Saturday, April 18, 2009

வயதிற்கு வருவது

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினை பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!

19 comments:

Anonymous said...

//ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை//

பாலியம் விசயத்தில் ஆண்களுக்கு அரைகுறை அறிவே எப்போதும் கிடைக்கிறது.

ஜோதி கார்த்திக் said...

அன்பு சகோதரிக்கு
என் மனதை பல நாட்களாக அரித்து கொண்டுறிந்த விஷயம் நீங்கள் எழுதி விட்டிர்கள் ,
இந்த கட்டுரையை எழுதியத்தின் முலமாக இதை படிபவர்களின் மனதில் சிறிது விழிப்புணர்வு வரும் என்பது சந்தோஷமான ஒன்று

// இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் //சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் //சமமாய் நடத்தியதாகும்!

சூப்பர் பஞ்ச் !!!!!

SK said...

நல்ல பதிவு டாக்டர்.

இது போல் ஆண்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்து முடிந்தால் ஒரு பதிவு எழுதுங்கள் டாக்டர்.

Sukumar said...

உங்களது கட்டுரைகளை விகடனில் படித்திருக்கிறேன். அழகிய தமிழில் பொறுமையாக எளிமையாக எடுத்துரைகிறீர்கள். மீண்டும் ஒரு தெளிவான கட்டுரை. பதிவிற்கு நன்றி

நாணல் said...

மாதவிடாயின் போது ஏன் வீட்டிற்கு தூரம் என்று வழிவழியாக சொல்கிறார்கள் என புரியாமல் இருந்தேன்..உங்கள் கட்டுரையின் மூலம் உண்மையில் அந்த பழக்கம் வர காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டேன்... நன்றி டாக்டர்...

Anonymous said...

//சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!//


ஆண்களை உட்கார வச்சு... மஞ்சள் தடவி.... நல்லாவா இருக்கும்...
வேண்டாம்.
வெளியில தெரியாமலே இருக்கட்டும்..

தெளிவான கட்டுரைக்கு நன்றி .
----ராசா

Gifariz said...

இவ்வளோவு நாளும் இருந்த ஒரு பெரிய சந்தேகம் இன்று தான் தீர்ந்தது...

அடுத்து, மாதவிடாய் காலத்தில் சமய விடயங்களில் ஈடுபடக்கூடாது என்பதில் உண்மை உள்ளது. அதாவது அந்த ரத்தப் போக்கு ஒரு அசுத்தமாகும் எனவே அசுத்தமான நேரங்களில் சமய விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதே சிறந்தது. இங்கு நாங்கள் அதற்குத்தானே சேனிரரி நேப்கின் வந்துவிட்தே என்று வாதிடலாம். ஆனால் உண்மையில் அவள் அசுத்தமாகவே இருக்கிறாள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
இதற்கு இஸ்லாம் கூறும் கருத்தாவது
மாதவிடாய் காலங்களில் சமய (தொழுகை, ஓதுதல்) போன்றவற்றை செய்யாமல் இருக்க சொல்கிறது எனவே அதில் சில உண்மைகள் இருக்கிறது. காலப்போக்கில் அதை கண்டுபிடிப்பார்கள். ஏன் என்றால் குர்ஆன் மட்டுமே விஞ்ஞானத்திற்கு முறன் இல்லாமல் உண்மையான கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது

புருனோ Bruno said...

//இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!//

ஒரு திரைப்பாடலில் “வாடா மச்சி வயசுக்கு வந்துட்ட” என்பது போல் வரும்

--

ஒரு பட்டிமன்ற பேச்சாளர் அந்த பாடலாசிரியரை போட்டு “ஆண் எப்படி வயசுக்கு வருவான்” “இது கூட தெரியாதவனெல்லாம் பாட்டு எழுதுறான்” என்று வறுத்து எடுத்து விட்டார்.

