுமை பெறாமல் அரை குறையாக இருப்பதினால், பிறந்து வளர்ந்த பிறகும் இந்த பாலியல் அடையாள கோளாறூகள் தொடர்வது உண்டு.
ஆக தகுந்த அறிவியல் ஆதாரங்களை வைத்து நமக்கு இப்போது தெரியும் பாலியல் உண்மை: இந்த ஆண் என்பவன் தன் தாயின் கருவில் இருந்த அந்த ஆரம்ப 6 வாரங்களுக்கு பெண் பாலாய் தான் இருந்தான். அதற்கு பிறகே ஆணாய் மாறினான். இப்படி பாலின மாற்றம் ஏற்பட்ட போது, அவன் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது போலவே அவன் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் முதல் மாற்றம்: அவன் மூளையின் மொழி மையம் சின்னதாகி போனது. முகத்தை பார்த்து ‘என்ன மூடில் இருக்கிறாள் இவள்?” என்று கண்டு பிடிக்கும் மூளையின் பாகமும் அவனுக்கு சிறுத்துவிட்டது. இதை போலவே குரலை வைத்து ஒருவரின் மனநிலையை யூகிக்கும் தன்மையும், ஒரே சமயத்தில் பல தகவலகளை ஒரிங்கிணைத்து யோசிக்கும் தன்மையும் அவனுக்கு இல்லாமல் போனது.
இவை எல்லாம் பெண் உருவாய் இருந்த போது அவன் மூளையில் இருந்த மையங்கள் தான். ஆனால் அவன் மூளையினுள் டெஸ்டோஸ்டீரோன் பாய்ந்த பிறகு இந்த மையங்கள் மறைந்து அதற்கு பதிலாக, பொருட்களை லாவகமாக கையாளும் தன்மையும், துள்ளியமாய் குறி பார்க்கும் தன்மையும், திசைகளையும், தூரங்களையும் யூகிக்கும் தன்மைகளும் அவனுக்கு புதிதாய் ஏற்பட்டன…..
இந்த தன்மைகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டும் ஏன் இருக்கின்றன? பெண்களுக்கு ஏன் அவ்வளவாக இல்லை? என்கிறீர்களா?
சபாஷ்! சரியான கேள்வி. அதற்கு பதிலும் ரொம்ப ஸ்வாரசியமானதே. மனித புணர்ச்சியில் பெண்ணுக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவள் சும்மா இருந்தாலே போதும். ஆனால் ஆணூக்கோ, உடல் பாகங்களை ஒருங்கிணைத்து செயல் பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அவனுக்கு இந்த co-ordination சரியாக வரவில்லை என்றால், அவன் இன பெருக்கத்திற்கே லாயக்கி அற்றவனாய் போய் விடுவானே. அதனால் தான் மனித ஆணுக்கு மட்டும், இந்த கண், கை, உருவ ஒருங்கினைப்பு ரொம்பவே அவசியமான ஒரு தேவை. இந்த தேவையை அனுசரித்து தான் இயற்கை அவனுக்கு இதற்குண்டான மூளை இனைப்புக்களை புதிதாக உருவாக்கி தருகிறது. இப்படி கலவியல் தேர்வில் வெற்றி பெற இயற்க்கை இவனுக்கு கொடுத்த, இந்த பொருத்தி ஆளும் தன்மையை தான் மனித ஆண் ஆயுதம் செய்யவும், வேட்டை ஆடவும் பயன் படுத்திக்கொண்டான். இந்த மூளை மாற்றங்கள் எல்லாம் அவனை ஒரு நல்ல வேட்டுவனாக்க உதவின.
இந்த வேட்டுவ மூளை அவனை திறமையாக வேட்டையாடி வம்சம் வளர்க்க வைத்தாலும், ஒரு பெண்ணிடம் நைசாக பேசி, அவள் முக ஜாடையை புரிந்துக்கொண்டு நடக்கும் பக்குவமெல்லாம் இல்லாதவனாய் அவனை இது மாற்றிவிட, பாவம் ஆண்கள்……அப்போதிலிருந்தே பெண்களிடம் பேச்சில் தோற்று போக ஆரம்பித்தார்கள்.
இந்த பாழாய் போன இயற்கை ஏன் இப்படி ஆண்களின் பேச்சு மையத்தை சின்னதாக்கி தொலச்சிதோ, என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது…..என்ன செய்வது மனித பெண்ணின் இடுப்பு எலும்பின் இடுக்கு வழியே பிரசவிக்க வேண்டுமானால் குழந்தையின் தலை ஒரு குறிப்பிட்ட சைஸ்ஸில் இருந்தால் தான் முடியும். மனிதர்களோ குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள்….சிங்கம், புலி, மாதிரி மாமிச பட்சினிகளாய் இருந்தால், பரம்பரை பரம்பரையாக வேட்டையாடிய பழக்கத்தில் மூளையும் ரெடிமேடாய் வேட்டைக்கென்றே வடிவமைக்கபட்டதாய் இருந்திருக்கும். மனிதனோ பழம் தின்னி குரங்கு வகையை சேர்ந்தவன்…..ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மின் ஏற்பட்ட ஒரு கொடும்பனி காலத்தின் போது, பஞ்சம் பிழைக்க அவன் உணவு முறையை மாற்றினான்……திடீரென்றூ மாமிச பட்சினியாய் மாறினான்…..இதை அனுசரித்து, அவன் மூளையினுள் சில புதிய வேட்டுவ மையங்களை உருவாக்க வேண்டிய அவசர கட்டாயம் இயற்கைக்கு. இந்த புதிய மையங்களை மூளையில் நிருவினால், அப்போது தலை சுற்றளவு பெரியதாகிவிடுமே? அதிலும் ஒரு பிரச்சனை, பிரசவத்தின் போது இடுப்பு எலும்பில் அகலத்திற்கு உட்பட்டே சுசுவின் தலை இருந்தாக வேண்டும். அதனால் தான் வேட்டையின் போது அதிகம் தேவை படாத, மொழி, முகம் பாவம், குரல் ஸ்ருதி உணரும் ஏரியாக்கள் எல்லாம் அவுட். அதற்கு பதிலாக வேட்டுவ ஏரியாக்கள் இன்!
ஆணின் மூளை மாற்றங்களை புரிந்துக்கொள்ளாத பெண்கள், “இவன் ஏன் என்னை போல சரளமாக பேச மாட்டேன் என்கிறான்? என் முகத்தின் பாவத்தை இந்த முட்டாள் புரிந்துக்கொள்ளவே மாட்டானா?” என்றெல்லாம் கவலை படுகிறார்கள்.
அவனுக்கு நிறைய பெண் சவகாசம் இருந்திருந்தால், “ஓகோ, பெண்கள் எல்லோரும் இப்படி தானா?” என்று அவன் அந்த அனுபவத்திலாவது புரிந்துக்கொண்டிருப்பான். பெண்களோடு அதிகம் பழகாத உத்தம புத்திரனாக அவன் இருந்தால் போச்சு, பெண்களின் இந்த வாய் மொழியும், உடல் மொழியுமே போதும் அவனை திக்கு முக்காக்கிவிட!
ஆகையால், ஸ்நேகிதிகாள், உங்கள் ஆணை ஹாண்டில் செய்ய, நீங்கள் முதலில் அவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்…..அவன் டெஸ்டோஸ்டீரோனால் மாற்றியமைக்க பட்ட ஒரு புது பிறவி. அவன் உங்களை மாதிரி இல்லை. உங்களை போலவே அவனும் பேசணும், புரிஞ்சிக்கணும், அன்பை வெளிபடுத்தணும் என்றெல்லாம் அவனிடம் ஓவராய் எதிர்ப்பார்க்காதீர்கள். இதை எல்லாம் அவனால் செய்ய முடியாது, காரணம் இதற்கு உண்டான மூளை மையங்களே அவனுக்கு அவ்வளவாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச மொழி மையத்தை வைத்து கொண்டு, ஏதோ அவனால் முடிந்தது, கொஞ்சம் சொதப்பலாக பேசினாலும், “பரவாயில்லை, இத்துனூண்டு மொழி மையத்தை வெச்சிக்கிட்டு, எனக்காக சிரமப்பட்டு இவ்வளவு பேசுகிறானே” என்று அவன் முயற்சிக்கு மதிப்பெண் கொடுங்கள். அவனை அவனாகவே இருக்க அனுமதியுங்கள். வித்தியாசங்களை மதித்து, அவனை ஏற்றுக்கொள்ள உங்களை தயார் படுத்திக்கொள்ளூங்கள்….
Understand his biology. இயற்கையாகவே அவனுக்கு இருக்கும், இந்த இயலாமைகளை புரிந்துக்கொண்டு, அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்…..அப்புறம் பாருங்கள், அவனை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸியாகிவிடும் என்று!
Showing posts with label பாலியல் கல்வி. Show all posts
Showing posts with label பாலியல் கல்வி. Show all posts
Friday, May 7, 2010
Monday, April 5, 2010
உயிரை குடிக்கும் ஒருதலைக்காதல்
அந்த பையனுக்கு 25 வயது தான், திடுதிப்பென்று ஒரு நாள் அம்மாவிடம் வந்தான், தான் தன் உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணை அதி தீவிரமாக காதலிப்பதாகவும், அவளும் தன்னை ரொம்பவே விரும்புவதாகவும் சொன்னான், “இப்பவே கிளம்பு, அவங்க வீட்டுல போய் பொண்ணு கேட்கணும்”, என்றான். முதலில் காதல் கல்யாணமா? என்று ஆட்சேபித்த அம்மா, பையன், ஆக்ரோஷமாக, “வந்து பொண்ணு கேக்குறியா, இல்லை இதை எல்லாம் போட்டு உடைக்கட்டா?” என்று மிரட்டியதும், வேண்டா வெறுப்பாக பெண் கேட்கப்போனார். போய் பார்த்தால், இவன் காதலித்ததாக சொன்ன அந்த பெண்ணுக்கு இவன் யார் என்று கூட தெரிந்திருக்கவில்லை! இருவரும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், இவன் தான் அவளை தூரத்தில் இருந்து பார்த்து காதல் வயப்பட்டிருந்தான், ஆனால் அந்த பெண் இவனை பார்த்ததே இல்லை. இதை எல்லாம் விட விசித்திரம் அந்த பெண்ணுக்கு திருமணமாக அவளுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் இருந்தது!
பையனின் அம்மாவுக்கு அதிர்ச்சி + அவமானம். பையனிடம், “இதென்னடா கொடுமை?” என்றாள். ஆனால் பையன் அப்போதும் அடித்து பேசினான், “இல்லை அவ என்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுறா. புருஷன் குழந்தைன்னு சொல்லுறதெல்லாம் சுத்த பொய், எங்களை பிரிக்கிறத்துக்காக யாரோ அவளை மிரட்டி அப்படி சொல்ல சொல்லி இருக்காங்க” ஆனால் அம்மாவுக்கு பையன் ஏதோ அப்நார்மலாக இருக்கிறான் என்று புரிந்து விட்டது. காரணம் அவன் சில மாதங்களாகவே சரியாக குளிப்பதில்லை, சாப்பிடுவதில்லை, தன்னை தானே பராமறித்துக்கொள்வதுமில்லை. விடிய விடிய விழித்துக்கொண்டு ஏதோ கிறுக்கிக்கொண்டே இருந்தான். என்ன என்று எடுத்து பார்த்தால், ஏதேதோ சம்மந்தா சம்பந்தமில்லாத பெனாத்தால். அவ்வப்போது தனக்கு தானே முணுமுணுத்துக்கொள்வது, ஒரு தினிசாய் சிரித்துக்கொள்ளுதல்…..அக்கம் பக்கத்து வீட்டாரும் சொன்னார்கள், “தானா பேசிக்கிட்டே போறான், என்னன்னு கவனியுங்க”
அப்போதெல்லாம், “என் பையன் நல்லா தான் இருக்கான், அவனுக்கு அப்படி எல்லாம் எதுவுமே ஆகாது” என்று நம்பி இருந்த அம்மா, குழந்தையும் கையுமாய் நிற்பவளை காதலிப்பதாய் பையன் சொன்னதுமே, “சரி தான் பையனுக்கு மனநிலை சரியில்லை” என்று புரிந்துக்கொண்டார்.
அதற்குள் பையனின் அலுவலகத்தில் இருந்து புகார் வந்தது, அவன் ஆஃபீஸ் கோப்புகளிலும் கிறுக்கி வைத்தான், பெண் ஊழியர்கள் எல்லாம் அவன் தங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறான், பின் தொடர்கிறான் என்று புகார் கூறினார்கள்.
இப்படி சிலருக்கு ஏற்படும் இந்த காதல் பிரமையை தான் De Clerambault's syndrome என்றும் Erotomania என்றும் அழைக்கிறோம். இது ஒரு வகையான மனசிதைவு. இந்த பிரச்சனைக்கு உள்ளானவர் தன்னை ஒருவர் ரொம்பவே காதலிப்பதாகவும், அதனால் இவரும் அன்னாரை பதிலுக்கு ரொம்பவும் நேசிப்பதாகவும் கற்பனை செய்துக்கொள்கிறார்கள். ஆனால் இது வெறும் கற்பனை என்று அவர்களுக்கே தெரியாது. அதனால் தான் நேசிப்பதாய் நினைக்கும் மனிதரை பின் தொடர்வது, (Stalking) அவர்களுக்கு ரகசிய கடிதங்கள் எழுதுவது, ஃபோன் செய்து பேசாமல் இருப்பது, அவரை மையமாய் வைத்து பல காதல் கனவுகள், கவிதைகள், பாடல்கள் என்று பின்னுவது என்று இதிலேயே நேரத்தை செலவழித்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு பக்த மீரா, ஆண்டாள், இவர்கள் இருவருமே தி கிலாரெம்பால்ட் சின்ரோமால் பாதிக்க பட்ட பெண்கள். இதே கிலாரெம்பால்ட் சின்ரோம் ஆண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் இன்னும் தீவிரமாய் காதலை வெளிபடுத்துவதாய் நினைத்துக்கொண்டு, பெண்களை பின் தொடர்வது, அச்சுறுத்துவது, “என்னை மணந்துக்கொள்” என்று வர்புறுத்துவது மாதிரியான காரியங்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இது ஒரு வகை என்றால், இன்னும் சில வகை கைக்கிளை காதலர்கள் இருக்கிறார்கள்.
2. முதிர்ச்சி அடையாத சில மனிதர்கள், “நான் நினச்சதை அடஞ்சே தீருவேன். எனக்கு கிடக்கலன்னா, அது யாருக்கும் கிடைக்க கூடாது” என்று ஏடாகூடமாக எதையாவது நினைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு பெண்ணுக்கு பெட்டிஷன் போட்டு, அவள் அதை புறக்கணித்து விட்டால், உடனே ஓவர் ரியாக்ட் செய்து விடுகிறார்கள். அந்த பெண்ணை மிரட்டி இணங்க வைக்க முயல்வது, அவள் அப்படியும் மசியா விட்டால் ஆசிட் அடிப்பது, பிளேடில் கீறிவிடுவது, ஏன் கொலை கூட செய்வது என்று இருக்கும் இது போன்ற ஆபத்தான ஆசாமிகளுக்கு ஆளுமை கோளாறுகளும், சமூக விரோத தன்மையும் இருக்கலாம்.
3. இன்னும் சிலருக்கு அத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாத impulse control பிரச்சனை இருக்கலாம், இரண்டு நிமிடம் ஆறப்போட்டிருந்தால் செய்ய வேண்டாமே என்று தோன்ற கூடிய காரியங்களை சற்றும் யோசியாமல் அவசர அவசரமாய் செய்து முடித்து, அப்புறம் “சே இப்படி செய்து விட்டேனே” என்று வருந்துவார்கள்.
முதல் வகை ஆசாமிகளை பார்த்தாலே தெரியும்: யாரிடமும் சரியாக பேசாத சங்கோஜ பேர்வழிகளாய் இருப்பார்கள். “என்னமோ சரியில்லை” என்கிற எண்ணம் அவர்களை பார்த்த மாத்திரமே வந்துவிடும்.
இரண்டாம் வகை ஆசாமிகள், பந்தா பேர்வழிகளாக, சுய புகழ்ச்சிக்காரர்களாக, எதிலும் சகிப்புத்தன்மையே இல்லாதவர்களாக இருப்பார்கள். அடிக்கடி, ஈகோ பிரச்சனைகளாய் பிறருடன் பிரச்சனை பண்ணிக்கொள்வார்கள்.
மூன்றாம் ரகம் தொட்டதற்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வரும் முன்கோபியாக இருக்கும். தணிந்ததும், சாந்தமாகி விடும் சுபாவம் இருக்கும்.
யார் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒரு தலை காதல்களில் சிக்கி விடாமல் இருக்க பெண்கள் பொதுவாக தெரிந்துக்கொள்ள வேண்டிய யுத்திகள்:
1. முன் பின் தெரியாத ஆண்களாய் இருக்கட்டும், தினமும் சந்திக்கும் ஆண்களாகட்டும், எல்லோரிடமும் ஒரு டிஸ்டென்ஸ் மெயிண்டேன் செய்வது அவசியம். நட்புக்காக நீங்கள் ஓவராய் ஈஷிக்கொண்டால் அதுவே பிரச்சனைகளுக்கான காரணமாகி விடலாம்.
2. எந்த ஆண் வந்து காதல் சொன்னாலும், அவனை அவமானப்படுத்தி விடாதீர்கள். அவன் காதல் ஒரு காம்ப்லிமெண்ட் தானே, அதனால் ”தாங்கஸ், ஆனா நாட் இண்டரெஸ்டெட். ஆல் தி பெஸ்ட்” என்று பொலைட்டாக சொல்லி நழுவி விடுங்கள்.
3. “அவன் அப்படி சொன்னாண்டி” என்று உடனே பெண்கள் மாநாட்டில் எல்லோருக்கும் சொல்லி அவன் மானத்தை வாங்கி விடாதீர்கள். நீங்கள் அவனை எப்படி மதிப்பிட்டாலும், யாருடைய சுய மரியாதையையும் காயபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை. அப்படி செய்வது அநாகரீகமும் கூட
4. நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து வழிகிறானா? ரக்ஷா பந்தன் இருக்கவே இருக்கு….அவன் கையில் ஒரு ராக்கியை கட்டி சகோதரனாக்கிக்கொள்ளுங்கள்!
5. அப்போதும் தொடர்ந்து வந்து வம்பு பண்ணுகிறானா? ஓ என்று அழுது, “இது எனக்கு கஷ்டமா இருக்கு. இப்படி செய்யாதே” என்று சிம்பத்தி சம்பாதியுங்கள். எக்காரணம் கொண்டும், “உன் கைய உடைப்பேன், உன் காலை உடைப்பேன்” என்று மிரட்டி விடாதீர்கள்.
6. இதையும் தாண்டி பின் தொடர்கிறானா? உங்கள் வீட்டில் சொல்லி உங்கள் பாதுகாப்பை அதிகரியுங்கள்.
7. பெண்களுக்குள் எவ்வளவு பாலிடிக்ஸ் இருந்தாலும், பாதுகாப்பு என்று வரும் போது, எல்லோரும் ஒத்துமையாய் இருந்தாலே problem characterகள் உங்களை அண்டமாட்டார்கள்.
8. உங்களை யாராவது பின் தொடர்ந்து வருவதாய், அல்லது தொலைபேசியில் தொந்தரவு தருவதாய் தோன்றினால், இதற்கு பெயர் ஸ்டாக்கிங் Stalking. இது சட்டப்படி குற்றம், இதற்கு தண்டனைகள் உண்டு. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்
இவை எல்லாம் பெண்கள் தெரிந்துக்கொள்ள கூடிய விஷயங்கள், எடுத்து கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள்….ஆனாலும் நம் நாட்டு சட்டமும், காவலும் இன்னும் போன நூற்றாண்டு பாணியிலேயே செயல் பட்டுக்கொண்டிருப்பதால், இப்படி பட்ட போஸ்ட் மார்டன் யுவதிகளின் பிரச்சனைகளை தீர்க்கவும் அவை கொஞ்சம் முன் வந்தால் தான் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க முடியும்.
குமுதம் ஸ்நேகிதி-இல் இருந்து வெட்டி ஒட்டியது
பையனின் அம்மாவுக்கு அதிர்ச்சி + அவமானம். பையனிடம், “இதென்னடா கொடுமை?” என்றாள். ஆனால் பையன் அப்போதும் அடித்து பேசினான், “இல்லை அவ என்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுறா. புருஷன் குழந்தைன்னு சொல்லுறதெல்லாம் சுத்த பொய், எங்களை பிரிக்கிறத்துக்காக யாரோ அவளை மிரட்டி அப்படி சொல்ல சொல்லி இருக்காங்க” ஆனால் அம்மாவுக்கு பையன் ஏதோ அப்நார்மலாக இருக்கிறான் என்று புரிந்து விட்டது. காரணம் அவன் சில மாதங்களாகவே சரியாக குளிப்பதில்லை, சாப்பிடுவதில்லை, தன்னை தானே பராமறித்துக்கொள்வதுமில்லை. விடிய விடிய விழித்துக்கொண்டு ஏதோ கிறுக்கிக்கொண்டே இருந்தான். என்ன என்று எடுத்து பார்த்தால், ஏதேதோ சம்மந்தா சம்பந்தமில்லாத பெனாத்தால். அவ்வப்போது தனக்கு தானே முணுமுணுத்துக்கொள்வது, ஒரு தினிசாய் சிரித்துக்கொள்ளுதல்…..அக்கம் பக்கத்து வீட்டாரும் சொன்னார்கள், “தானா பேசிக்கிட்டே போறான், என்னன்னு கவனியுங்க”
அப்போதெல்லாம், “என் பையன் நல்லா தான் இருக்கான், அவனுக்கு அப்படி எல்லாம் எதுவுமே ஆகாது” என்று நம்பி இருந்த அம்மா, குழந்தையும் கையுமாய் நிற்பவளை காதலிப்பதாய் பையன் சொன்னதுமே, “சரி தான் பையனுக்கு மனநிலை சரியில்லை” என்று புரிந்துக்கொண்டார்.
அதற்குள் பையனின் அலுவலகத்தில் இருந்து புகார் வந்தது, அவன் ஆஃபீஸ் கோப்புகளிலும் கிறுக்கி வைத்தான், பெண் ஊழியர்கள் எல்லாம் அவன் தங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறான், பின் தொடர்கிறான் என்று புகார் கூறினார்கள்.
இப்படி சிலருக்கு ஏற்படும் இந்த காதல் பிரமையை தான் De Clerambault's syndrome என்றும் Erotomania என்றும் அழைக்கிறோம். இது ஒரு வகையான மனசிதைவு. இந்த பிரச்சனைக்கு உள்ளானவர் தன்னை ஒருவர் ரொம்பவே காதலிப்பதாகவும், அதனால் இவரும் அன்னாரை பதிலுக்கு ரொம்பவும் நேசிப்பதாகவும் கற்பனை செய்துக்கொள்கிறார்கள். ஆனால் இது வெறும் கற்பனை என்று அவர்களுக்கே தெரியாது. அதனால் தான் நேசிப்பதாய் நினைக்கும் மனிதரை பின் தொடர்வது, (Stalking) அவர்களுக்கு ரகசிய கடிதங்கள் எழுதுவது, ஃபோன் செய்து பேசாமல் இருப்பது, அவரை மையமாய் வைத்து பல காதல் கனவுகள், கவிதைகள், பாடல்கள் என்று பின்னுவது என்று இதிலேயே நேரத்தை செலவழித்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு பக்த மீரா, ஆண்டாள், இவர்கள் இருவருமே தி கிலாரெம்பால்ட் சின்ரோமால் பாதிக்க பட்ட பெண்கள். இதே கிலாரெம்பால்ட் சின்ரோம் ஆண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் இன்னும் தீவிரமாய் காதலை வெளிபடுத்துவதாய் நினைத்துக்கொண்டு, பெண்களை பின் தொடர்வது, அச்சுறுத்துவது, “என்னை மணந்துக்கொள்” என்று வர்புறுத்துவது மாதிரியான காரியங்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இது ஒரு வகை என்றால், இன்னும் சில வகை கைக்கிளை காதலர்கள் இருக்கிறார்கள்.
2. முதிர்ச்சி அடையாத சில மனிதர்கள், “நான் நினச்சதை அடஞ்சே தீருவேன். எனக்கு கிடக்கலன்னா, அது யாருக்கும் கிடைக்க கூடாது” என்று ஏடாகூடமாக எதையாவது நினைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு பெண்ணுக்கு பெட்டிஷன் போட்டு, அவள் அதை புறக்கணித்து விட்டால், உடனே ஓவர் ரியாக்ட் செய்து விடுகிறார்கள். அந்த பெண்ணை மிரட்டி இணங்க வைக்க முயல்வது, அவள் அப்படியும் மசியா விட்டால் ஆசிட் அடிப்பது, பிளேடில் கீறிவிடுவது, ஏன் கொலை கூட செய்வது என்று இருக்கும் இது போன்ற ஆபத்தான ஆசாமிகளுக்கு ஆளுமை கோளாறுகளும், சமூக விரோத தன்மையும் இருக்கலாம்.
3. இன்னும் சிலருக்கு அத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாத impulse control பிரச்சனை இருக்கலாம், இரண்டு நிமிடம் ஆறப்போட்டிருந்தால் செய்ய வேண்டாமே என்று தோன்ற கூடிய காரியங்களை சற்றும் யோசியாமல் அவசர அவசரமாய் செய்து முடித்து, அப்புறம் “சே இப்படி செய்து விட்டேனே” என்று வருந்துவார்கள்.
முதல் வகை ஆசாமிகளை பார்த்தாலே தெரியும்: யாரிடமும் சரியாக பேசாத சங்கோஜ பேர்வழிகளாய் இருப்பார்கள். “என்னமோ சரியில்லை” என்கிற எண்ணம் அவர்களை பார்த்த மாத்திரமே வந்துவிடும்.
இரண்டாம் வகை ஆசாமிகள், பந்தா பேர்வழிகளாக, சுய புகழ்ச்சிக்காரர்களாக, எதிலும் சகிப்புத்தன்மையே இல்லாதவர்களாக இருப்பார்கள். அடிக்கடி, ஈகோ பிரச்சனைகளாய் பிறருடன் பிரச்சனை பண்ணிக்கொள்வார்கள்.
மூன்றாம் ரகம் தொட்டதற்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வரும் முன்கோபியாக இருக்கும். தணிந்ததும், சாந்தமாகி விடும் சுபாவம் இருக்கும்.
யார் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒரு தலை காதல்களில் சிக்கி விடாமல் இருக்க பெண்கள் பொதுவாக தெரிந்துக்கொள்ள வேண்டிய யுத்திகள்:
1. முன் பின் தெரியாத ஆண்களாய் இருக்கட்டும், தினமும் சந்திக்கும் ஆண்களாகட்டும், எல்லோரிடமும் ஒரு டிஸ்டென்ஸ் மெயிண்டேன் செய்வது அவசியம். நட்புக்காக நீங்கள் ஓவராய் ஈஷிக்கொண்டால் அதுவே பிரச்சனைகளுக்கான காரணமாகி விடலாம்.
2. எந்த ஆண் வந்து காதல் சொன்னாலும், அவனை அவமானப்படுத்தி விடாதீர்கள். அவன் காதல் ஒரு காம்ப்லிமெண்ட் தானே, அதனால் ”தாங்கஸ், ஆனா நாட் இண்டரெஸ்டெட். ஆல் தி பெஸ்ட்” என்று பொலைட்டாக சொல்லி நழுவி விடுங்கள்.
3. “அவன் அப்படி சொன்னாண்டி” என்று உடனே பெண்கள் மாநாட்டில் எல்லோருக்கும் சொல்லி அவன் மானத்தை வாங்கி விடாதீர்கள். நீங்கள் அவனை எப்படி மதிப்பிட்டாலும், யாருடைய சுய மரியாதையையும் காயபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை. அப்படி செய்வது அநாகரீகமும் கூட
4. நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து வழிகிறானா? ரக்ஷா பந்தன் இருக்கவே இருக்கு….அவன் கையில் ஒரு ராக்கியை கட்டி சகோதரனாக்கிக்கொள்ளுங்கள்!
5. அப்போதும் தொடர்ந்து வந்து வம்பு பண்ணுகிறானா? ஓ என்று அழுது, “இது எனக்கு கஷ்டமா இருக்கு. இப்படி செய்யாதே” என்று சிம்பத்தி சம்பாதியுங்கள். எக்காரணம் கொண்டும், “உன் கைய உடைப்பேன், உன் காலை உடைப்பேன்” என்று மிரட்டி விடாதீர்கள்.
6. இதையும் தாண்டி பின் தொடர்கிறானா? உங்கள் வீட்டில் சொல்லி உங்கள் பாதுகாப்பை அதிகரியுங்கள்.
7. பெண்களுக்குள் எவ்வளவு பாலிடிக்ஸ் இருந்தாலும், பாதுகாப்பு என்று வரும் போது, எல்லோரும் ஒத்துமையாய் இருந்தாலே problem characterகள் உங்களை அண்டமாட்டார்கள்.
8. உங்களை யாராவது பின் தொடர்ந்து வருவதாய், அல்லது தொலைபேசியில் தொந்தரவு தருவதாய் தோன்றினால், இதற்கு பெயர் ஸ்டாக்கிங் Stalking. இது சட்டப்படி குற்றம், இதற்கு தண்டனைகள் உண்டு. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்
இவை எல்லாம் பெண்கள் தெரிந்துக்கொள்ள கூடிய விஷயங்கள், எடுத்து கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள்….ஆனாலும் நம் நாட்டு சட்டமும், காவலும் இன்னும் போன நூற்றாண்டு பாணியிலேயே செயல் பட்டுக்கொண்டிருப்பதால், இப்படி பட்ட போஸ்ட் மார்டன் யுவதிகளின் பிரச்சனைகளை தீர்க்கவும் அவை கொஞ்சம் முன் வந்தால் தான் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க முடியும்.
குமுதம் ஸ்நேகிதி-இல் இருந்து வெட்டி ஒட்டியது
Labels:
பாலியல் கல்வி
Sunday, March 14, 2010
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 31
ஒரு ஆணை தேர்ந்தெடுக்கும் முன் அவன் அம்மாவின் குணம் நாடி குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி எல்லாம் போன ஸ்நேகிதியில் பார்த்தோம். இனி அவன் அப்பா கேரெக்டரின் முக்கியத்துவம் என்ன என்றும் தெரிந்துக்கொள்வோமே.
அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு. அதெப்படி என்று யோசிக்கிறீர்களா?
அந்த பெண் திருமணமாகி தன் கணவனுடன் வாழ போனாள். வண்டியில் அவன் பெற்றோர், பின் இருக்கையிலும், புது மணத்தம்பதிகள் முன் இருக்கையிலும் அமர்ந்து போய் கொண்டிருக்க, அந்த மாப்பிள்ளை பையன், மனைவியிடம், “என் தோலில் சாய்ந்துக்கொள்” என்று அடம் பிடிக்க, மணப்பெண்ணூம் நாணி, கோணி, மறுத்துப்பார்த்து, கடைசியில் அவன் ஆசையை நிறைவேற்ற, வண்டி இறங்கியதும், மாமியார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் உனக்கு நிமிர்ந்து உட்கார முடியாதா? அவனுக்கே இடம் பத்தாமல் கஷ்டபட்டுகிட்டு இருக்கான், நீ ஏன் அவன் மேல சாஞ்சி டிஸ்டர்ப் பண்ணே?”
இப்படி ஆரம்பித்து, தொடர்ந்து மாமியார் கோபமாகவே இருந்தாள். தன் வீட்டிற்கு அழைத்து போன மருமகளுக்கு ஒரு ஆரதி எடுக்க கூட அவளுக்கு மனமில்லை. வந்ததும் வராததுமாய் மருமகளிடம் வள் என்று விழுந்தாள், “இந்த வீட்டுல என்னென்ன இருக்குனு கவனிச்சி வெச்சிகிட்டு, உன் சொந்தகாரங்களுக்கு சொல்லீடாதே, அப்புறம் எல்லாரும் இங்கேயே வந்து உட்கார்ந்திடலாம்னு நினைச்சிக்க போறாங்க.” மகனின் அறைக்கு மருமகளை அழைத்து போனாள், “என் பையனோட டை, சாக்ஸை எல்லாம் எடுத்து உன் தம்பிக்கு குடுத்துடாதே, எல்லாம் வெச்சது வெச்சபடி இருக்கணும்….”
அந்த மாமியாருக்கு தெரியும் தான், அவள் மருமகள் பணக்காரி என்று, இருந்தாலும், அவளால் இப்படி எல்லாம் குத்தலாக பேசாமல் இருக்கவே முடியவில்லை. மருமகள் தன் கணவனுக்கு ஆசையாக எதையாவது சமைத்தால், ”இதை எல்லாம் மனிஷன் சாப்பிடுவானா,” என்று எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழைய சாம்பாரை எடுத்து தன் பையனுக்கு பரிமாறுவாள். மருமகள் தன் கணவனுக்கு கேக் என்றால் பிடிக்குமே என்று முட்டையை வாங்கி வந்தால், அதை ஒளித்து வைத்து விடுவாள் மாமியார். மருமகள் தன் கணவனின் சட்டைகளை தானே தன் கையால் இச்திரி செய்தால், “உனக்கு போட தெரியாது, நானே கடையில குடுத்து பண்ணிக்கிறேன், அது தான் அவனுக்கு பிடிக்கும்” என்பாள். இதை எல்லாம் விட பெரிய கூத்து, மகனும் மருமகளும் தனியாக இருந்தால் எங்கே மகன் மயங்கிவிடப்போகிறானோ என்று பயந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பையன் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள், “என்னமோ தெரியலை, உடம்பே சரியில்லை…..” என்ற ஒரு வசனத்துடன்.
