Friday, February 26, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 29

ஒரு ஆணிடம் என்னென்ன கல்யாண குணங்கள் இருந்தால் பெண்ணின் வாழ்க்கை ஷேமமாய் இருக்கும் என்பதை எல்லாம் இத்தனை மாதங்களாக பார்த்துக் கொண்டு இருந்தோம். இப்போது எந்த மாதிரி குணங்கள் இருந்தால் அவனை எமர்ஜென்சியாக கழற்றிவிட்டே ஆக வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்!


1. கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே தன் வகுப்பின் பேரழகியான அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரமே, ‘‘கட்டுனா இவளைக் கட்டணும்டா’’ என்று ஒரு திடமான முடிவுக்கு வந்துவிட்டான் பையன்!

காதல் சொட்டும் பார்வைகள், அவ்வப்போது ஃபோன் கால்கள், வாழ்த்து மடல், வெட்டி அரட்டை, கல்லூரி கேண்டினில் தயிர்வடை என்று மெல்ல மெல்ல அவன் அந்தப் பெண்ணுக்கு ரூட் விட, அவன் இப்படி மெய் வருந்தியதற்கு கூலியும் கிடைத்தது!

இப்படி எல்லாம் இனிமையாய் ஆரம்பித்த அவர்களது காதல் சுபமாகத்தானே முடிந்திருக்க வேண்டும்? அதுதான் இல்லை. காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறந்த சில மாதங்களுக்கு எல்லாம் பையன் சொல்ல ஆரம்பித்தான். ‘‘நான் நேத்து ஃபோன் பண்ணப்போ ஏன் லைன் பிஸியா இருந்தது? இது நான் உனக்கு வாங்கித் தந்த ஃபோன் தானே, என்னைத் தவிர வேற யாருக்கும் இந்த நம்பர் தர கூடாதுன்னு சொன்னேனே, எவனோட பேசிக்கிட்டு இருந்தே?’’

இதைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி ஆனாள். தலைவரின் சினம் தணிந்ததும், ‘‘தங்கையிடம்தான் பேசினேன். கால் ஹிஸ்டரியில் நீயே பார்த்துக்கொள்’’ என்று தன்னிலை விளக்கமெல்லாம் தந்து அவனை தெளிவுபடுத்த, ‘‘இனிமே இப்படி எல்லாம் மடத்தனமா நான் உன்னை சந்தேகமே படமாட்டேன்’’ என்று அவன் உறுதி கூற, ஆஹா என்னருமை காதலன் இவ்வளவு சீக்கிரம் திருந்திவிட்டானே என்று இவள் சந்தோஷப்பட்டாள். அடுத்த நாளே ”புடவை கட்டுனாதான் முன்னாடி, பின்னாடி, சைட்ல, நடுவுலனு எல்லாமே தெரியுதே, மரியாதையா சுடிதார் போட்டா என்ன கேடு?’’

அந்தப் பெண் அன்று முதல் சேலை கட்டுவதை விட்டு விட்டு முழுக்க முழுக்க சுடிதாரிலேயே வலம் வர, ‘‘என்னதுக்கு இவ்வளவு டீப் நெக்? குனிஞ்சு குனிஞ்சு தர்ம தரிசனம் கொடுக்கவா, வெட்கமாயில்லடி உனக்கு?’’ என்று அவன் காறி உமிழ்ந்து திட்ட, அப்போதும் ஆஹா அவனுக்குத் தான் என் மேல் எவ்வளவு அன்பு என்று எல்லா ஏச்சையும் சகித்துக்கொண்டாள் அந்தப் பெண். திருமணமும் ஆனது. அந்தப் பெண்ணின் சித்திபையன், அவளை விட இரண்டு வயதுச் சின்னவன்.... ‘அக்கா’ என்று அவள் தோளை தொட்டபடி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க,அப்போதே சண்டை ஆரம்பித்துவிட்டது, இப்படி ஆரம்பித்த திருமண வாழ்க்கை உருப்படுவதற்கா? மெண்டல் டார்ச்சர் தாங்கவில்லை என்று அந்தப் பெண், விட்டால் போதும் என்று அவனை விட்டே போய் விட்டாள்.


ஆக, சிநேகிதிகளே... போனால் போகிறது காதலினால் தான் இவ்வளவு பொஸசிவ்வாக இருக்கிறான் என்றெல்லாம் நீங்களே ஏதாவது சால்ஜாப்பு சொல்லி ஏமாந்து விடாதீர்கள். சகித்துக்கொள்ளும் அளவிற்கு ‘‘நீ எனக்குத் தான் சொந்தம்’’ என்று உரிமை கொண்டாடினால் ஓகே. ஆனால் அன்பையே ஒரு ஆயுதமாக்கி, அதை வைத்து உங்கள் சுதந்திரம் பறி போகும் அளவிற்குக் கட்டிபோடுகிறானா? உஷார், இந்தப் பையன் தேருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே.