--

இது கூட தெரியாதவரெல்லாம் பட்டிமன்றத்தில் பேசுகிறாரே என்று நினைத்து நொந்து கொண்டேன்

Anonymous said...

good artical...thanks & please write more and more..

Dr N Shalini said...

Gifarz,
உங்கள் கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன். நீங்கள் எந்த மதம் என்று எனக்கு தெரியாது, ஆனால் உங்கள் கருத்து மத அடிப்படை வாதத்தை பிரதிபளிக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்வது? உலகில் உள்ள எல்லா மத நூல்களுமே, அதை எந்த மனிதரும் எழுதவில்லை, நேரடியாக கடவுளே வந்து ஓதியதாகத்தான் சொல்கின்றன. ஆனால் இது சாதியமாகாதே, கடவுள் ஏன் மனித மொழியில் நூலை வெளியிட வேண்டுமெ? மற்ற ஜீவராசிகளை பற்றி கடவுளுக்கு அக்கறை இல்லையா?
அப்படியே மனித மொழியில் தான் எழுதவேண்டும் என்றால், அதையேன் சமஸ்கிருதம், ஹீப்ரூ, ஆரபிக், சீனம் ஆகிய மொழிகளில் மட்டும் ஓதிணும்? அப்படியானால் உலகில் உள்ள மற்ற இன மனிதர்களை கடவுள் கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளவில்லையா? ஏன் அவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்களாம்? கடவுளே இப்படி ஓரவஞ்சனையாக நடந்துக்கொள்வது சரியா? என்ற பல கேள்விகள் எழுகின்றனவே.....

Dr N Shalini said...

and the whole point is ஆண்வழி சமூக மரபு ஏற்பட்ட பிறகு தான் மாதவிடாய் சமயத்தில் பெண் தீண்டத்தகாதவளாய் கருத பட ஆரம்பித்தாள். பெண் வழி சமூகமாய் இருந்த போது இதே மனிதர்கள் மாதவிடாய் உதிரத்தை ஒரு வித மதசடங்காகவே எண்ணியிருந்தார்கள். for more information please refer to the book, பெண்ணின் மறுபக்கம்:)

சாணக்கியன் said...

பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாமல் அந்த நாட்களில் பெண்கள் மிகவும் கஷ்டப்படுவதாக நாஞ்சில் நாடன் இந்த வார ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார், படித்தீர்களா?

kayaljram said...

@ Gifarz
I don know what made u think that menstrual blood is unhygenic. We should not forget that this blood is the most sterile, nutrition rich medium in which an embryo develops and gets delivered as a 'picture perfect' baby .
And menstrual blood is a rich source of stem cells. Studies are going on to make it feasible - a boon for many patients who have recieved a death sentence.
As Dr. Shalini says, when this is universal , pan-feminine(most mammals) why the human race alone disturbs you?.And interestingly only humans are obsessed with this.Rest of the species don't give a damn !

Secondly Gifarz, U ought to remember that our sweat, urine, nasal discharge,saliva are all special filtrates of blood. Is the entire mankind unhygenic then?
Rethink buddy !

Gifariz said...

