Wednesday, April 14, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? 32

ஒரு ஆணை தேர்ந்தெடுப்பதற்கு முன், அவன் அம்மா அப்பாவை நுனுக்கமாக கவனிப்பது எவ்வளவு அவசியம் என்பதை பற்றி எல்லாம் இந்த தொடரில் பார்த்தோம்….இனி அவன் வாழ்வின் மிக அத்தியாவசியமான அடுத்த உறவு, அவனுடைய பெண் தோழி/தோழியர்.

எல்லா ஆண்களுக்குமே பெண் தோழிகள் ரொம்பவே அவசியம். அந்த தோழி அவன் தாயாகவே இருக்கலாம்….. ஷே குயராவை பற்றி கேள்விபட்டிருப்பீர்களே. இவர் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த ஒரு மருத்துவர், ஆனால் இவரை கூபா நாட்டின் தீவிரவாத போராளியாக தான் உலகமே அறியும். இயற்பெயர் எர்னெஸ்டோவாக இருந்தாலும், செல்ல பெயரான ஷே தான் உலக பிரசித்தம். இப்படி எல்லாம் புகழ் பெற்றிருந்த இந்த ஷேவுக்கு உயிர் தோழி யார் தெரியுமா? அவன் அம்மா சீலியா தான்! ஷே எந்த நாட்டில் வசித்து வந்தாலும் சீலியாவுக்கு வரி வரியாக கடிதம் எழுதி தள்ளுவாராம்…..அவ்வளவு நட்பு அம்மாவுக்கும் பிள்ளைக்கும்.

அல்லது இந்த தோழி அவன் சகோதரியாக கூட இருக்கலாம்….உதாரணத்திற்கு இராஜராஜ சோழன். இவருக்கு இவர் சகோதரி குந்தவை தான் பெஸ்ட் ஃபிரெண்ட்!

அல்லது இந்த தோழி யாரோ ஒரு சொந்தக்கார பெண்ணாக இருக்கலாம், கிருஷ்ணனுக்கு பாஞ்சாலி சகியானது மாதிரி.

இப்படி எந்த தோழியும் அமையாவிட்டால் குறைந்த பட்சம் அவன் படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில் என்று இவனுக்கு அமைந்த வெளி தோழியாக இருக்கலாம், அதியமானுக்கு அவ்வையார் தோழியாக அமைந்த மாதிரி…..

எப்படியோ, யாராவது ஒரு பெண் தோழியாவது அவனுக்கு இருந்தே ஆக வேண்டும்!!!

அது ஏன் அப்படி, கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய அவசியம் என்ன? ஒரு பெண் தோழியினால் அப்படி என்ன பயன்? என்று நீங்கள் யோசித்தால், இதோ பயன்பாட்டின் பட்டியல்:

1. ஒரு பெண் தோழியுடனாவது பேசி பழக வாய்ப்பிருந்தால் தான் பெண்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு ஆண் புரிந்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு ஸ்நேகிதன்………….. அவனுடன் படித்த ஒரு சகமாணவிக்கு திருமணம் முடிவாகி இருந்தது. மாப்பிள்ளை பையன் தனக்கு போன் செய்யவில்லை, லெட்டர் போடவில்லை, ஒரு எஸ் எம் எஸ் கூட அனுப்பவில்லையே என்று அவள் நொந்துபோய் புலம்பி தள்ளினாள். இதை கேட்ட ஸ்நேகிதன் ரொம்பவே சீரியஸாய்,” என்னயா இது, இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்காங்க? கல்யாணமாகுறத்துக்கு முன்னாடியே ஃபோனெல்லாம் பண்ணனுமாமே….இது கொஞ்சம் ஓவரா இல்ல?” என்றான் பெரிய ஆட்சரியத்துடன். “நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன்ப்பா…..கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் அசிங்கமா பொண்ணுகிட்ட பேசி வழியவெல்லாம் மாட்டேன்ப்பா!”

