Saturday, May 31, 2008

முதல் பெண்ணியவாதி

இன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள், நல்ல வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால் இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்து குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய் தான் இன்றைய பெண்கள் கொஞசமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது. இப்படி பெண்களுக்காக போராடியவர்களில் பல பேர் பெண்கள், இவர்கள் தங்களுக்காக தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால் தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகதீவிரமாக பெண்களின் உரிமைக்காக் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் திரு ராமசாமி.

ஆனால் ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை....சாதாரண மனிதர்களை தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்க்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேக சிறப்பு பெயரால் தானே அழப்போம். இப்படி சிறப்பு பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புபெயரே நிரந்திரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மஹான் தான். இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்கு பிரசித்தமான அவரது சிறப்பு பெயர் தான் தந்தை பெரியார். யோசித்து பார்த்தால், புத்தர், கிரிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தர சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள், பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்த்தற்காக பிரசித்திபெற்றவர். ஆனால், இந்த பெரியார் என்ற மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.

இன்று ஆணுக்கு பெண் சம்ம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூக கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை, அவளுக்குஆணை போலவே எல்லா சுத்ந்திரமும் உண்டு தான், இந்த பெண் விடுத்லை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன் நட்த்திய பெரும் போராட்ட்த்தின் நேரடி விளைவு தான். கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பாலிய விவாகம் செய்ய பட்டுவிடுவார்கள். இந்த குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அல்பாஅயிசில் மாண்டுபோனான் என்றால், இந்த குட்டி விதவைக்கு எல்லா சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்களி ஆக்கி முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்த குட்டிப்பெண் தன் மித ஜீவனத்தை முழு பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்த குட்டி பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து.

அமங்களியான் பெணின் கதி தான் இவ்வள்வு மோசம் என்று பார்த்தால், சுமங்களியாக இருந்த பெண்ளின் நிலையும் மட்டமாகவே இருந்த்து. அந்த காலத்து பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது, கல்விகற்க்கூடாது, வேலைக்கு போக முடியாது, சுயமாய் சம்பாதிக்க முடியாது, சொத்துரிமை கிடையாது, சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை, சுயமாய் வாழ்க்கைதுணையை தெர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்த சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனி பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளதோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்த்து...காரண்ம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள், அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது.

அந்த காலத்து ஆண்களும் பெண்களை பற்றி பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பாலியவிவாகம் தான் சரி, அப்போது தான் பெணின் கற்பு 100% தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரை போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள்.

ஆனால் பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர், மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்க தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவ சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்த்தவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத்த்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பட்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.

ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்பனை கூட செய்யமுடியாத காலத்திலேயே ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ ட வின்சியை போல, பெரியாரும், தம் காலத்தை மிஞ்சும் யோசிக்கும் தீர்க்கத்சிந்தனையாளராக இருதார். ஒரு சமூகவிஞ்ஞானியாய், தம் சம்காலத்தவர் சிந்தித்துக்கூட பார்க்க் முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண் இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா விதத்திலும் ஆணுக்கு சரி நிகர் சமானம் என்று முதல் முதலில் பெண்ணியம் பேசியவ்ரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காக் பல நூதன போராடங்களை மேற்கொண்டு, சமுக அமைப்புகளை எதிர்த்து தாக்கினார்.

அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல், அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை என கருதப்பட்டன. பெரியார் இந்த பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.

ஆணுக்கு பெண் சம்ம் என்ற பின் பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்தி காட்டி ஆணின் அங்கீகாரத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்க்ள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகிய்வற்றை கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காக், செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காக் செலவிடும் நேரத்தை கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல்; உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேளைகளில் செலவிடும் நேரத்தை தங்கள் அறிவை மேம்படுத்த பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளை துறந்ததை போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களை போல, மேலய நாட்டுப்பெண்களை போல, பேண்ட். சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெத்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே என்று ஐடியா சொன்னார் பெரியார்.

பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் வித்த்தை பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்த்து என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதை கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே! பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக்கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்கு சிந்தனையுள்ளவர் பெரியார்.