2. அவள் படித்த பெண். அவள் கணவனும் அவளுக்கு நிகராக படித்தவர்தான். படித்தவன் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் பகுத்தறிவு இருக்கும் என்று அவள் நம்பி கழுத்தை நீட்ட, அப்போது தான் அவன் வாழ்வது 2010 அல்ல, 18ஆம் நூற்றாண்டு என்றே புரிந்தது அவளுக்கு. ஆறு மணி ஆச்சுனா, விளக்கு ஏத்தணும்; விளக்கு வெச்சதும் வெளியே போகக் கூடாது. காலங்கார்த்தால எழுந்து வாசல் தெளிக்கணும், மாமியார் எதிரில் உட்காரவே கூடாது. வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்குற பெரியவர்களுக்குச் சமைத்துப் போடுவதையும், அவர்கள் அனத்துவதை கேட்பதையும்தான் திருப்பணியாக ஆற்ற வேண்டும். ஆரம்பத்தில் தன் கணவன் தானே என்று ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்துக்கொண்டே இருந்த பெண்ணுக்கு நாலாபக்கமும் கெடி பிடி அதிகமாகிக்கொண்டே வர, சகிப்புத்தன்மை குறைய ஆரம்பித்தது. ஒரு நாள் விடிய விடிய கணவனின் லீலைகளுக்கு உட்பட்டு, காலையில் தாமதமாக எழுந்தாள். வாசல் பெருக்கி கோலம் போட தாமதமானது. அதனால் என்ன, எந்தக் குடியும் முழுகி விட வில்லையே. ஆனால் அவள் மாமியார் அதற்கு ஒரு கத்து கத்தி கலாட்டா பண்ணினாள் பாருங்கள்...

சரி, மாமியார் தான் மகனின் கைங்கரியம் தெரியாமல் இந்தக் கத்து கத்தினாள் என்றால் பையனாவது ‘இன்னிக்கு ஒரு நாள் விடுங்கம்மா’ என்று மனைவிக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டாமா? அதை விட்டு விட்டு, இவனும் உடன் சேர்ந்துகொண்டு ‘‘குடும்பப் பொண்ணா லட்சணமா, காலங்காத்தால எழுந்து கோலம் போடவேண்டாமா?’’ என்று ஒத்து ஊத, மனைவிக்கு அதற்கு மேல் அவன் முகத்தில் விழிக்கக் கூட மனமே இல்லை. அதன் பிறகு தினம் காலை எழுந்து நாள் தவறாமல் வாசல் தெளித்தாள். ஆனால் எல்லா இரவும் கணவனுக்குத் தண்ணீர் காட்டினாள்....

3. இதை எல்லாம் விட மோசம் குறுகிய மனப்பான்மை வாய்ந்த கேசுகள். கூட வேலை செய்யும் ஆண்களிடம் அலுவலக ரீதியாக பேசினாலும் தப்பு, வீட்டைச் சுற்றி இருப்பவர்களிடம் பேசினால், ‘தெருவுல நின்னு பேச வெட்கமாக இல்லை உனக்கு?’ என்று அதற்கும் ஒரு குட்டு. அவள் சொந்தமாக ஏதாவது முடிவெடுத்தாலே தப்பு-சின்ன சமாசாரமாக இருந்தாலும் அவனிடம் பர்மிஷன் பெற்றே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கும் ஆசாமிகள்.... இப்படி எல்லாவற்றையுமே கடுகு சைஸ் மூளையுடன் பார்க்கும் ஆசாமியாய் அவன் இருந்தால், அன்றாடம் அவனை கன்வின்ஸ் பண்ணி, நாளை நகர்த்துவதே பெரிய கொடுமையாகிவிடுமே!

4. இதை எல்லாமாவது கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சுத்தமாய் வடிகட்டின சுயநலவாதியாய் ஒரு பையன் இருக்கிறான் என்று வையுங்களேன். உதாரணத்திற்கு இந்த ஆசாமி. திருமணமான இரண்டாவது நாளே, அவன் மனைவியிடம் அவன் சொன்னது ‘எனக்கு ஓரல் செக்ஸ் வேண்டும்’. பாவம் அவன் மனைவிக்கு அப்படி என்றால் என்ன என்று கூட தெரியாது. சரி திருமணமான புதிசு, கணவன் கேட்கிறார். அவன் சொல்வதுதான் வேதவாக்கு என்று கணவன் மனசு கோணாமல் அவள் நடக்க, ‘கல்யாணம் ஆகி இத்தனை மாசமாச்சே, ஏதாவது விசேஷமா?’ என்று எல்லோரும் விசாரித்தார்கள். எந்த விசேஷமும் இல்லை என்றதும், ‘செக்ஸ் லைஃபெல்லாம் நல்லா தானே போகுது?’ என்று யாரோ ஒரு உறவுக்கார அக்கா விசாரித்தபோது தான் தெரியவே வந்தது, அந்தப் பையன் அவன் மனைவியுடன் ஒரு தரம்கூட நார்மலான தாம்பத்யம் வைத்துக்கொள்ளவே இல்லை என்று...