மகன் தனியாக மாட்டினால் போதும், அவன் மாட்டாவிட்டாலும் ஃபோன் செய்தாவது புலம்பித்தள்ளூவாள், “அம்மா உனக்காக எவ்வளவோ கஷ்டபட்டிருக்கேன், என்ன இருந்தாலும் அவ நேத்து வந்தவ…..” பொருத்து பொருத்து பார்த்த மருமகளுக்கு போக போக சகிப்புத்தன்மை தேய்ந்துக்கொண்டே போக, தன் கணவனிடம் தனக்குண்டான உரிமையை பெற அவள் முயற்சிக்க ஆரம்பிக்க, வழக்கம் போல குடும்பத்தில் பெரிய குருக்ஷேத்திரமே வெடித்தது…..
இதில் பெரிய கேள்வியே, “இந்த மாமியாரும் ஒரு பெண் தானே, அவளும் கல்யாணம், கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்தவள் தானே, ஒரு பெண்ணின் மனதை அவளும் புரிந்துக்கொண்டு நடப்பது தானே இயல்பு. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் அற்பமாக நடந்து வாழ வந்தவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறாள் இந்த அம்மாள்? ” என்பது தானே. இங்கே தான் மாமனாரின் கேரெக்டர் முக்கியமாகிறது.
அந்த ஆசாமி தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இந்த வம்பே வந்திருக்காது. ஆனால் அவர் அந்த காலத்து ரோமியோ, மனைவியை தவிற மற்ற பெண்களிடமெல்லாம் தித்திப்பாய் பேசியே தன் வாழ்வின் பெரும் பொழுதை கழித்திருந்தார். ரிடையர் ஆகும் வரை பெரிதாய் எதையும் சம்பாதித்திருக்கவும் இல்லை. வாய் கிழிய வீண் ஜம்பப்பேச்சு, சதா சுய பிரதாபம், என்று எப்போதுமே அரைக்குடமாய் இருந்த அவர், அறம், பொருள், இன்பம், வீடு என்று எல்லா விஷயத்திலும், மனைவிக்கு குறையை மட்டுமே வைத்து விட, அவர் மனைவி தான் பாவம் என்ன செய்வாள்?
வெளிநாட்டு பெண் என்றால், கணவன் சரியில்லை என்று கண்டு பிடித்த உடனே அவனை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்திருப்பாள், ஆனால் இவள் இந்திய பெண்ணாயிற்றே, அதுவும் அந்த காலத்து பெண். கல்லானாலும் அதே கணவனை கட்டிக்கொண்டு அழுவதை தவிற அவளுக்கு வேறு வழி இல்லை. ஆனாலும் அவளும் பெண் தானே. அவளுக்கும், பாசம், பற்று, அன்பு, அரவணைப்பு, எல்லாம் தேவைபடுமே. அவளை பாராட்டி, ஊக்குவித்து, ”உனக்கு நான் இருக்கிறேன், கவலை படாதே,” என்று ஆறுதல் சொல்ல ஒரு ஆண் மகன் கிடைக்க மாட்டானா என்று அந்த தாயும் ஏங்கத்தானே செய்வாள்? இந்த இமோஷனல் தேவையை எப்படி தீர்த்துக்கொள்வாள்? சந்தர்ப்பம் அமைந்து, அதற்குண்டான துணிச்சலும் இருக்கும் பெண்கள், யாராவது ஒரு கள்ளக்காதலனையாவது கொண்டு இந்த இமோஷனல் தேவையை தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவு துணிவில்லாத தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகனையே தன் இமோஷனல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வாள்…..
“உன் அப்பா சரியில்லை, பார் அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்குன்னு யார் இருக்கா? நீயாவது வளர்ந்து ஆளாகி, அம்மாவை பார்த்துகிட்டா சரி…” பையனிடம் புளம்பி தள்ளி அம்மா செண்டிமெண்ட்டை அதிக பட்சமாய் இவள் பிரயோகிக்க, பையனும், “பாவம் அம்மா, அப்பா தான் அவளிடம் அன்பாகவே இல்லையே, அம்மாவை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று சகலத்தையும் செலவழிக்க தயாரானான். சம்பாதிக்க ஆரம்பித்த உடனே, அம்மாவுக்கு புடவை, நகை, வீடு, வசதி, என்று மகன் தாராளமாய் செலவழிக்க, அம்மாவும் ”என் புருஷனால தான் நான் சுகப்படலை, என் மகனாவது என்னை நல்லா பார்த்துக்குறானே” என்று உச்சி குளிர்ந்து போனாள்…..அம்மா இவ்வளவு குஷியாவதை பார்த்து, மகனும் அவளை மேலும் மேலும் கவனித்துக்கொண்டே போக, கடைசி வரைக்கும் அந்த பையனுக்கு தெரியவே தெரியாது, அவன் தன் தாய்க்கு செய்வதெல்லாம், ஒரு கணவன் செய்ய வேண்டிய கடமைகளை என்று.
மகன் போய் கணவனின் கடமைகளை செய்வதா, அதுவும் இந்த புண்ணிய மண்ணிலா, இதென்ன அபாண்டம் என்று உடனே ஓவர் ரியாக்ட் செய்துவிடாதீர்கள். கணவனின் கடமை என்றால் உடனே கலவியல் கடமைகளை மட்டும் நினைத்துக்கொண்டால் எப்படி? பேச்சுத்துணை, பாராட்டு, அவசரத்தில் உதவி, போக்குவரத்து துணை, உடை, நகை, வீடு, வசதி, கேளிக்கை, கௌரவம், இதை எல்லாம் விட பெண்களின் மிக முக்கிய தேவையான பவர்! இப்படி எத்தனையோ விஷயங்களுக்காக பல பெண்கள் இன்னமும் ஆணையே நம்பி இருக்க, அவளுக்கு வாய்த்த கணவன் இதை எல்லாம் கொடுத்தருளவில்லை என்றால், உடனே அம்மாக்காள் இவற்றை எல்லாம் தன் மகனிடம் இருந்து தான் பெற முயல்கிறார்கள்.
இதை எல்லாம் மகன் செய்யும் போது, அவன் தன்னை அறியாமல் தன் தாயுக்கே, கணவன் ஸ்தானம் வகித்து விடுகிறான். அவளுக்கே அவளுக்கு என்று அந்த தாய்க்கு ஒரு நல்ல கண்வன் வாய்த்திருந்தால், “எனக்கு இதை எல்லாம் செய்ய உன் அப்பா இருக்கிறார், நீ உன் குடும்பத்தை பார்” என்று சொல்வாள். ஆனால் கணவன் சரியாக வாய்க்காத பெண்களால் இப்படி சொல்ல முடியாதே, “பொண்டாட்டி வந்துட்டானு அம்மாவை மறந்துடாதேடா” என்று தானே கெஞ்சுவாள்? மருமகளையும் ஏதோ, தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து கொண்டுபோக வந்த பூச்சாண்டி மாதிரித்தானே நடத்துவாள்?
இதனாலேயே, இது வரை தான் அனுபவித்த சொகுசான வாழ்க்கையையும், செக்யூரிட்டியையும் கெடுக்கவே வந்த எதிரி என்கிற மாதிரியே, பல மாமியார்கள் மருமகள்களை பாவிக்கிறார்கள். மருமகளை இப்படி எதிரியாக நினைப்பதினால் தான், ”அவ சரியில்லைடா, அம்மாவை மன்னிச்சிடு, நான் தெரியாம உன்னை இப்படி ஒரு பாழும் கிணத்துல பிடிச்சு தள்ளீட்டேன்” என்று மருமகளை மட்டம் தட்டி, “உனக்கு நான் முக்கியமா, அவ முக்கியமா?” என்று மகனிடம் சண்டைகள் போட்டு, ”தாயா தாரமா” என்று தேர்ந்தெடுக்கும் தர்ம சங்கடத்திற்கு அவனை தள்ளி, சின்னத்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். தன் மகனின் விஸ்வாசத்தை தன் பக்கமே நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியை சரிகட்டிக்கொள்ள…..
இதற்கு நேர் எதிராய், தனக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்த்த மாமியார்கள் எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி, மருமகளிடம் மிகவும் ஆசையாக பழகுகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பெருந்தன்மையாக நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவன் சரியில்லை, மகனை நம்பி தான் வாழ்க்கையே என்றிருக்கும் மாமியார்களோ, ராட்ஷசிகள் மாதிரி போராடி, மகனின் குடும்ப வாழ்க்கையே நாசமாக்கி விடுகிறார்கள். தன் மகனின் வாழ்க்கையை ஒரு தாயே பாழாக்குவாளா? என்று உங்களுக்கு ஆட்சரியமாக இருக்கிறதா?
உயிரியலில் இதெல்லாம் ரொம்ப சகஜம் தான்! ஆடு, மாடு, மான் மாதிரியான தாவிர பட்சினிகளாட்டும். நாய், பூனை, சிங்கம், கழுகு மாதிரியான மாமிசபட்சினிகளாகட்டும். தாய், தான் போட்ட குட்டிகளில் ஒன்றை தானே சாப்பிட்டு, தெம்பேற்றிக்கொள்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு செயலே. ஏன் அந்த தாய் அப்படி செய்துவிடுகிறது? இயற்கையில் எல்லாவற்றுக்குமே ஓர் உள்ளர்த்தம் இருந்தாக வேண்டுமே? விஷயம் இது தான், தான் போட்ட குட்டிகளில் பிழைக்க முடியாத ஏதாவது இருந்ததென்றால், அதை பிற மிருகங்கள் சாப்பிட்டுவிடும். எப்படியும் வீணாகப்போகும் அந்த எரிபொருளை எல்லாம் தாய் தானே உட்கொண்டு விட்டால், மற்ற குழந்தைகளை பராமறிக்கும் சக்தியாவது கிடைக்குமே. அதனால் தான் பிழைக்க தோதில்லா பிள்ளைகளை காட்டுவாசி தாய்கள் தாமே தின்றுவிடுகின்றன……அதே போல தான் மனித தாயும். தான், தன் மனைவி, என்று கூடி தன் மரபணுக்களை இம்மைக்கும் மறுமைக்கும் பரப்பிக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் இல்லாத மகன், அல்லது மகள் என்றால், அதன் வளங்களை தானே உட்கொண்டுவிடுகிறாள் மனித தாய்….. அவளுக்கென்று வளங்களை கொண்டு வந்து தரவேண்டிய அவள் கணவன் கையாளாகாதவனாய் இருந்தால்.
ஆக ஸ்நேகிதிகாள், பையனின் அம்மா அவனுக்கு நல்ல பண்புகளை சொல்லி தந்திருக்கிறாளா என்று பார்ப்பது முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம் அவன் அப்பாவின் ஹஸ்பெண்டிங்க் திறமை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு அப்பாவே இல்லை, அல்லது, இருந்தும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள துப்பில்லாத வெட்டி கேஸ் என்றால், உஷார்……இந்த இன்செக்யூரிட்டியே அந்த மாமியாரை இம்சை அரசியாக்கிவிடும். ஆண்களின் போரிலாவது ஆயுதங்கள் கண்ணுக்கு தெரியும், ஆனால் இந்த பெண் புரியும் போரில் அவள் பிரயோகிக்கும், ”அம்மா செண்டிமெண்ட்” என்கிற இந்த பிரம்மாஸ்திரம் இருக்கிறதே, உலகிலேயே அது தான் மிக சக்திவாய்ந்த ஆயுதமே! கண்ணுக்கே தெரியாத இந்த ஆயுதத்தை பயன் படுத்தித்தான் பல இந்திய தாய்மார்கள் தங்கள் சுயநலத்திற்க்காக தங்கள் மகன்களின் வாழ்க்கையை பஸ்பமாக்கிவிடுகிறார்கள்….எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியினால்…..
ஆக, பையனை ஓகே சொல்வதற்கு முன்பு, அவன் அப்பாவை தரபரிசோதனை செய்துபாருங்கள். அவர் நல்ல கணவனாக இருந்தால், உங்கள் கணவன் உங்களுக்கே தான். அவர் சுத்த வேஸ்டாக இருந்தால், போச்சு, உங்கள் கணவர் உங்கள் மாமியாருக்கு தான்!
அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு. அதெப்படி என்று யோசிக்கிறீர்களா?
அந்த பெண் திருமணமாகி தன் கணவனுடன் வாழ போனாள். வண்டியில் அவன் பெற்றோர், பின் இருக்கையிலும், புது மணத்தம்பதிகள் முன் இருக்கையிலும் அமர்ந்து போய் கொண்டிருக்க, அந்த மாப்பிள்ளை பையன், மனைவியிடம், “என் தோலில் சாய்ந்துக்கொள்” என்று அடம் பிடிக்க, மணப்பெண்ணூம் நாணி, கோணி, மறுத்துப்பார்த்து, கடைசியில் அவன் ஆசையை நிறைவேற்ற, வண்டி இறங்கியதும், மாமியார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் உனக்கு நிமிர்ந்து உட்கார முடியாதா? அவனுக்கே இடம் பத்தாமல் கஷ்டபட்டுகிட்டு இருக்கான், நீ ஏன் அவன் மேல சாஞ்சி டிஸ்டர்ப் பண்ணே?”
இப்படி ஆரம்பித்து, தொடர்ந்து மாமியார் கோபமாகவே இருந்தாள். தன் வீட்டிற்கு அழைத்து போன மருமகளுக்கு ஒரு ஆரதி எடுக்க கூட அவளுக்கு மனமில்லை. வந்ததும் வராததுமாய் மருமகளிடம் வள் என்று விழுந்தாள், “இந்த வீட்டுல என்னென்ன இருக்குனு கவனிச்சி வெச்சிகிட்டு, உன் சொந்தகாரங்களுக்கு சொல்லீடாதே, அப்புறம் எல்லாரும் இங்கேயே வந்து உட்கார்ந்திடலாம்னு நினைச்சிக்க போறாங்க.” மகனின் அறைக்கு மருமகளை அழைத்து போனாள், “என் பையனோட டை, சாக்ஸை எல்லாம் எடுத்து உன் தம்பிக்கு குடுத்துடாதே, எல்லாம் வெச்சது வெச்சபடி இருக்கணும்….”
அந்த மாமியாருக்கு தெரியும் தான், அவள் மருமகள் பணக்காரி என்று, இருந்தாலும், அவளால் இப்படி எல்லாம் குத்தலாக பேசாமல் இருக்கவே முடியவில்லை. மருமகள் தன் கணவனுக்கு ஆசையாக எதையாவது சமைத்தால், ”இதை எல்லாம் மனிஷன் சாப்பிடுவானா,” என்று எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழைய சாம்பாரை எடுத்து தன் பையனுக்கு பரிமாறுவாள். மருமகள் தன் கணவனுக்கு கேக் என்றால் பிடிக்குமே என்று முட்டையை வாங்கி வந்தால், அதை ஒளித்து வைத்து விடுவாள் மாமியார். மருமகள் தன் கணவனின் சட்டைகளை தானே தன் கையால் இச்திரி செய்தால், “உனக்கு போட தெரியாது, நானே கடையில குடுத்து பண்ணிக்கிறேன், அது தான் அவனுக்கு பிடிக்கும்” என்பாள். இதை எல்லாம் விட பெரிய கூத்து, மகனும் மருமகளும் தனியாக இருந்தால் எங்கே மகன் மயங்கிவிடப்போகிறானோ என்று பயந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பையன் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள், “என்னமோ தெரியலை, உடம்பே சரியில்லை…..” என்ற ஒரு வசனத்துடன்.
மகன் தனியாக மாட்டினால் போதும், அவன் மாட்டாவிட்டாலும் ஃபோன் செய்தாவது புலம்பித்தள்ளூவாள், “அம்மா உனக்காக எவ்வளவோ கஷ்டபட்டிருக்கேன், என்ன இருந்தாலும் அவ நேத்து வந்தவ…..” பொருத்து பொருத்து பார்த்த மருமகளுக்கு போக போக சகிப்புத்தன்மை தேய்ந்துக்கொண்டே போக, தன் கணவனிடம் தனக்குண்டான உரிமையை பெற அவள் முயற்சிக்க ஆரம்பிக்க, வழக்கம் போல குடும்பத்தில் பெரிய குருக்ஷேத்திரமே வெடித்தது…..
இதில் பெரிய கேள்வியே, “இந்த மாமியாரும் ஒரு பெண் தானே, அவளும் கல்யாணம், கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்தவள் தானே, ஒரு பெண்ணின் மனதை அவளும் புரிந்துக்கொண்டு நடப்பது தானே இயல்பு. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் அற்பமாக நடந்து வாழ வந்தவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறாள் இந்த அம்மாள்? ” என்பது தானே. இங்கே தான் மாமனாரின் கேரெக்டர் முக்கியமாகிறது.
அந்த ஆசாமி தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இந்த வம்பே வந்திருக்காது. ஆனால் அவர் அந்த காலத்து ரோமியோ, மனைவியை தவிற மற்ற பெண்களிடமெல்லாம் தித்திப்பாய் பேசியே தன் வாழ்வின் பெரும் பொழுதை கழித்திருந்தார். ரிடையர் ஆகும் வரை பெரிதாய் எதையும் சம்பாதித்திருக்கவும் இல்லை. வாய் கிழிய வீண் ஜம்பப்பேச்சு, சதா சுய பிரதாபம், என்று எப்போதுமே அரைக்குடமாய் இருந்த அவர், அறம், பொருள், இன்பம், வீடு என்று எல்லா விஷயத்திலும், மனைவிக்கு குறையை மட்டுமே வைத்து விட, அவர் மனைவி தான் பாவம் என்ன செய்வாள்?
வெளிநாட்டு பெண் என்றால், கணவன் சரியில்லை என்று கண்டு பிடித்த உடனே அவனை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்திருப்பாள், ஆனால் இவள் இந்திய பெண்ணாயிற்றே, அதுவும் அந்த காலத்து பெண். கல்லானாலும் அதே கணவனை கட்டிக்கொண்டு அழுவதை தவிற அவளுக்கு வேறு வழி இல்லை. ஆனாலும் அவளும் பெண் தானே. அவளுக்கும், பாசம், பற்று, அன்பு, அரவணைப்பு, எல்லாம் தேவைபடுமே. அவளை பாராட்டி, ஊக்குவித்து, ”உனக்கு நான் இருக்கிறேன், கவலை படாதே,” என்று ஆறுதல் சொல்ல ஒரு ஆண் மகன் கிடைக்க மாட்டானா என்று அந்த தாயும் ஏங்கத்தானே செய்வாள்? இந்த இமோஷனல் தேவையை எப்படி தீர்த்துக்கொள்வாள்? சந்தர்ப்பம் அமைந்து, அதற்குண்டான துணிச்சலும் இருக்கும் பெண்கள், யாராவது ஒரு கள்ளக்காதலனையாவது கொண்டு இந்த இமோஷனல் தேவையை தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவு துணிவில்லாத தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகனையே தன் இமோஷனல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வாள்…..
“உன் அப்பா சரியில்லை, பார் அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்குன்னு யார் இருக்கா? நீயாவது வளர்ந்து ஆளாகி, அம்மாவை பார்த்துகிட்டா சரி…” பையனிடம் புளம்பி தள்ளி அம்மா செண்டிமெண்ட்டை அதிக பட்சமாய் இவள் பிரயோகிக்க, பையனும், “பாவம் அம்மா, அப்பா தான் அவளிடம் அன்பாகவே இல்லையே, அம்மாவை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று சகலத்தையும் செலவழிக்க தயாரானான். சம்பாதிக்க ஆரம்பித்த உடனே, அம்மாவுக்கு புடவை, நகை, வீடு, வசதி, என்று மகன் தாராளமாய் செலவழிக்க, அம்மாவும் ”என் புருஷனால தான் நான் சுகப்படலை, என் மகனாவது என்னை நல்லா பார்த்துக்குறானே” என்று உச்சி குளிர்ந்து போனாள்…..அம்மா இவ்வளவு குஷியாவதை பார்த்து, மகனும் அவளை மேலும் மேலும் கவனித்துக்கொண்டே போக, கடைசி வரைக்கும் அந்த பையனுக்கு தெரியவே தெரியாது, அவன் தன் தாய்க்கு செய்வதெல்லாம், ஒரு கணவன் செய்ய வேண்டிய கடமைகளை என்று.
மகன் போய் கணவனின் கடமைகளை செய்வதா, அதுவும் இந்த புண்ணிய மண்ணிலா, இதென்ன அபாண்டம் என்று உடனே ஓவர் ரியாக்ட் செய்துவிடாதீர்கள். கணவனின் கடமை என்றால் உடனே கலவியல் கடமைகளை மட்டும் நினைத்துக்கொண்டால் எப்படி? பேச்சுத்துணை, பாராட்டு, அவசரத்தில் உதவி, போக்குவரத்து துணை, உடை, நகை, வீடு, வசதி, கேளிக்கை, கௌரவம், இதை எல்லாம் விட பெண்களின் மிக முக்கிய தேவையான பவர்! இப்படி எத்தனையோ விஷயங்களுக்காக பல பெண்கள் இன்னமும் ஆணையே நம்பி இருக்க, அவளுக்கு வாய்த்த கணவன் இதை எல்லாம் கொடுத்தருளவில்லை என்றால், உடனே அம்மாக்காள் இவற்றை எல்லாம் தன் மகனிடம் இருந்து தான் பெற முயல்கிறார்கள்.
இதை எல்லாம் மகன் செய்யும் போது, அவன் தன்னை அறியாமல் தன் தாயுக்கே, கணவன் ஸ்தானம் வகித்து விடுகிறான். அவளுக்கே அவளுக்கு என்று அந்த தாய்க்கு ஒரு நல்ல கண்வன் வாய்த்திருந்தால், “எனக்கு இதை எல்லாம் செய்ய உன் அப்பா இருக்கிறார், நீ உன் குடும்பத்தை பார்” என்று சொல்வாள். ஆனால் கணவன் சரியாக வாய்க்காத பெண்களால் இப்படி சொல்ல முடியாதே, “பொண்டாட்டி வந்துட்டானு அம்மாவை மறந்துடாதேடா” என்று தானே கெஞ்சுவாள்? மருமகளையும் ஏதோ, தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து கொண்டுபோக வந்த பூச்சாண்டி மாதிரித்தானே நடத்துவாள்?
இதனாலேயே, இது வரை தான் அனுபவித்த சொகுசான வாழ்க்கையையும், செக்யூரிட்டியையும் கெடுக்கவே வந்த எதிரி என்கிற மாதிரியே, பல மாமியார்கள் மருமகள்களை பாவிக்கிறார்கள். மருமகளை இப்படி எதிரியாக நினைப்பதினால் தான், ”அவ சரியில்லைடா, அம்மாவை மன்னிச்சிடு, நான் தெரியாம உன்னை இப்படி ஒரு பாழும் கிணத்துல பிடிச்சு தள்ளீட்டேன்” என்று மருமகளை மட்டம் தட்டி, “உனக்கு நான் முக்கியமா, அவ முக்கியமா?” என்று மகனிடம் சண்டைகள் போட்டு, ”தாயா தாரமா” என்று தேர்ந்தெடுக்கும் தர்ம சங்கடத்திற்கு அவனை தள்ளி, சின்னத்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். தன் மகனின் விஸ்வாசத்தை தன் பக்கமே நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியை சரிகட்டிக்கொள்ள…..
இதற்கு நேர் எதிராய், தனக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்த்த மாமியார்கள் எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி, மருமகளிடம் மிகவும் ஆசையாக பழகுகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பெருந்தன்மையாக நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவன் சரியில்லை, மகனை நம்பி தான் வாழ்க்கையே என்றிருக்கும் மாமியார்களோ, ராட்ஷசிகள் மாதிரி போராடி, மகனின் குடும்ப வாழ்க்கையே நாசமாக்கி விடுகிறார்கள். தன் மகனின் வாழ்க்கையை ஒரு தாயே பாழாக்குவாளா? என்று உங்களுக்கு ஆட்சரியமாக இருக்கிறதா?
உயிரியலில் இதெல்லாம் ரொம்ப சகஜம் தான்! ஆடு, மாடு, மான் மாதிரியான தாவிர பட்சினிகளாட்டும். நாய், பூனை, சிங்கம், கழுகு மாதிரியான மாமிசபட்சினிகளாகட்டும். தாய், தான் போட்ட குட்டிகளில் ஒன்றை தானே சாப்பிட்டு, தெம்பேற்றிக்கொள்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு செயலே. ஏன் அந்த தாய் அப்படி செய்துவிடுகிறது? இயற்கையில் எல்லாவற்றுக்குமே ஓர் உள்ளர்த்தம் இருந்தாக வேண்டுமே? விஷயம் இது தான், தான் போட்ட குட்டிகளில் பிழைக்க முடியாத ஏதாவது இருந்ததென்றால், அதை பிற மிருகங்கள் சாப்பிட்டுவிடும். எப்படியும் வீணாகப்போகும் அந்த எரிபொருளை எல்லாம் தாய் தானே உட்கொண்டு விட்டால், மற்ற குழந்தைகளை பராமறிக்கும் சக்தியாவது கிடைக்குமே. அதனால் தான் பிழைக்க தோதில்லா பிள்ளைகளை காட்டுவாசி தாய்கள் தாமே தின்றுவிடுகின்றன……அதே போல தான் மனித தாயும். தான், தன் மனைவி, என்று கூடி தன் மரபணுக்களை இம்மைக்கும் மறுமைக்கும் பரப்பிக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் இல்லாத மகன், அல்லது மகள் என்றால், அதன் வளங்களை தானே உட்கொண்டுவிடுகிறாள் மனித தாய்….. அவளுக்கென்று வளங்களை கொண்டு வந்து தரவேண்டிய அவள் கணவன் கையாளாகாதவனாய் இருந்தால்.
ஆக ஸ்நேகிதிகாள், பையனின் அம்மா அவனுக்கு நல்ல பண்புகளை சொல்லி தந்திருக்கிறாளா என்று பார்ப்பது முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம் அவன் அப்பாவின் ஹஸ்பெண்டிங்க் திறமை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு அப்பாவே இல்லை, அல்லது, இருந்தும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள துப்பில்லாத வெட்டி கேஸ் என்றால், உஷார்……இந்த இன்செக்யூரிட்டியே அந்த மாமியாரை இம்சை அரசியாக்கிவிடும். ஆண்களின் போரிலாவது ஆயுதங்கள் கண்ணுக்கு தெரியும், ஆனால் இந்த பெண் புரியும் போரில் அவள் பிரயோகிக்கும், ”அம்மா செண்டிமெண்ட்” என்கிற இந்த பிரம்மாஸ்திரம் இருக்கிறதே, உலகிலேயே அது தான் மிக சக்திவாய்ந்த ஆயுதமே! கண்ணுக்கே தெரியாத இந்த ஆயுதத்தை பயன் படுத்தித்தான் பல இந்திய தாய்மார்கள் தங்கள் சுயநலத்திற்க்காக தங்கள் மகன்களின் வாழ்க்கையை பஸ்பமாக்கிவிடுகிறார்கள்….எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியினால்…..
ஆக, பையனை ஓகே சொல்வதற்கு முன்பு, அவன் அப்பாவை தரபரிசோதனை செய்துபாருங்கள். அவர் நல்ல கணவனாக இருந்தால், உங்கள் கணவன் உங்களுக்கே தான். அவர் சுத்த வேஸ்டாக இருந்தால், போச்சு, உங்கள் கணவர் உங்கள் மாமியாருக்கு தான்!
Monday, March 8, 2010
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 30
எந்த மாதிரி ஆணை தேர்ந்தெடுத்தால் ஓகே, எந்த மாதிரி ஆணாக இருந்தால் அவனை உடனே கழற்றிவிட வேண்டும் என்பது பற்றி எல்லாம் இத்தனை வாரங்களாக பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் வரிசையில் அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மஹா முக்கியமான ஒரு அம்சம் அந்த ஆணின் வாழ்வில் ஏற்கனவே வந்து போன பெண்கள்!
நாம் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்டோம், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பிற்கும் பெண்ணிம் மூளை வடிவமைப்பிற்கும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன. இதனாலேயே ஒரு ஆணால் பெண்ணை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியாது, காரணம் பெண் உலகை பார்க்கும் விதமும், விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் விதமும், ஒவ்வொன்ருக்கும் கொடுக்கும் முக்கியத்துவமும், ரியாக்ட் செய்யும் விதமும் ரொம்பவே வித்தியாசமானவை. இவ்வளவு வித்தியாசங்களையும் அவன் திடுதிப்பென்று பார்த்தால் ரொம்ப குழம்பிப்போய்விடுவான், எப்படி கையாள்வது என்று தெரியாமல் திண்டாடுவான், இதனால் உறவு ஊசலாட ஆரம்பித்துவிடும்.
இப்படி திடுதிப்பென்று ஒரு பெண்ணை அணுகி, அறியாமையினால் அவன் சொதப்பி காரியாத்தை கெடுத்து விட கூடாதென்றால், அவனுக்கு ஏற்கனவே சில பெண்களுடனாவது பரிச்சயம் இருந்து, ஓகோ பெண் என்றால் இப்படி இப்படி வித்தியாசமாய் தான் யோசிப்பாள், செயல் படுவாள். அவள் இப்படி இப்படி சொன்னால், செய்தால் அதற்கு இது இது தான் அர்த்ஹ்டம். அவளை நான் இப்படி இப்படி கையாண்டால், மேட்டர் ஓவர் என்று புரிந்த கொள்ள வாய்ப்பு இருந்தாக வேண்டுமே. அந்த வாய்ப்பையும் புரிதலையும் ஏற்படுத்த, அவன் வாழ்க்கையில் பல பெண்கள் இருந்தாக வேண்டும்.
இப்படி இருந்தே ஆக வேண்டிய அந்த அதிமுக்கிய பெண்கள் வரிசையில் முதலில் வருவது அவனுடைய அம்மா. ஆண் பெண் உறவில் இருக்கும் அந்நியோநியத்தை கொஞ்சம் சயிண்டிஃபிக்காக நீங்கள் உற்று நோக்கினால், உடனே புரியும் விஷயம், காதல் என்பது தாய் சேய் பாசவெளிபாடின் ஒரு தொடர்ச்சி! ஒரு தாய் எவ்வளவு ஆசையாக தன் குழந்தையின் உடலை தொட்டு ரசிக்கிறாள், கட்டிபிடித்து, முத்தமிட்டு, கொஞ்சி, தாலாட்டு, சீராட்டி, பராமறித்து, அவள் உறவாடும் இந்த விதம் தான் குழந்தையின் மூளையில் புதிய நரம்பு இணைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இப்படி தாயின் ஸ்பரிசம் மற்றும் கொஞ்சுதல் எல்லாம் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு ரொம்பவே அதிகமாக தேவை படுகின்றன, காரணம் இப்படி தாயோடு ஒட்டி உறவாடும் போது, ஆண் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தில், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்ற தூண்டுதலை ஏற்படுகிறது. இது தான் இந்த ஆண் குழந்தையின் பிற்கால தாம்பத்திய வாழ்வின் தரத்தையும், இதனால் ஏற்படக்கூடிய வாரிசுகளின் எண்ணிக்கையையும் நிர்நயிக்கும்.
ஆக, ஒரு ஆண், பெண் என்றால் இப்படி தான் இருப்பாள் என்று அனுமானிப்பதே அவன் அம்மாவை வைத்து தான். அவனுக்கு அம்மாவே இல்லை என்றால்? குறைந்த பட்சம், அம்மா மாதிரி வேறு ஒரு செவிலி கேரெக்டர் இருந்து, இதே புரிதலை ஏற்படுத்தினாலும் போதும், அல்லது தன் நண்பர்களின் அம்மாக்களை பார்த்து பரிச்சயப்பட்டாலும் போதும்.
அம்மா இருக்கிறாள், ஆனால் அவள் கொஞ்சம் முசுடு, குழந்தையிடம் அன்பாக இருக்கவெல்லாம் அவளுக்கு தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன்…..இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா, என்று நீங்கள் ஆட்சரியப்படலாம், ஆனால் உண்மை என்ன தெரியுமா? தாய்மை உணர்வு என்பது மட்டும் தான் இயற்கையில் வருவது, அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற சமாசாரம் எல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளும் விஷயமே.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த ஒரு மாமியார் கேரக்டரை எடுத்துக்கொள்வோமே, இந்த லேடி பிறந்த போது அவர்கள் வீட்டில் தரிதிரம் தலைவிரித்து ஆட, இவளை வளர்க்க முடியாமல் தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாள் தாய். ஆயா, ஆயா, என்று தன் பாட்டியோடே ஒட்டிக்கொண்டு வளர்ந்தாள் மகள். பாட்டி தனக்கிருந்த எத்தனையோ வேலைகளில் பிஸியாக இருந்ததால் குழந்தையை கொஞ்ச எல்லாம் அவருக்கு நேரமே இல்லை. எப்போதும் சாமி கும்பிடுவதும், காசு பணத்தை பற்றிய கவலையிலேயே இருப்பது, என்று பாட்டி காலம் கழிக்க, பேத்தியும் சின்ன வயதிலேயே சாமி கும்பிடுவது, பாட்டியின் காசை எண்ணித்தருவது, வீட்டை சுத்தம் செய்வது, என்றே பழகி விட்டாள். இந்த பெண் வளர்ந்து திருமணம் செய்துக்கொண்ட போது தான் இந்த வளர்ப்பு முறையின் சிக்கலே வெளிபட ஆரம்பித்தது.
இவள் கணவனோ எக்கசெக்க ஆசையோடு அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிய, இவளோ, “சீச்சீ, எச்சில் பட்டு வட்டது” என்று அவனை தள்ளிவிட்டு ஒதுங்கி ஓட, கணவனுக்கு அவளோடு தாம்பத்தியம் கொள்வதே பெரிய போராட்டம் ஆனது. இவள் காமநீர்களை அசுத்தம் என்று நினைத்தால், கட்டிபிடிப்பதும், முத்தமிடுவதும் பெரிய ஸ்வாரசியமாக அவளுக்கு படவில்லை. அவன் ஆசையாக பேசினாலும், “எதற்கு வெட்டியாக பேசிக்கொண்டிருக்கிறாய், போய் சம்பாதிக்கிற வழியை பார்” என்பாள். தனது இஷட பொழுது போக்கான இறைவழிபாட்டில் மணிகணக்கில் மூழ்குவாள். இறைவழிப்பாட்டு நாட்களில் இனசேர்க்கைக்கு இணங்க மாட்டாள்.