இது போலவே பிள்ளைபேறு பற்றியும், கீழ்படிதலை பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் யந்திரங்களாக பார்க்கவில்லை, அவர்க்ளை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களை போலவே பெண்களூம் நன்றாக படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற் அவரது புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால் அறிவு அவளை சுதந்திரப்படுத்தும், அதனால் பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார். பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போனதலைமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன் நம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தை காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்துக்கொள்வான் என்றார்.

பெண்கள் சமயல் அறையிலேயே முடங்கிக்கிடப்பதை பற்றியும் பெரியாரிக்கு எதிர்ப்பு இருந்த்து. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமயலே கதி என்று இருப்பதினால் தான் அவர்க்ளது அறிவை உபயோகமாக பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உண்வு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.

தமிழ் பெண்களின் உச்ச்க்கட்ட உண்ர்வான கற்பை பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களை கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்த குறிகிய வட்ட்த்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதை திருமணங்களை தோற்றுவித்தார். சாதாரண திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கபடுவாள். ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை வந்த பிறகு, பெண்னண தொரந்து ஏன் ஒரு பொருளாகவே நட்த்தவேண்டும்? தனக்கு பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளை தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமான்ப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கை துணையாய் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் ஒரு அவுரவமான கண்ணியமான, நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் தங்கள் சுய அவுரவத்தை பாதுகாத்துக்கொள்ள முடிந்ததால், இது சுயமரியாதை திருமணம் என்று பிரபளமானது.

ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துக்கொண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார்கள் பலர். இன்று வரை தமிழ் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டை பற்றி ஆஹா ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார், கால் நடைகளுக்கு தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிரு கட்டுவார்கள், பெண் என்ன விளங்கா, அவளுக்கு எதற்கு ஒரு கழுத்து கயிரு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெணும் சம்ம் ஆகிவிட்ட காரண்த்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதை போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்த சடங்கை கைவிடலாம், என்றார். தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமணம் செய்தால் அமங்களம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய் காட்டினார் பெரியார்.....இந்த பெண்கள் எல்லாம் சாஸ்திர ஸ்ம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம், ஆனால் அதனால் அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்த சுயமரியாதை திருமண்ங்கள் சட்ட படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா தமிழகமுதல் அமைச்சரானதும் முதல் வேளையாக இந்த சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கிவிட்ட்தால், பெரியாரின் இந்த நவீன திருமணம் மிக பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்த திருமணம் அமோக வரவேற்பை பெற ஒரு புது சமுக புரட்சியை ஏற்படுத்தியது.

இத்தகைய சுயமரியாதை திருமணத்திற்கு பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கண்வனை பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெத்து செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீண்டித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்கவேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்த காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்saரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காக பெற்றுக்கொடுத்தார்.

அதுவும் தவிற கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசம்ம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படிகிற சொல்லால் அழைபதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விழிசொல்லாய், துணைவர், இணைவர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பத்ங்களை பயன்படுத்த ஊக்குவித்தார். எதே போல எல்லா துறைகளிலும் மகளிர் அயராது உழைத்தார் பெரியார்..., சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்த்துரிமை என்ப்வை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பல பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார். அவரது சிந்தனை தெளியும், தர்கத் திறனும், எல்லோரது கண்களையும் திற்ந்து மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்த்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் பெரியார். அவரது கருத்துக்களை பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படி படியாக, அதுவே நாகரீகத்தின் உச்ச்க்கட்ட வெளிபாடானது. பெண்களை கண்ணியமாய் நடத்துவதே நாகரீமானது.

பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புது தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துக்கொண்டு விழிப்புற்றார்கள். பெரியாரும் பெண்களை ஊக்குவிக்கும் விதம்மாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மா நாடுகளை கூட்டினார். இப்படி 1936 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மா நாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்திற்காக் பெரிதும் பாடுப்பட்ட அவருக்குத்து ‘பெரியார்’ என்ற சிறப்பு பெயரைச்சூட்டினர். அன்று முதல் திரு ஈ வே ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பல பல சமூக சீர்திருத்தங்களை செய்திருந்தார்.....ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய் சேவை தான், வெறும் ராம்சாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாம்னிதன் ஆக்கியது.