5. இதை எல்லாம் விட மோசம்: எதற்கெடுத்தாலும் ‘‘இரு, நான் செத்துப் போயிடுறேன்’’ என்று ஸ்டண்ட் அடிக்கும் ஆசாமிகள். பிரச்னைகள் வந்தால் தன்னையும் தன் மனைவி மக்களையும் காப்பாற்ற வேண்டிய சமூகப் பொறுப்பை வகிக்கும் ஒரு ஆண் இப்படி தொட்டதற்கெல்லாம் ‘செத்துப் போயிடுறேன். பிளேடால கீறிக்கிறேன்’ என்று கோழைத்தனம் காட்ட ஆரம்பித்தால், வாழ்க்கை விளங்குமா?


6. இவை எல்லாவற்றையும்விட படு மோசம், மனைவி/காதலியை அடித்து, துன்புறுத்தி தன் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் ஆண்கள். இன்றைய நிலையில் மனிதன் மிருகத்தை அடித்தாலே அது சட்டப்படி குற்றம். இப்படி இருக்க, உடல் வலிமை அதிகமுள்ள ஆண், ஒரு பெண்ணைப் போட்டு அடிப்பது. இப்படி அடிப்பதையே தன் வழக்கமாக வைத்திருப்பது என்றால், அதுதான் உச்சகட்ட கொடுமை. சில ஆண்கள் நேரடியாக அடிக்காமல், வார்த்தைகளால் அடிப்பார்கள். இந்த ஆணை அவாய்ட் செய்வதே உத்தமம்.

ஒரு பெண் தனக்கென்று மட்டும் ஒரு ஆணைத் தேர்வு செய்வதில்லை. தன் குழந்தைகளுடைய தகப்பனையும் சேர்த்து தானே தேர்வு செய்கிறாள். சந்தேகப்பிராணியோ, ஓவர் பொசஸிவ் ஆசாமியோ, குறுகிய மனப்பான்மை கொண்டவனோ, பழைமைவாதியோ, சுயநல கேஸோ, கோழையோ, முரடனோ உங்கள் குழந்தைக்கு அப்பாவானால் அவர்கள் வாழ்க்கை எவ்வளவு பரிதாபமாக இருக்கும்?

அதனால் சிநேகிதிகளே, விழிப்போடு இருங்கள்.

இனி அடுத்து கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான அம்சம் என்ன என்பதைப் பற்றி அடுத்த சிநேகிதியில்...

10 comments:

PARIMALA said...

FANTASTIC episode Dr. Will be an eye opener to many women.

சுடுதண்ணி said...

அருமை :)

Unknown said...

உங்க பதிவ படிக்கும் போது ஒன்று நன்றாக விளங்குகிறது, உங்களுக்கு மனநோய் உள்ளது நிங்கள் வடித்த கதாபாத்திரம் இயல்பாக நடப்பதுபோல் அல்ல நன்றாக மெருகேற்றபட்டுள்ளது, மூஞ்சிக்குதான் சாயம் போடுவிங்கனு பார்த்தா இப்ப இதமாதிரிகூட புச ஆரம்பிச்சிட்டிங்க நல்லது. எதோ எங்கயோ ஒரு சில சம்பவங்கள் நட்க்க கூடும் அதை வைத்துகொண்டு ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையோ இல்ல பெண்வர்கத்தையோ குறைசொல்வது மடத்தனம்

Unknown said...

Pathukku ettu veetil neengal sonna 18aam nutraandu kanavanum mamiyarum irukkirargal shalini.enna seivadhu? ellarum pazhagi parthu kalyanam seyya mudiyuma?

flower said...

carry on...people must utilize your blog.

nazi said...

fantastic
i'v seen lot of guys like these most of them r lyk this only
keep it up!

kayal said...

வாடாவுக்கு வணக்கங்கள் .
I think u have commented this read without going through the early chapters. Dr.Shalini has very well capsulated the aims of this series and the statistics of such strained relationships.I think u might agree that more than you and me she knows much about the true happenings in a relation in the current society. It is clear that she doesn't mean any offence to guys. Above all, we are all fellow human beings. And there are no generalizations about men from her side. It is upto the reader to draw conclusions.

PARIMALA said...

Well said Kayal!! True,true, Dr. knows abt human relations better than anyone else.For people like me our profession is a bread winner. But for Dr., its like the air she breathes.She is our asset, our teacher and we should learn from her and grow (instead of going behind Nithyananda like creatures).My answer to VAADA: PODA

மணிப்பயல் said...

ஆண்கள் என்ன இருசக்கர வாகனமா?

flower said...

aayiram kaigal maraithu nintraalum
aathavan maraivathillai...