அப்புறம் அந்த அப்புராணி பையனுக்கு பெண்சகாக்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து லெக்சர் அடித்தார்கள், “அட மடசாம்பிராணீயே. கல்யாணம்ன உடனே இந்த பொண்ணு அவங்க வீடு வாசல் அப்பா அம்மா, சொந்தம் பந்தம்னு எல்லாத்தையுமே விட்டுட்டு அந்த பையனை மட்டுமே நம்பி தானே வருவா…..அவளுக்கு பயமா இருக்காதா? குறைந்த பட்சம் அவன் ஃபிரெண்டிலியா பேசி, அவளை ரிலாக்ஸ் பண்ணினா தானே அவளுக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்? அதுவும் இல்லாம, முன்ன பின்ன பேசி பழகாதவனோட திடுதிடுதிப்புனு எப்படியா ஒருத்தி தாம்பத்திய வாழ்க்கையில ஈடு பட முடியும்? முன்னாடியே பேசி, நம்பிக்கை ஏற்பட்டா தானே வாழ்க்கை ஸ்மூத்தா போகும்….” என்று விளாவரியாக புரியவைத்த போது தான் திருமணத்திற்கு முன்பே மணப்பெண்ணிடம் பேச வேண்டிய அவசியமே அவனுக்கு புரிந்தது…..

ஒரு வேளை இப்படி இந்த பெண்சகாக்கள் எல்லோரும் கூடி, அவனுக்கு கூட்டு ஆலோசனை செய்திருக்கவில்லை என்றால், அவனை கட்டு கொள்பவளின் நிலைமையை யோசித்து பாருங்களேன்!

2. பெண் ஸ்நேகிதிகள் இருந்தால் அதில் அடுத்த பெரிய நன்மை, ”ஏய் இந்த பைய எடுப்பா, இந்த நோட்டை அங்க வைய்யேன்…” என்று ஏதாவது ஏவல் செய்து பழகி இருப்பான். இப்படி ஏவலே செய்து பழகாத ஒரு மாப்பிள்ளை பையன் என்ன செய்வான்? அப்படி ஒரு கேஸும் எனக்கு தெரியும்…..அவன் மனைவி வாஷ்பேசினில் முகம் கழுவும் போது, அழைப்பு மணி அடிக்க, இவள், சாதாரணமாக, “கதவை திறங்களேன்” என்றது தான் தாமதம்….நெற்றிக்கண்ணை அகலமாக திறந்து விட்டான் பையன்…..”நான் என்ன உனக்கு கதவை திறந்து விடுகிற வேலைகார பையனா? நான் யார் தெரியுமா? என் அந்தஸ்து என்ன தெரியுமா? என் சொத்து கணக்கு தெரியுமா?” என்று இவன் ருத்ரதாண்டவம் ஆட, அவன் மனைவியோ, “அய்யே, இதுக்கு போய் இந்த அலட்டு அலட்டிக்கிறானே, சரியான முசுடு” என்று முகம் சுளித்துக்கொண்டாள்….இப்படி எல்லாம் பையன் ஓவர் ரியாக்ட் செய்ய கூடாதென்றால் அவனுக்கு பல பெண் ஸ்நேகிதிகள் இருந்து அவர்களுக்கு அவன் உபகாரங்கள் செய்து பழகி இருக்க வேண்டுமே.

3. பெண் ஸ்நேகிதிகளின் அடுத்த அவசியம்: அந்த மனைவிக்கு மாதவிடாய் சமயம். அவள் வயிற்று வலி என்று படுத்திருக்க, அவள் கணவன் வந்து “சும்மா என்ன சோம்பேறி மாதிரி சோஃபாவுல சாஞ்சிகிட்டு, ஏந்திரி, போய் என் லுங்கிய எடுத்துக்கிட்டு வா” என்று அவள் வயிற்றில் தட்டி எழுப்ப, இவளும் சினுங்கி, “எனக்கு பீரியட்ஸ்” என்று அறிவிக்க, அதற்கு அவன், “அதனால என்ன? ஓடு, சீக்கிரம் போய் லுங்கிய எடுத்துக்கிட்டு வா” என்று அதட்ட, “இதை கூட புரிந்துக்கொள்ளாத ஜடமா இருக்கானே” என்று மனைவி நொந்து போனாள்! இந்த பையனுக்கு யாராவது பெண் ஸ்நேகிதிகள் இருந்திருந்தால், குறைந்த பட்சம், இந்த மாதிரியான அசவுகரியங்களை புரிந்துக்கொள்ளும் பக்குவமாவது அவனுக்கு இருந்திருக்குமே!