Dr. N. Shalini
மத அடிப்படை வாதம் என்பதை எது என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து கடவுள் ஒரு நாளும் வந்து வேதங்களை ஓதிக்காட்டவில்லை. அவன் வேதத்தை கடவுளுடைய தூதர்களை அனுப்பியே வேதங்களை இறக்கிவைத்தான். (அவர்கள் மனிதர்கள்).
அடுத்து கடவுள் தான் இந்த உலகைப்படைத்து இதில் உயிரினங்களைப் படைத்தான் (மனிதன் உட்பட) ஆனால் உயிரினங்கள் அனைத்தையும் படைத்து அதை இப்படித்தான் வாழவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளான். இதில் மனிதர்களைத்தவிர அனைத்தும் கடவுளின் ‘ஓடருக்கு’ கட்டுப்பட்டு ஒரு ‘செடூலில்’ வாழ்கின்றன. மனிதன் மட்டும் வழிதவருகிறான் இதனால் தான் அவனை சீர்செய்வதற்காக ஒவ்வோரு சீர்கெட்ட சமூகத்திற்கும் தூதுவர்களை அனுப்பி அவனது இவ்வாறுதான் வாழவேண்டும் என செய்கிறான். இதனால் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுடைய மொழியிலேயே வேதங்கள் இறங்கின…
இதில் குர்ஆன் மற்றுமே எவ்வித மாற்றமும் செய்யப்பட்டாமல் ஆதாரபூவமாக இப்பவும் உள்ளது. மற்றய அனைத்து வேதங்களும் மனிதர்களால் அவர்களுக்கு இலகுவானமுறையில் மாற்றம் செய்யப்பட்டு விட்டது இது உண்மை, கடவுளின் கட்டளைகள் அவைகளில் இல்லை.
குர்ஆன் ஆதாரபூவம் என்பதை நிறுவுவது என்றால் நிறுவமுடியும் அதற்கு http://www.harunyahya.com இதனைப்பார்துக் கொள்ளவும்.
குர்ஆனிலே இனி மனிதர்களைத் திருத்துவதற்கு தூதர்கள் வரமாட்டார்கள் என்று உள்ளது. மனிதர்களே இவ்வேதத்தைப் படித்து மனிதர்களே மனிதர்களைத் திருத்த வேண்டும் என்று உள்ளது.

kayaljram
இரத்தப்போக்குடன் அந்த முட்டையும் பழுதாகி அசுத்தமாகவே வருகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்
நன்றி

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

முன்பெல்லாம் நான் தீட்டு என பெண்களே சொல்லி ஓய்வு எடுத்துக்கொண்டார்கள் என்பது ஆச்சிரியமாக இருக்கிறது. இப்போதெல்லாம் அதைப் பற்றி அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

மதம் சார்ந்து யோசிக்கும் போது அறிவியலை மறந்துவிட வேண்டியிருக்கிறது. சற்குருவிடம் இதைப் பற்றி ஒருவர் கேள்விக் கேட்டு பலமாக திட்டு வாங்கிக்கொண்டார். கடவுளை வணங்கக்கூடாது என்று சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சற்குரு கோபமாக சொன்னார்.

கல்வி அறிவு பெருகியிருக்கும் நேரத்திலும் பழமைவாதிகளால் கொஞ்சம் நெருடலே ஏற்படுகிறது. அவர்களும் விரைவில் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஆண்கள் வயதுக்கு வருவதை பற்றி மட்டுமல்ல. பெரும்பாலும் புணர்ச்சி செய்வது எப்படியென தெரியாமலே இருக்கின்றார்கள். அவர்களை தந்திரமாக பயன்படுத்திக்கொள்ளும் போலி மருத்துவர்கள் இங்கே ஏராளமாக இருக்கின்றார்கள். ஆண்களுக்கு அறிவு கொடுக்கும் கட்டுரைகளை நீங்கள் கண்டிப்பாக வலைப்பூவில் இடுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Unknown said...

madam,
I have read many of ur blogs and few of ur books. you are always underestimating men gender. why any reason? because of u are a woman?.....

Raj kumar

Anonymous said...

நான் Dr. N. Shalini கருத்தை எற்று கொள்ள வேண்டும். எந்த மத நுல்கல்லும். எந்த கடவுள்ளும் சொல்ல வில்லை. எல்லாம் மனிதனின் சுய மாக சிந்தித்து ஏழுத பட்டவைதான்.

Dr.shiva

Unknown said...

Hello dr,

I have gone through couple of articles here and all were good.

Keep posting :)

I have been searching for your book "Antharangam Inimaiyanathu" and it's not available anywhere.

Please let us know where can i purchase? (either online or bookshop).

Thanks and Regards,
Ramesh