மனைவி இப்படி எந்த செக்ஸ் உணர்ச்சியுமே இல்லாத ஜடமாய் இருப்பது போக போக கணவனை கஷ்டப்படுத்த, தன் காதல் தேவைகளை தீர்த்துக்கொள்ள, கணவன் தன் பல பெண் தோழிகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். இந்த எல்லா தோழிகளுமே, அவன் காதல் திறமைகளில் திக்கு முக்காடி போவார்கள், ஆனால் அவன் மனைவி மட்டும், சீ கிட்ட வராதே என்றே ஒதுங்கி ஓடுவாள். இருந்தாலும் இவன் விடா பிடியாக மனைவியை உறவுக்கு உட்படுத்தியதில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. குழந்தை உச்சா போனான், ஆய் போனான், உடம்பு சரியில்லாமல் அவள் மேலேயே வாந்தி எடுத்தான், இதை எல்லாம் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பையனை, தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு தன் கணவனுடன் வேறு ஊருக்கு போய் அவன் சம்பாதியத்தை பாதுக்காப்பதையே தன் முக்கிய கடமையாகக்கொண்டாள். இதற்கிடையில் அவள் மீண்டும் கருவுற்று இன்னொரு ஆண் மகனை பெற்றெடுத்தாள். துரதுஷ்டவசமாக இந்த பையன் பிறந்ததும் அவள் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து விட, முதல் மகனை தன் அம்மாவிடமே விட்டு விட்டு, இளையவனை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு போய் விட்டாள்.
முதல் மகன் தன் பாட்டி, கொள்ளுபாட்டி, அத்தை, மாமி, அவர்களின் மகள்கள் என்றூ பல பெண்களின் அரவணைப்பில் வளர்ந்ததால் அவன் நார்மல் ஆண் ஆனான், திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியெல்லாம் பெற்று சௌக்கியமாய் இருந்தான். ஆனால் இளைய மகன் தன் தாயுடன் தனிமையிலேயே வளர்ந்தான். அவனை அம்மா கட்டிப்பிடித்ததில்லை, கொஞ்சியதில்லை, முத்தமிட்டதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் போடுவாள், அதனால் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல், நன்றாக சாப்பிட மட்டும் அவனுக்கு தெரிந்திருந்தது. அவன் அம்மா அவனை வெளியிலேயே அனுப்பாமல் வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்ததால், அவனுக்கு மாற்று தாய்கள் கூட யாரும் அமையவில்லை. அவன் இயல்பிலேயே அன்பானவன், மென்மையானவன், எல்லோரிடமும் பிரியமாக இருக்க அவனுக்கு பிடிக்கும் தான்…..ஆனால் அதை எப்படி செய்வது என்று அவனுக்கு கடைசி வரை தெரியவே இல்லை. அதனால் கூச்ச சுபாவியாய், வெளி நபர்கள் யாரிடமும் அதிகம் பேசாமலேயே வளர்ந்து ஆளானான்.
அவன் அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தான், அம்மாவோ, டோட்டல் அப்நார்மல், என்பதால் அவனுக்கு பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என்கிற வித்தை கடைசி வரைக்கும் தெரியவே இல்லை. அதை பற்றி அவன் அப்பாவிற்கு ரொம்ப கவலை, தனக்கு பின் தன் மகன் தனிமைபட்டு போய்விடக்கூடாதே என்று அவர் அரும்பாடுபட்டு, அவனை புரிந்துநடந்துக்கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாய் பார்த்து தேர்ந்தெடுத்து அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். அவனுக்கும் அவன் மனைவி மீது கொள்ளை ஆசை தான் என்றாலும், ஒரு பெண்ணிடம் ஆசையை எப்படி வெளிபடுத்துவது என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
இதற்கிடையில் வழக்கமான மாமியார் மருமகள் பிரச்சனைகள் கிளம்பிவிட, அதையும் எப்படி கையாள்வது என்று தெரியாமல் பையன் தத்தளிக்க, எல்லா குழப்பங்களும் சேர்ந்து அந்த பையனின் திருமண வாழ்க்கை பெரிய தோல்வியில் முடிந்தது…..அவன் நல்லவன் தான், அவன் மனைவியும் அவன் மேல் உயிராகத்தான் இருந்தாள், ஆனால் திருமணம் ஏன் தோற்றுப்போனது என்று அனலைஸ் செய்து பார்த்தால், அவன் அம்மாவின் அப்நார்மல் தனம் தான் அதற்கு வேர் காரணம் என்பது புரியவந்தது. தாயின் அரவணைப்பே இல்லாமல் வளர்ந்த இந்த அம்மாவிற்கு தன் கணவனிடமும் காதலாய் வாழ தெரிந்திருக்கவில்லை, தன் மகனையும் அவள் கட்டித்தழுவி கொஞ்சாமல் விட்டதால், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்கிற இந்த லிங்க்கே அவள் மகனின் மூளையில் ஏற்பட்டிருக்கவில்லை. இதே தாய்க்கு பிறந்த மூத்த மகன் மட்டும், பல செவிலித்தாய்களின் உபயத்தால், சரியான நரபு இணைப்புக்களை பெற்றுவிட அவன் வாழ்க்கை தப்பி இருந்தது.
ஆக, ஸ்நேகிதிகாள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண், உத்தமனாக, நல்லவனாக, உயர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் அம்மா ஒரு உதவாக்கரையாக இருந்தால், அது உங்கள் உறவை பல விதங்களில் பாதிக்கும் என்பதால் வெறும் அந்த ஆணை மட்டும் வைத்து உறவை முடிவு செய்துவிட முடியாது. அவன் அம்மா நார்மலா, அப்நார்மலா என்று நிர்ணயிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்….இது பற்றி எல்லாம் மேலும் பல சமாசாரங்கள் அடுத்த ஸ்நேகிதியில்.
நாம் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்டோம், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பிற்கும் பெண்ணிம் மூளை வடிவமைப்பிற்கும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன. இதனாலேயே ஒரு ஆணால் பெண்ணை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியாது, காரணம் பெண் உலகை பார்க்கும் விதமும், விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் விதமும், ஒவ்வொன்ருக்கும் கொடுக்கும் முக்கியத்துவமும், ரியாக்ட் செய்யும் விதமும் ரொம்பவே வித்தியாசமானவை. இவ்வளவு வித்தியாசங்களையும் அவன் திடுதிப்பென்று பார்த்தால் ரொம்ப குழம்பிப்போய்விடுவான், எப்படி கையாள்வது என்று தெரியாமல் திண்டாடுவான், இதனால் உறவு ஊசலாட ஆரம்பித்துவிடும்.
இப்படி திடுதிப்பென்று ஒரு பெண்ணை அணுகி, அறியாமையினால் அவன் சொதப்பி காரியாத்தை கெடுத்து விட கூடாதென்றால், அவனுக்கு ஏற்கனவே சில பெண்களுடனாவது பரிச்சயம் இருந்து, ஓகோ பெண் என்றால் இப்படி இப்படி வித்தியாசமாய் தான் யோசிப்பாள், செயல் படுவாள். அவள் இப்படி இப்படி சொன்னால், செய்தால் அதற்கு இது இது தான் அர்த்ஹ்டம். அவளை நான் இப்படி இப்படி கையாண்டால், மேட்டர் ஓவர் என்று புரிந்த கொள்ள வாய்ப்பு இருந்தாக வேண்டுமே. அந்த வாய்ப்பையும் புரிதலையும் ஏற்படுத்த, அவன் வாழ்க்கையில் பல பெண்கள் இருந்தாக வேண்டும்.
இப்படி இருந்தே ஆக வேண்டிய அந்த அதிமுக்கிய பெண்கள் வரிசையில் முதலில் வருவது அவனுடைய அம்மா. ஆண் பெண் உறவில் இருக்கும் அந்நியோநியத்தை கொஞ்சம் சயிண்டிஃபிக்காக நீங்கள் உற்று நோக்கினால், உடனே புரியும் விஷயம், காதல் என்பது தாய் சேய் பாசவெளிபாடின் ஒரு தொடர்ச்சி! ஒரு தாய் எவ்வளவு ஆசையாக தன் குழந்தையின் உடலை தொட்டு ரசிக்கிறாள், கட்டிபிடித்து, முத்தமிட்டு, கொஞ்சி, தாலாட்டு, சீராட்டி, பராமறித்து, அவள் உறவாடும் இந்த விதம் தான் குழந்தையின் மூளையில் புதிய நரம்பு இணைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இப்படி தாயின் ஸ்பரிசம் மற்றும் கொஞ்சுதல் எல்லாம் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு ரொம்பவே அதிகமாக தேவை படுகின்றன, காரணம் இப்படி தாயோடு ஒட்டி உறவாடும் போது, ஆண் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தில், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்ற தூண்டுதலை ஏற்படுகிறது. இது தான் இந்த ஆண் குழந்தையின் பிற்கால தாம்பத்திய வாழ்வின் தரத்தையும், இதனால் ஏற்படக்கூடிய வாரிசுகளின் எண்ணிக்கையையும் நிர்நயிக்கும்.
ஆக, ஒரு ஆண், பெண் என்றால் இப்படி தான் இருப்பாள் என்று அனுமானிப்பதே அவன் அம்மாவை வைத்து தான். அவனுக்கு அம்மாவே இல்லை என்றால்? குறைந்த பட்சம், அம்மா மாதிரி வேறு ஒரு செவிலி கேரெக்டர் இருந்து, இதே புரிதலை ஏற்படுத்தினாலும் போதும், அல்லது தன் நண்பர்களின் அம்மாக்களை பார்த்து பரிச்சயப்பட்டாலும் போதும்.
அம்மா இருக்கிறாள், ஆனால் அவள் கொஞ்சம் முசுடு, குழந்தையிடம் அன்பாக இருக்கவெல்லாம் அவளுக்கு தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன்…..இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா, என்று நீங்கள் ஆட்சரியப்படலாம், ஆனால் உண்மை என்ன தெரியுமா? தாய்மை உணர்வு என்பது மட்டும் தான் இயற்கையில் வருவது, அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற சமாசாரம் எல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளும் விஷயமே.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த ஒரு மாமியார் கேரக்டரை எடுத்துக்கொள்வோமே, இந்த லேடி பிறந்த போது அவர்கள் வீட்டில் தரிதிரம் தலைவிரித்து ஆட, இவளை வளர்க்க முடியாமல் தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாள் தாய். ஆயா, ஆயா, என்று தன் பாட்டியோடே ஒட்டிக்கொண்டு வளர்ந்தாள் மகள். பாட்டி தனக்கிருந்த எத்தனையோ வேலைகளில் பிஸியாக இருந்ததால் குழந்தையை கொஞ்ச எல்லாம் அவருக்கு நேரமே இல்லை. எப்போதும் சாமி கும்பிடுவதும், காசு பணத்தை பற்றிய கவலையிலேயே இருப்பது, என்று பாட்டி காலம் கழிக்க, பேத்தியும் சின்ன வயதிலேயே சாமி கும்பிடுவது, பாட்டியின் காசை எண்ணித்தருவது, வீட்டை சுத்தம் செய்வது, என்றே பழகி விட்டாள். இந்த பெண் வளர்ந்து திருமணம் செய்துக்கொண்ட போது தான் இந்த வளர்ப்பு முறையின் சிக்கலே வெளிபட ஆரம்பித்தது.
இவள் கணவனோ எக்கசெக்க ஆசையோடு அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிய, இவளோ, “சீச்சீ, எச்சில் பட்டு வட்டது” என்று அவனை தள்ளிவிட்டு ஒதுங்கி ஓட, கணவனுக்கு அவளோடு தாம்பத்தியம் கொள்வதே பெரிய போராட்டம் ஆனது. இவள் காமநீர்களை அசுத்தம் என்று நினைத்தால், கட்டிபிடிப்பதும், முத்தமிடுவதும் பெரிய ஸ்வாரசியமாக அவளுக்கு படவில்லை. அவன் ஆசையாக பேசினாலும், “எதற்கு வெட்டியாக பேசிக்கொண்டிருக்கிறாய், போய் சம்பாதிக்கிற வழியை பார்” என்பாள். தனது இஷட பொழுது போக்கான இறைவழிபாட்டில் மணிகணக்கில் மூழ்குவாள். இறைவழிப்பாட்டு நாட்களில் இனசேர்க்கைக்கு இணங்க மாட்டாள்.
மனைவி இப்படி எந்த செக்ஸ் உணர்ச்சியுமே இல்லாத ஜடமாய் இருப்பது போக போக கணவனை கஷ்டப்படுத்த, தன் காதல் தேவைகளை தீர்த்துக்கொள்ள, கணவன் தன் பல பெண் தோழிகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். இந்த எல்லா தோழிகளுமே, அவன் காதல் திறமைகளில் திக்கு முக்காடி போவார்கள், ஆனால் அவன் மனைவி மட்டும், சீ கிட்ட வராதே என்றே ஒதுங்கி ஓடுவாள். இருந்தாலும் இவன் விடா பிடியாக மனைவியை உறவுக்கு உட்படுத்தியதில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. குழந்தை உச்சா போனான், ஆய் போனான், உடம்பு சரியில்லாமல் அவள் மேலேயே வாந்தி எடுத்தான், இதை எல்லாம் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பையனை, தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு தன் கணவனுடன் வேறு ஊருக்கு போய் அவன் சம்பாதியத்தை பாதுக்காப்பதையே தன் முக்கிய கடமையாகக்கொண்டாள். இதற்கிடையில் அவள் மீண்டும் கருவுற்று இன்னொரு ஆண் மகனை பெற்றெடுத்தாள். துரதுஷ்டவசமாக இந்த பையன் பிறந்ததும் அவள் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து விட, முதல் மகனை தன் அம்மாவிடமே விட்டு விட்டு, இளையவனை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு போய் விட்டாள்.
முதல் மகன் தன் பாட்டி, கொள்ளுபாட்டி, அத்தை, மாமி, அவர்களின் மகள்கள் என்றூ பல பெண்களின் அரவணைப்பில் வளர்ந்ததால் அவன் நார்மல் ஆண் ஆனான், திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியெல்லாம் பெற்று சௌக்கியமாய் இருந்தான். ஆனால் இளைய மகன் தன் தாயுடன் தனிமையிலேயே வளர்ந்தான். அவனை அம்மா கட்டிப்பிடித்ததில்லை, கொஞ்சியதில்லை, முத்தமிட்டதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் போடுவாள், அதனால் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல், நன்றாக சாப்பிட மட்டும் அவனுக்கு தெரிந்திருந்தது. அவன் அம்மா அவனை வெளியிலேயே அனுப்பாமல் வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்ததால், அவனுக்கு மாற்று தாய்கள் கூட யாரும் அமையவில்லை. அவன் இயல்பிலேயே அன்பானவன், மென்மையானவன், எல்லோரிடமும் பிரியமாக இருக்க அவனுக்கு பிடிக்கும் தான்…..ஆனால் அதை எப்படி செய்வது என்று அவனுக்கு கடைசி வரை தெரியவே இல்லை. அதனால் கூச்ச சுபாவியாய், வெளி நபர்கள் யாரிடமும் அதிகம் பேசாமலேயே வளர்ந்து ஆளானான்.
அவன் அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தான், அம்மாவோ, டோட்டல் அப்நார்மல், என்பதால் அவனுக்கு பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என்கிற வித்தை கடைசி வரைக்கும் தெரியவே இல்லை. அதை பற்றி அவன் அப்பாவிற்கு ரொம்ப கவலை, தனக்கு பின் தன் மகன் தனிமைபட்டு போய்விடக்கூடாதே என்று அவர் அரும்பாடுபட்டு, அவனை புரிந்துநடந்துக்கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாய் பார்த்து தேர்ந்தெடுத்து அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். அவனுக்கும் அவன் மனைவி மீது கொள்ளை ஆசை தான் என்றாலும், ஒரு பெண்ணிடம் ஆசையை எப்படி வெளிபடுத்துவது என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
இதற்கிடையில் வழக்கமான மாமியார் மருமகள் பிரச்சனைகள் கிளம்பிவிட, அதையும் எப்படி கையாள்வது என்று தெரியாமல் பையன் தத்தளிக்க, எல்லா குழப்பங்களும் சேர்ந்து அந்த பையனின் திருமண வாழ்க்கை பெரிய தோல்வியில் முடிந்தது…..அவன் நல்லவன் தான், அவன் மனைவியும் அவன் மேல் உயிராகத்தான் இருந்தாள், ஆனால் திருமணம் ஏன் தோற்றுப்போனது என்று அனலைஸ் செய்து பார்த்தால், அவன் அம்மாவின் அப்நார்மல் தனம் தான் அதற்கு வேர் காரணம் என்பது புரியவந்தது. தாயின் அரவணைப்பே இல்லாமல் வளர்ந்த இந்த அம்மாவிற்கு தன் கணவனிடமும் காதலாய் வாழ தெரிந்திருக்கவில்லை, தன் மகனையும் அவள் கட்டித்தழுவி கொஞ்சாமல் விட்டதால், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்கிற இந்த லிங்க்கே அவள் மகனின் மூளையில் ஏற்பட்டிருக்கவில்லை. இதே தாய்க்கு பிறந்த மூத்த மகன் மட்டும், பல செவிலித்தாய்களின் உபயத்தால், சரியான நரபு இணைப்புக்களை பெற்றுவிட அவன் வாழ்க்கை தப்பி இருந்தது.
ஆக, ஸ்நேகிதிகாள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண், உத்தமனாக, நல்லவனாக, உயர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் அம்மா ஒரு உதவாக்கரையாக இருந்தால், அது உங்கள் உறவை பல விதங்களில் பாதிக்கும் என்பதால் வெறும் அந்த ஆணை மட்டும் வைத்து உறவை முடிவு செய்துவிட முடியாது. அவன் அம்மா நார்மலா, அப்நார்மலா என்று நிர்ணயிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்….இது பற்றி எல்லாம் மேலும் பல சமாசாரங்கள் அடுத்த ஸ்நேகிதியில்.
Labels:
பாலியல் கல்வி
Saturday, August 8, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 21
பொழுதை எப்படி செலவழிக்கிறான் என்பதை வைத்து ஆணை எப்படி தர நிர்ணயம் செய்வது என்பது பற்றி சென்ற ஸ்நேகிதியில் பார்த்தோம். இம்முறை நேரத்தை தவிர மீதமுள்ள வளங்களை அவன் எப்படி செலவழிக்கிறான் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?
நம் கலாச்சாரத்தில் பல காலத்திற்கு ஆணுக்கு மட்டும் தான் ஆஸ்தி, ஆண் மட்டும் தான் வெளி வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாடு இருந்துவந்ததால், ஆணிடம் தான் பணம் புழங்கியது. பெண் அவனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை ரொம்பவே மாறி இருந்தாலும், இன்றும் பல பிற்போக்கான ஆண்கள், மனைவியின் வருமானத்தையும் வாங்கி அதையும் தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்மூர் பெண்களும், சம்பாதிக்கும் காசையெல்லாம் கணவன் கையில் கொடுத்து வைப்பது தான் “தமிழ் கலாச்சாரம்” என்று கண்டதுக்கெல்லாம் கலாச்சாரத்தோடு கனெக்ஷன் கொடுத்து குழம்பி போகிறார்கள். இது இப்படி இருக்க, இன்றும் பல குடும்பங்களில் பணம் என்பது கணவன் கையிலேயே புழங்கும் சமாசாரமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்கு கூட மனைவி, கணவனின் கையை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாள்.
இப்படி பெரும்பாலான பெண்கள் பொருளாதார விஷயத்தில் சார்பு நிலை ஜீவராசிகளாகவே வாழும் போது, இவர்கள் எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்? உதாரணத்திற்கு இரண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறேனே.
முதல் ஆசாமி பெரிய மில்லியனர். அவரின் ஒரு கை அசைவிற்கே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு செழிப்பான வேலையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆனது. மனைவியுடம் முதன் முதலில் ஹோடலுக்கு போனார்.
மனைவியும் தன்னை மணந்த கனவன் என்பதனாலேயே அவன் ஒரு பெரிய ஹீரோ என்றே நினைத்து விட்டாள். அதனால் தன் ஹீரோ தன்னிடம் மிக கனிவாக, என்ன சாப்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டு, உபசரித்து, அன்பு பாராட்டுவான் என்று நினைத்தால், தலைவர் அவளிடம் எதுவுமே பேசாமல் ஒரு பிட்சாவை வாங்கி இரண்டாக கிழித்து அவளுக்கு கால் வாசி வைத்து விட்டு, தான் முக்கால் வாசியை மென்று விழுங்க ஆரம்பித்தார். மனைவி தன் பேரதிர்சியை விழுங்கிவிட்டு பிட்சாவை கொறித்து முடித்தாள். அந்த கடையில் ஒரு பிட்சா வாங்கினால் ஒரு லோட்டா நிறைய கோலா இலவசம். அதனால் ஆளுக்கு பாதி கோலா குடித்தார்கள். அவ்வளவு தான், மணவாழ்க்கையின் முதல் வெளி சாப்பாடு இப்படியே இனிதே முடிய, மனைவி, மனமுடைந்து போய் அலுப்புடன் வெளியே நடக்க, பக்கத்து கடையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை கூட கவனிக்கும் நிலையில் தலைவி இல்லை. ஆனால் தலைவன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று கேட்க, “அப்பாடா, இப்போதாவது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, பரவாயில்லையே என் கணவன் அவ்வளவு மோசமில்லைப்பா” என்று மனைவி நிம்மதி பெருமூச்சுடன், “ஒகே” சொல்லி எல்லா பல்லையும் காட்டி தலையாட்ட, கணவன் சுருசுருப்பாய் ஐஸ்கிரீம் கடைக்கு நடந்தான்.
போன வேகத்திலேயே திரும்பியும் வந்தான். வெறும் கையுடன். “என்னாச்சு, ஐஸ்கிரீம்?” என்று மனைவி புரியாமல் விழிக்க, கணவன் படு கவலையாய் சொன்னான், “ரொமப் காஸ்ட்லியா இருக்கு, நூறு ரூபாயாம்” நூறு ரூபாய் எல்லாம் ஒரு காஸ்டிலியா, இது கூட செலவழிக்க முடியலை, நீ என்ன பெரிய மில்லியனர்? உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா! என்று எல்லாம் மனதில் பட்டதை கேட்கவா முடியும். புது கல்யாண பெண், “அட அல்பமே” என்று மனதிற்குள் ஏசிவிட்டு மௌனமாக இருந்துவிட்டாள். பிறகு தான் போக போக தெரிந்துக்கொண்டாள், அவன் பெரிய மில்லியனராக இருந்தாலும் எச்சை கையால் காக்காய் கூட ஓட்டாத வடிகட்டிய கஞ்சபிஸினாரி என்று.
இப்படி பணவிஷயத்தில் கருமியாக இருந்தால், சரி போனால் போகிறது, பணமா பெரிது, அன்பு தான் முக்கியம் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் பணத்தில் எத்தனை அற்பமாக இருந்தானோ, அதே போலத்தான் அவன் தன் அன்பை வெளிகாட்டுவதிலும்….மிக மிக சிக்கனமாய், ஒரு வாரத்திற்கு நாலு முத்தம் கொடுத்தான் என்றால் அதுவே அதிகப்படி! அதுவும் அவள் நச்சரித்தால் தான், இல்லை என்றால் தன் பக்கத்தில் ரத்தமும் சதையுமாய் ஒரு பெண் படுத்திருப்பதே தெரியாமல் நன்றாக குரட்டை விட்டு தூங்கினான்…..என்றால், இப்படி பட்ட ஆணுக்கு எத்தனை மார்க் போடலாம்?
அடுத்த கதாநாயகன் மில்லியனர் எல்லாம் இல்லை. அவன் ஒரு சாதாரண வேலையில் சாதாரண சம்பளத்தில் இருந்த ஒரு சாதாரணன். அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட். அவளை இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுடன் மணிக்கணக்கில் பேசினால் தான் அவனுக்கு தூக்கமே வரும். அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் அவனுக்கு பசி கூட எடுக்காது. அவளுக்காக செலவு செய்ய அவனிடம் அவ்வளவு பணம் கொட்டிகிடக்கவில்ல. என்றாலும் தாஜ் மகால் கட்டமுடியாவிட்டாலும் காதலில் தானும் ஒரு ஷா ஜெகான் என்று நினைக்கும் சுபாவம் அவனுக்கு. அவனால் அவளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கித்தர முடியாவிட்டாலும், அழகான பொருட்களை பார்க்கும் போதெல்லாம் அவளை தான் நினைத்துக்கொண்டான். அவளை வெளியே அழைத்து சென்ற போதெல்லாம், கணக்கு பார்க்காமல் பணம் செலவழிக்க தயாராக இருந்தான். அவன் இப்படி தாராளமாய் செலவழிக்க முன் வருவதை பார்த்து, இவளே, “இவ்வளவு செலவா, வேண்டாம்!” என்று ஆட்சேபிக்கலானாள். ஆனால் அவனால் அவளிடம் சிக்கனம் பார்க்க முடியவில்லை.
இப்படி பணத்தில் எந்த அளவு தாராளம் காட்டினானோ, அதே அளவிற்கு கணக்கு பார்க்காமல் தான் தன் அன்பையும் கொட்டி காட்டினான். அவளை தொடாமல் அவனால் இருக்க முடியாது. கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?
நிச்சயம் ஐஸ்கிரீம் வாங்கி தர கணக்கு பார்த்த மில்லியனரை விட, கணக்கே பார்க்காமல் அன்பை கொட்டிய இந்த இரண்டாவது ஆசாமிக்கு தானே மார்க் அதிகமிருக்கும். காரணம் கணக்கு பார்த்து ஈடுபட்டால் அது காதல் இல்லை, இப்படி அன்பு காட்டவே கணக்கு பார்க்கும் ஆணை துணையாய் அடைவதை விட மோசமான துற்பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆகையால் ஸ்நேகிதிகாள், உங்கள் பட்டியலில் இருக்கும் ஆண்களின் குணாதிசயத்தை கவனியுங்கள். எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிற கஞ்சபிசினாரி அவன் என்றால், காலத்திற்கும் அவனோடு வாக்கு வாதம் செய்தே போரடித்து போகும் உங்கள் வாழ்க்கை. இந்த மாதிரி கருமிகள் பணத்தால் மட்டுமின்றி பாசத்தாலும் பட்டினி போட்டு விடுவார்கள் என்பதால் இந்த ரக அற்ப கேஸுகள் நாட் ஓகே அட் ஆல்.
அதற்காக, ஓவர் ஊதாடித்தனத்துடன் இருக்கிறதோ, இல்லையோ, கடன் வாங்கியாவது கொட்டி கவிழ்க்கிறேன் என்றிருக்கும், பணத்தின் அருமை தெரியாத கேஸாக இருந்தான் என்றால், காலத்திற்கும், கடன் காரர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் அந்த மாதிரியான ஊதாரி மன்னர்களும் நாட் ஓகே.
பணம் முக்கியம் தான், ஓரளவுக்கு சிக்கனமாய் இருக்க தெரிந்தவன் தான். ஆனால் நீங்கள் அவன் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம், அவன் சாம்பிராஜியத்தின் மஹாராணி நீங்கள் ஒருத்தி மட்டும் தான் என்பதனால், உங்களுக்கு சிறந்ததை மட்டுமே செய்கிறான், அதற்க்காக தன் உடல், பொருள், ஆவி, தன் அன்பு, பாசம், நேரம் என்று எல்லாவற்றையும் தாராளமாக செலவழிக்கிறான் என்றால், இவன் ரொம்ப ரொம்ப ஓகே!
அதனால் ஸ்நேகிதிகாள், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க் இது தான், உங்களுக்கு முற்றிகை இடும் ஆண் கஞ்சனா, ஊதாடியா, அல்லது உங்களுக்காக தன்னையும் தன் வளங்களையும் தாராளமாக செலவழிக்க விரும்பும் காதல் நாயகனா என்பதை சரிபாருங்கள்…..ஆண்களை அளந்து பார்க்க இன்னும் வேறு என்னென்ன தர பரிசோதனைகள் உண்டு என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்ப்போம்.
நம் கலாச்சாரத்தில் பல காலத்திற்கு ஆணுக்கு மட்டும் தான் ஆஸ்தி, ஆண் மட்டும் தான் வெளி வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாடு இருந்துவந்ததால், ஆணிடம் தான் பணம் புழங்கியது. பெண் அவனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை ரொம்பவே மாறி இருந்தாலும், இன்றும் பல பிற்போக்கான ஆண்கள், மனைவியின் வருமானத்தையும் வாங்கி அதையும் தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்மூர் பெண்களும், சம்பாதிக்கும் காசையெல்லாம் கணவன் கையில் கொடுத்து வைப்பது தான் “தமிழ் கலாச்சாரம்” என்று கண்டதுக்கெல்லாம் கலாச்சாரத்தோடு கனெக்ஷன் கொடுத்து குழம்பி போகிறார்கள். இது இப்படி இருக்க, இன்றும் பல குடும்பங்களில் பணம் என்பது கணவன் கையிலேயே புழங்கும் சமாசாரமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்கு கூட மனைவி, கணவனின் கையை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாள்.
இப்படி பெரும்பாலான பெண்கள் பொருளாதார விஷயத்தில் சார்பு நிலை ஜீவராசிகளாகவே வாழும் போது, இவர்கள் எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்? உதாரணத்திற்கு இரண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறேனே.
முதல் ஆசாமி பெரிய மில்லியனர். அவரின் ஒரு கை அசைவிற்கே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு செழிப்பான வேலையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆனது. மனைவியுடம் முதன் முதலில் ஹோடலுக்கு போனார்.
மனைவியும் தன்னை மணந்த கனவன் என்பதனாலேயே அவன் ஒரு பெரிய ஹீரோ என்றே நினைத்து விட்டாள். அதனால் தன் ஹீரோ தன்னிடம் மிக கனிவாக, என்ன சாப்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டு, உபசரித்து, அன்பு பாராட்டுவான் என்று நினைத்தால், தலைவர் அவளிடம் எதுவுமே பேசாமல் ஒரு பிட்சாவை வாங்கி இரண்டாக கிழித்து அவளுக்கு கால் வாசி வைத்து விட்டு, தான் முக்கால் வாசியை மென்று விழுங்க ஆரம்பித்தார். மனைவி தன் பேரதிர்சியை விழுங்கிவிட்டு பிட்சாவை கொறித்து முடித்தாள். அந்த கடையில் ஒரு பிட்சா வாங்கினால் ஒரு லோட்டா நிறைய கோலா இலவசம். அதனால் ஆளுக்கு பாதி கோலா குடித்தார்கள். அவ்வளவு தான், மணவாழ்க்கையின் முதல் வெளி சாப்பாடு இப்படியே இனிதே முடிய, மனைவி, மனமுடைந்து போய் அலுப்புடன் வெளியே நடக்க, பக்கத்து கடையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை கூட கவனிக்கும் நிலையில் தலைவி இல்லை. ஆனால் தலைவன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று கேட்க, “அப்பாடா, இப்போதாவது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, பரவாயில்லையே என் கணவன் அவ்வளவு மோசமில்லைப்பா” என்று மனைவி நிம்மதி பெருமூச்சுடன், “ஒகே” சொல்லி எல்லா பல்லையும் காட்டி தலையாட்ட, கணவன் சுருசுருப்பாய் ஐஸ்கிரீம் கடைக்கு நடந்தான்.
போன வேகத்திலேயே திரும்பியும் வந்தான். வெறும் கையுடன். “என்னாச்சு, ஐஸ்கிரீம்?” என்று மனைவி புரியாமல் விழிக்க, கணவன் படு கவலையாய் சொன்னான், “ரொமப் காஸ்ட்லியா இருக்கு, நூறு ரூபாயாம்” நூறு ரூபாய் எல்லாம் ஒரு காஸ்டிலியா, இது கூட செலவழிக்க முடியலை, நீ என்ன பெரிய மில்லியனர்? உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா! என்று எல்லாம் மனதில் பட்டதை கேட்கவா முடியும். புது கல்யாண பெண், “அட அல்பமே” என்று மனதிற்குள் ஏசிவிட்டு மௌனமாக இருந்துவிட்டாள். பிறகு தான் போக போக தெரிந்துக்கொண்டாள், அவன் பெரிய மில்லியனராக இருந்தாலும் எச்சை கையால் காக்காய் கூட ஓட்டாத வடிகட்டிய கஞ்சபிஸினாரி என்று.
இப்படி பணவிஷயத்தில் கருமியாக இருந்தால், சரி போனால் போகிறது, பணமா பெரிது, அன்பு தான் முக்கியம் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் பணத்தில் எத்தனை அற்பமாக இருந்தானோ, அதே போலத்தான் அவன் தன் அன்பை வெளிகாட்டுவதிலும்….மிக மிக சிக்கனமாய், ஒரு வாரத்திற்கு நாலு முத்தம் கொடுத்தான் என்றால் அதுவே அதிகப்படி! அதுவும் அவள் நச்சரித்தால் தான், இல்லை என்றால் தன் பக்கத்தில் ரத்தமும் சதையுமாய் ஒரு பெண் படுத்திருப்பதே தெரியாமல் நன்றாக குரட்டை விட்டு தூங்கினான்…..என்றால், இப்படி பட்ட ஆணுக்கு எத்தனை மார்க் போடலாம்?