பெரியாரும் தான் இந்த பெரயருக்கு மிக பொருத்தமானவர் என்பதை நிறுபவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையின் விட்டுச்சென்றார். அது வரை எந்த தலைவரும் தன் நிறுவனத்தின் பொருப்பை பெண்களிடம் ஒப்படைத்தாக சரித்திரமே இல்லை....ஒரு வேளை பெண்களால் பெரிய வகிக்கமுடியுமோ என்று மற்றவர்கள் சன்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால் பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

அவர் நம்பிக்கையை காப்பாற்றி, பெரியாரின் பெண்ணிய கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி தஞ்சை அருகே உள்ள வள்ளம் எனும் ஊரில் கிட்ட்தட்ட இருவது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட்து. இந்த கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட், சட்டை தான். யோசித்து பாருங்களேன், இன்று வரை தமிழ் கலாசாரத்தில் பெயரால், பெண்கள் கால்லூரிகளுக்கு பேண்ட் சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைகழக துணைவேந்தர்கள் எல்லாம் கரார் ஒடுக்குமுறை செய்வதை பார்த்தால் உடனே புரிகிறது, திரு ஈ வே ரா, உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மஹா முற்போக்குசிந்தனையாளர் தான். இந்த பெரிய மனிதருக்கு இன்றைய எல்லா பெண்களும் நன்றி சொல்லக்கடமை பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரதில் இருக்க காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறை படுத்த முயலும் சாமான்ய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காக் போராடினாரே, அவர் தான் பெரியார். எப்பேற்பட்ட பெரியார்!

17 comments:

Anonymous said...

ஷாலினி!
"ஞாநி பேசுகிறேன்ல" உங்களோட பேட்டி பார்த்தேன்! மிக சுவாரசியமா இருந்தது! முக்கியமா உங்க வெளிப்படைத்தன்மை கவர்ந்தது! மேலும் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்!

& நாகம்மையுடனான (சரிதானே பேரு?) பெரியாரின் திருமணத்தை ஏன் நீங்கள் தொடவில்லை!
"எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?"னு நான் கேட்க மாட்டேன் - ஏன்னா அதுல அடிமைத்தனம் இருந்ததா எனக்குத் தெரியலை! ரெண்டு பேரும் மனசொத்துத் தான் திருமணம் செஞ்சுகிட்டாங்கனு படிச்சிருக்கேன். ஆனா பெரியாரின் பெண்ணியம் பேசும் இந்த் தலைப்பில் இந்த கருத்து விடுபட்ட்டது - தற்செயலா? தனிச்செயலா?!

அன்புடன்
வெங்கட்ரமணன்!
venkatramanan [at] gmail [dot] com

Anonymous said...

ஷாலினி அவர்களுக்கு,
பெரியாரின் பெண்ணியம் பற்றிய மிக அழகான பார்வையில் உங்கள் பதிவைத் தந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.....

அத்துடன் வெங்கட்ரமணன் அவர்களுக்கு,
இங்கு ஷாலினி பெரியாரின் பெண்ணியத்தைப் பற்றிய ஒரு விரிவான பார்வையைத்தான் பதிவாகத் தந்திருக்கிறார்.
இதில் நாகம்மையை அவர் சொல்லாமல் விட்டது தற்செயலோ, தனிச்செயலோ என்பதைவிட, அதைச் சுட்டிக்காட்டி இங்கு நீங்கள் பேசுவது விசமச் செயல் என்பது மட்டும் தெளிவாகிறது.
மஹாத்மா காந்தியைப் பற்றிக் கூட மிக அதிகப்படியான ரசிக்க முடியாத விமர்சனங்கள் உண்டு.
அவை மஹாத்மா என்னும் சொல்லுக்கும் ஊறு விளைவிப்பவை. அவற்றை மட்டும் கருத்தில் கொண்டு, காந்தியை மஹாத்மா என்று சொல்லாமல் எங்களால் விட்டுவிட முடியுமா.....?

நாம் மஹாத்மா காந்தியின் நற்செயல்கள் பற்றி எழுதும் போது அந்த விமர்சனங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல இருக்கிறது உங்கள் வாதம்.

தமிழ்நாட்டில் இருந்த தலைவர்களில் பெண்ணியத்திற்கு இந்த அளவிற்கு பாடுபட்டவர் பெரியார் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
அதை ஷாலினி அவர்கள் மிக அழகாகவே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Dr N Shalini said...

உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை.....
ஒரு அடல்ட் ஆண் முதலில் நாகம்மை என்கிற ஒரு பெண்ணை விரும்பி மணந்துக்கொண்டார், அந்த மனைவியுடன் மிக அன்பாகவே வாழ்ந்தும் வந்தார். அந்த மனைவி இறந்து விட்டார். அப்போதும் வேறு எந்த பெண்ணையும் துணையாக்கிக்கொள்ளாமல் ஒரு கண்ணியமான விதவனாகவே வாழ்ந்தார். பெண்களுக்காக பெருதும் பாடுபட்டு, அவர்களுக்கு சுதந்திரம் பெற்று தர முயன்றார். அவர் இப்படியெல்லாம் அந்த காலத்திலேயே gender sensitiveவாக இருப்பதை பார்த்து மணியம்மை என்கிற இன்னொரு பெண் அவருக்கு தொண்டாற்றவென அவர் வீட்டுற்க்கே வந்து விட்டார். இந்த பெண்ணை சில வருடங்கள் கழித்து இந்த ஆண் மணந்துக்கொண்டார்....இதில் என்ன இருக்கிறது நியாயப்படுத்த?

Anonymous said...

வணக்கம், உங்கள் முதல் பெண்ணியவாதி என்கிற பெரியாரைப் பற்றிய கட்டுரையை அருகாமையில் படிக்க நேர்ந்தது, மிகச் சிறப்பான கருத்துக்களுடன், ஒரு மருத்துவரின் கோணத்தில் அணுகப்பட்ட உங்கள் கட்டுரை, மற்றும் பின்னூட்டம், பெரியாரின் தனி மனித வாழ்வில் நிகழ்ந்த வாழ்க்கை ஒப்பந்தங்களைச் சொல்லி அவரது முற்போக்கு எண்ணங்களை மறுதலிக்க எண்ணும் நண்பர்களின் வயிற்றில் உண்மையில் புளியைக் கரைத்திருக்க வேண்டும்.

உங்கள் எண்ணங்களின் வாயிலாக, உண்மையான ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட பெண் என்பதை உறுதி செய்து, உங்களைப் பற்றிய உயர் எண்ணங்களை எங்களைப் போன்ற பார்வையாளர்களிடம் உருவாக்கி இருக்கிறீர்கள்.

உங்கள் பணிகள் தொடரட்டும்.

தோழமையுடன்
கை.அறிவழகன்
http://tamizharivu.wordpress.com/

vignathkumar said...

mamdem i have lots of regard on periyar,bharathiyar,and gnadi because of their fare and faithfulness work regarding social democrasy.periyar he openly wrote his sex life with sex labours in his auto biogarphy.even gandi wrote about men women relations in his bioraphy, this shows how consious they are to make people know the fact.but periyar didnt compale any women to wear {lunkee} or compale to remove her hear rings.
i supporte blank noise jasmeens views a loot.
blank noise views geting very good responds and growth in india exept in tamil medias , i think there ur psycologies {regarding dress}will not work.only in poor&middle class innacent tamil womens it will work .not only this most of tamil media male domenent psycologies.

ஆட்காட்டி said...

என்னதான் இருந்தாலும் அவரது திருமணம் குறித்து எனக்கு எப்பவுமே ஒரு வருத்தம் உண்டு. நண்பன் ஒருவன் சொன்னான் ஊரார் பழிப்பார்கள் என்று தான் மணம் முடித்தாராம் என்று. எவ்வளவோ எடுத்துக் காட்டிய பெரியாருக்கு இது பெருசா? நான் என்ன சொல்ல வாறன் எண்டால் வயது அதிகம் வைத்து திருமணம் செய்தது? உண்மையிலேயே அவருக்கு மறு வாழ்வு குடுக்க விருப்பமிருந்தால் சற்றேறக் குறைய தனது வயதில் உள்ள பெண்ணை மணந்திருக்கலாம். அப்புறம் தனது கொள்கைகளையே சிதறடித்து விட்டார்.

ஆட்காட்டி said...