அடுத்த கதாநாயகன் மில்லியனர் எல்லாம் இல்லை. அவன் ஒரு சாதாரண வேலையில் சாதாரண சம்பளத்தில் இருந்த ஒரு சாதாரணன். அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட். அவளை இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுடன் மணிக்கணக்கில் பேசினால் தான் அவனுக்கு தூக்கமே வரும். அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் அவனுக்கு பசி கூட எடுக்காது. அவளுக்காக செலவு செய்ய அவனிடம் அவ்வளவு பணம் கொட்டிகிடக்கவில்ல. என்றாலும் தாஜ் மகால் கட்டமுடியாவிட்டாலும் காதலில் தானும் ஒரு ஷா ஜெகான் என்று நினைக்கும் சுபாவம் அவனுக்கு. அவனால் அவளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கித்தர முடியாவிட்டாலும், அழகான பொருட்களை பார்க்கும் போதெல்லாம் அவளை தான் நினைத்துக்கொண்டான். அவளை வெளியே அழைத்து சென்ற போதெல்லாம், கணக்கு பார்க்காமல் பணம் செலவழிக்க தயாராக இருந்தான். அவன் இப்படி தாராளமாய் செலவழிக்க முன் வருவதை பார்த்து, இவளே, “இவ்வளவு செலவா, வேண்டாம்!” என்று ஆட்சேபிக்கலானாள். ஆனால் அவனால் அவளிடம் சிக்கனம் பார்க்க முடியவில்லை.
இப்படி பணத்தில் எந்த அளவு தாராளம் காட்டினானோ, அதே அளவிற்கு கணக்கு பார்க்காமல் தான் தன் அன்பையும் கொட்டி காட்டினான். அவளை தொடாமல் அவனால் இருக்க முடியாது. கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?
நிச்சயம் ஐஸ்கிரீம் வாங்கி தர கணக்கு பார்த்த மில்லியனரை விட, கணக்கே பார்க்காமல் அன்பை கொட்டிய இந்த இரண்டாவது ஆசாமிக்கு தானே மார்க் அதிகமிருக்கும். காரணம் கணக்கு பார்த்து ஈடுபட்டால் அது காதல் இல்லை, இப்படி அன்பு காட்டவே கணக்கு பார்க்கும் ஆணை துணையாய் அடைவதை விட மோசமான துற்பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆகையால் ஸ்நேகிதிகாள், உங்கள் பட்டியலில் இருக்கும் ஆண்களின் குணாதிசயத்தை கவனியுங்கள். எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிற கஞ்சபிசினாரி அவன் என்றால், காலத்திற்கும் அவனோடு வாக்கு வாதம் செய்தே போரடித்து போகும் உங்கள் வாழ்க்கை. இந்த மாதிரி கருமிகள் பணத்தால் மட்டுமின்றி பாசத்தாலும் பட்டினி போட்டு விடுவார்கள் என்பதால் இந்த ரக அற்ப கேஸுகள் நாட் ஓகே அட் ஆல்.
அதற்காக, ஓவர் ஊதாடித்தனத்துடன் இருக்கிறதோ, இல்லையோ, கடன் வாங்கியாவது கொட்டி கவிழ்க்கிறேன் என்றிருக்கும், பணத்தின் அருமை தெரியாத கேஸாக இருந்தான் என்றால், காலத்திற்கும், கடன் காரர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் அந்த மாதிரியான ஊதாரி மன்னர்களும் நாட் ஓகே.
பணம் முக்கியம் தான், ஓரளவுக்கு சிக்கனமாய் இருக்க தெரிந்தவன் தான். ஆனால் நீங்கள் அவன் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம், அவன் சாம்பிராஜியத்தின் மஹாராணி நீங்கள் ஒருத்தி மட்டும் தான் என்பதனால், உங்களுக்கு சிறந்ததை மட்டுமே செய்கிறான், அதற்க்காக தன் உடல், பொருள், ஆவி, தன் அன்பு, பாசம், நேரம் என்று எல்லாவற்றையும் தாராளமாக செலவழிக்கிறான் என்றால், இவன் ரொம்ப ரொம்ப ஓகே!
அதனால் ஸ்நேகிதிகாள், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க் இது தான், உங்களுக்கு முற்றிகை இடும் ஆண் கஞ்சனா, ஊதாடியா, அல்லது உங்களுக்காக தன்னையும் தன் வளங்களையும் தாராளமாக செலவழிக்க விரும்பும் காதல் நாயகனா என்பதை சரிபாருங்கள்…..ஆண்களை அளந்து பார்க்க இன்னும் வேறு என்னென்ன தர பரிசோதனைகள் உண்டு என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்ப்போம்.
Labels:
பாலியல் கல்வி
Thursday, July 23, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 20
ஆண்கள் செய்யும் வேலையை வைத்து அவர்களை தரபரிசோதனை செய்து பார்க்கும் சமாசாரத்தை பற்றி போன இதழில் பேசினோம். வெறும் வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் போதாதே. எனக்கு தெரிந்த ஒரு ஆசாமி, வேலையில் ஓர் வடிகட்டிய கரும வீரர், பொழுது விடுவதற்கு முன் வெள்ளென எழுந்துக்கொள்வார். காலைகடன்களை எல்லாம் கடகடவென்று முடித்து விட்டு, காரை எடுத்துக்கொண்டு வேலைக்கு போனார் என்றால், மாலையில் தான் வீட்டிற்கு வருவார்.
அங்கு தான் பிரச்சனையே, வீட்டுக்கு வந்தவுடன் மனிதர் சோபாவில் படுத்தார் என்றால், அப்படியே படுத்த படுக்கையாய் இருந்தபடி லைட்டாய் கொஞ்சம் தொலைகாட்சியை பார்த்து வைப்பார். அதன் பிறகு இரவு உணவிற்கு தான் எழுந்திருப்பாரே. உணவிற்கு பிறகு அப்படியே போய் கட்டிலில் விழுந்தார் என்றால் அப்புறம் அடுத்த நாள் காலையில் வேலைக்கு கிளம்ப தான் எழுந்திருப்பார். இப்படி all work and no play என்று இந்த ஆசாமி இருந்திட, மனைவி பொறுத்து பொறுத்து பார்த்து, “எங்கையாவது வெளிய போகலாம், சும்மா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம், ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது விளையாடலாம்….’ என்று எவ்வளவோ பேசி, கெஞ்சி, மன்றாடி, போராடி, சண்டை எல்லாம் போட்டு பார்த்தார். எதுவுமே சரிபட்டு வரவில்லை. கடைசி வரை தலைவர் வெறும் ஒரு நடமாடும் வேலை செய்யும் யந்திரமாக மட்டுமே இருந்திட, நொந்து போன மனைவி வேறு வழியாக போக ஆரம்பித்துவிட்டார்.
இந்த வம்பும், வலியும் வந்து சேரக்கூடாதென்றால் பெண்கள் எல்லோருமே ஆரம்பத்திலேயே மிக உஷாராய், ”இவன் வேலை வேலை என்று மட்டும் இயங்கும் யந்திரபடிவமா, இல்லை, உபறி நேரத்தை உயிர் துடிப்புடன் உற்சாகமாக செலவிட தெரிந்த ஸ்வாரஸ்ய துணையா?” என்று கண்டுபிடிக்க தெரிந்திருப்பது ரொம்பவே முக்கியம்.
இதை எப்படி கண்டு பிடிப்பது என்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். அந்த ஆசாமி தனக்கு கிடைக்கும் உபறி அவகாசத்தை எல்லாம் எப்படி பயன் படுத்துகிறார் என்று கவனியுங்கள். ஃபிரீ டைம் கிடச்சா போதும், நல்லா குரட்டை விட்டு தூங்கிக்கிட்டே இருப்பேன் என்று எவனாவது சொன்னால், உஷார்! ரொம்ப வேலை பளு, அதனால் ஃப்ரீ டைம் கிடச்சா தூங்குவேன், ஆன, அப்புறம் ஏஞ்சி ஏதாவது பொழுது போக்கில் ஈடுபடுவேன் என்றால் ஓகே. பொழுது போக்கே கிடையாது, வெறும் கும்பகர்ணத்தனம் தான் என்றால், இது பகுதி நேர சோம்போறி, என்றல்லவா அர்த்தம். இவன் இப்படி தேருவான்!
சோம்பேறி எல்லாம் இல்லை, சுருசுருப்பு சிகாமணி தான் என்றால், அப்படி சுருசுருப்பாய் என்ன செய்கிறான் இந்த சிகாமணி என்று பாருங்கள்…. லீவ் நாளிலே, ஷாப்பிங் மாலுக்கு போய், பொண்ணூங்களை எல்லாம் சைட் அடிப்பேன், என்றால், ஊகூம், நாட் ஓக்கே. ஏன் சைட் அடிச்சா அவ்வளவு தப்பா? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம். போகிற வழியில் வேலையோடு வேலையாய் வருகிற போகிற எதிர் பாலினத்தை வேடிகக்கை பார்த்து ரசிக்கும் சைட் அடிச்சிஃபிகேஷன் என்றால் ஓகே, அது இயற்க்கையாகவே அமையும் ஒரு உந்துதல். Basic instinct என்பதனால் அதில் தவறொன்றூம் இல்லை. ஆனால் இதையே ஒரு திருப்பணியாக எடுத்துக்கொண்டு, சோமவாரம் தோரும், பெண்கள் கூட்டம் அதிகம் புலங்கும் பிரகாரங்களாக பார்த்து, நேர்த்திக்கடன் மாதிரி இவன் 108 சுற்று சுற்றுவதையே மிக முக்கியம் என்று கருதுகிறான் என்றால், இவனை எல்லாம் எப்படி விளையாட்டில் சேர்த்துக்கொள்வது?
லீவ் கிடைச்சால் போதும் ஜாலியா உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம் ஆடுவேன், சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம், விடிய விடிய கம்ப்யூட்டரும் கையுமா இருப்பேன் என்று சொல்லுகிற ஆசாமிகளும் சரியான மொக்கை போர் பசங்கள் தான். இவன் பாட்டுக்கு கம்ப்யூட்டரே கதி என்று இருந்து பழகிவிட்டான் என்று வையுங்கள்….அப்புறம் நீங்கள் என்ன தான் பேரழகியாய் பக்கத்தில் இருந்தாலும், “சும்மா இரு, இந்த கேம்மை முடிக்கணும்” என்று தான் அவன் மனம் தடம்புரளும். அப்புறம் சொல்ல வேண்டுமா, அவன் உங்களை விட கம்யூட்டருக்கு அதிக முக்கியத்துவம் தருவது உங்களை எந்த பாடு படுத்தும் என்பதை சொல்லவே வேண்டாமே!
இன்னும் சில வகை ஆண்கள் இருக்கிறார்கள். நேரம் கிடைத்தால், இல்லை கிடைக்காவிட்டாலும் இதற்காக வேலை மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி, அடிக்கடி ஏதாவது பார்னோகிராஃப் எனப்படும் செக்ஸ் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த வகை ஆண்களிடம் என்ன பெரிய பிரச்சனை என்றால், இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் அநேக ஆண்களுக்கு பார்ப்பது மட்டுமே பேரானந்தம் என்பதால் காரியத்தில் சுத்த சைபராக இருப்பார்கள். வேறு சில ஆண்களோ, இப்படி கண்ட குப்பையையும் பார்த்து விட்டு மனைவி/காதலியும் அதே மாதிரி இருக்க, இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பணத்திற்காக பாலியல் காட்சியில் நடிப்பவள் நாடக தோரணையில் செய்வதை எல்லாம், குடும்ப தலைவி செய்வாளா? மாட்டாள் தானே. உடனே, இந்த மக்கு, தன் எதிர்ப்பார்ப்பே அபத்தம் என்று உணராமல், ஏதோ தன் துணைவியிடம் தான் எல்லா தப்புமே என்பது மாதிரி பேசி வைக்கும். அதனால் பார்னோகிராஃபை மட்டுமே தன் ஒரே பொழுது போக்காய் வைத்திருக்கும் இந்த வகை ஆண்கள் ஏறக்கட்டுவது எப்போதுமே பாதுகாப்பு.
மற்ற சில ஆண்கள் இருக்கிறார்கள், சும்மா லைட்டா எப்போதாவது கொஞ்சம் பாப்கார்ன் மாதிரி பார்ன் படங்கள் பார்த்து தங்கள் அறிவை அகலமாக்கி வைத்திருப்பார்கள். மற்றபடி இதே கதி என்று விழுந்து கிடக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட தெளிவான ஆண் என்றால் சரிபட்டு வருவான்.
இன்னும் சில ஆண்கள் ஃபிரீ டைம் கிடைத்தாலே தண்ணீ தொட்டி தேடும் கண்ணுக்குட்டிகளாய் சரக்கு உள்ள இடமாய் பார்த்து போய் சேர்ந்து விடுவார்கள். இப்படி ரெகுலராய், மது அருந்தும் ஆண் என்றால் மிக அதிக பட்ச எச்சரிக்கை உணர்வு தேவை. காரணம் மது போதைக்கு பழகிய ஆண்களை மறுபடியும் நல்வழி படுத்துவது ரொம்பவே கஷ்டம். அதுவும் தவிர இந்த மது பழக்கமே அவர்களுக்கு பலதரப்பட்ட உடல் மற்றூம் மனநல குறைபாடுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் இந்த பழக்கத்திற்கு அடிமையான ஆண்கள் குடும்ப வாழ்விற்கு ரொம்ப ஒன்றும் ஒத்துவர மாட்டார்கள். இப்படி மொடாகுடியன் இல்லை, சும்மா சாஸ்திரத்திற்காக மீட்டிங்கில் லைட்டாய் ஒன்றிரண்டு பெக் மட்டும் தான் என்றால், சரி தான் களவும் கற்று மறக்கவும் தெரிந்த மனிதன் என்று அவனுக்கு ஒரு பெரிய ஓகே போடலாம்.
இந்த மது போதை தவிர, பான் வகையறாக்கள், ரேஸ், ரீட், பெட், என்று இதையே பிரதான பொழுது போக்காய் கொண்ட ஆண்களும் தேரமாட்டார்கள். இதை எல்லாம் விட இன்னொரு பெரிய போதை மதம். இந்த போதைக்கு அடிமையாகி, சதா, கோயில், குலம், விரதம், ஹோமம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்றால் போயே போச்சு. எதற்கெடுத்தாலும், சாமி கண்ணை குத்தும் என்று தானும் பயந்து, நம்மையும் ஜாலியாய் இருக்க விடமாட்டார்கள் இந்த மாதிரி ஆண்கள். இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அளவிற்கு அதிகமான இறைபக்திகூட இல்வாழ்க்கைக்கு ஆபத்து தான் என்பதால் ஃபிரீ டைம் கிடச்சா அம்மாயோட கோயிலுக்கு போவேன் என்கிற இந்த வகை ஆண்கள் தான் இருப்பதிலேயே தேராத கேசுகள். ”சும்மா, பொழுது போக்கிற்காக போனேன், அம்மா கூப்பிட்டாங்களேனு துணையா போனேன், நேர்ந்திருந்தாங்களாம் அதனால் போனேன், கோயிலுக்கு போனா அமைதியா இருக்கும், மனசுக்கு இதமா இருக்கு, ஸ்தல வரலாறு பிடிக்கும் அதனால போனேன் என்று இயல்பான அளவில் ஞாயமான முறையில் பக்தி செலுத்தும் ஆண் என்றால் ஓகே. ஆனால் மதவெறி, கண்மூடித்தனமான பக்தி, மூடநம்பிக்கை என்று தெரிந்து குருட்டுத்தனமாக பின்பற்றும் விஸ்வாசம்…இவை எல்லாம் பின் தங்கிய மனதையே குறிக்கின்றன, இப்படி பின் தங்கிய மனிதனுடன் கூட்டு சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் என்னாவது? அதனால் பக்தி என்கிற இந்த விஷயத்தில் உங்கள் தலைவர் ஆரோகியமான மனநிலையில் இருக்கிறாரா என்று சரிபார்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.
ஆக வெறும் தூக்கம், வெட்டி அரட்டை, ஓவர் சைட் அடிச்சிஃபிகேஷன், டூ மச் கம்ப்யூட்டர், பார்ன், போதை, பக்தி, என்று இருக்கும் ஆண்களை ஓரம் கட்டுங்கள். அப்ப எந்த மாதிரி ஆணுக்கு தான் ஓ கே சொல்வது என்கிறீர்களா?
ஃபிரீ டைம் கிடைத்தால், தன் ரசனையை வளர்த்துக்கொள்ள உருப்படியான புத்தகம், சினிமா, கதை, கவிதை, கலை, உரையாடல், விளையாட்டு என்று பலதரப்பட்ட பொழுதுபோக்குகளினால் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே தன் அறிவை விஸ்தரித்துக்கொள்ளும் ஆண்கள் என்றால் எப்போதுமே ஓகே.
ஒரே இடமாக என்று இல்லாமல், ஊர் சுற்றிபார்க்கிறேன் என்று பையை மாட்டிக்கொண்டு தன் உலகத்தை ஆராய முற்படும் ஆணாய் இருந்தால் டபுள் ஓகே.
தான் ஆராய்ந்து, அனுபவித்து, யோசித்து, தெரிந்துக்கொண்ட விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி, தனக்கென்று ஒரு உறவினர்/நண்பர் வட்டம், அவர்களோடு, பேச்சு, சிரிப்பு, விளையாட்டு என்று பிறருடன் சுமூகமாக பழகும் ஆண்கள் என்றால் வெரி மச் ஓகே.
சுயமுனைப்பினால் தான் தெரிந்துக்கொண்ட விஷயங்களை தனக்கு தெரிந்தவர்களுடன் மட்டும் பகிர்ந்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு தெரிந்த விஷயத்தினால் இந்த உலகிற்கு பிரயோஜனமாய் இருக்க வேண்டும் என்று பிறருக்காக தன் பொழுதை செலவழித்து சின்ன சின்னதாகவாவது சில சமூக மாற்றங்கள் கொண்டு வர முயன்றால் அவன் ரொம்பவே ஒகே.
எந்த சமுதாயமாய் இருந்தாலும், அதில் எவ்வழி ஆடவரோ, அவ்வழி தான் பெண்டிர், எவ்வழி பெண்டிரோ, அவ்வழி தான் அடுத்த தலைமுறையே. அதனால் தான் காலா காலமாக சரியான ஆடவனாக பார்த்து தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கு இருந்து வருகிறது. அதனால் ஸ்நேகிதிகாள், அவன் சரியான துணையா என்று பார்த்து தேர்வு செய்யுங்கள். தேர்வான பிறகு அவனை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பது பற்றி அப்புறம் பார்ப்போம்!
அங்கு தான் பிரச்சனையே, வீட்டுக்கு வந்தவுடன் மனிதர் சோபாவில் படுத்தார் என்றால், அப்படியே படுத்த படுக்கையாய் இருந்தபடி லைட்டாய் கொஞ்சம் தொலைகாட்சியை பார்த்து வைப்பார். அதன் பிறகு இரவு உணவிற்கு தான் எழுந்திருப்பாரே. உணவிற்கு பிறகு அப்படியே போய் கட்டிலில் விழுந்தார் என்றால் அப்புறம் அடுத்த நாள் காலையில் வேலைக்கு கிளம்ப தான் எழுந்திருப்பார். இப்படி all work and no play என்று இந்த ஆசாமி இருந்திட, மனைவி பொறுத்து பொறுத்து பார்த்து, “எங்கையாவது வெளிய போகலாம், சும்மா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம், ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது விளையாடலாம்….’ என்று எவ்வளவோ பேசி, கெஞ்சி, மன்றாடி, போராடி, சண்டை எல்லாம் போட்டு பார்த்தார். எதுவுமே சரிபட்டு வரவில்லை. கடைசி வரை தலைவர் வெறும் ஒரு நடமாடும் வேலை செய்யும் யந்திரமாக மட்டுமே இருந்திட, நொந்து போன மனைவி வேறு வழியாக போக ஆரம்பித்துவிட்டார்.
இந்த வம்பும், வலியும் வந்து சேரக்கூடாதென்றால் பெண்கள் எல்லோருமே ஆரம்பத்திலேயே மிக உஷாராய், ”இவன் வேலை வேலை என்று மட்டும் இயங்கும் யந்திரபடிவமா, இல்லை, உபறி நேரத்தை உயிர் துடிப்புடன் உற்சாகமாக செலவிட தெரிந்த ஸ்வாரஸ்ய துணையா?” என்று கண்டுபிடிக்க தெரிந்திருப்பது ரொம்பவே முக்கியம்.
இதை எப்படி கண்டு பிடிப்பது என்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். அந்த ஆசாமி தனக்கு கிடைக்கும் உபறி அவகாசத்தை எல்லாம் எப்படி பயன் படுத்துகிறார் என்று கவனியுங்கள். ஃபிரீ டைம் கிடச்சா போதும், நல்லா குரட்டை விட்டு தூங்கிக்கிட்டே இருப்பேன் என்று எவனாவது சொன்னால், உஷார்! ரொம்ப வேலை பளு, அதனால் ஃப்ரீ டைம் கிடச்சா தூங்குவேன், ஆன, அப்புறம் ஏஞ்சி ஏதாவது பொழுது போக்கில் ஈடுபடுவேன் என்றால் ஓகே. பொழுது போக்கே கிடையாது, வெறும் கும்பகர்ணத்தனம் தான் என்றால், இது பகுதி நேர சோம்போறி, என்றல்லவா அர்த்தம். இவன் இப்படி தேருவான்!
சோம்பேறி எல்லாம் இல்லை, சுருசுருப்பு சிகாமணி தான் என்றால், அப்படி சுருசுருப்பாய் என்ன செய்கிறான் இந்த சிகாமணி என்று பாருங்கள்…. லீவ் நாளிலே, ஷாப்பிங் மாலுக்கு போய், பொண்ணூங்களை எல்லாம் சைட் அடிப்பேன், என்றால், ஊகூம், நாட் ஓக்கே. ஏன் சைட் அடிச்சா அவ்வளவு தப்பா? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம். போகிற வழியில் வேலையோடு வேலையாய் வருகிற போகிற எதிர் பாலினத்தை வேடிகக்கை பார்த்து ரசிக்கும் சைட் அடிச்சிஃபிகேஷன் என்றால் ஓகே, அது இயற்க்கையாகவே அமையும் ஒரு உந்துதல். Basic instinct என்பதனால் அதில் தவறொன்றூம் இல்லை. ஆனால் இதையே ஒரு திருப்பணியாக எடுத்துக்கொண்டு, சோமவாரம் தோரும், பெண்கள் கூட்டம் அதிகம் புலங்கும் பிரகாரங்களாக பார்த்து, நேர்த்திக்கடன் மாதிரி இவன் 108 சுற்று சுற்றுவதையே மிக முக்கியம் என்று கருதுகிறான் என்றால், இவனை எல்லாம் எப்படி விளையாட்டில் சேர்த்துக்கொள்வது?
லீவ் கிடைச்சால் போதும் ஜாலியா உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம் ஆடுவேன், சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம், விடிய விடிய கம்ப்யூட்டரும் கையுமா இருப்பேன் என்று சொல்லுகிற ஆசாமிகளும் சரியான மொக்கை போர் பசங்கள் தான். இவன் பாட்டுக்கு கம்ப்யூட்டரே கதி என்று இருந்து பழகிவிட்டான் என்று வையுங்கள்….அப்புறம் நீங்கள் என்ன தான் பேரழகியாய் பக்கத்தில் இருந்தாலும், “சும்மா இரு, இந்த கேம்மை முடிக்கணும்” என்று தான் அவன் மனம் தடம்புரளும். அப்புறம் சொல்ல வேண்டுமா, அவன் உங்களை விட கம்யூட்டருக்கு அதிக முக்கியத்துவம் தருவது உங்களை எந்த பாடு படுத்தும் என்பதை சொல்லவே வேண்டாமே!
இன்னும் சில வகை ஆண்கள் இருக்கிறார்கள். நேரம் கிடைத்தால், இல்லை கிடைக்காவிட்டாலும் இதற்காக வேலை மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி, அடிக்கடி ஏதாவது பார்னோகிராஃப் எனப்படும் செக்ஸ் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த வகை ஆண்களிடம் என்ன பெரிய பிரச்சனை என்றால், இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் அநேக ஆண்களுக்கு பார்ப்பது மட்டுமே பேரானந்தம் என்பதால் காரியத்தில் சுத்த சைபராக இருப்பார்கள். வேறு சில ஆண்களோ, இப்படி கண்ட குப்பையையும் பார்த்து விட்டு மனைவி/காதலியும் அதே மாதிரி இருக்க, இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பணத்திற்காக பாலியல் காட்சியில் நடிப்பவள் நாடக தோரணையில் செய்வதை எல்லாம், குடும்ப தலைவி செய்வாளா? மாட்டாள் தானே. உடனே, இந்த மக்கு, தன் எதிர்ப்பார்ப்பே அபத்தம் என்று உணராமல், ஏதோ தன் துணைவியிடம் தான் எல்லா தப்புமே என்பது மாதிரி பேசி வைக்கும். அதனால் பார்னோகிராஃபை மட்டுமே தன் ஒரே பொழுது போக்காய் வைத்திருக்கும் இந்த வகை ஆண்கள் ஏறக்கட்டுவது எப்போதுமே பாதுகாப்பு.
மற்ற சில ஆண்கள் இருக்கிறார்கள், சும்மா லைட்டா எப்போதாவது கொஞ்சம் பாப்கார்ன் மாதிரி பார்ன் படங்கள் பார்த்து தங்கள் அறிவை அகலமாக்கி வைத்திருப்பார்கள். மற்றபடி இதே கதி என்று விழுந்து கிடக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட தெளிவான ஆண் என்றால் சரிபட்டு வருவான்.
இன்னும் சில ஆண்கள் ஃபிரீ டைம் கிடைத்தாலே தண்ணீ தொட்டி தேடும் கண்ணுக்குட்டிகளாய் சரக்கு உள்ள இடமாய் பார்த்து போய் சேர்ந்து விடுவார்கள். இப்படி ரெகுலராய், மது அருந்தும் ஆண் என்றால் மிக அதிக பட்ச எச்சரிக்கை உணர்வு தேவை. காரணம் மது போதைக்கு பழகிய ஆண்களை மறுபடியும் நல்வழி படுத்துவது ரொம்பவே கஷ்டம். அதுவும் தவிர இந்த மது பழக்கமே அவர்களுக்கு பலதரப்பட்ட உடல் மற்றூம் மனநல குறைபாடுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் இந்த பழக்கத்திற்கு அடிமையான ஆண்கள் குடும்ப வாழ்விற்கு ரொம்ப ஒன்றும் ஒத்துவர மாட்டார்கள். இப்படி மொடாகுடியன் இல்லை, சும்மா சாஸ்திரத்திற்காக மீட்டிங்கில் லைட்டாய் ஒன்றிரண்டு பெக் மட்டும் தான் என்றால், சரி தான் களவும் கற்று மறக்கவும் தெரிந்த மனிதன் என்று அவனுக்கு ஒரு பெரிய ஓகே போடலாம்.
இந்த மது போதை தவிர, பான் வகையறாக்கள், ரேஸ், ரீட், பெட், என்று இதையே பிரதான பொழுது போக்காய் கொண்ட ஆண்களும் தேரமாட்டார்கள். இதை எல்லாம் விட இன்னொரு பெரிய போதை மதம். இந்த போதைக்கு அடிமையாகி, சதா, கோயில், குலம், விரதம், ஹோமம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்றால் போயே போச்சு. எதற்கெடுத்தாலும், சாமி கண்ணை குத்தும் என்று தானும் பயந்து, நம்மையும் ஜாலியாய் இருக்க விடமாட்டார்கள் இந்த மாதிரி ஆண்கள். இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அளவிற்கு அதிகமான இறைபக்திகூட இல்வாழ்க்கைக்கு ஆபத்து தான் என்பதால் ஃபிரீ டைம் கிடச்சா அம்மாயோட கோயிலுக்கு போவேன் என்கிற இந்த வகை ஆண்கள் தான் இருப்பதிலேயே தேராத கேசுகள். ”சும்மா, பொழுது போக்கிற்காக போனேன், அம்மா கூப்பிட்டாங்களேனு துணையா போனேன், நேர்ந்திருந்தாங்களாம் அதனால் போனேன், கோயிலுக்கு போனா அமைதியா இருக்கும், மனசுக்கு இதமா இருக்கு, ஸ்தல வரலாறு பிடிக்கும் அதனால போனேன் என்று இயல்பான அளவில் ஞாயமான முறையில் பக்தி செலுத்தும் ஆண் என்றால் ஓகே. ஆனால் மதவெறி, கண்மூடித்தனமான பக்தி, மூடநம்பிக்கை என்று தெரிந்து குருட்டுத்தனமாக பின்பற்றும் விஸ்வாசம்…இவை எல்லாம் பின் தங்கிய மனதையே குறிக்கின்றன, இப்படி பின் தங்கிய மனிதனுடன் கூட்டு சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் என்னாவது? அதனால் பக்தி என்கிற இந்த விஷயத்தில் உங்கள் தலைவர் ஆரோகியமான மனநிலையில் இருக்கிறாரா என்று சரிபார்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.
ஆக வெறும் தூக்கம், வெட்டி அரட்டை, ஓவர் சைட் அடிச்சிஃபிகேஷன், டூ மச் கம்ப்யூட்டர், பார்ன், போதை, பக்தி, என்று இருக்கும் ஆண்களை ஓரம் கட்டுங்கள். அப்ப எந்த மாதிரி ஆணுக்கு தான் ஓ கே சொல்வது என்கிறீர்களா?
ஃபிரீ டைம் கிடைத்தால், தன் ரசனையை வளர்த்துக்கொள்ள உருப்படியான புத்தகம், சினிமா, கதை, கவிதை, கலை, உரையாடல், விளையாட்டு என்று பலதரப்பட்ட பொழுதுபோக்குகளினால் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே தன் அறிவை விஸ்தரித்துக்கொள்ளும் ஆண்கள் என்றால் எப்போதுமே ஓகே.
ஒரே இடமாக என்று இல்லாமல், ஊர் சுற்றிபார்க்கிறேன் என்று பையை மாட்டிக்கொண்டு தன் உலகத்தை ஆராய முற்படும் ஆணாய் இருந்தால் டபுள் ஓகே.
தான் ஆராய்ந்து, அனுபவித்து, யோசித்து, தெரிந்துக்கொண்ட விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி, தனக்கென்று ஒரு உறவினர்/நண்பர் வட்டம், அவர்களோடு, பேச்சு, சிரிப்பு, விளையாட்டு என்று பிறருடன் சுமூகமாக பழகும் ஆண்கள் என்றால் வெரி மச் ஓகே.
சுயமுனைப்பினால் தான் தெரிந்துக்கொண்ட விஷயங்களை தனக்கு தெரிந்தவர்களுடன் மட்டும் பகிர்ந்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு தெரிந்த விஷயத்தினால் இந்த உலகிற்கு பிரயோஜனமாய் இருக்க வேண்டும் என்று பிறருக்காக தன் பொழுதை செலவழித்து சின்ன சின்னதாகவாவது சில சமூக மாற்றங்கள் கொண்டு வர முயன்றால் அவன் ரொம்பவே ஒகே.
எந்த சமுதாயமாய் இருந்தாலும், அதில் எவ்வழி ஆடவரோ, அவ்வழி தான் பெண்டிர், எவ்வழி பெண்டிரோ, அவ்வழி தான் அடுத்த தலைமுறையே. அதனால் தான் காலா காலமாக சரியான ஆடவனாக பார்த்து தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கு இருந்து வருகிறது. அதனால் ஸ்நேகிதிகாள், அவன் சரியான துணையா என்று பார்த்து தேர்வு செய்யுங்கள். தேர்வான பிறகு அவனை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பது பற்றி அப்புறம் பார்ப்போம்!
Labels:
பாலியல் கல்வி
Tuesday, June 23, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 19
உங்களுக்கு ரூட் விடும் ஆள், பெண்களிடம் கண்ணியம், கொஞ்சம் பேச்சு சுவாரசியம், சொன்ன சொல் காப்பாற்றும் கற்பு இதெல்லாம் வைத்திருக்கிறவனா என்று தரப் பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? இந்த முதல் மூன்று விஷயங்கள் இருக்கிறவன் என்றால் அடுத்து நீங்கள் செக் அப் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் தலைவரின் வேலை.
அவன் எத்தனைதான் கண்ணியம் சொட்டச் சொட்ட பழகினாலும், தேனாய் தித்திக்கத் தித்திக்க பேசினாலும், சொன்ன சொல்லை எல்லாம் ஒன்று விடாமல் காப்பாற்றினாலும், ஆசாமிக்கு வேலை என்று ஒன்று இல்லை என்றால் அவர் ஆட்டம் அம்பேல்தானே!
இது ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாக வாழும் காலம்தானே, அதனால் ஆண் வேலைக்குதான் போய் ஆக வேண்டும் என்கிற கட்டாயமா என்ன? அவன் பாட்டுக்கு வீட்டிலேயே ஒரு நல்ல ஹவுஸ் ஹஸ்பெண்டாய் இருந்தால் ஆகாதா? என்று நீங்கள்கூட நினைக்கலாம். ஆமாம். ஆணும் பெண்ணும் சமம்தான். அதனால்தான் இருவருமே வேலைக்குப் போவது நல்லது. பெண்ணுக்கு மகப்பேறு, பிரசவம், பிள்ளை வளர்ப்பு மாதிரியான கூடுதல் சுமைகள் இருப்பதால் அவள் இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாத பட்சத்தில் வீட்டிலேயே இருந்து குழந்தைப் பராமரிப்பை பிரதானப்பணியாய் செய்கிறாள். ஆனால் ஆணுக்குதான் இந்தப் பணிகள் எதுவும் கிடையாதே, பிறகு அவன் வீட்டிலேயே இருக்க என்ன அவசியம்?
ஆக ஆண் என்பவன் கண்டிப்பாக வேலைக்குப் போயே ஆக வேண்டியவன். சரி, இப்போது உங்களுக்குப் பலவிதமான ஆண்களை அறிமுகப்படுத்துகிறேன். இவர்களில் உங்களுக்கு யாரை அதிகமாகப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆண் 1
எனக்கு வேலைக்குப் போகவே மூடு இல்லை. விட்டா ஆஃபீசுலேயே படுத்துத் தூங்கிடுவேன் என்று நினைக்கிற ரகம்.
ஆண் 2
இந்த ஆஃபீசுக்கெல்லாம் மனுஷன் போவானா? எல்லாம் என் தலையெழுத்து! என்ன பண்றது என்கிற ரகம்.
ஆண் 3
தாத்தா காலத்துலேர்ந்து கட்டிக் காப்பாத்திட்டு வர குலத் தொழில். இதை கண்டினியூ பண்றது என் கடமை இல்லையா? அதான் செய்யுறேன், என்கிற ரகம்
ஆண் 4
இந்த வேலைதான் எனக்கு உயிர். எனக்கு லைஃபே என் வேலைதான், என்கிற ரகம்.
ஆண் 5
கிடைச்ச வேலை எதுவா இருந்தாலும் கரெக்டா செய்யணும். ஆனா வேலை நேரம் முடிஞ்சி வீட்டுக்குப் போனா அதெல்லாம் அப்படியே மறந்துவிடுவேன்.
ஆண் 6
என் பாஸ்னா எனக்கு உயிர். அவருக்காகத்தான் இந்த வேலையச் செய்யறேன் என்கிற ரகம்.
ஆண் 1 : இவன் சரியான சோம்பேறி. எந்த விதமான வேகமோ, உத்வேகமோ, சாதிக்கும் வெறியோ இல்லாத இவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சூனியமாகி விடும். அதனால் `பாவம் பார்த்து தேர்ந்தெடுத்தேன். திருந்திடுவான்னு நினைச்சேன்' என்றெல்லாம் உங்கள் மேலான குணங்களை கற்பூர வாசனையே தெரியாத கழுதைகளுக்குக் காட்டி வீண்டிக்காதீர்கள்.
ஆண் 2 : எல்லா அலுவலகங்களிலுமே பாலிடிக்ஸ் இருக்கும். இதை எல்லாம் கடந்து ஜெயிக்கத் தெரிகிறவன் தான் ஃபிட்டான ஆண். அதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் குறை கண்டு பிடித்துக்கொண்டு, சதா அலுத்துக்கொள்ளும் இந்த வகை ஆண்கள், பெஸிமிஸ்டுகள் என்பதால், இவர்களுடன் நீங்கள் ரொம்ப நேரம் சேர்ந்திருந்தால் இவரின் இந்த இருட்டான அணுகுமுறை உங்களுக்கும், தொத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.
ஆண் 3 : தன் முனைப்பில்லாமல், வெறுமனே தன் பரம்பரை கௌரவம், அல்லது வருமானத்தை அடைகாக்கும் இந்த வகை ஆண்களுக்கு எல்லாமே சுலபமாக ரெடிமேடாகக் கிடைத்து விடுவதால், போராடும் குணம் அதிகமாக இருப்பதில்லை. அதனால் சோர்ந்து, மெத்தனமாய் கிடந்து உடல் ஊதிப் போய், சுவாரசியமே இல்லாமல் சலித்துக்கொண்டிருப்பார்கள் இந்த வகை ஆண்கள்.
ஆனால் இதே `பரம்பரை' சொத்துக் கேட்டகரியில் வேறு சில ரக ஆண்கள் இருப்பார்கள். தாத்தா சின்ன கடைதான் வெச்சிருந்தார். நான் பெரிசா, புதுமையா, பிரம்மாண்டமா மாற்றி அமைக்கப் போறேன் என்று தன் தாத்தா விட்டுப் போன அஸ்திவாரத்தில் தன் சொந்த முயற்சியால் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முயன்று, பல சமயங்களில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகை முனைப்புள்ள ஆண்கள் என்றால் எப்போதுமே ஓ.கே. தான்.
ஆண் 4 : ``வேலை தான் உயிர்'' என்கிற ஆண்களை அநேகப் பெண்களுக்குப் பிடிக்கும். இவனை மாதிரி ஒரு கெட்டிக்காரனுக்கு வாழ்க்கைப்பட கொடுத்து வெச்சிருக்கணுமே என்று நினைப்பார்கள். ஆனால் இந்த வகை ஆண்களிடம் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் இவர்களுக்கு வேலை தான் காதலி, மனைவி, தாய், மகள் எல்லாமே. வேலை மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் அவர்களை முழு நேர ஷ்ஷீக்ஷீளீணீலீஷீறீவீநீ ஆக்கிவிடுவதால் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் சதா சர்வகாலமும் தன் தொழிலே கதி என்று இருந்துவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள், ``சே, எனக்காக கொஞ்ச நேரமாவது ஒதுக்குறானா? இவனுக்கு நான் முக்கியமே இல்லை போல'' என்று நினைத்து நினைத்தே நொந்து போவார்கள். காரணம், அளவிற்கு மீறிய இவனின் வேலை மோகம். அதனால் அவன் தொழிலே அவளுக்கு ஒரு சக்களத்தி ஆகிவிட, கசப்புதான் மிஞ்சும். ஆக இந்த வகை ஆண்கள் எல்லாம் வீட்டில் வைத்து மேய்க்க சிரமமானவர்கள் என்பதனால் இவர்களும் அவ்வளவாக தேறுவதில்லை.
ஆண் 5 : எதைச் செய்தாலும் சரியா செய்யணும், மத்தபடி, வேலைய முடிச்சமா வீட்டுக்குப் போனமான்னு இருக்கணும் என்கிற இந்த வகை ஆண்கள் பார்க்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கமாட்டார்கள். அதென்னது, மிஷின் மாதிரி வர்றான், வேலையை பற்றே இல்லாம செய்யுறான், முடிஞ்சதும் போயிகிட்டே இருக்கானே, என்று லேசாக எரிச்சல் கூட வரலாம். ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா, இந்த வகை ஆண்கள் தான் தொடர் உறவிற்குத் தோதானவர்கள். எதிலுமே ஓவர் ஈடுபாடில்லாமல், எப்போதுமே மிதமாக இருக்கும் சுபாவம் தான் உறவிற்கு பலத்தைக் கொடுக்கும். ஆக இந்த வகை ஆண் என்றால் எப்போதுமே ஓ.கே!
ஆண் 6 : இந்த வகை ஆண்கள் ஓவர் இமோஷனல் டைப் என்பதால், இவர்களின் இந்த அளவிற்கதிகமான உணர்ச்சி விகிதமே போகப் போக உங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும். அதனால், இந்த வகை ஆண்களும் ஊகூம்!
ஆக, சிநேகிதிகளே, உங்களை முற்றுகை இடும் ஆண்களைக் கூர்ந்து கவனியுங்கள். மேலே சொன்ன குணங்களின் கலவைகளாக பல ஆண்கள் இருக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும், நிறை, குறை இரண்டையும் எடை போட்டு, அவற்றுள் எது அதிகம் என்பதை சரியாகக் கணித்துப் பாருங்கள். வெறும் அவனுடைய வேலை, மற்றும் அது பற்றிய அவன் அபிப்ராயத்தை வைத்தே இத்தனை தரப்பரிசோதனை செய்ய முடியும் என்பதால் இந்த வாரம் இதையே ஹோம் ஒர்க்காக செய்து பாருங்கள்.
அவன் எத்தனைதான் கண்ணியம் சொட்டச் சொட்ட பழகினாலும், தேனாய் தித்திக்கத் தித்திக்க பேசினாலும், சொன்ன சொல்லை எல்லாம் ஒன்று விடாமல் காப்பாற்றினாலும், ஆசாமிக்கு வேலை என்று ஒன்று இல்லை என்றால் அவர் ஆட்டம் அம்பேல்தானே!
இது ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாக வாழும் காலம்தானே, அதனால் ஆண் வேலைக்குதான் போய் ஆக வேண்டும் என்கிற கட்டாயமா என்ன? அவன் பாட்டுக்கு வீட்டிலேயே ஒரு நல்ல ஹவுஸ் ஹஸ்பெண்டாய் இருந்தால் ஆகாதா? என்று நீங்கள்கூட நினைக்கலாம். ஆமாம். ஆணும் பெண்ணும் சமம்தான். அதனால்தான் இருவருமே வேலைக்குப் போவது நல்லது. பெண்ணுக்கு மகப்பேறு, பிரசவம், பிள்ளை வளர்ப்பு மாதிரியான கூடுதல் சுமைகள் இருப்பதால் அவள் இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாத பட்சத்தில் வீட்டிலேயே இருந்து குழந்தைப் பராமரிப்பை பிரதானப்பணியாய் செய்கிறாள். ஆனால் ஆணுக்குதான் இந்தப் பணிகள் எதுவும் கிடையாதே, பிறகு அவன் வீட்டிலேயே இருக்க என்ன அவசியம்?
ஆக ஆண் என்பவன் கண்டிப்பாக வேலைக்குப் போயே ஆக வேண்டியவன். சரி, இப்போது உங்களுக்குப் பலவிதமான ஆண்களை அறிமுகப்படுத்துகிறேன். இவர்களில் உங்களுக்கு யாரை அதிகமாகப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆண் 1
எனக்கு வேலைக்குப் போகவே மூடு இல்லை. விட்டா ஆஃபீசுலேயே படுத்துத் தூங்கிடுவேன் என்று நினைக்கிற ரகம்.
ஆண் 2
இந்த ஆஃபீசுக்கெல்லாம் மனுஷன் போவானா? எல்லாம் என் தலையெழுத்து! என்ன பண்றது என்கிற ரகம்.
ஆண் 3
தாத்தா காலத்துலேர்ந்து கட்டிக் காப்பாத்திட்டு வர குலத் தொழில். இதை கண்டினியூ பண்றது என் கடமை இல்லையா? அதான் செய்யுறேன், என்கிற ரகம்
ஆண் 4
இந்த வேலைதான் எனக்கு உயிர். எனக்கு லைஃபே என் வேலைதான், என்கிற ரகம்.
ஆண் 5
கிடைச்ச வேலை எதுவா இருந்தாலும் கரெக்டா செய்யணும். ஆனா வேலை நேரம் முடிஞ்சி வீட்டுக்குப் போனா அதெல்லாம் அப்படியே மறந்துவிடுவேன்.
ஆண் 6
என் பாஸ்னா எனக்கு உயிர். அவருக்காகத்தான் இந்த வேலையச் செய்யறேன் என்கிற ரகம்.
ஆண் 1 : இவன் சரியான சோம்பேறி. எந்த விதமான வேகமோ, உத்வேகமோ, சாதிக்கும் வெறியோ இல்லாத இவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சூனியமாகி விடும். அதனால் `பாவம் பார்த்து தேர்ந்தெடுத்தேன். திருந்திடுவான்னு நினைச்சேன்' என்றெல்லாம் உங்கள் மேலான குணங்களை கற்பூர வாசனையே தெரியாத கழுதைகளுக்குக் காட்டி வீண்டிக்காதீர்கள்.
ஆண் 2 : எல்லா அலுவலகங்களிலுமே பாலிடிக்ஸ் இருக்கும். இதை எல்லாம் கடந்து ஜெயிக்கத் தெரிகிறவன் தான் ஃபிட்டான ஆண். அதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் குறை கண்டு பிடித்துக்கொண்டு, சதா அலுத்துக்கொள்ளும் இந்த வகை ஆண்கள், பெஸிமிஸ்டுகள் என்பதால், இவர்களுடன் நீங்கள் ரொம்ப நேரம் சேர்ந்திருந்தால் இவரின் இந்த இருட்டான அணுகுமுறை உங்களுக்கும், தொத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.
ஆண் 3 : தன் முனைப்பில்லாமல், வெறுமனே தன் பரம்பரை கௌரவம், அல்லது வருமானத்தை அடைகாக்கும் இந்த வகை ஆண்களுக்கு எல்லாமே சுலபமாக ரெடிமேடாகக் கிடைத்து விடுவதால், போராடும் குணம் அதிகமாக இருப்பதில்லை. அதனால் சோர்ந்து, மெத்தனமாய் கிடந்து உடல் ஊதிப் போய், சுவாரசியமே இல்லாமல் சலித்துக்கொண்டிருப்பார்கள் இந்த வகை ஆண்கள்.
ஆனால் இதே `பரம்பரை' சொத்துக் கேட்டகரியில் வேறு சில ரக ஆண்கள் இருப்பார்கள். தாத்தா சின்ன கடைதான் வெச்சிருந்தார். நான் பெரிசா, புதுமையா, பிரம்மாண்டமா மாற்றி அமைக்கப் போறேன் என்று தன் தாத்தா விட்டுப் போன அஸ்திவாரத்தில் தன் சொந்த முயற்சியால் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முயன்று, பல சமயங்களில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகை முனைப்புள்ள ஆண்கள் என்றால் எப்போதுமே ஓ.கே. தான்.
ஆண் 4 : ``வேலை தான் உயிர்'' என்கிற ஆண்களை அநேகப் பெண்களுக்குப் பிடிக்கும். இவனை மாதிரி ஒரு கெட்டிக்காரனுக்கு வாழ்க்கைப்பட கொடுத்து வெச்சிருக்கணுமே என்று நினைப்பார்கள். ஆனால் இந்த வகை ஆண்களிடம் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் இவர்களுக்கு வேலை தான் காதலி, மனைவி, தாய், மகள் எல்லாமே. வேலை மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் அவர்களை முழு நேர ஷ்ஷீக்ஷீளீணீலீஷீறீவீநீ ஆக்கிவிடுவதால் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் சதா சர்வகாலமும் தன் தொழிலே கதி என்று இருந்துவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள், ``சே, எனக்காக கொஞ்ச நேரமாவது ஒதுக்குறானா? இவனுக்கு நான் முக்கியமே இல்லை போல'' என்று நினைத்து நினைத்தே நொந்து போவார்கள். காரணம், அளவிற்கு மீறிய இவனின் வேலை மோகம். அதனால் அவன் தொழிலே அவளுக்கு ஒரு சக்களத்தி ஆகிவிட, கசப்புதான் மிஞ்சும். ஆக இந்த வகை ஆண்கள் எல்லாம் வீட்டில் வைத்து மேய்க்க சிரமமானவர்கள் என்பதனால் இவர்களும் அவ்வளவாக தேறுவதில்லை.
ஆண் 5 : எதைச் செய்தாலும் சரியா செய்யணும், மத்தபடி, வேலைய முடிச்சமா வீட்டுக்குப் போனமான்னு இருக்கணும் என்கிற இந்த வகை ஆண்கள் பார்க்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கமாட்டார்கள். அதென்னது, மிஷின் மாதிரி வர்றான், வேலையை பற்றே இல்லாம செய்யுறான், முடிஞ்சதும் போயிகிட்டே இருக்கானே, என்று லேசாக எரிச்சல் கூட வரலாம். ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா, இந்த வகை ஆண்கள் தான் தொடர் உறவிற்குத் தோதானவர்கள். எதிலுமே ஓவர் ஈடுபாடில்லாமல், எப்போதுமே மிதமாக இருக்கும் சுபாவம் தான் உறவிற்கு பலத்தைக் கொடுக்கும். ஆக இந்த வகை ஆண் என்றால் எப்போதுமே ஓ.கே!
ஆண் 6 : இந்த வகை ஆண்கள் ஓவர் இமோஷனல் டைப் என்பதால், இவர்களின் இந்த அளவிற்கதிகமான உணர்ச்சி விகிதமே போகப் போக உங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும். அதனால், இந்த வகை ஆண்களும் ஊகூம்!
ஆக, சிநேகிதிகளே, உங்களை முற்றுகை இடும் ஆண்களைக் கூர்ந்து கவனியுங்கள். மேலே சொன்ன குணங்களின் கலவைகளாக பல ஆண்கள் இருக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும், நிறை, குறை இரண்டையும் எடை போட்டு, அவற்றுள் எது அதிகம் என்பதை சரியாகக் கணித்துப் பாருங்கள். வெறும் அவனுடைய வேலை, மற்றும் அது பற்றிய அவன் அபிப்ராயத்தை வைத்தே இத்தனை தரப்பரிசோதனை செய்ய முடியும் என்பதால் இந்த வாரம் இதையே ஹோம் ஒர்க்காக செய்து பாருங்கள்.
Labels:
பாலியல் கல்வி
Tuesday, June 2, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 18
சென்ற ஸ்நேகிதியில் சொன்னது உங்களுக்கு உயயோகமாக இருந்ததா? ஜால பேச்சுக்காரனிடமிருந்து ஜகா வாங்கி விட்டு, சுருங்க பேசும் சின்சியர் ஆசாமிகளை இனம் கண்டுக்கொள்ள பழகினீர்களா? அப்படியென்றால் அடுத்த லெசனுக்கு போக நீங்க ரெடி!
எந்த வகை ஆணை நம்பலாம் என்கிற இந்த தர பரிசோதனை வரிசையில் ஷிவல்ரி, இயல்பான பேச்சு ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்து வரும் அதிமுக்கியமான ஐட்டம் கற்பு. உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதுதான் அடுத்த கட்ட தர ஆய்வு.
அதெப்படி ஆணிடம் போய் கற்பை எதிர்பார்ப்பது? கற்பு என்பது பெண் சம்பந்தப்பட்ட சமாசாரம் ஆச்சே, என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறதா; உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரிஜினலாய் கற்பு என்பது வெறும் பெண்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே கிடையாது.அது இரு பாலினருக்கும் பொதுவான மேட்டர்தான்.
தவிர கற்பு என்பது, சினிமாவில் வருவது போல, வெறும் உடல் ரீதியான ``கன்னித்தன்மை'' சம்பந்தமான விஷயமும் அல்ல. அது நாணயத்தைக் குறிக்கும் ஓர் சொல்.
ஔவையார் கற்பு பற்றிச் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?''
``கற்பெனப்படுதல் சொல் திறம்பாமை''. அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல், கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல், பேச்சு மாறாமல் நாணயம் காத்தல், இதைத் தான் கற்பு என்கிறார் ஔவையார். இப்படி சொல் திறம்பாமல் இருப்பவனே கற்புள்ள ஆண்.
அது ``வர சண்டே சினிமாவுக்குப் போகலாம்'' என்று சொன்ன சொல்லாக இருக்கலாம் அல்லது ``என் தங்கை கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்று கொடுத்த வாக்காக இருக்கலாம். அல்லது, ``உன்னை கண் கலங்காம காப்பாற்றுவேன்'' என்று கொடுத்த உறுதிமொழியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி, தன் சொல்படி நடப்பவன்தான் கற்புள்ள ஆண்.
இதற்கு மாறாக, ``நான் அப்படிச் சொல்லவே இல்லையே'' என்று மறுப்பவனோ, ``நான் அப்படியெல்லாம் சொல்லி இருக்கவே மாட்டேனே என்று சமாளிப்பவனோ, ``அப்ப என்னவோ தோணிச்சி சொன்னேன், ஆனா இப்ப மாறிட்டேன்'' என்று பேச்சு மாறுபவனோ, ``ஆமா சொன்னேன், சும்மா ஏதோ பேச்சுக்குச் சொன்னேன், இப்ப செய்ய முடியலை, அதுக்கு என்ன இப்ப?'' என்று மழுப்புகிறவனோ, கற்பு நெறியில் இருந்து தவறியவனே. இப்படி சொன்ன சொல்லைக்கூட காப்பாற்றத் துப்பில்லாதவன் எப்படி ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவான்?
அதனால் தான் காலம் காலமாய்,``சொன்ன சொல்லைக் காப்பாத்து-றவன்தான் நிஜமான ஆம்பிளை, அப்படி காப்பாற்றத் தவறுகிறவன் ஆம்பிளையே கிடையாது'' என்கிற பொது கருத்து நம்மூரில் இருந்து வருகிறது. இதனால்தான் ``பேச்சு மாறுறியே, நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?'' என்று திட்டுவது இயல்பாகிறது.
ஆக பேச்சு மாறுவது என்பது தான் உச்ச கட்ட அயோக்கியத்தனத்தின் அறிகுறி என்பதால், உங்களுக்கு ரூட் விடும் ஆணை கவனமாக ஆழம் பாருங்கள். சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை, அவன் சொல் திறம்பாமல் இருக்கிறானா என்பதைச் சரி பாருங்கள்.
அதற்காக, ரொம்ப பொடிபொடி விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி ``ஆறு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, ஏழு மணிக்கு வர்றியே, டிராஃபிக் ஜாமாவது மண்ணாவது. அதெல்லாம் கிடையாது, சொன்னக் சொல்லைக் காப்பாற்றலைனா நீ கற்பற்றவன்'' என்று உடனே இந்த விதியை ஓவர் கறாராக அமல்படுத்தி, உங்கள் ஆளை அல்லோலப் படுத்திவிடாதீர்கள். எந்த விதியாக இருந்தாலும், அதை கரிசனத்தோடு பயன்படுத்துவது-தானே மனித பண்பு!
அதனால், அன்பு சிநேகிதியே, எப்போதாவது ஒரு சமயம், ஏதோ நியாயமான காரணத்தினால் அவன் சூழ்நிலைக் கைதியாகி, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் போனால், இட்ஸ் ஓ.கே. சந்தர்ப்ப சூழ்நிலையினால் தானே அவன் சொல் திறம்பினான். ஆனால் உண்மையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயன்றான் தானே. ஆக அவன் உள்நோக்கம், சரி தானே? One cannot judge a man for his action we only judge his intentions, அதனால் போனால் போகிறது, intention சரியாக இருந்தால், சந்தேகத்தின் பலனை அவனுக்குத் தந்து, அந்த ஒரு தரம் மட்டும் அவனை பொறுத்தருளி மன்னித்து வையுங்கள்.
ஆனால் தொடர்ந்து இதே பாணியில் பெரிதாய் வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட்டு, அப்புறம் அதை எல்லாம் மறந்து போவதே வேலையாக அவன் வைளய வந்தால்... போச்சு, அவனுக்கு கற்பு இல்லை என்பதை அவனே நிரூபிக்கிறான்! கற்பு இல்லாத ஆணை எப்படி நம்புவது? கழுத்தறுத்துவிடுவானே!
அதனால் சொல் திறம்புவதே அவன் தொடர் குணமாக இருந்தால், ``பாவம், பரிதாபம், தயவு, தாட்சண்யம் என்று நேரத்தை விரயம் செய்யாமல் உடனே அவனுக்கு ஒரு `டா டா' சொல்லி ஏறக்கட்டி விட்டு, உங்கள் வழியைப் பாத்துக்கொண்டு நகர்ந்துவிடுங்கள். அதை விட்டுவிட்டு, ``போனால் போகிறது. இந்த ஒரே ஒரு தரம் மட்டும், பாவம் அவன் எந்தச் சூழ்நிலையில் இப்படிச் செய்தானோ என்னவோ, நான் அவனைத் திருத்தி நல்வழிப் படுத்திவிடுகிறேன், போகப் போக எல்லாம் சரியாகி விடும்''... என்றெல்லாம் ஏதாவது வெற்று செண்டிமெண்ட் பார்த்தீர்கள் என்றால், போச்சு, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கும்போது அவன் சும்மா விடுவானா? உங்கள் அன்பில் இன்னும் இன்னும் குளிர் காய ஆரம்பித்து விடுவான். கற்பே இல்லை என்றாலும், அவனை நீங்கள் மன்னித்து ஏற்றுக்கொண்டே தான் இருக்கப் போகிறீர்கள் என்றான பிறகு, அதற்குப் பிறகு அவன் மெனக்கெட்டு கற்பை இனி புதிதாக உருவாக்க முயலவா போகிறான்? என்ன செய்தாலும் இவள் என்னை விட்டு இனி இருக்கவே மாட்டாள் என்ற மிதப்பில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போன கதையாய், இன்னும் இன்னும் சொல் திறம்பிக்கொண்டே இருப்பான்...
அதனால் சிநேகிதியே, விழிப்பாய் இருந்திடுங்கள். உங்கள் மனம் ரொம்பவே ஈடு இணையில்லா ஓர் பாகம். இதயம் போனால் இன்னொன்றைத் தானமாகப் பெறலாம். நுரையீரல், கிட்னி, கல்லீரல் என்று எந்த பாகம் போனாலும் மாற்றுக்கு வழி உண்டு. ஆனால் உங்கள் மனம்... அதற்கு வேறு மாற்றே இல்லை என்பதால் மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் மனதில் இடம் பெறும் அளவிற்கு உயர் தகுதி உள்ளவனுக்கே நீங்கள் உங்கள் உள்ளத்தினுள் நுழையும் அனுமதியைத் தரலாம். அதனால் உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு எனும் இந்த முக்கியத் தகுதி இருக்கிறதா என்பதைக் கண்காணியுங்கள். வேறு என்ன என்ன தகுதிகள் இருந்தால் அவன் தேறுவான் என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில் பேசலாம்!
எந்த வகை ஆணை நம்பலாம் என்கிற இந்த தர பரிசோதனை வரிசையில் ஷிவல்ரி, இயல்பான பேச்சு ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்து வரும் அதிமுக்கியமான ஐட்டம் கற்பு. உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதுதான் அடுத்த கட்ட தர ஆய்வு.
அதெப்படி ஆணிடம் போய் கற்பை எதிர்பார்ப்பது? கற்பு என்பது பெண் சம்பந்தப்பட்ட சமாசாரம் ஆச்சே, என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறதா; உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரிஜினலாய் கற்பு என்பது வெறும் பெண்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே கிடையாது.அது இரு பாலினருக்கும் பொதுவான மேட்டர்தான்.
தவிர கற்பு என்பது, சினிமாவில் வருவது போல, வெறும் உடல் ரீதியான ``கன்னித்தன்மை'' சம்பந்தமான விஷயமும் அல்ல. அது நாணயத்தைக் குறிக்கும் ஓர் சொல்.
ஔவையார் கற்பு பற்றிச் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?''
``கற்பெனப்படுதல் சொல் திறம்பாமை''. அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல், கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல், பேச்சு மாறாமல் நாணயம் காத்தல், இதைத் தான் கற்பு என்கிறார் ஔவையார். இப்படி சொல் திறம்பாமல் இருப்பவனே கற்புள்ள ஆண்.
அது ``வர சண்டே சினிமாவுக்குப் போகலாம்'' என்று சொன்ன சொல்லாக இருக்கலாம் அல்லது ``என் தங்கை கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்று கொடுத்த வாக்காக இருக்கலாம். அல்லது, ``உன்னை கண் கலங்காம காப்பாற்றுவேன்'' என்று கொடுத்த உறுதிமொழியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி, தன் சொல்படி நடப்பவன்தான் கற்புள்ள ஆண்.
இதற்கு மாறாக, ``நான் அப்படிச் சொல்லவே இல்லையே'' என்று மறுப்பவனோ, ``நான் அப்படியெல்லாம் சொல்லி இருக்கவே மாட்டேனே என்று சமாளிப்பவனோ, ``அப்ப என்னவோ தோணிச்சி சொன்னேன், ஆனா இப்ப மாறிட்டேன்'' என்று பேச்சு மாறுபவனோ, ``ஆமா சொன்னேன், சும்மா ஏதோ பேச்சுக்குச் சொன்னேன், இப்ப செய்ய முடியலை, அதுக்கு என்ன இப்ப?'' என்று மழுப்புகிறவனோ, கற்பு நெறியில் இருந்து தவறியவனே. இப்படி சொன்ன சொல்லைக்கூட காப்பாற்றத் துப்பில்லாதவன் எப்படி ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவான்?
அதனால் தான் காலம் காலமாய்,``சொன்ன சொல்லைக் காப்பாத்து-றவன்தான் நிஜமான ஆம்பிளை, அப்படி காப்பாற்றத் தவறுகிறவன் ஆம்பிளையே கிடையாது'' என்கிற பொது கருத்து நம்மூரில் இருந்து வருகிறது. இதனால்தான் ``பேச்சு மாறுறியே, நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?'' என்று திட்டுவது இயல்பாகிறது.
ஆக பேச்சு மாறுவது என்பது தான் உச்ச கட்ட அயோக்கியத்தனத்தின் அறிகுறி என்பதால், உங்களுக்கு ரூட் விடும் ஆணை கவனமாக ஆழம் பாருங்கள். சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை, அவன் சொல் திறம்பாமல் இருக்கிறானா என்பதைச் சரி பாருங்கள்.
அதற்காக, ரொம்ப பொடிபொடி விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி ``ஆறு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, ஏழு மணிக்கு வர்றியே, டிராஃபிக் ஜாமாவது மண்ணாவது. அதெல்லாம் கிடையாது, சொன்னக் சொல்லைக் காப்பாற்றலைனா நீ கற்பற்றவன்'' என்று உடனே இந்த விதியை ஓவர் கறாராக அமல்படுத்தி, உங்கள் ஆளை அல்லோலப் படுத்திவிடாதீர்கள். எந்த விதியாக இருந்தாலும், அதை கரிசனத்தோடு பயன்படுத்துவது-தானே மனித பண்பு!
அதனால், அன்பு சிநேகிதியே, எப்போதாவது ஒரு சமயம், ஏதோ நியாயமான காரணத்தினால் அவன் சூழ்நிலைக் கைதியாகி, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் போனால், இட்ஸ் ஓ.கே. சந்தர்ப்ப சூழ்நிலையினால் தானே அவன் சொல் திறம்பினான். ஆனால் உண்மையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயன்றான் தானே. ஆக அவன் உள்நோக்கம், சரி தானே? One cannot judge a man for his action we only judge his intentions, அதனால் போனால் போகிறது, intention சரியாக இருந்தால், சந்தேகத்தின் பலனை அவனுக்குத் தந்து, அந்த ஒரு தரம் மட்டும் அவனை பொறுத்தருளி மன்னித்து வையுங்கள்.
ஆனால் தொடர்ந்து இதே பாணியில் பெரிதாய் வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட்டு, அப்புறம் அதை எல்லாம் மறந்து போவதே வேலையாக அவன் வைளய வந்தால்... போச்சு, அவனுக்கு கற்பு இல்லை என்பதை அவனே நிரூபிக்கிறான்! கற்பு இல்லாத ஆணை எப்படி நம்புவது? கழுத்தறுத்துவிடுவானே!
அதனால் சொல் திறம்புவதே அவன் தொடர் குணமாக இருந்தால், ``பாவம், பரிதாபம், தயவு, தாட்சண்யம் என்று நேரத்தை விரயம் செய்யாமல் உடனே அவனுக்கு ஒரு `டா டா' சொல்லி ஏறக்கட்டி விட்டு, உங்கள் வழியைப் பாத்துக்கொண்டு நகர்ந்துவிடுங்கள். அதை விட்டுவிட்டு, ``போனால் போகிறது. இந்த ஒரே ஒரு தரம் மட்டும், பாவம் அவன் எந்தச் சூழ்நிலையில் இப்படிச் செய்தானோ என்னவோ, நான் அவனைத் திருத்தி நல்வழிப் படுத்திவிடுகிறேன், போகப் போக எல்லாம் சரியாகி விடும்''... என்றெல்லாம் ஏதாவது வெற்று செண்டிமெண்ட் பார்த்தீர்கள் என்றால், போச்சு, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கும்போது அவன் சும்மா விடுவானா? உங்கள் அன்பில் இன்னும் இன்னும் குளிர் காய ஆரம்பித்து விடுவான். கற்பே இல்லை என்றாலும், அவனை நீங்கள் மன்னித்து ஏற்றுக்கொண்டே தான் இருக்கப் போகிறீர்கள் என்றான பிறகு, அதற்குப் பிறகு அவன் மெனக்கெட்டு கற்பை இனி புதிதாக உருவாக்க முயலவா போகிறான்? என்ன செய்தாலும் இவள் என்னை விட்டு இனி இருக்கவே மாட்டாள் என்ற மிதப்பில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போன கதையாய், இன்னும் இன்னும் சொல் திறம்பிக்கொண்டே இருப்பான்...
அதனால் சிநேகிதியே, விழிப்பாய் இருந்திடுங்கள். உங்கள் மனம் ரொம்பவே ஈடு இணையில்லா ஓர் பாகம். இதயம் போனால் இன்னொன்றைத் தானமாகப் பெறலாம். நுரையீரல், கிட்னி, கல்லீரல் என்று எந்த பாகம் போனாலும் மாற்றுக்கு வழி உண்டு. ஆனால் உங்கள் மனம்... அதற்கு வேறு மாற்றே இல்லை என்பதால் மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் மனதில் இடம் பெறும் அளவிற்கு உயர் தகுதி உள்ளவனுக்கே நீங்கள் உங்கள் உள்ளத்தினுள் நுழையும் அனுமதியைத் தரலாம். அதனால் உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு எனும் இந்த முக்கியத் தகுதி இருக்கிறதா என்பதைக் கண்காணியுங்கள். வேறு என்ன என்ன தகுதிகள் இருந்தால் அவன் தேறுவான் என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில் பேசலாம்!
Labels:
பாலியல் கல்வி
Thursday, May 21, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 17
சென்ற இதழில் சொன்ன மாதிரியே ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? அவனை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவனை ஊக்குவிக்க விரும்புகிறீர்களா?
அப்படியானால் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அவன் உண்மையிலேயே ஒழுங்கன்தானா என்றுசரி பார்த்திடுங்கள்.
பல சமயங்களில் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒரு வெற்று ஆசாமியின் மேல் உயிரையே வைத்துவிடுகிறார்கள். காதலால் கசிந்துருகி, அவனை கடவுள் ஸ்தானத்திற்கே உயர்த்தி, அவனுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்த பிறகுதான் தெரியவரும் அவன் ஒரு மோசமான கிராதகன் என்று. அவன் புலித்தோல் போத்திய பூனை, போலித்தனமான ஆசாமி, பெண்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் மலிவானவன் என்பதெல்லாம் தெரிய வந்த பிறகும், ``அய்யோ, அவன் கேவலமானவன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும், அவனை மறக்க முடியலையே, அவன் பேசுன பேச்செல்லாம் என் காதுல இன்னும் ஒலிச்சுகிட்டே இருக்கே'' என்று எத்தனையோ பெண்கள், ஆசைப்பட்டவன் ஆபத்தானவன் என்று தெரிந்த பிறகும் அவனை மனதிலிருந்து நீக்க முடியாமல் தவிப்பதுண்டு.
இந்த வம்பெல்லாம் வரவே கூடாது என்றால், எடுத்த எடுப்பிலேயே இவன் நம்பகமானவன்தானா? இல்லையா? என்று சரிபார்த்துவிடுங்கள்.