பெரியார் என்னதான் இருந்தாலும் வயது வித்தியாசம் அதிகம் உள்ள பெண்ணை மணம் முடித்தது அவரது கொள்கைப் படியே தவறு. அப்படி மறு வாழ்வு குடுக்க விரும்பி இருந்தால் தனக்கொத்த வயதுள்ள பெண்ணை முடித்திருக்கலாம். அல்லது மணியம்மைக்கு வேறு கலியாணம் பண்ணி வைத்திருக்கலாம். அப்படி செய்த பின் அண்ணா முதலியவர்களைத் திட்டித் திட்டியே தனது கொள்கைகளை காற்றில் விட்டு விட்டார். கடைசியில் அருமையான ஒரு சந்தர்ப்பம் கை நழுவிப் போனது தான் மிச்சம்.

sriram said...

பாரதி தான் முதல் பெண்ணியவாதி என்பது எனது கருத்து

சாணக்கியன் said...

நிறைய புதிய செய்திகள்!. பல நிகழ்ச்சிகள் முன்னரே படித்திருந்தாலௌம் மனதில் இப்போது தான் பதிகிறது. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை களைந்து விட்டு பதிவிடலாமே?
/*என்பதை நிறுபவித்தார்*/
/*பெண் என்ன விளங்கா*/
என்பவை எல்லாம் மாற்றுப்பொருள் தரும் விதமாக உள்ளன.

Pradeep said...

Very informative. Today only i know that who gave the name as "PERIYAAR".

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பெரியாருக்கு தொண்டாற்ற மணம் செய்துதான் சிறந்த வழி என்று நாகம்மை தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை. மகளாக பெரியாரோ, தந்தையாக நாகம்மையோ ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த விமர்சனங்களே எழுந்திருக்காது. மக்களுக்கு அதிகம் கவணம் எடுத்து இந்த விஷயத்தை பரப்பியதே பெரியார் தொண்டன் அண்ணாதான் என்பது வேதனை. அவர் இதை சட்டை செய்யாமல் விட்டிருந்தால் யாரும் இதனை பெரியபிரட்சனையாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பெரியார் பெண்ணினத்திற்கு செய்தமைகளை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். அவருடைய பல கருத்துகளை இன்று மக்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. மதுவிலக்கும், கள் எதிர்ப்பும் இன்று கணவுகளாகவே இருக்கின்றன.

thuya said...

பெரியாரைப் பெண்ணிலை முன்றேத்துக்குக் காரணமானவராக ஏற்கமுடியவில்லை. நாகம்மையை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக தன் நண்பர்களை வைத்து விபச்சாரி எனக் கூப்பிட வைத்ததாக படித்திருக்கின்றேன். அத்தோடு பல தடவை அவர் மீதான வெறுப்பையும் உமிழ்ந்திருக்கின்றார். அத்தோடு மணியம்மையின் திருமணம் கூட அபத்தமானதே...

காந்தியைப் பற்றி வைத்தியர்.சாலினி சொல்லியிருந்தார். காந்தியைப் புகழ்வது அவர் கொண்டிருந்த அகிம்சைப் போராட்டத்துக்காகவே. அவர் ஒரு பெண்ணியவாதி என யாராவது பாராட்டுச் சொன்னால், அவருடைய வாழ்வில் நடத்திய மறுபக்கத்தைச் சொல்வதில் தடை எதும் இருக்காது. அவர் பகழப்படுவது அவர் சுதந்திரத்துக்காகப் போடியதற்காகத் தான். பெரியார் செய்த தீண்டாமை தொடர்பாக இத்தலைப்பு இருந்தால் அவர் பெண்களோடு கொண்டிருந்த ஆர்வத்தை அதில் கதைக்க வேண்டியிருந்திருக்காது. ஆனால் பெண் தொடர்பாக அவரை இங்கே புகழ்ந்து கொண்டு, மறுபக்கத்தைக் கதைக்க வேண்டாம் என்பது எவ்வகை நியாயம்??

Dino LA said...

அருமை

bala said...

miga arumayaana pathivu

nanri shalini avarkalukku

MSK said...

வணக்கம் திருமதி.ஷாலினி உங்களது "முதல் பெண்ணியவாதி"
மிகவும் அருமையாக இருந்தது. பெரியார் பெண்களை சரிசமமாக பார்த்தவற்றை படித்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் உங்களது கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் ...

Anonymous said...

மனோதத்துவ மருத்துவர்
ஷாலினி அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய பெண்ணியம் படித்தேன் நன்றாக இருந்தது ஆனால் நிறைய தவறைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.தவறை திருத்தி பிரசுரித்திருக்கலாம். என் உதவி தேவைப்பட்டால் உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய email - thozhirchelvi@gmail.com