எப்படி? அவன் பேச்சை வைத்துதான். வெறும் பேச்சை வைத்து எப்படி ஒருவனை அளவிடுவது என்கிறீர்களா? சிம்பிள்!
சராசரி ஆண்களுக்கு அவ்வளவாகப் பேச வராது. கடிதம் எழுதச் சொன்னால், அதற்கு மேல் சொதப்புவார்கள். காரணம், ஆண் மூளையில் மொழிக்கான மையம் மிக சின்ன சைஸ் மட்டுமே. அதனால இயற்கையில் ஆண்களுக்கு பேச்சு சாமர்த்தியம் பற்றாது.
இது இப்படி இருக்க, சில ஆண்கள் மட்டும் அலங்காரமாகப் பேசுவார்கள். உங்களை பேச்சிலேயே மயக்கி, சோப்பு போட்டு, உலகிலேயே நீங்கள்தான் ரொம்பக் கவர்ச்சியான/சூப்பரான பெண் என்கிற அளவிற்கு உங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படி ஒரு ஆண் தித்திக்கத் தித்திக்க பேசுவது உங்கள் காதில் தேன் வந்து பாய்ந்தது போலத்தான் இருக்கும். காரணம், பெண்களுக்குத்தான் மூளையில் பெரிய மொழி வள மையம் உண்டே. அதனாலே யாராவது நன்றாகப் பேசினாலே போதும், பெண்கள் எல்லாம் அப்படியே மந்தை மந்தையாய் மயங்கிப் போவார்கள்.
ஆணுக்குத்தான் இயற்கையிலேயே பேச்சு சாமர்த்தியம் வராதே. அதை மீறி ஒருத்தன் பெண்களை கவருமாறு பேசுகிறான் என்றால் என்ன அர்த்தம்? பேச்சுதான் பெண்ணின் மனதை அடைவதற்கு உண்டான ஷார்ட் ரூட், என்கிற இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு, ``எப்படிப் பேசினால் பெண்களுக்குப் பிடிக்கும்?'' என்பதை ஒரு வித்தை மாதிரி கற்றுத் தேர்ச்சி பெற்று வைத்துக் கொள்கிறார்கள் சில வகை ஆண்கள். வேலை மெனக்கெட்டு இதைப் போய் அவன் கற்று தேர்ச்சி பெற்று வைத்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? இதையே தன் ஆஸ்தான வேலையாக அவன் வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்! வீடு, படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் தன் அவகாசத்தை பெண்களிடம் பேசி தேர்ச்சிபெற இவன் பயன்படுத்தினான் என்றால் என்ன அர்த்தம்? அவனுக்கு இதில் பெரிய நாட்டம் இருக்கிறது. இது அவனுக்கு முக்கியம் என்று படுகிறது. இதில் அவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது. அதனால் அவன் ஆர்வமாக இதைப் பயிலுகிறான்.
எத்தனை பெண்களிடம் பேசிய அனுபவம் இருந்தால் அவன் அதை ஒரு வித்தையாக உபயோகிக்கப் பழகி இருப்பான்?
ஆக, அழகாக, அலங்காரமாக, புகழ்ச்சியாக, இதமாக, இனிமையாகப் பேச ஒரு ஆண் கிடைக்கமாட்டானா என்பதே எல்லாப் பெண்களின் ஆசையாக இருந்தாலும், இப்படி எல்லாம் பேச எந்த ஆணுக்கும் இயல்பிலேயே வராது. பிகாஸ் ஆஃப் தி ஸ்மால் மொழி மையம். இந்த இயல்பை மீறி ஒருவன் அழகாகப் பேசினால் அவன் இயல்பானவனாக எப்படி இருக்க முடியும்? இது செயற்கையாக அவன் கற்றுக்கொண்ட வித்தை என்பதால் அவன் நம்பத் தகுந்தவனாக இருக்க வாய்பில்லை.
அதனால் ஸ்நேகிதிகள், உங்கள் காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு, எவன் என்ன பேசுகிறான் என்பதைக் கவனமாகக் கேளுங்கள். எவனாவது அநாவசியமாக அசடு வழிந்து, ஓவர் ஸ்வீட்டாய் பேசினான் என்றால், உஷார். பையன் பேச்சில் ஓவராய்த் தேர்ந்திருப்பதே அவன் செயற்கையானவன் என்பதன் வெளிப்பாடு.
இதற்கு நேர் எதிராய் சில ஆண்கள் இருப்பார்கள். சுட்டுப் போட்டாலும் அவர்களுக்குப் பேசவே வராது. எந்த சமயத்தில் என்ன பேச வேண்டும். யாரிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும், எதைச் சொல்லாம், எதைச் சொல்லக்கூடாது என்பதுகூட தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அவர்களது துறைசார்ந்த விஷயம் என்றால் மட்டும் நன்றாகப் பேசி விளாசி விடுவார்கள். இந்த வகை ஆண்கள் படிப்பு, வேலை, விளையாட்டு, வீடு, என்றே நேரத்தைச் செலவிடும் இவர்களுக்கு, பெண்களிடம் பேசி அவளை மயக்கவெல்லாம் அவகாசமே இருந்திருக்காது. பெண்களிடம் அதிகம் பேசாததால் பெண்ணுக்கு ஏற்ற மாதிரி நேக்காகப் பேச அவர்கள் கற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் காதலி, மனைவி, மகள், சகா என்று எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஆண்களிடம் பேசுவது போலவே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடுவார்கள். அல்லது லெக்சர் அடித்து, ஆபீசில் பேசுவது போல அதிகாரமாகப் பேசுவார்கள். ``எல்லாம் சரியா இருக்கான். ஆனா என் மனசைப் புரிஞ்சி பேச மட்டும் தெரியலையே'' என்று நீங்களேகூட நொந்து போவீர்கள்.
ஆனால் விசித்திரம் என்னவென்றால், இந்த வகை ஆண்கள்தான் நம்பகமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஜாலப் பேச்சு, பெண்மனதைக் கவரும் வித்தை என்பவை எதுவுமே தெரியாது என்பதால், அவர்கள் முழுக்க முழுக்க இயல்பாகவே செயல்படுவார்கள். ``அய்யோ இவ இவ்வளவு வாயாடியா இருக்காளே, இவளை என்னால சமாளிக்க முடியலையே'' என்று நொந்து கொண்டு ``சும்மா சும்மா பேசு பேசுன்னா என்னத்தைப் பேசுறது. எனக்கதுக்கெல்லாம் டைம்மில்ல, ஆளைவிடு'' என்று வெட்டிப் பேச்சிலிருந்து தப்பிஓடிவிடுவார்கள்.
என்ன இவன் ``பேசவே மாட்டேன்றானே'' என்று பெண்கள் வாடினாலும், இப்படிப் பேசாமல் காரியத்தில் குறியாக இருப்பதுதான் ஆணின் இயல்பு என்பதை உணர்ந்து, அவனை அவனாகவே இருக்க நீங்கள் அனுமதித்தால், காலப் போக்கில் தன் ஆண் நண்பர்களிடம் பேசுவது போலவே உங்களிடமும் ஹாசியமாக பேச ஆரம்பித்துவிடுவான் இவன். ஆனால் அப்போதும் தித்திப்பாகவோ, அலங்காரமாகவோ பேசமாட்டான். டு தி பாயிண்ட், கரெக்டாய் மட்டுமே பேசுவான். அதுதான் அவன் இயல்பு என்று அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டீர்கள் என்றால் நோ பிராப்ளம்.
இந்த இரண்டு வகை ஆண்கள் போக, பெண் என்றால் உடனே படக் என பக்கத்தில் வந்து, தத்துப் பித்து என்று உளறி அப்பட்டமாய் ஜொள்ளுவிடும், முதிர்ச்சியே இல்லாத ஆண்கள், பெண் என்றாலே ஏதோ, அவனை மயக்கி, மாயம் செய்துவிடவே அவதாரம் எடுத்தவள் மாதிரி பாவித்து எரிந்து விழும் ஆண்கள், பெண்கள் என்றால் கூசி, வெட்கி, பேச வராமல் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் ஆண்கள், என்று பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.
இத்தனை வகை ஆண்களில் உங்கள் ஆள் எந்த வகை என்பதைக் கவனியுங்கள். ஜாலப் பேச்சுக்காரன் என்றால், ஜெஸ்ட், வேடிக்கையாய் பேசி, பொழுது போக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் அவனை நம்பி, ``எனக்கு மட்டுமே உண்மையாய் இருப்பான்'' என்று நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டுவிடாதீர்கள். இவன் கழுத்தறுப்பு கேஸ், வெட்டிப் பேச்சுக்கு மட்டும்தான் லாயக்கி என்பதை மறக்காதீர்கள்.
அசட்டு ஜொள்ளு கேஸ், எரிமலை கேஸ், வெட்கசிகாமணி கேஸ் என்றால், என்னதான் உங்கள் அன்பைக் கொட்டி, அவனை நீங்கள், ``மாற்றிக் காட்டுகிறேன்'' என்று கங்கணம் கட்டிக் கொண்டு முனைப்பாய் செயல்பட்டாலும், வேஸ்ட். அதனால் உங்கள் கவனத்தை திசை திருப்பி, உருப்படியாக வேறு ஏதாவது வேலையைப் பாருங்கள்.
டூ தி பாயிண்ட் பேசும், பெண்களிடம் ஜொள்விடத் தெரியாத கண்ணிய சிகாமணி என்றால், ஓ.கே., பையன் நீண்ட நாள் உறவிற்கு ஒத்து வருவான் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரலாம். ஆல் ஆபவுட் தட் இன் அடுத்த ஸ்நேகிதி!
அப்படியானால் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அவன் உண்மையிலேயே ஒழுங்கன்தானா என்றுசரி பார்த்திடுங்கள்.
பல சமயங்களில் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒரு வெற்று ஆசாமியின் மேல் உயிரையே வைத்துவிடுகிறார்கள். காதலால் கசிந்துருகி, அவனை கடவுள் ஸ்தானத்திற்கே உயர்த்தி, அவனுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்த பிறகுதான் தெரியவரும் அவன் ஒரு மோசமான கிராதகன் என்று. அவன் புலித்தோல் போத்திய பூனை, போலித்தனமான ஆசாமி, பெண்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் மலிவானவன் என்பதெல்லாம் தெரிய வந்த பிறகும், ``அய்யோ, அவன் கேவலமானவன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும், அவனை மறக்க முடியலையே, அவன் பேசுன பேச்செல்லாம் என் காதுல இன்னும் ஒலிச்சுகிட்டே இருக்கே'' என்று எத்தனையோ பெண்கள், ஆசைப்பட்டவன் ஆபத்தானவன் என்று தெரிந்த பிறகும் அவனை மனதிலிருந்து நீக்க முடியாமல் தவிப்பதுண்டு.
இந்த வம்பெல்லாம் வரவே கூடாது என்றால், எடுத்த எடுப்பிலேயே இவன் நம்பகமானவன்தானா? இல்லையா? என்று சரிபார்த்துவிடுங்கள்.
எப்படி? அவன் பேச்சை வைத்துதான். வெறும் பேச்சை வைத்து எப்படி ஒருவனை அளவிடுவது என்கிறீர்களா? சிம்பிள்!
சராசரி ஆண்களுக்கு அவ்வளவாகப் பேச வராது. கடிதம் எழுதச் சொன்னால், அதற்கு மேல் சொதப்புவார்கள். காரணம், ஆண் மூளையில் மொழிக்கான மையம் மிக சின்ன சைஸ் மட்டுமே. அதனால இயற்கையில் ஆண்களுக்கு பேச்சு சாமர்த்தியம் பற்றாது.
இது இப்படி இருக்க, சில ஆண்கள் மட்டும் அலங்காரமாகப் பேசுவார்கள். உங்களை பேச்சிலேயே மயக்கி, சோப்பு போட்டு, உலகிலேயே நீங்கள்தான் ரொம்பக் கவர்ச்சியான/சூப்பரான பெண் என்கிற அளவிற்கு உங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படி ஒரு ஆண் தித்திக்கத் தித்திக்க பேசுவது உங்கள் காதில் தேன் வந்து பாய்ந்தது போலத்தான் இருக்கும். காரணம், பெண்களுக்குத்தான் மூளையில் பெரிய மொழி வள மையம் உண்டே. அதனாலே யாராவது நன்றாகப் பேசினாலே போதும், பெண்கள் எல்லாம் அப்படியே மந்தை மந்தையாய் மயங்கிப் போவார்கள்.
ஆணுக்குத்தான் இயற்கையிலேயே பேச்சு சாமர்த்தியம் வராதே. அதை மீறி ஒருத்தன் பெண்களை கவருமாறு பேசுகிறான் என்றால் என்ன அர்த்தம்? பேச்சுதான் பெண்ணின் மனதை அடைவதற்கு உண்டான ஷார்ட் ரூட், என்கிற இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு, ``எப்படிப் பேசினால் பெண்களுக்குப் பிடிக்கும்?'' என்பதை ஒரு வித்தை மாதிரி கற்றுத் தேர்ச்சி பெற்று வைத்துக் கொள்கிறார்கள் சில வகை ஆண்கள். வேலை மெனக்கெட்டு இதைப் போய் அவன் கற்று தேர்ச்சி பெற்று வைத்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? இதையே தன் ஆஸ்தான வேலையாக அவன் வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்! வீடு, படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் தன் அவகாசத்தை பெண்களிடம் பேசி தேர்ச்சிபெற இவன் பயன்படுத்தினான் என்றால் என்ன அர்த்தம்? அவனுக்கு இதில் பெரிய நாட்டம் இருக்கிறது. இது அவனுக்கு முக்கியம் என்று படுகிறது. இதில் அவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது. அதனால் அவன் ஆர்வமாக இதைப் பயிலுகிறான்.
எத்தனை பெண்களிடம் பேசிய அனுபவம் இருந்தால் அவன் அதை ஒரு வித்தையாக உபயோகிக்கப் பழகி இருப்பான்?
ஆக, அழகாக, அலங்காரமாக, புகழ்ச்சியாக, இதமாக, இனிமையாகப் பேச ஒரு ஆண் கிடைக்கமாட்டானா என்பதே எல்லாப் பெண்களின் ஆசையாக இருந்தாலும், இப்படி எல்லாம் பேச எந்த ஆணுக்கும் இயல்பிலேயே வராது. பிகாஸ் ஆஃப் தி ஸ்மால் மொழி மையம். இந்த இயல்பை மீறி ஒருவன் அழகாகப் பேசினால் அவன் இயல்பானவனாக எப்படி இருக்க முடியும்? இது செயற்கையாக அவன் கற்றுக்கொண்ட வித்தை என்பதால் அவன் நம்பத் தகுந்தவனாக இருக்க வாய்பில்லை.
அதனால் ஸ்நேகிதிகள், உங்கள் காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு, எவன் என்ன பேசுகிறான் என்பதைக் கவனமாகக் கேளுங்கள். எவனாவது அநாவசியமாக அசடு வழிந்து, ஓவர் ஸ்வீட்டாய் பேசினான் என்றால், உஷார். பையன் பேச்சில் ஓவராய்த் தேர்ந்திருப்பதே அவன் செயற்கையானவன் என்பதன் வெளிப்பாடு.
இதற்கு நேர் எதிராய் சில ஆண்கள் இருப்பார்கள். சுட்டுப் போட்டாலும் அவர்களுக்குப் பேசவே வராது. எந்த சமயத்தில் என்ன பேச வேண்டும். யாரிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும், எதைச் சொல்லாம், எதைச் சொல்லக்கூடாது என்பதுகூட தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அவர்களது துறைசார்ந்த விஷயம் என்றால் மட்டும் நன்றாகப் பேசி விளாசி விடுவார்கள். இந்த வகை ஆண்கள் படிப்பு, வேலை, விளையாட்டு, வீடு, என்றே நேரத்தைச் செலவிடும் இவர்களுக்கு, பெண்களிடம் பேசி அவளை மயக்கவெல்லாம் அவகாசமே இருந்திருக்காது. பெண்களிடம் அதிகம் பேசாததால் பெண்ணுக்கு ஏற்ற மாதிரி நேக்காகப் பேச அவர்கள் கற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் காதலி, மனைவி, மகள், சகா என்று எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஆண்களிடம் பேசுவது போலவே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடுவார்கள். அல்லது லெக்சர் அடித்து, ஆபீசில் பேசுவது போல அதிகாரமாகப் பேசுவார்கள். ``எல்லாம் சரியா இருக்கான். ஆனா என் மனசைப் புரிஞ்சி பேச மட்டும் தெரியலையே'' என்று நீங்களேகூட நொந்து போவீர்கள்.
ஆனால் விசித்திரம் என்னவென்றால், இந்த வகை ஆண்கள்தான் நம்பகமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஜாலப் பேச்சு, பெண்மனதைக் கவரும் வித்தை என்பவை எதுவுமே தெரியாது என்பதால், அவர்கள் முழுக்க முழுக்க இயல்பாகவே செயல்படுவார்கள். ``அய்யோ இவ இவ்வளவு வாயாடியா இருக்காளே, இவளை என்னால சமாளிக்க முடியலையே'' என்று நொந்து கொண்டு ``சும்மா சும்மா பேசு பேசுன்னா என்னத்தைப் பேசுறது. எனக்கதுக்கெல்லாம் டைம்மில்ல, ஆளைவிடு'' என்று வெட்டிப் பேச்சிலிருந்து தப்பிஓடிவிடுவார்கள்.
என்ன இவன் ``பேசவே மாட்டேன்றானே'' என்று பெண்கள் வாடினாலும், இப்படிப் பேசாமல் காரியத்தில் குறியாக இருப்பதுதான் ஆணின் இயல்பு என்பதை உணர்ந்து, அவனை அவனாகவே இருக்க நீங்கள் அனுமதித்தால், காலப் போக்கில் தன் ஆண் நண்பர்களிடம் பேசுவது போலவே உங்களிடமும் ஹாசியமாக பேச ஆரம்பித்துவிடுவான் இவன். ஆனால் அப்போதும் தித்திப்பாகவோ, அலங்காரமாகவோ பேசமாட்டான். டு தி பாயிண்ட், கரெக்டாய் மட்டுமே பேசுவான். அதுதான் அவன் இயல்பு என்று அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டீர்கள் என்றால் நோ பிராப்ளம்.
இந்த இரண்டு வகை ஆண்கள் போக, பெண் என்றால் உடனே படக் என பக்கத்தில் வந்து, தத்துப் பித்து என்று உளறி அப்பட்டமாய் ஜொள்ளுவிடும், முதிர்ச்சியே இல்லாத ஆண்கள், பெண் என்றாலே ஏதோ, அவனை மயக்கி, மாயம் செய்துவிடவே அவதாரம் எடுத்தவள் மாதிரி பாவித்து எரிந்து விழும் ஆண்கள், பெண்கள் என்றால் கூசி, வெட்கி, பேச வராமல் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் ஆண்கள், என்று பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.
இத்தனை வகை ஆண்களில் உங்கள் ஆள் எந்த வகை என்பதைக் கவனியுங்கள். ஜாலப் பேச்சுக்காரன் என்றால், ஜெஸ்ட், வேடிக்கையாய் பேசி, பொழுது போக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் அவனை நம்பி, ``எனக்கு மட்டுமே உண்மையாய் இருப்பான்'' என்று நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டுவிடாதீர்கள். இவன் கழுத்தறுப்பு கேஸ், வெட்டிப் பேச்சுக்கு மட்டும்தான் லாயக்கி என்பதை மறக்காதீர்கள்.
அசட்டு ஜொள்ளு கேஸ், எரிமலை கேஸ், வெட்கசிகாமணி கேஸ் என்றால், என்னதான் உங்கள் அன்பைக் கொட்டி, அவனை நீங்கள், ``மாற்றிக் காட்டுகிறேன்'' என்று கங்கணம் கட்டிக் கொண்டு முனைப்பாய் செயல்பட்டாலும், வேஸ்ட். அதனால் உங்கள் கவனத்தை திசை திருப்பி, உருப்படியாக வேறு ஏதாவது வேலையைப் பாருங்கள்.
டூ தி பாயிண்ட் பேசும், பெண்களிடம் ஜொள்விடத் தெரியாத கண்ணிய சிகாமணி என்றால், ஓ.கே., பையன் நீண்ட நாள் உறவிற்கு ஒத்து வருவான் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரலாம். ஆல் ஆபவுட் தட் இன் அடுத்த ஸ்நேகிதி!
Labels:
பாலியல் கல்வி
Friday, May 1, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 16
சென்ற இதழில் வேண்டாத ஆண்களைக் கண்டால் எப்படி ஆஃப் செய்வது என்பதைப் பற்றிப் பேசினோம். இனி, உங்களுக்கு ஒரு ஆணைப் பிடித்திருந்தால் அவனை எப்படி ஊக்குவித்து, வசப்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோமா?
அப்பாடா, இப்போதுதான் மெயின் மேட்டருக்கே வந்தீங்களா, என்று பல சிநேகிதிகள் புன்னகை பூப்பது புரிகிறது... என்ன செய்வது, முதலில் வெத்து ஆண்களை எல்லாம் புடைத்தெறிந்து விட்ட பிறகு தானே தரமான ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அது சரி, இவன் தரமான ஆண் என்பதை எப்படி கண்டு கொள்வதாம்? ஒரு சிநேகிதி எனக்கு ஃபோன் செய்து, ``நம்மகிட்ட பேசுற ஆண்கள்ல எவன் நல்லவன், நம்பகமானவன், எவன் துரோகி, நயவஞ்சகன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெளிவாக விளக்குங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.
அதனால், ஆண்களைத் தரம் பிரித்து, தேருபவன், தேராதவன், உருப்படுபவன், உருப்படாதவன், சொத்தை, சொள்ளை, நிஜ குதிரை, மண் குதிரை என்பதை எல்லாம் எப்படிப் பாகுபடுத்துவது என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.
பேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா?'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.
எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?
ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.
ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.
அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.
இரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.
அடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.
இப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்?
1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா? 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா? நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.
ஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.
இப்படி ஆண் பெண்ணிடம் கவுரவமாகப் பழகி, அவள் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவன் தேறுகிற ஆசாமி. அப்படி இல்லாமல், ``நான் ஆம்பிளை, அதனால் நான் தான் உசத்தி, பெண்கள் எல்லோரும் வந்து எனக்கு ஏவல் புரிய வேண்டுமாக்கும்'' என்று பெண்களைக் குறைவாக நடத்தி, அவர்களை அசவுகரியப்படுத்தும் அற்பனாக அவன் இருந்தால், போச்சு, பையன் தேரமாட்டான் என்று அர்த்தம்.
அதனால் ஆண்களை அலசி, தரம் பிரித்து பாகுபடுத்தும் இந்த ஆய்வின் முக்கிய அளவுகோள், அவன் பெண்களிடம் காட்டும் கண்ணியம்.
அதற்காக பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவன் எல்லாமே மகா உத்தமன் என்று உடனே முடிவு கட்டி விடாதீர்கள். ஆண்களில் சில கில்லாடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களோடு நிறைய பரிச்சயம் இருப்பதினால், இப்படி நிறைய பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதையே தங்கள் முழு நேர பணியாக அவர்கள் மேற்கொள்வதினால், எப்படி எல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்குப் பிடிக்கும் என்கிற ஆளை அசத்தும் அத்தனை கலைகளும் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். அதனால் இந்த வகை சல்லாப கேசுகள், பெண்கள் எதிரில் பரம உத்தமன் மாதிரி வளைய வருவார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களுக்கெல்லாம் கரிசனம் காட்டி, ``உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா?'' என்று வலிய போய் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
ஆனால் வீட்டில் அல்லல் படும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகிய பெண்களுக்கு மறந்தும் உதவ முன்வர மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு உண்மையிலேயே பெண்களிடம் கண்ணியமாக இருப்பதில் கவனமே இல்லை. கண்ணியமாக இருப்பதுபோல நடித்து பெண்களைக் கவிழ்க்க பார்ப்பார்கள், ஒருத்தி கவிழ்ந்துவிட்டால், உடனே அவளை ஓரம் கட்டிவிட்டு, அடுத்தவளுக்கு வலை விரிக்க போய் விடுவார்கள். இந்த வகை ஆண்கள், றிக்ஷீணீநீ‡வீƒமீபீ நீலீணீக்ஷீனீமீக்ஷீƒ ஆக மிகவும் பழக்கப்பட்ட லீலை மன்னர்களாக இருப்பார்கள். நீங்கள் சொல்லாமலேயே உங்களுக்காக நிறைய செய்வார்கள். உருகி உருகி உபசரிப்பார்கள். கவனமாகப் பார்த்தால், அதில் கொஞ்சம் பந்தாவும் பகட்டும் தெரியும். தட் மீன்ஸ் வாட்? தலைவர் இதை உபசாரத்திற்காக செய்யவில்லை. அலட்டலுக்காகவே செய்கிறார். தட் மீன்ஸ் அவன் கை தேர்ந்த ஜாலக்காரன். அவனிடம் உஷாராக இல்லை என்றால், தலைவர் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார் என்று அர்த்தம்.
இதற்கு நேர் எதிராய் வேறு சில ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களோடு அதிகம் பழகும் அனுபவமில்லாததால், அவள் எதிரில் எப்படி நடந்துகொள்வது என்பதே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள்லேசாய் கொஞ்சம் ஹிண்ட் கொடுத்தால், உடனே பிடித்துக்கொண்டு, தக்கப்படி உங்களை கண்ணியமாக நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இந்த வகை அறியாத பிள்ளைகளை தகுந்தவாறு பழக்கி வைத்தீர்கள் என்றால், மிகவும் அக்கறையாய் பெண்களைக் கவனித்து பராமரிக்க பழகிக்கொள்வார்கள்.
இந்த இரண்டு வகை ஆண்களைத் தாண்டி, மூன்றாவது ஒரு ரகம் உண்டு. சுட்டு போட்டாலும் கண்ணியமாய் நடக்கவே தெரியாது. ``நான் ஆம்பிளை,'' என்கிற ஓவர் கர்வத்தில் பெண்களைத் துச்சமாய் மதிப்பிட்டு, வெறும் போகப் பொருளாகவோ அல்லது ஏவலாள் மாதிரியோ மட்டுமே பார்க்கத்தெரிந்த இந்த ஆண்கள், போகப் போக, நிறைய அடி பட்டு, இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது என்று ரொம்ப நாள் கழித்து வயது போன பிறகே புத்திபெறுவார்கள்.
இந்த மூன்று ரகமானவர்களையும் தாண்டி, நான்காவது ரக ஆண்களும் இருக்கிறார்கள். பெண் என்றாலே கூசி, அஞ்சி, ஒதுங்கி ஓடும் இந்த அதீத சங்கோஜ பேர்வழிகளுக்கு பெண் எதிரில் நிற்கவே நடுங்கும். அப்புறம் எப்படி அவன் வந்து அவளை உபசரித்து, சிறப்பு செய்வதெல்லாம்!
ஆக, கைதேர்ந்த லீலைக்காரன், கற்றுக்கொண்டு கலக்குபவன், கர்வத்திலேயே மிதப்பவன், கூச்சத்தினால் ஒதுங்குபவன் என்று இந்த முக்கியமான நான்கு வகை ஆண்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாம் ரக ஆணாகப் பார்த்து தேர்வு செய்வதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு. முதலில் இப்படி ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடியுங்கள். அவனை எப்படி எல்லாம் ஹேண்டில் செய்வது என்பதை அப்புறம் சொல்கிறேன்......
அப்பாடா, இப்போதுதான் மெயின் மேட்டருக்கே வந்தீங்களா, என்று பல சிநேகிதிகள் புன்னகை பூப்பது புரிகிறது... என்ன செய்வது, முதலில் வெத்து ஆண்களை எல்லாம் புடைத்தெறிந்து விட்ட பிறகு தானே தரமான ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அது சரி, இவன் தரமான ஆண் என்பதை எப்படி கண்டு கொள்வதாம்? ஒரு சிநேகிதி எனக்கு ஃபோன் செய்து, ``நம்மகிட்ட பேசுற ஆண்கள்ல எவன் நல்லவன், நம்பகமானவன், எவன் துரோகி, நயவஞ்சகன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெளிவாக விளக்குங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.
அதனால், ஆண்களைத் தரம் பிரித்து, தேருபவன், தேராதவன், உருப்படுபவன், உருப்படாதவன், சொத்தை, சொள்ளை, நிஜ குதிரை, மண் குதிரை என்பதை எல்லாம் எப்படிப் பாகுபடுத்துவது என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.
பேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா?'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.
எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?
ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.
ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.
அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.
இரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.
அடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.
இப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்?
1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா? 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா? நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.
ஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.
இப்படி ஆண் பெண்ணிடம் கவுரவமாகப் பழகி, அவள் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவன் தேறுகிற ஆசாமி. அப்படி இல்லாமல், ``நான் ஆம்பிளை, அதனால் நான் தான் உசத்தி, பெண்கள் எல்லோரும் வந்து எனக்கு ஏவல் புரிய வேண்டுமாக்கும்'' என்று பெண்களைக் குறைவாக நடத்தி, அவர்களை அசவுகரியப்படுத்தும் அற்பனாக அவன் இருந்தால், போச்சு, பையன் தேரமாட்டான் என்று அர்த்தம்.
அதனால் ஆண்களை அலசி, தரம் பிரித்து பாகுபடுத்தும் இந்த ஆய்வின் முக்கிய அளவுகோள், அவன் பெண்களிடம் காட்டும் கண்ணியம்.
அதற்காக பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவன் எல்லாமே மகா உத்தமன் என்று உடனே முடிவு கட்டி விடாதீர்கள். ஆண்களில் சில கில்லாடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களோடு நிறைய பரிச்சயம் இருப்பதினால், இப்படி நிறைய பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதையே தங்கள் முழு நேர பணியாக அவர்கள் மேற்கொள்வதினால், எப்படி எல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்குப் பிடிக்கும் என்கிற ஆளை அசத்தும் அத்தனை கலைகளும் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். அதனால் இந்த வகை சல்லாப கேசுகள், பெண்கள் எதிரில் பரம உத்தமன் மாதிரி வளைய வருவார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களுக்கெல்லாம் கரிசனம் காட்டி, ``உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா?'' என்று வலிய போய் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
ஆனால் வீட்டில் அல்லல் படும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகிய பெண்களுக்கு மறந்தும் உதவ முன்வர மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு உண்மையிலேயே பெண்களிடம் கண்ணியமாக இருப்பதில் கவனமே இல்லை. கண்ணியமாக இருப்பதுபோல நடித்து பெண்களைக் கவிழ்க்க பார்ப்பார்கள், ஒருத்தி கவிழ்ந்துவிட்டால், உடனே அவளை ஓரம் கட்டிவிட்டு, அடுத்தவளுக்கு வலை விரிக்க போய் விடுவார்கள். இந்த வகை ஆண்கள், றிக்ஷீணீநீ‡வீƒமீபீ நீலீணீக்ஷீனீமீக்ஷீƒ ஆக மிகவும் பழக்கப்பட்ட லீலை மன்னர்களாக இருப்பார்கள். நீங்கள் சொல்லாமலேயே உங்களுக்காக நிறைய செய்வார்கள். உருகி உருகி உபசரிப்பார்கள். கவனமாகப் பார்த்தால், அதில் கொஞ்சம் பந்தாவும் பகட்டும் தெரியும். தட் மீன்ஸ் வாட்? தலைவர் இதை உபசாரத்திற்காக செய்யவில்லை. அலட்டலுக்காகவே செய்கிறார். தட் மீன்ஸ் அவன் கை தேர்ந்த ஜாலக்காரன். அவனிடம் உஷாராக இல்லை என்றால், தலைவர் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார் என்று அர்த்தம்.
இதற்கு நேர் எதிராய் வேறு சில ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களோடு அதிகம் பழகும் அனுபவமில்லாததால், அவள் எதிரில் எப்படி நடந்துகொள்வது என்பதே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள்லேசாய் கொஞ்சம் ஹிண்ட் கொடுத்தால், உடனே பிடித்துக்கொண்டு, தக்கப்படி உங்களை கண்ணியமாக நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இந்த வகை அறியாத பிள்ளைகளை தகுந்தவாறு பழக்கி வைத்தீர்கள் என்றால், மிகவும் அக்கறையாய் பெண்களைக் கவனித்து பராமரிக்க பழகிக்கொள்வார்கள்.
இந்த இரண்டு வகை ஆண்களைத் தாண்டி, மூன்றாவது ஒரு ரகம் உண்டு. சுட்டு போட்டாலும் கண்ணியமாய் நடக்கவே தெரியாது. ``நான் ஆம்பிளை,'' என்கிற ஓவர் கர்வத்தில் பெண்களைத் துச்சமாய் மதிப்பிட்டு, வெறும் போகப் பொருளாகவோ அல்லது ஏவலாள் மாதிரியோ மட்டுமே பார்க்கத்தெரிந்த இந்த ஆண்கள், போகப் போக, நிறைய அடி பட்டு, இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது என்று ரொம்ப நாள் கழித்து வயது போன பிறகே புத்திபெறுவார்கள்.
இந்த மூன்று ரகமானவர்களையும் தாண்டி, நான்காவது ரக ஆண்களும் இருக்கிறார்கள். பெண் என்றாலே கூசி, அஞ்சி, ஒதுங்கி ஓடும் இந்த அதீத சங்கோஜ பேர்வழிகளுக்கு பெண் எதிரில் நிற்கவே நடுங்கும். அப்புறம் எப்படி அவன் வந்து அவளை உபசரித்து, சிறப்பு செய்வதெல்லாம்!
ஆக, கைதேர்ந்த லீலைக்காரன், கற்றுக்கொண்டு கலக்குபவன், கர்வத்திலேயே மிதப்பவன், கூச்சத்தினால் ஒதுங்குபவன் என்று இந்த முக்கியமான நான்கு வகை ஆண்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாம் ரக ஆணாகப் பார்த்து தேர்வு செய்வதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு. முதலில் இப்படி ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடியுங்கள். அவனை எப்படி எல்லாம் ஹேண்டில் செய்வது என்பதை அப்புறம் சொல்கிறேன்......
Labels:
பாலியல் கல்வி
Friday, April 24, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 15
என்ன சிநேகிதிகளே, ஆண்களை ஆன் ஆஃப் செய்யும் சிக்னல் சிஸ்டமான இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை சரியாகக் கையாளப் பழகிக்கொண்டீர்களா? நீங்கள் உறவுக்காக ஊக்குவிக்க விரும்பும் ஆணின் எதிரில் இ.விக்களை அள்ளி விடுவதும், ஒத்து வராது என்று ஒதுக்க முயலும் ஆண்களிடம் இ.விக்களை அடக்கி வாசிப்பதுமாய், போன வார ஹோம் வொர்க்கை சரியாக செய்து பழகி இருந்தீர்கள் என்றால், லெட் அஸ்கோ டு அடுத்த லெசன்.
இந்தப் பாடத்தை கைனெஸ்திக்ஸ் என்போம், அதாவது அசைவுகளின் அறிவியல். போயும் போயும் அசைவுகளில் என்னத்த பெரிய அறிவியல் இருந்துவிட போகிறது என்று நீங்கள் இளக்காரமாகக் கூட நினைக்கலாம், ஆனால் மேட்டர் என்ன தெரியுமா? மனித நடவடிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும் பெரிய பெரிய அறிவியல் சமாசாரங்கள் ஒளிந்திருக்கின்றன.
மனிதர்களை விலங்கியல் ரீதியாக சோஷியல் மிருகங்கள் என்றுதான் பாகுபடுத்துகிறார்கள். அறிவுக் கூர்மை அதிகமுள்ள பிராணிகளான, யானை, டால்ஃபின், குரங்கு, சிம்பான்சி, கொரிலா, பொனோபோ மாதிரியானவையும் சோஷியல் மிருகங்கள்தான். இந்த வகை மிருகங்களில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? இவற்றுக்கு எல்லைகள் தெரியும். இவைகளுக்கு ``இது என் ஏரியா, இங்கே எனக்கு மட்டும் தான் இடம்'' என்கிற பிரதேச மனப்பான்மை அதாவது டெரிடோரியல் பிகேவியர் உண்டு.
மனிதர்களுக்கும் இந்த பிரதேசக் குணம் உண்டு. எப்படித் தெரியுமா? நம்மை அறியாமலேயே நம்மைச் சுற்றி நான்கு எல்லைக் கோடுகளை வைத்திருக்கிறோம் நாம். அதில் முதலாவது பப்ளிக் இடைவெளி என்கிற Public Distance. முற்றிலும் அன்னியர்களுடன் பேசும் போது நான் விட்டு நிற்கும் இடைவெளி தான் இந்த பப்ளிக் இடைவெளி. இந்த எல்லை நின்று ஆரம்பத்தில் பேசும் மனிதரை நமக்கு பிடித்துப் போனால், அல்லது அவரை நாம் நம்ப ஆரம்பித்தால், அடுத்து நாம் அனுமதிக்கும் நெருக்கம் தான் சோஷியல் இடைவெளி, என்கிற Social Distance. அதாவது, கொஞ்சம் பரிச்சயமான நபர்களுடன் பேசிக் கொள்ள என்று நாம் உபயோகிக்கும் நெருக்கம்.
இதற்கு அடுத்து வருவதுதான் பர்சனல் இடைவெளி என்கிற அருகாமை. இது நமக்கு மிகவும் நன்றாகப் பரிச்சயமான, மிகவும் நம்பகத்திற்கு உண்டான நபர்களை மிக அருகில் வைத்து நாம் உறவாடும் இடைவெளி.
இந்த எல்லையைத் தாண்டிய பிறகு வரும் மிக நெருக்கமான டைட் குளோசப் தான் இண்டிமேட் இடைவெளி Intimate Distance, என்கிற அன்னியோன்னியம். இது தாய், சேய், நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகிய உரிமையானவருக்கு மட்டுமே உள்ள நெருக்கம்.
எல்லா மனிதர்களுக்கும் இந்த நான்கு இடைவெளிகளுமே உண்டு. நம்மை அறியாமலேயே நாம் எல்லோருமே அநிச்சையாக கடைப்பிடிக்கும் சமூக விதி இது. நமக்கு அதிகம் தெரியாதவர் என்றால் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவோம். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் ஒரு அடி கிட்டேயும் போய் பேசுவோம். ரொம்பத் தெரிந்தவர் என்றால் முகத்திற்குப் பக்கத்திலேயே போய், நின்று பேசுவோம். மிக மிக நெருக்கமானவர் என்றால் மூச்சுக்காற்று அவர் மீது படும் அளவிற்கு நெருங்கிப் போய் பேசுவோம்.
அதெல்லாம் சரி, இதை வைத்து ஆண்களை எப்படி ஹாண்டில் செய்வதாம் என்று தானே கேட்கிறீர்கள். இந்த கைனெஸ்திக்ஸ் தகவல் உங்களுக்கு இரண்டு விதத்தில் உதவும்.
ஒன்று, ஆண் உங்கள் பிரதேசத்தினில் எப்படி பிரவேசிக்கின்றான் என்பதை வைத்து அவன் உள் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அறிமுகமானதும் பவ்யமாய் உங்கள் எல்லைக் கோடுகளை மதித்து எட்ட நின்று பேசுகிறான் என்றால் ஓ.கே. நீங்கள் அனுமதித்து, அல்லது ஊக்குவித்ததினால் பக்கத்தில் வந்து நின்று பேசினால் என்றாலும் ஓ.கே.
ஆனால் சினிமா ஹீரோ அறிமுக காட்சியிலேயே ஹீரோயினை அப்படியே கட்டிப்பிடித்து ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் பாணியில் எவனாவது முதல் சந்திப்பிலேயே உங்கள் இண்டிமேட் இடைவெளிக்குள் பிரவேசித்து, அவன் மூச்சுக்காற்று உங்கள் மேல் படும் அளவிற்கு மிகச் சமீபமாய் வந்து நின்றால், உஷார், நிஜமான ஆபத்திலிருந்து காப்பாற்றதான் அப்படிச் செய்தான் என்றால், இட்ஸ் ஓகே. ஆனால் இதுதான் சாக்கு என்று காய்ந்த மாடு மாதிரி உங்கள் மேல் பாய்கிறான் என்றால், நாட் அட் ஆல் ஓகே!
சில ஆண்கள் அறிமுகமாகும் போது சமர்த்தாய் தங்கள் எல்லை அறிந்து தள்ளி நின்று, ``சே இவன் நல்ல பையன்ப்பா!'' என்ற சர்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள். பிறகு வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நைசாக எல்லை தாண்டி வந்து அத்து மீற முயல்வார்கள். ``தெரிந்து செய்கிறானா, தெரியாமல் செய்துவிட்டானா?'' என்று நீங்களே கூட குழம்பிப்போவீர்கள்! ஆனால் விஷயம் இது தான், நீங்கள் அந்த நெருக்கத்தை அனுமதித்திராவிட்டால், அவ்வளவு அருகாமை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், நோட் தட் பாயிண்ட், அவன் எல்லை தாண்டிவிட்டான் என்று அர்த்ம். அது தெரிந்தா தெரியாமலா என்பது வேறு விஷயம். அதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க எல்லாம் நேரத்தை வீணடிக்காமல், உடனே விலகிக்கொள்ளுங்கள். ``கொஞ்சம் ஒதுங்குங்க'' என்று தெளிவாக சொல்லுங்கள் ``என்னடா பண்ணுற நீ, முண்டம்?'' என்று ஒருமுறை முறையுங்கள். நீங்கள் அந்த நெருக்கத்தை விரும்பவில்லை என்பதை அந்த ஆசாமி புரிந்துகொள்வான்.
அதையும் மீறி,மீண்டும் மீண்டும் எவனாவது உங்கள் இண்டிமேட் இடைவெளியை நெருங்கிக்கொண்டே இருந்தான் என்றால், இது தான் செக்ஷுவல் ஹராஸ்மெண்ட் எனப்படும் பாலியல் துன்புறுத்தல். Public Distance என்பதை பெரிய குற்றமாய்த்தான் இந்திய குற்றவியல் பிரிவு கருதுகிறது. அதனால் உங்கள் பள்ளியில், கல்லூரியில், வேலை இடத்தில் உள்ள தலைமை அதிகாரியிடம் போய்ப் புகார் கொடுங்கள். இந்த தலைமைப் பொறுப்பு வகிக்கும் நபரே இப்படி எல்லை மீறுகிறாரா, பெண்கள் எல்லோரும் சேர்ந்து போர்க் கொடி தூக்குங்கள்! இது ஆண் எல்லை மீறும் போது எடுக்கும் நடவடிக்கை.
இரண்டு, ஆனால் சில சமயத்தில் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, தங்கள் எல்லைக்கோடுகளை மீறி ஆண்களிடம் பழகிவிடுவது உண்டு. நண்பன், சகா, சகோதரன், மகன், ஊழியன் என்று எந்தவிதமான ஆரோக்கியமான உறவாக இருந்தாலும் சரி, இது போன்ற புற உறவுகள் பர்சனல் இடைவெளி வரை மட்டுமே இருக்க முடியும். இதை மீறி, அபரிமிதமான அன்பின் கொப்பளிப்பில், மிக அருகில் போய், உங்கள் மூச்சு, அந்த ஆணின் மீது படும்படி நீங்கள் இடைவெளியை குறைத்துக் கொண்டால், அது அநாகரிகம் மட்டும் அல்ல, பெரிய ஆபத்தும் கூட.
இதில் என்ன பெரிய அநாகரிகம், நட்பில் இதெல்லாம் சகஜம் தானே. என்றோ, இதில் என்ன ஆபத்து என்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் என்ன தெரியுமா? தகுந்த இடைவெளி தாண்டி நீங்கள் நெருங்குவதே, அந்த ஆணைத் தூண்டி, ஊக்குவிப்பதாகும், குழந்தை, காதலன், கணவன் ஆகிய மூன்று நிலைகளைத் தவிர வேறு எந்த நிலையில் உள்ள நபர்களும் இந்த நெருக்கத்தை அனுபவிப்பது ஆபத்தே.
உங்களைப் பொறுத்தவரை, ``சும்மா லேசா சாய்ந்தேன், முகம் கிட்ட வந்துடுச்சு. இதெல்லாம் ஒரு தப்பா?'' என்று நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பு என்ன தெரியுமா? ``இத்தனை அருகில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால், நீ உடனே மோகம் கொள்வாயாக'' என்ற ரீதியில் தான் அவன் நரம்புமுனைகள் இயங்குகின்றன. அதற்கு அவன் பொறுப்பல்ல. இப்படி அவன் நரம்பு வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே நீங்கள் அவனை நெருங்கி ஆசை காட்டுவது அநாகரிகம் தானே.
அதனால் தான் எல்லாக் கலாச்சாரங்களிலும், தாயும் மகனும் என்றாலும் கூட, வயதிற்கு வந்த பையன் தாயை ரொம்ப நெருங்குவதும், அவள் பக்கத்தில் படுப்பதும், அவள் முந்தானையே கதி என்று இருப்பதும் மிக அதிகபட்ச தடைக்குள்ளாகின்றன. அதே போல், வயத்திற்கு வரும் நிலையிலுள்ள மகளைத் தகப்பன் நெருங்குவதும் தவறாக கருதப்படுகிறது.
பெற்றவர்களுக்கும் பிள்ளைக்குமே போதிய இடைவெளி விட்டுப் பழகுவது தான் நாகரிகம் என்கிற போது, மற்ற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள விரும்பும் ஸ்நேகிதிகள், ஆண் பெண் உறவில் நீங்கள் சரியான எல்லைகளை கடைப்பிடிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுடன் பரிச்சயம் கொண்ட ஆண்கள் உங்கள் எல்லைகளை மதித்துப் பழகுகிறார்களா என்று பாருங்கள். புற உறவுகளில் இந்த எல்லை நிர்ணயம் ரொம்பவே முக்கியம். ஆனால் அகவுறவில்... எல்லை தாண்டி தீவிரவாதம் செய்வதே சுவாரசியம். அதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!
இந்தப் பாடத்தை கைனெஸ்திக்ஸ் என்போம், அதாவது அசைவுகளின் அறிவியல். போயும் போயும் அசைவுகளில் என்னத்த பெரிய அறிவியல் இருந்துவிட போகிறது என்று நீங்கள் இளக்காரமாகக் கூட நினைக்கலாம், ஆனால் மேட்டர் என்ன தெரியுமா? மனித நடவடிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும் பெரிய பெரிய அறிவியல் சமாசாரங்கள் ஒளிந்திருக்கின்றன.
மனிதர்களை விலங்கியல் ரீதியாக சோஷியல் மிருகங்கள் என்றுதான் பாகுபடுத்துகிறார்கள். அறிவுக் கூர்மை அதிகமுள்ள பிராணிகளான, யானை, டால்ஃபின், குரங்கு, சிம்பான்சி, கொரிலா, பொனோபோ மாதிரியானவையும் சோஷியல் மிருகங்கள்தான். இந்த வகை மிருகங்களில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? இவற்றுக்கு எல்லைகள் தெரியும். இவைகளுக்கு ``இது என் ஏரியா, இங்கே எனக்கு மட்டும் தான் இடம்'' என்கிற பிரதேச மனப்பான்மை அதாவது டெரிடோரியல் பிகேவியர் உண்டு.
மனிதர்களுக்கும் இந்த பிரதேசக் குணம் உண்டு. எப்படித் தெரியுமா? நம்மை அறியாமலேயே நம்மைச் சுற்றி நான்கு எல்லைக் கோடுகளை வைத்திருக்கிறோம் நாம். அதில் முதலாவது பப்ளிக் இடைவெளி என்கிற Public Distance. முற்றிலும் அன்னியர்களுடன் பேசும் போது நான் விட்டு நிற்கும் இடைவெளி தான் இந்த பப்ளிக் இடைவெளி. இந்த எல்லை நின்று ஆரம்பத்தில் பேசும் மனிதரை நமக்கு பிடித்துப் போனால், அல்லது அவரை நாம் நம்ப ஆரம்பித்தால், அடுத்து நாம் அனுமதிக்கும் நெருக்கம் தான் சோஷியல் இடைவெளி, என்கிற Social Distance. அதாவது, கொஞ்சம் பரிச்சயமான நபர்களுடன் பேசிக் கொள்ள என்று நாம் உபயோகிக்கும் நெருக்கம்.
இதற்கு அடுத்து வருவதுதான் பர்சனல் இடைவெளி என்கிற அருகாமை. இது நமக்கு மிகவும் நன்றாகப் பரிச்சயமான, மிகவும் நம்பகத்திற்கு உண்டான நபர்களை மிக அருகில் வைத்து நாம் உறவாடும் இடைவெளி.
இந்த எல்லையைத் தாண்டிய பிறகு வரும் மிக நெருக்கமான டைட் குளோசப் தான் இண்டிமேட் இடைவெளி Intimate Distance, என்கிற அன்னியோன்னியம். இது தாய், சேய், நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகிய உரிமையானவருக்கு மட்டுமே உள்ள நெருக்கம்.
எல்லா மனிதர்களுக்கும் இந்த நான்கு இடைவெளிகளுமே உண்டு. நம்மை அறியாமலேயே நாம் எல்லோருமே அநிச்சையாக கடைப்பிடிக்கும் சமூக விதி இது. நமக்கு அதிகம் தெரியாதவர் என்றால் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவோம். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் ஒரு அடி கிட்டேயும் போய் பேசுவோம். ரொம்பத் தெரிந்தவர் என்றால் முகத்திற்குப் பக்கத்திலேயே போய், நின்று பேசுவோம். மிக மிக நெருக்கமானவர் என்றால் மூச்சுக்காற்று அவர் மீது படும் அளவிற்கு நெருங்கிப் போய் பேசுவோம்.
அதெல்லாம் சரி, இதை வைத்து ஆண்களை எப்படி ஹாண்டில் செய்வதாம் என்று தானே கேட்கிறீர்கள். இந்த கைனெஸ்திக்ஸ் தகவல் உங்களுக்கு இரண்டு விதத்தில் உதவும்.
ஒன்று, ஆண் உங்கள் பிரதேசத்தினில் எப்படி பிரவேசிக்கின்றான் என்பதை வைத்து அவன் உள் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அறிமுகமானதும் பவ்யமாய் உங்கள் எல்லைக் கோடுகளை மதித்து எட்ட நின்று பேசுகிறான் என்றால் ஓ.கே. நீங்கள் அனுமதித்து, அல்லது ஊக்குவித்ததினால் பக்கத்தில் வந்து நின்று பேசினால் என்றாலும் ஓ.கே.
ஆனால் சினிமா ஹீரோ அறிமுக காட்சியிலேயே ஹீரோயினை அப்படியே கட்டிப்பிடித்து ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் பாணியில் எவனாவது முதல் சந்திப்பிலேயே உங்கள் இண்டிமேட் இடைவெளிக்குள் பிரவேசித்து, அவன் மூச்சுக்காற்று உங்கள் மேல் படும் அளவிற்கு மிகச் சமீபமாய் வந்து நின்றால், உஷார், நிஜமான ஆபத்திலிருந்து காப்பாற்றதான் அப்படிச் செய்தான் என்றால், இட்ஸ் ஓகே. ஆனால் இதுதான் சாக்கு என்று காய்ந்த மாடு மாதிரி உங்கள் மேல் பாய்கிறான் என்றால், நாட் அட் ஆல் ஓகே!
சில ஆண்கள் அறிமுகமாகும் போது சமர்த்தாய் தங்கள் எல்லை அறிந்து தள்ளி நின்று, ``சே இவன் நல்ல பையன்ப்பா!'' என்ற சர்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள். பிறகு வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நைசாக எல்லை தாண்டி வந்து அத்து மீற முயல்வார்கள். ``தெரிந்து செய்கிறானா, தெரியாமல் செய்துவிட்டானா?'' என்று நீங்களே கூட குழம்பிப்போவீர்கள்! ஆனால் விஷயம் இது தான், நீங்கள் அந்த நெருக்கத்தை அனுமதித்திராவிட்டால், அவ்வளவு அருகாமை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், நோட் தட் பாயிண்ட், அவன் எல்லை தாண்டிவிட்டான் என்று அர்த்ம். அது தெரிந்தா தெரியாமலா என்பது வேறு விஷயம். அதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க எல்லாம் நேரத்தை வீணடிக்காமல், உடனே விலகிக்கொள்ளுங்கள். ``கொஞ்சம் ஒதுங்குங்க'' என்று தெளிவாக சொல்லுங்கள் ``என்னடா பண்ணுற நீ, முண்டம்?'' என்று ஒருமுறை முறையுங்கள். நீங்கள் அந்த நெருக்கத்தை விரும்பவில்லை என்பதை அந்த ஆசாமி புரிந்துகொள்வான்.
அதையும் மீறி,மீண்டும் மீண்டும் எவனாவது உங்கள் இண்டிமேட் இடைவெளியை நெருங்கிக்கொண்டே இருந்தான் என்றால், இது தான் செக்ஷுவல் ஹராஸ்மெண்ட் எனப்படும் பாலியல் துன்புறுத்தல். Public Distance என்பதை பெரிய குற்றமாய்த்தான் இந்திய குற்றவியல் பிரிவு கருதுகிறது. அதனால் உங்கள் பள்ளியில், கல்லூரியில், வேலை இடத்தில் உள்ள தலைமை அதிகாரியிடம் போய்ப் புகார் கொடுங்கள். இந்த தலைமைப் பொறுப்பு வகிக்கும் நபரே இப்படி எல்லை மீறுகிறாரா, பெண்கள் எல்லோரும் சேர்ந்து போர்க் கொடி தூக்குங்கள்! இது ஆண் எல்லை மீறும் போது எடுக்கும் நடவடிக்கை.
இரண்டு, ஆனால் சில சமயத்தில் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, தங்கள் எல்லைக்கோடுகளை மீறி ஆண்களிடம் பழகிவிடுவது உண்டு. நண்பன், சகா, சகோதரன், மகன், ஊழியன் என்று எந்தவிதமான ஆரோக்கியமான உறவாக இருந்தாலும் சரி, இது போன்ற புற உறவுகள் பர்சனல் இடைவெளி வரை மட்டுமே இருக்க முடியும். இதை மீறி, அபரிமிதமான அன்பின் கொப்பளிப்பில், மிக அருகில் போய், உங்கள் மூச்சு, அந்த ஆணின் மீது படும்படி நீங்கள் இடைவெளியை குறைத்துக் கொண்டால், அது அநாகரிகம் மட்டும் அல்ல, பெரிய ஆபத்தும் கூட.
இதில் என்ன பெரிய அநாகரிகம், நட்பில் இதெல்லாம் சகஜம் தானே. என்றோ, இதில் என்ன ஆபத்து என்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் என்ன தெரியுமா? தகுந்த இடைவெளி தாண்டி நீங்கள் நெருங்குவதே, அந்த ஆணைத் தூண்டி, ஊக்குவிப்பதாகும், குழந்தை, காதலன், கணவன் ஆகிய மூன்று நிலைகளைத் தவிர வேறு எந்த நிலையில் உள்ள நபர்களும் இந்த நெருக்கத்தை அனுபவிப்பது ஆபத்தே.
உங்களைப் பொறுத்தவரை, ``சும்மா லேசா சாய்ந்தேன், முகம் கிட்ட வந்துடுச்சு. இதெல்லாம் ஒரு தப்பா?'' என்று நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பு என்ன தெரியுமா? ``இத்தனை அருகில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால், நீ உடனே மோகம் கொள்வாயாக'' என்ற ரீதியில் தான் அவன் நரம்புமுனைகள் இயங்குகின்றன. அதற்கு அவன் பொறுப்பல்ல. இப்படி அவன் நரம்பு வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே நீங்கள் அவனை நெருங்கி ஆசை காட்டுவது அநாகரிகம் தானே.
அதனால் தான் எல்லாக் கலாச்சாரங்களிலும், தாயும் மகனும் என்றாலும் கூட, வயதிற்கு வந்த பையன் தாயை ரொம்ப நெருங்குவதும், அவள் பக்கத்தில் படுப்பதும், அவள் முந்தானையே கதி என்று இருப்பதும் மிக அதிகபட்ச தடைக்குள்ளாகின்றன. அதே போல், வயத்திற்கு வரும் நிலையிலுள்ள மகளைத் தகப்பன் நெருங்குவதும் தவறாக கருதப்படுகிறது.
பெற்றவர்களுக்கும் பிள்ளைக்குமே போதிய இடைவெளி விட்டுப் பழகுவது தான் நாகரிகம் என்கிற போது, மற்ற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள விரும்பும் ஸ்நேகிதிகள், ஆண் பெண் உறவில் நீங்கள் சரியான எல்லைகளை கடைப்பிடிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுடன் பரிச்சயம் கொண்ட ஆண்கள் உங்கள் எல்லைகளை மதித்துப் பழகுகிறார்களா என்று பாருங்கள். புற உறவுகளில் இந்த எல்லை நிர்ணயம் ரொம்பவே முக்கியம். ஆனால் அகவுறவில்... எல்லை தாண்டி தீவிரவாதம் செய்வதே சுவாரசியம். அதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!
Labels:
பாலியல் கல்வி
Saturday, April 18, 2009
வயதிற்கு வருவது
ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினை பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினை பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!
Labels:
பாலியல் கல்வி
Tuesday, April 7, 2009
ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 14
ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ளும் ஸ்நேகிதிகாள், பெண் சும்மா இருந்தாலும், அவளை வேட்டை ஆடி வெல்ல முயல்வது தான் ஆணின் இயல்பு, என்கிற பேஸிக் சைக்காலஜியை புரிந்துக்கொண்டீர்களா?
ஆணின் ஆட்டவிதி இது தான் என்றால் பெண் எப்படி இயங்கினால் அவளுக்கு நல்லது?
ஒரு வேளை அந்த பெண்ணுக்கு அந்த ஆணை பிடித்திருக்கிறது என்றால், இவள் அவனை ஊக்குவித்தாக வேண்டும், இல்லை என்றால் உறவே ஏற்படாமல் போகக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் பெண் ஆணை ஆதரிக்கும், “எனக்கு ஓக்கே” என்கிற சிக்னலை வெளிபடுத்தி ஆக வேண்டும்.
இதற்கு நேர்மாறாய் அந்த ஆணை அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்று வையுங்களேன். இவள் தப்பித்தவறி, தன்னை அறியாமல் லேசாய் கொஞ்சம் ஓகே என்பது போல ஜாடை செய்தாலும் போச்சு, தலைவர் செம ஸ்பீடில் முற்றிகை இட வந்து, கடைசியில், “ஆரம்பத்துலேர்ந்தே எனக்கு விருப்பமில்லை” என்று, இந்த பெண் என்ன சமாளிக்க முயன்றாலும், வெறுப்பு, விரோதம், மனஸ்தாபம் என்று தேவை இல்லாத வம்புகள் பலதும் வந்து சேரும்.
அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் பெண்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இந்த ”சிக்னல் சிஸ்டம்”.
எல்லா உயிரினத்திற்குமே, தன் இனத்தோடு உறவாடுவதற்கென்றே சில பிரத்தியேக சிக்னல்கள் உண்டு. உதாரணத்திற்கு நாய், தனக்கு யாரையாவது பிடித்திருந்தால், தன் வாலை ஆட்டிக்கொள்ளும், பூனைக்கு யாரையாவது பிடித்திருந்தால், பக்கத்தில் வந்து உராயும், குரங்கிற்கு யாரையாவது பிடித்திருந்தால், பேன் பார்த்து விடும்….இப்படியாக அந்தந்த இனத்திற்கு என்று பிரத்தியேகமாய் சில “ஓகே,” சிக்னல்கள் உண்டு.
மனிதர்களிலும் இப்படி சில சிக்னல்கள் உண்டு. ஒரு ஆண் தன்னை நெருங்கி வரும் போது, பெண் அவனை பார்த்து தலை குனிந்து நாணி, கோணி, சிரித்து, ஓரப்பார்வை பார்த்து, இடுப்பை மிகையாக அசைத்து, தன் ஆடைகளை தேவை இல்லாமல் சரி செய்தால் அதற்கு என்ன அர்த்தம்?
அட அவளுக்கு சிரிப்பு வந்தது சிரிச்சா,
நேரா பார்க்க கூச்சம் அதனால் ஓரக்கண்ணால பார்த்தா,
டிரெஸ் விலகி இருக்கும் அதனால அதை ஒழுங்கு செய்திருப்பா,
அவ இடுப்பை அவ அசைச்சா தப்பா?
என்று எல்லாம் நாம் ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும், நம் அனைவருக்குமே தெரியும், ஒரு பெண், ஆணின் எதிரில் இப்படி எல்லாம் செய்தால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான், “எனக்கு ஓகே, I am available”
இந்த வகையான ”நான் ரெடி” சிக்னலை இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து, அந்த பெண், அவள் உடலை மிக கவர்ச்சியாக வளைத்து, ஆட்டி, பெண்ணின அடையாள உருப்புக்களான, மார்பகம், இடுப்பு, ஆகியவற்றை ஓவராய் வெளி படுத்தினால் அது இன்னும் கொஞ்சம் உரக்கவே “நான் ரெடி” எனறு சொல்வதாகிறது.
உதாரணத்திற்கு சினிமாவில் வருகிற கவர்ச்சிப்பெண் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோமே. அவள் எப்படி உடை உடுத்துகிறாள், எப்படி தன் உடலை, உதட்டை அசைக்கிறாள், எப்படி பேசுகிறாள் என்று மிக கூர்மையாக கவனித்து பாருங்களேன். உடம்பை கவர்ச்சியாக வெளிபடுத்தும் இருக்கமான உடை, தன் இடுப்பை அதிகமாக ஆட்டி ஒரு நடை, ஓவராய் உதட்டை குவித்து, கொஞ்சி கொஞ்சி பேசும் விதம், எல்லாமே, மேலும் மேலும், “ரெடி, ரெடி, “ என்று சொல்லும் இன்விடேஷன் டிஸ்ப்லே INVITATION DISPLAYக்கள்.
இந்த மாதிரியான இன்விடேஷன் டிஸ்பிளேவை பார்த்தால், பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓஹோ, இவள் ஒரு மாதிரி போல என்று நீங்கள் உடனே, உங்களை அறியாமலேயே ஒரு முடிவிற்கு வந்து விடுவீர்கள். அந்த பெண்ணை அவ்வளவாக மதிக்க உங்களுக்கு தோன்றாது. தன் உடலால் காரியங்களை சாதித்து கொள்வாளோ என்று நீங்களே கூட அவளை சந்தேகப்படுவீர்கள்.
பெண்களே இப்படி வெறும் வெளி தோற்றத்தை வைத்து, அந்த பெண்ணின் கலவியல் ஒழுக்கத்தை இவ்வளவு நுனுக்கமாய் ஆராயும் போது, இப்படிப்பட்ட பெண்ணை ஒரு ஆண் பார்த்தால், அவன் என்ன முடிவிற்கு வருவான்?
ரொம்ப மெனக்கெட்டு தன்னை கூடுதல் கவர்ச்சியாய் காட்டிக்கொண்டி, இப்படி வேண்டி, வேண்டி, இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுக்கிறாள் எனறால் என்ன அர்த்தம்? என்னை பார்த்தால் அவளுக்கு ஆசை, என்னுடன் இருக்க அவளுக்கு சம்மதம், அப்படியானால் என் திருப்பணியை நான் துவக்கி விடலாம் போல, என்று துணிந்து தைரியமாய் அந்த பெண்ணை நெருங்கி தொட்டு, உறவு கொண்டாட முயல்வான் ஆண்.
இதுவே, ஏதாவது தேசத்தின் தலைமை பதவியை வகிக்கும் பெண்ணை உதாரணமாய் எடுத்துக்கொள்ளுங்களேன். அல்லது தலைமை பதவி வகிப்பவனின் மனைவியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோமே. லேட்டஸ்ட் ஹிட் மிஷேல் ஒபாமாவை எடுத்துக்கொள்ளுங்கள். மிஷேல் எப்படி உடை அணிகிறார்? எப்படி, உடலை அசைக்கிறார்? எப்படி பார்க்கிறார்? எப்படி நிற்கிறார்? எப்படி நடக்கிறார்? தன் உதட்டை எப்படி அசைக்கிறார், எப்படி பேசுகிறார்?
கவனமாய் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இப்படி தலைமை நிலையில் இருக்கும் பெண்கள், நாணி கோணி, ஓரப்பார்வை பார்த்து கள்ள சிரிப்பை எல்லாம் சிரிப்பதே இல்லை. நாணாமல், கோணாமல், இடுப்பையோ, உதட்டையோ அஷட கோணத்தில் ஆட்டாமல், அப்படியே ஸ்திரமாய் நின்று, நேருக்கு நேர் பார்த்து, தெளிவான குரலில் கணீர் என்று பேசுகிறார்கள். தங்கள் மார்பையோ, வேறு எந்த பெண்ணின் அடையாள குறி பாகத்தையோ, மிகைபடுத்துவதோ, வெளிபடுத்துவதோ இல்லை. ஆக கூட்டி கழித்து பார்த்தால், இந்த வகை உயர் அந்தஸ்து பெண்கள் யாரும் மானவாரியாய், எல்லோருக்கும் எதிரில் இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுப்பதே இல்லை. இந்த மாதிரி பெண்களை பார்த்தால் பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றூகிறது? ஏஞ்சலா மார்கெல், எலிசபெத் ராணி, மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், போன்ற வெளிநாட்டு பெண்களாகட்டும், சோனியா காந்தி, கிரண் பேடி, பர்க்கா தத், மாதிரியான நம்மூர் பெண்களாகட்டும், இந்த வகை பெண்களை பார்க்கும் போது, பெண்களான உங்களுக்கே, “சே சே, ரொம்ப பெரியவங்க, அவங்க கிட்டயே போக முடியாது” என்று தோன்றிவிடும். உங்களுக்கே இப்படி தோன்றீனால், இவர்களை பார்க்கும் ஆண்களுக்கு என்ன தோன்றூம்?
“இது ரொம்ப ஹை கிளாஸ் பொம்பளை, நம்ம எல்லாம் எம்மாத்திரம், நம்ம ரேஞ்ன்சுக்கு ஒத்து வராது,” என்று அந்த பெண்ணை மரியாதை கலந்த பயத்துடன் மட்டும் தான் பார்க்க முடியுமே தவிற, அவள் மேல் காதலோ, ஆசையோ, இச்சையோ கொள்ள முடியாது.
அது ஏன் அப்படி? மிஷேல் ஒபாமாவும் கவர்ச்சியான பெண் தானே, இல்லாமலா பராக் ஒபாமா ஓடி ஓடி காதலித்து கைபிடித்தார்! அப்படி இருந்தும், மிஷேலை பார்த்தால், மற்ற ஆண்களுக்கு ஆசை வரவில்லையே? இதுவே, யாரோ ரோட்டில் போகிற கவர்ச்சியான பெண் என்றால் ஆசை பட்டு அசடு வழிகிறார்களே ஏன்?
ஏன் என்றால் மிஷேல் இன்விடேஷன் டிஸ்ப்ளே எதையுமே வெளிபடுத்துவதில்லை. காரணம் யாரையும் இனி கவர வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
ஆனால் சாமானிய பெண்கள் அறிந்தோ, அறியாமலோ, இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்துவிடுகிறார்கள். அது உடனே ஆண்களை கவர்ந்து விடுகிறது. அதனால் ”நீ அழைப்பு விடுத்தாய், அதனால் நான் ஆஜரானேன்” என்ற ரீதியில் ஆண்கள் அந்த பெண்ணை அணுக ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆண்களிம் இயல்பு இப்படி இருக்கும் போது, அவன் எதிரில் போய் இப்படி இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்வது அறிவாகுமா என்று யோசிக்க தோன்றினாலும், இதில் ஒரு பெரிய விசித்திரம் என்ன தெரியுமா? பெண்கள் சும்மா இருந்தாலும், அவர்களை சுற்றியுள்ள கலாச்சரம், பெண்ணை இப்படிப்பட்ட இ, டி யை கொடுக்கவே வற்புறுத்துகிறது. உதாரணத்திற்கு நம்மூரையே எடுத்துக்கொள்வோமே. நம்மூர் பெண்கள் இன்னமும் அச்சம், நாணம், மடம், பயிற்பையே பெண்ணின் உயரிய குணங்களாக கட்டி காப்பாற்ற முயல்வதே, கலாச்சர பாரம்பரியம் என்ற மூட நம்பிக்கையில் தானே. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இந்த அச்சம், நாணம், மடம், பயிற்பு ஆகிய நான்குமே, இன்விடேஷன் டிஸ்ப்ளேக்கள் தான்! இந்த நான்கு குணங்களை ஒரு பெண் வெளிபடுத்தினாலே, அவளது கவர்ச்சிவிகிதம் கூடி விடுகிறது!
ஆக இந்த இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதை பொருத்து, ஆணின் ரியாக்ஷனும் மாறிவிடுகிறது. நிறைய இ.வி இருந்தால், ஈஷிக்கொள்வதும், இ, வி யே இல்லை என்றால், ஒதுங்கி விடுவதும் தான் ஆணின் இயல்பு.
அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகளே, உங்கள் இ, வி களை கவனியுங்கள். உங்களுக்கு பிடித்த, நீங்கள் ஊக்குவிக்க முயலும் ஆண்களிடம் இந்த இ, விக்களை வெளிபடுத்தினால், உங்கள் உறவு சூடு பிடுக்கும். நீங்கள் தப்பித்தவறி, கண்டவர் எதிரில் உங்கள் இ.விக்களை வெளிபடுத்தினாலும் போச்சு, பத்தி எறிய ஆரம்பித்துவிடும். அதனால் இந்த சிக்னல் சிஸ்டத்தை மிக ஜாக்கிரதையாக கையாளப்பழகுங்கள். இது தான் உங்களுக்கான இந்த வார ஓம் வர்க்!
ஆணின் ஆட்டவிதி இது தான் என்றால் பெண் எப்படி இயங்கினால் அவளுக்கு நல்லது?
ஒரு வேளை அந்த பெண்ணுக்கு அந்த ஆணை பிடித்திருக்கிறது என்றால், இவள் அவனை ஊக்குவித்தாக வேண்டும், இல்லை என்றால் உறவே ஏற்படாமல் போகக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் பெண் ஆணை ஆதரிக்கும், “எனக்கு ஓக்கே” என்கிற சிக்னலை வெளிபடுத்தி ஆக வேண்டும்.
இதற்கு நேர்மாறாய் அந்த ஆணை அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்று வையுங்களேன். இவள் தப்பித்தவறி, தன்னை அறியாமல் லேசாய் கொஞ்சம் ஓகே என்பது போல ஜாடை செய்தாலும் போச்சு, தலைவர் செம ஸ்பீடில் முற்றிகை இட வந்து, கடைசியில், “ஆரம்பத்துலேர்ந்தே எனக்கு விருப்பமில்லை” என்று, இந்த பெண் என்ன சமாளிக்க முயன்றாலும், வெறுப்பு, விரோதம், மனஸ்தாபம் என்று தேவை இல்லாத வம்புகள் பலதும் வந்து சேரும்.
அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் பெண்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இந்த ”சிக்னல் சிஸ்டம்”.
எல்லா உயிரினத்திற்குமே, தன் இனத்தோடு உறவாடுவதற்கென்றே சில பிரத்தியேக சிக்னல்கள் உண்டு. உதாரணத்திற்கு நாய், தனக்கு யாரையாவது பிடித்திருந்தால், தன் வாலை ஆட்டிக்கொள்ளும், பூனைக்கு யாரையாவது பிடித்திருந்தால், பக்கத்தில் வந்து உராயும், குரங்கிற்கு யாரையாவது பிடித்திருந்தால், பேன் பார்த்து விடும்….இப்படியாக அந்தந்த இனத்திற்கு என்று பிரத்தியேகமாய் சில “ஓகே,” சிக்னல்கள் உண்டு.
மனிதர்களிலும் இப்படி சில சிக்னல்கள் உண்டு. ஒரு ஆண் தன்னை நெருங்கி வரும் போது, பெண் அவனை பார்த்து தலை குனிந்து நாணி, கோணி, சிரித்து, ஓரப்பார்வை பார்த்து, இடுப்பை மிகையாக அசைத்து, தன் ஆடைகளை தேவை இல்லாமல் சரி செய்தால் அதற்கு என்ன அர்த்தம்?
அட அவளுக்கு சிரிப்பு வந்தது சிரிச்சா,
நேரா பார்க்க கூச்சம் அதனால் ஓரக்கண்ணால பார்த்தா,
டிரெஸ் விலகி இருக்கும் அதனால அதை ஒழுங்கு செய்திருப்பா,
அவ இடுப்பை அவ அசைச்சா தப்பா?
என்று எல்லாம் நாம் ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும், நம் அனைவருக்குமே தெரியும், ஒரு பெண், ஆணின் எதிரில் இப்படி எல்லாம் செய்தால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான், “எனக்கு ஓகே, I am available”
இந்த வகையான ”நான் ரெடி” சிக்னலை இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து, அந்த பெண், அவள் உடலை மிக கவர்ச்சியாக வளைத்து, ஆட்டி, பெண்ணின அடையாள உருப்புக்களான, மார்பகம், இடுப்பு, ஆகியவற்றை ஓவராய் வெளி படுத்தினால் அது இன்னும் கொஞ்சம் உரக்கவே “நான் ரெடி” எனறு சொல்வதாகிறது.
உதாரணத்திற்கு சினிமாவில் வருகிற கவர்ச்சிப்பெண் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோமே. அவள் எப்படி உடை உடுத்துகிறாள், எப்படி தன் உடலை, உதட்டை அசைக்கிறாள், எப்படி பேசுகிறாள் என்று மிக கூர்மையாக கவனித்து பாருங்களேன். உடம்பை கவர்ச்சியாக வெளிபடுத்தும் இருக்கமான உடை, தன் இடுப்பை அதிகமாக ஆட்டி ஒரு நடை, ஓவராய் உதட்டை குவித்து, கொஞ்சி கொஞ்சி பேசும் விதம், எல்லாமே, மேலும் மேலும், “ரெடி, ரெடி, “ என்று சொல்லும் இன்விடேஷன் டிஸ்ப்லே INVITATION DISPLAYக்கள்.
இந்த மாதிரியான இன்விடேஷன் டிஸ்பிளேவை பார்த்தால், பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓஹோ, இவள் ஒரு மாதிரி போல என்று நீங்கள் உடனே, உங்களை அறியாமலேயே ஒரு முடிவிற்கு வந்து விடுவீர்கள். அந்த பெண்ணை அவ்வளவாக மதிக்க உங்களுக்கு தோன்றாது. தன் உடலால் காரியங்களை சாதித்து கொள்வாளோ என்று நீங்களே கூட அவளை சந்தேகப்படுவீர்கள்.
பெண்களே இப்படி வெறும் வெளி தோற்றத்தை வைத்து, அந்த பெண்ணின் கலவியல் ஒழுக்கத்தை இவ்வளவு நுனுக்கமாய் ஆராயும் போது, இப்படிப்பட்ட பெண்ணை ஒரு ஆண் பார்த்தால், அவன் என்ன முடிவிற்கு வருவான்?
ரொம்ப மெனக்கெட்டு தன்னை கூடுதல் கவர்ச்சியாய் காட்டிக்கொண்டி, இப்படி வேண்டி, வேண்டி, இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுக்கிறாள் எனறால் என்ன அர்த்தம்? என்னை பார்த்தால் அவளுக்கு ஆசை, என்னுடன் இருக்க அவளுக்கு சம்மதம், அப்படியானால் என் திருப்பணியை நான் துவக்கி விடலாம் போல, என்று துணிந்து தைரியமாய் அந்த பெண்ணை நெருங்கி தொட்டு, உறவு கொண்டாட முயல்வான் ஆண்.
இதுவே, ஏதாவது தேசத்தின் தலைமை பதவியை வகிக்கும் பெண்ணை உதாரணமாய் எடுத்துக்கொள்ளுங்களேன். அல்லது தலைமை பதவி வகிப்பவனின் மனைவியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோமே. லேட்டஸ்ட் ஹிட் மிஷேல் ஒபாமாவை எடுத்துக்கொள்ளுங்கள். மிஷேல் எப்படி உடை அணிகிறார்? எப்படி, உடலை அசைக்கிறார்? எப்படி பார்க்கிறார்? எப்படி நிற்கிறார்? எப்படி நடக்கிறார்? தன் உதட்டை எப்படி அசைக்கிறார், எப்படி பேசுகிறார்?
கவனமாய் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இப்படி தலைமை நிலையில் இருக்கும் பெண்கள், நாணி கோணி, ஓரப்பார்வை பார்த்து கள்ள சிரிப்பை எல்லாம் சிரிப்பதே இல்லை. நாணாமல், கோணாமல், இடுப்பையோ, உதட்டையோ அஷட கோணத்தில் ஆட்டாமல், அப்படியே ஸ்திரமாய் நின்று, நேருக்கு நேர் பார்த்து, தெளிவான குரலில் கணீர் என்று பேசுகிறார்கள். தங்கள் மார்பையோ, வேறு எந்த பெண்ணின் அடையாள குறி பாகத்தையோ, மிகைபடுத்துவதோ, வெளிபடுத்துவதோ இல்லை. ஆக கூட்டி கழித்து பார்த்தால், இந்த வகை உயர் அந்தஸ்து பெண்கள் யாரும் மானவாரியாய், எல்லோருக்கும் எதிரில் இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுப்பதே இல்லை. இந்த மாதிரி பெண்களை பார்த்தால் பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றூகிறது? ஏஞ்சலா மார்கெல், எலிசபெத் ராணி, மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், போன்ற வெளிநாட்டு பெண்களாகட்டும், சோனியா காந்தி, கிரண் பேடி, பர்க்கா தத், மாதிரியான நம்மூர் பெண்களாகட்டும், இந்த வகை பெண்களை பார்க்கும் போது, பெண்களான உங்களுக்கே, “சே சே, ரொம்ப பெரியவங்க, அவங்க கிட்டயே போக முடியாது” என்று தோன்றிவிடும். உங்களுக்கே இப்படி தோன்றீனால், இவர்களை பார்க்கும் ஆண்களுக்கு என்ன தோன்றூம்?
“இது ரொம்ப ஹை கிளாஸ் பொம்பளை, நம்ம எல்லாம் எம்மாத்திரம், நம்ம ரேஞ்ன்சுக்கு ஒத்து வராது,” என்று அந்த பெண்ணை மரியாதை கலந்த பயத்துடன் மட்டும் தான் பார்க்க முடியுமே தவிற, அவள் மேல் காதலோ, ஆசையோ, இச்சையோ கொள்ள முடியாது.
அது ஏன் அப்படி? மிஷேல் ஒபாமாவும் கவர்ச்சியான பெண் தானே, இல்லாமலா பராக் ஒபாமா ஓடி ஓடி காதலித்து கைபிடித்தார்! அப்படி இருந்தும், மிஷேலை பார்த்தால், மற்ற ஆண்களுக்கு ஆசை வரவில்லையே? இதுவே, யாரோ ரோட்டில் போகிற கவர்ச்சியான பெண் என்றால் ஆசை பட்டு அசடு வழிகிறார்களே ஏன்?
ஏன் என்றால் மிஷேல் இன்விடேஷன் டிஸ்ப்ளே எதையுமே வெளிபடுத்துவதில்லை. காரணம் யாரையும் இனி கவர வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
ஆனால் சாமானிய பெண்கள் அறிந்தோ, அறியாமலோ, இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்துவிடுகிறார்கள். அது உடனே ஆண்களை கவர்ந்து விடுகிறது. அதனால் ”நீ அழைப்பு விடுத்தாய், அதனால் நான் ஆஜரானேன்” என்ற ரீதியில் ஆண்கள் அந்த பெண்ணை அணுக ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆண்களிம் இயல்பு இப்படி இருக்கும் போது, அவன் எதிரில் போய் இப்படி இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்வது அறிவாகுமா என்று யோசிக்க தோன்றினாலும், இதில் ஒரு பெரிய விசித்திரம் என்ன தெரியுமா? பெண்கள் சும்மா இருந்தாலும், அவர்களை சுற்றியுள்ள கலாச்சரம், பெண்ணை இப்படிப்பட்ட இ, டி யை கொடுக்கவே வற்புறுத்துகிறது. உதாரணத்திற்கு நம்மூரையே எடுத்துக்கொள்வோமே. நம்மூர் பெண்கள் இன்னமும் அச்சம், நாணம், மடம், பயிற்பையே பெண்ணின் உயரிய குணங்களாக கட்டி காப்பாற்ற முயல்வதே, கலாச்சர பாரம்பரியம் என்ற மூட நம்பிக்கையில் தானே. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இந்த அச்சம், நாணம், மடம், பயிற்பு ஆகிய நான்குமே, இன்விடேஷன் டிஸ்ப்ளேக்கள் தான்! இந்த நான்கு குணங்களை ஒரு பெண் வெளிபடுத்தினாலே, அவளது கவர்ச்சிவிகிதம் கூடி விடுகிறது!
ஆக இந்த இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதை பொருத்து, ஆணின் ரியாக்ஷனும் மாறிவிடுகிறது. நிறைய இ.வி இருந்தால், ஈஷிக்கொள்வதும், இ, வி யே இல்லை என்றால், ஒதுங்கி விடுவதும் தான் ஆணின் இயல்பு.
அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகளே, உங்கள் இ, வி களை கவனியுங்கள். உங்களுக்கு பிடித்த, நீங்கள் ஊக்குவிக்க முயலும் ஆண்களிடம் இந்த இ, விக்களை வெளிபடுத்தினால், உங்கள் உறவு சூடு பிடுக்கும். நீங்கள் தப்பித்தவறி, கண்டவர் எதிரில் உங்கள் இ.விக்களை வெளிபடுத்தினாலும் போச்சு, பத்தி எறிய ஆரம்பித்துவிடும். அதனால் இந்த சிக்னல் சிஸ்டத்தை மிக ஜாக்கிரதையாக கையாளப்பழகுங்கள். இது தான் உங்களுக்கான இந்த வார ஓம் வர்க்!
Labels:
பாலியல் கல்வி
Wednesday, March 18, 2009
ஆண்களை ஹேண்டில் செய்ய, அத்தியாயம் 13
ஆண்களை ஹேண்டில் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? இதோ ஆண்களைப் பற்றின அடுத்த ரகசியம்... அதைப் பற்றி சொல்வதற்கு முன்னால் சில சுவாரசியமான கதைகளை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.
பெயர் வேண்டாம். ஒரு பெண், மின்னல் என்று வைத்துக்கொள்வோமே. மின்னல் சின்ன வயதிலிருந்து இருபாலினருக்கான பள்ளியில் படித்து வந்ததால் ஆண்களிடம் சகஜமாக பேசும் சுபாவம் உடையவள். அவள் வேலையிலும் தினசரி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல பேரை சந்தித்து சமாளிக்க வேண்டி இருந்ததால், மிகமிக கேஷுவலாக எல்லோரிடமும் பேசும் பழக்கம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவள் இப்படி இருக்க, வேலை நிமித்தமாய் இவளை ஒரு ஆசாமி பார்க்க வந்தான். மின்னலும் வழக்கம் போல, அவனைப் பார்த்து, பேசி, தன் பணிகளை மேற்கொள்ள, தொழில்ரீதியாக இருவருக்கும், பேச்சு வார்த்தை ஏற்பட்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ``நாம் ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போய், ஜாலியா இருக்கலாமா?'' என்ற ரீதியில் ஏதோ கேட்க, மின்னலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடப்பாவி, இவன் இப்படி நினைக்கும் அளவிற்கு நான் அவனிடம் எதுவுமே பேசவில்லையே. ரொம்ப ரொம்ப புரஃபெஷனலாக மட்டும் தானே இருந்தேன். அப்புறம் எப்படி, இவனுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? என்ன திமிர்! என்ன வக்கிரபுத்தி!'' என்ற மின்னல், ஒட்டு மொத்தமாய் ஆண் வர்க்கத்தையே சந்தேகப்பட ஆரம்பித்தாள்.
இன்னொரு பெண், இவள் பெயரை கொடி என்று வைத்துக்கொள்வோமே. இவள் ஹாஸ்டல் விடுமுறைக்காக சொந்த ஊர் போகும் போது, ரயிலில் உடன் வந்த ஒரு ஆசாமி தனக்கு பெட்டி எல்லாம் தூக்கி வைத்து உதவி செய்தானே என்று, அவனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆள் தனக்கு திருமணமாகி இருப்பதையும், வயதிற்கு வந்த இரண்டு மகள்கள் இருப்பதையும் சொல்ல, அட, நம்ம அப்பா மாதிரி என்று கொடியும், ``சேலம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அங்கிள்'' என்று தன் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர, அடுத்த நாளே, அங்கிள் ஃபோன் செய்தார், ``அடுத்த வாரம் சேலம் வர்றதா இருக்கேன். நாம் ரெண்டு பேரும் எங்கயாவது டின்னருக்கு போகலாமா?''
கொடிக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது... சும்மா இரண்டு வார்த்தை முகம் கொடுத்து, நன்றாக பேசி விட்டதாலேயே, டின்னருக்கு போகலாமா என்றால் என்ன அர்த்தம்? சீ சீ, இந்த ஆண்களே சரியான சபல கேசுகள், அவன் பொண்ணு கிட்ட எவனாவது இப்படி கேட்டா அப்பத் தெரியும்! என்று கொடி குமைய ஆரம்பித்தாள்.
மின்னல் ஆகட்டும் கொடியாகட்டும், நீங்கள் ஆகட்டும் நான் ஆகட்டும் எல்லா பெண்களுக்குமே இப்படி பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆண்கள் சலுகை எடுத்துக்கொண்டு அவர்களிடம் பேச முயல்கிறார்கள். தப்பித்தவறி அந்தப் பெண் சகஜமாக பேசிவிட்டால், அதுவும் சிரித்துப் பேசிவிட்டாள் என்றால் உடனே, ஓஹோ, பார்ட்டி சிக்னல் கொடுத்துடுச்சு போல என்று உடனே அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிறார்கள்.
என்னதான் `சீ, தூ' என்றெல்லாம் பெண்கள் ஆண்களின் இந்த குணத்தை ஆட்சேபித்தாலும், உண்மை என்ன தெரியுமா? உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஆண் இனம் இப்படிதான் இயங்குகிறது. பெண்பால் என்ற ஒன்று எதிரில் இருந்தாலே போதும், ஆண் அலர்ட் ஆகி, தன்னை பெரியவனாய் காட்டிக்கொள்ளும். பெண் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு, விலகாமல், சும்மா அப்படியே நின்றாலும்கூட அதையே தன்னை ஊக்கப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு, நெருங்கி வரும். அப்போதும் அந்த பெண் விலகாமல் ஆதரவு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினால், உடனே ஒரு ஆணாய் தன் கடமையை ஆற்ற ஆயத்தமாகி விடும்.
உலக ஜீவராசிகளின் நியதியே இதுதான். பெண் எப்போதும், அசையாமல் ஆணை ஆழம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆணாகவே முன்வந்து அட்டெண்டென்ஸ் போட்டால், அவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். முடிவு எப்போதுமே பெண்ணைப் பொருத்ததுதான். ஆனால் முயற்சி செய்வது ஆணின் கடமை. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்களேன். பூவின் நட்டநடுவில் ஆடாமல் அசையாமல் பெண் உருப்பான கைனீஷியம் அமைந்திருக்கும். அது இப்படி சும்மா இருந்தாலும், எங்கிருந்தோ பல மகரந்தத் தூள்கள் பறந்தோ, மிதந்தோ, பிற ஜீவராசிகளின் மேல் தொற்றிக்கொண்டோ வந்து இந்த கைனீஷியத்தின் வாசலை அடையும். கடைசியில் எந்த மகரந்தத்திற்கு வெற்றி என்பதை அந்த கைனிஷியம்தான் முடிவு செய்யும். சூல் கொள்ள கைனிஷியத்திற்கு ஒன்றோ, இரண்டோ மகரந்தம்தான் தேவைப்படும். அப்படி இருந்தும், எல்லா பூக்களுமே தங்கள் மகரந்தத்தை பரப்பத்தானே செய்கின்றன. எந்தப் பூவும், ``எப்படியும் சிலதுதானே தேர்வாகும். எதற்கு வேலைமெனைக்கெட்டு இத்தனை மகரந்தத்தை உற்பத்தி பண்ணிக்கிட்டு, ஒரு வேலை நமக்கு சான்ஸ் கிடைக்கலைனா?'' என்று பெசிமிஸ்டிக்காய் இருப்பதில்லையே!
``சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, முன் ஏற்பாடாக போட்டிக்கு தயாராகிடணும், வெற்றி தோல்வி முக்கியம் இல்லை, விளையாட்டுல கலந்தே ஆகணும்'' என்ற ரீதியில்தான் எல்லா ஜீவராசி ஆண்களுமே களமிறங்குகின்றன.
இதே விதியை அனுசரித்துதான் மனித ஆணும், முன் ஏற்பாடாக எப்போதுமே, ``ரெடி ஸ்டெடி, ஸ்டார்ட், ஜூட்'' என்று தயாராகவே இருக்கிறான். எப்போது எங்கே தன்னை ஆதரிக்க ஒரு பெண் கிடைப்பாள் என்கிற இந்த வேட்கைதான் அவனுடைய இயல்பு. ஆண்கள் மட்டும் இப்படி இயங்கவில்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிர்வாழ முடியாது.
இது மற்ற ஜீவராசிகளை பொருத்தவரை எந்த சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் மனித வர்க்கத்தை பொருத்தவரை, ஆணின் இந்த ``எந்தப் பெண் கிடைப்பாள்?'' வேட்கை, அநாகரீகமாய் கருதப்படுகிறது. காரணம் மிருகம் மாதிரி, பெண்ணைப் பிடித்து புணர்ந்துவிட்டு, பிறகு அவளை மறந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போகும் போக்கு மனிதர்களுக்கு ஒத்து வராததே காரணம். மிருகக் குட்டிகளுக்கு அப்பா என்ற ஒரு கேரக்டரே தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்குத்தான் அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமே. இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தையின் வாழ்வு நல்லபடியாய் அமையும் என்பதினால்தான் இன்றைய புத்திசாலி ஆண்கள் ஒரே ஒருத்தியோடு, காலம் முழுக்க உறவு கொள்கிறார்கள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடுதான் குழந்தை வளர்ப்பிற்கு மிக சாதகமானது என்பதாலேயே முதிர்ச்சி அடைந்த கலாச்சாரங்கள் இதையே ஆதரிக்கின்றன. இந்த அளவு, புரிதலும், அறிவும் இருக்கும் ஆண்கள் இதனாலேயே, தன் துணை அல்லாத பிற பெண்களிடம் கண்ணியமாய், கட்டுப்பாடாய் பழகுகிறார்கள்.
இத்தனை புத்திசாலித்தனம் இல்லாத ஆண்கள்தான் இன்னும் தொடர்ந்து மிருகபாணியில் மானாவரி சாகுபடி செய்கிறார்கள். எப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ஈஷிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் இப்படி மானாவாரியாக பெண்களுக்கு ரூட் விடுவது அத்தனை புத்திசாலித்தனமான போக்கில்லை என்றாலும் என்ன செய்வது, இன்னும் பல ஆண்கள் மிருகங்களாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் என்றால் மிருகம் என்று அவனை மகிஷாசுரமர்த்தினி மாதிரி வதைத்திருக்கலாம். ஆனால் இன்றைய சட்டமோ, மிருகவதையை தண்டிப்பதால், மர்த்தனம் எல்லாம் இனி செய்யமுடியாதே. அதனால் ஏதோ நம்மால் முடிந்தது, ``இந்த வேலையை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதே'' என்ற சிக்னலை வெளிப்படுத்தி, அவனை ஆஃப் பண்ண முயலலாம். எப்படி, ஆஃப் சிக்னலை கொடுப்பது என்கிறீர்களா? ஆல் அபவுட் தட் இன் நெக்ஸ்ட் சிநேகிதி.
பெயர் வேண்டாம். ஒரு பெண், மின்னல் என்று வைத்துக்கொள்வோமே. மின்னல் சின்ன வயதிலிருந்து இருபாலினருக்கான பள்ளியில் படித்து வந்ததால் ஆண்களிடம் சகஜமாக பேசும் சுபாவம் உடையவள். அவள் வேலையிலும் தினசரி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல பேரை சந்தித்து சமாளிக்க வேண்டி இருந்ததால், மிகமிக கேஷுவலாக எல்லோரிடமும் பேசும் பழக்கம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவள் இப்படி இருக்க, வேலை நிமித்தமாய் இவளை ஒரு ஆசாமி பார்க்க வந்தான். மின்னலும் வழக்கம் போல, அவனைப் பார்த்து, பேசி, தன் பணிகளை மேற்கொள்ள, தொழில்ரீதியாக இருவருக்கும், பேச்சு வார்த்தை ஏற்பட்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ``நாம் ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போய், ஜாலியா இருக்கலாமா?'' என்ற ரீதியில் ஏதோ கேட்க, மின்னலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடப்பாவி, இவன் இப்படி நினைக்கும் அளவிற்கு நான் அவனிடம் எதுவுமே பேசவில்லையே. ரொம்ப ரொம்ப புரஃபெஷனலாக மட்டும் தானே இருந்தேன். அப்புறம் எப்படி, இவனுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? என்ன திமிர்! என்ன வக்கிரபுத்தி!'' என்ற மின்னல், ஒட்டு மொத்தமாய் ஆண் வர்க்கத்தையே சந்தேகப்பட ஆரம்பித்தாள்.
இன்னொரு பெண், இவள் பெயரை கொடி என்று வைத்துக்கொள்வோமே. இவள் ஹாஸ்டல் விடுமுறைக்காக சொந்த ஊர் போகும் போது, ரயிலில் உடன் வந்த ஒரு ஆசாமி தனக்கு பெட்டி எல்லாம் தூக்கி வைத்து உதவி செய்தானே என்று, அவனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆள் தனக்கு திருமணமாகி இருப்பதையும், வயதிற்கு வந்த இரண்டு மகள்கள் இருப்பதையும் சொல்ல, அட, நம்ம அப்பா மாதிரி என்று கொடியும், ``சேலம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அங்கிள்'' என்று தன் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர, அடுத்த நாளே, அங்கிள் ஃபோன் செய்தார், ``அடுத்த வாரம் சேலம் வர்றதா இருக்கேன். நாம் ரெண்டு பேரும் எங்கயாவது டின்னருக்கு போகலாமா?''
கொடிக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது... சும்மா இரண்டு வார்த்தை முகம் கொடுத்து, நன்றாக பேசி விட்டதாலேயே, டின்னருக்கு போகலாமா என்றால் என்ன அர்த்தம்? சீ சீ, இந்த ஆண்களே சரியான சபல கேசுகள், அவன் பொண்ணு கிட்ட எவனாவது இப்படி கேட்டா அப்பத் தெரியும்! என்று கொடி குமைய ஆரம்பித்தாள்.
மின்னல் ஆகட்டும் கொடியாகட்டும், நீங்கள் ஆகட்டும் நான் ஆகட்டும் எல்லா பெண்களுக்குமே இப்படி பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆண்கள் சலுகை எடுத்துக்கொண்டு அவர்களிடம் பேச முயல்கிறார்கள். தப்பித்தவறி அந்தப் பெண் சகஜமாக பேசிவிட்டால், அதுவும் சிரித்துப் பேசிவிட்டாள் என்றால் உடனே, ஓஹோ, பார்ட்டி சிக்னல் கொடுத்துடுச்சு போல என்று உடனே அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிறார்கள்.
என்னதான் `சீ, தூ' என்றெல்லாம் பெண்கள் ஆண்களின் இந்த குணத்தை ஆட்சேபித்தாலும், உண்மை என்ன தெரியுமா? உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஆண் இனம் இப்படிதான் இயங்குகிறது. பெண்பால் என்ற ஒன்று எதிரில் இருந்தாலே போதும், ஆண் அலர்ட் ஆகி, தன்னை பெரியவனாய் காட்டிக்கொள்ளும். பெண் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு, விலகாமல், சும்மா அப்படியே நின்றாலும்கூட அதையே தன்னை ஊக்கப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு, நெருங்கி வரும். அப்போதும் அந்த பெண் விலகாமல் ஆதரவு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினால், உடனே ஒரு ஆணாய் தன் கடமையை ஆற்ற ஆயத்தமாகி விடும்.
உலக ஜீவராசிகளின் நியதியே இதுதான். பெண் எப்போதும், அசையாமல் ஆணை ஆழம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆணாகவே முன்வந்து அட்டெண்டென்ஸ் போட்டால், அவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். முடிவு எப்போதுமே பெண்ணைப் பொருத்ததுதான். ஆனால் முயற்சி செய்வது ஆணின் கடமை. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்களேன். பூவின் நட்டநடுவில் ஆடாமல் அசையாமல் பெண் உருப்பான கைனீஷியம் அமைந்திருக்கும். அது இப்படி சும்மா இருந்தாலும், எங்கிருந்தோ பல மகரந்தத் தூள்கள் பறந்தோ, மிதந்தோ, பிற ஜீவராசிகளின் மேல் தொற்றிக்கொண்டோ வந்து இந்த கைனீஷியத்தின் வாசலை அடையும். கடைசியில் எந்த மகரந்தத்திற்கு வெற்றி என்பதை அந்த கைனிஷியம்தான் முடிவு செய்யும். சூல் கொள்ள கைனிஷியத்திற்கு ஒன்றோ, இரண்டோ மகரந்தம்தான் தேவைப்படும். அப்படி இருந்தும், எல்லா பூக்களுமே தங்கள் மகரந்தத்தை பரப்பத்தானே செய்கின்றன. எந்தப் பூவும், ``எப்படியும் சிலதுதானே தேர்வாகும். எதற்கு வேலைமெனைக்கெட்டு இத்தனை மகரந்தத்தை உற்பத்தி பண்ணிக்கிட்டு, ஒரு வேலை நமக்கு சான்ஸ் கிடைக்கலைனா?'' என்று பெசிமிஸ்டிக்காய் இருப்பதில்லையே!
``சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, முன் ஏற்பாடாக போட்டிக்கு தயாராகிடணும், வெற்றி தோல்வி முக்கியம் இல்லை, விளையாட்டுல கலந்தே ஆகணும்'' என்ற ரீதியில்தான் எல்லா ஜீவராசி ஆண்களுமே களமிறங்குகின்றன.
இதே விதியை அனுசரித்துதான் மனித ஆணும், முன் ஏற்பாடாக எப்போதுமே, ``ரெடி ஸ்டெடி, ஸ்டார்ட், ஜூட்'' என்று தயாராகவே இருக்கிறான். எப்போது எங்கே தன்னை ஆதரிக்க ஒரு பெண் கிடைப்பாள் என்கிற இந்த வேட்கைதான் அவனுடைய இயல்பு. ஆண்கள் மட்டும் இப்படி இயங்கவில்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிர்வாழ முடியாது.
இது மற்ற ஜீவராசிகளை பொருத்தவரை எந்த சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் மனித வர்க்கத்தை பொருத்தவரை, ஆணின் இந்த ``எந்தப் பெண் கிடைப்பாள்?'' வேட்கை, அநாகரீகமாய் கருதப்படுகிறது. காரணம் மிருகம் மாதிரி, பெண்ணைப் பிடித்து புணர்ந்துவிட்டு, பிறகு அவளை மறந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போகும் போக்கு மனிதர்களுக்கு ஒத்து வராததே காரணம். மிருகக் குட்டிகளுக்கு அப்பா என்ற ஒரு கேரக்டரே தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்குத்தான் அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமே. இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தையின் வாழ்வு நல்லபடியாய் அமையும் என்பதினால்தான் இன்றைய புத்திசாலி ஆண்கள் ஒரே ஒருத்தியோடு, காலம் முழுக்க உறவு கொள்கிறார்கள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடுதான் குழந்தை வளர்ப்பிற்கு மிக சாதகமானது என்பதாலேயே முதிர்ச்சி அடைந்த கலாச்சாரங்கள் இதையே ஆதரிக்கின்றன. இந்த அளவு, புரிதலும், அறிவும் இருக்கும் ஆண்கள் இதனாலேயே, தன் துணை அல்லாத பிற பெண்களிடம் கண்ணியமாய், கட்டுப்பாடாய் பழகுகிறார்கள்.
இத்தனை புத்திசாலித்தனம் இல்லாத ஆண்கள்தான் இன்னும் தொடர்ந்து மிருகபாணியில் மானாவரி சாகுபடி செய்கிறார்கள். எப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ஈஷிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் இப்படி மானாவாரியாக பெண்களுக்கு ரூட் விடுவது அத்தனை புத்திசாலித்தனமான போக்கில்லை என்றாலும் என்ன செய்வது, இன்னும் பல ஆண்கள் மிருகங்களாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் என்றால் மிருகம் என்று அவனை மகிஷாசுரமர்த்தினி மாதிரி வதைத்திருக்கலாம். ஆனால் இன்றைய சட்டமோ, மிருகவதையை தண்டிப்பதால், மர்த்தனம் எல்லாம் இனி செய்யமுடியாதே. அதனால் ஏதோ நம்மால் முடிந்தது, ``இந்த வேலையை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதே'' என்ற சிக்னலை வெளிப்படுத்தி, அவனை ஆஃப் பண்ண முயலலாம். எப்படி, ஆஃப் சிக்னலை கொடுப்பது என்கிறீர்களா? ஆல் அபவுட் தட் இன் நெக்ஸ்ட் சிநேகிதி.
Labels:
பாலியல் கல்வி
Subscribe to:
Posts (Atom)