4. பெண் ஸ்நேகிதிகளின் மிக முக்கியமான பயன்பாடு: அவன் உடன் வேலை செய்யும் பெண் அவள். திருமணம் என்று அழைப்பிதழ் வழங்கினாள்….இவனும் அலுவலக நண்பர்களோடு சேர்ந்து கூட்டாய் பரிசு வாங்க தன் பங்கு காசை கொடுத்திருந்தான். திடிரென்று திருமணம் நின்று விட்டதாக சேதி வந்தது. ”டவுரி பிரச்சனை” என்று தெரியவந்தது. அதன் பிறகு அந்த பெண் சில நாட்களுக்கு வேலைக்கே வரவில்லை. வந்த பிறகும் சோகமே உருவாக, எப்போதுமே கண்ணில் ஜீவனில்லாமல் பரிதாபமாக இருக்க…..அப்போதே முடிவு செய்தான் பையன்…..”என் கல்யாணத்துக்கு நோ டவுரி கிவுரி நான்சென்ஸ்”.

5. பெண் ஸ்நேகிதியின் இன்னொரு பயன்பாடு: அவன் அலுவலக சகாவுக்கு குழந்தை பிறந்தது. மகபேற்று விடுப்பு காலம் முடிந்து அவள் வேலைக்கு வந்தாள். அலுவலகம், வீடு, பிள்ளை, என்றூ மூன்றையுமே கட்டி மேய்க்க முடியாமல் அவள் பாடு பட, அவள் அன்றாடம் புலம்பி தள்ளுவதை இவன் கேட்க நேர்ந்தது, “அவனுக்கும் இது பிள்ளை தானே, கொஞ்சம் கூட ஹெல்பே பண்ண மாட்டேன்றான்யா. நான் ஒருத்தியே எவ்வளவு வேலை செய்யுறது? கஷ்டமா இருக்கு, தூக்கமே இல்லாம கான்செண்டிரேட்டே பண்ண முடியலை…..” அவளுக்கு பாவம் பார்த்து, அவளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பிவிட இவனும் உதவி செய்திருந்தான். இந்த அனுபவத்தின் பயனாய், இவனுக்கு திருமணமாகி அவன் மனைவி தாயான போது, இவனும் வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாய் இருந்தான்.

6. பெண் ஸ்நேகிதியின் மிக பெரிய பயன்பாடு: அவனுக்கு அவன் மனைவிக்கு சண்டை. அலுவகத்திற்கும் வந்ததுமே, “என்ன டல்லா இருக்கே?” என்று கண்டுபிடித்துவிட்டாள் சகா. அவளிடம் பொய் சொல்ல முடியாமல், “அவங்க அப்பாவை திட்டீட்டேன்னு இனிக்கு காலை டிஃபென்னே பண்ணாம ஸ்டிரைக் பண்ணீட்டா…..ஒரே சண்டை” என்று இவன் உண்மையை போட்டு உடைத்தான். “பின்ன, அவங்க அப்பாவை தப்பா பேசினா, சும்மாவா இருப்பா? உன் அப்பாவை நான் தப்பா பேசினா நீ சும்மாவிடுவியா?” என்றாள் சகா. ”உன் பொண்டாட்டியாவது சமைக்காம இருந்ததோட சரி, நானா இருந்தா உன்னை இடிச்சு இடியாப்பம் கரச்சி இருப்பேன்….” என்று ஆரம்பித்து, அவன் மனைவியுடன் அவன் சமரசம் செய்துக்கொண்டு சமாதானமாக போகும் வரை விடாமல் ஊக்குவித்தாள் தோழி.

ஒரு நல்ல தோழி இப்படி தான் இருப்பாள். ஆணின் மனதை விசாலமாக்க உதவுவாள். பெண்பாலை பற்றிய புரிதலை அவனுக்கு ஏற்படுத்துவதில் அவளுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது! பெண்பாலை பற்றிய புரிதலை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?

நாம் ஏற்கனவே இந்த தொடரில் பல முறை தெளிவுபடுத்திக்கொண்டது தான். ஆணின் மூளை அமைப்பும் பெண்ணின் மூளை அமைப்பும் வேறு வேறு. இதனாலேயே ஒரு ஆணால் சுயமாகவே ஒரு பெண்ணையோ, அவள் உலகையோ புரிந்துக்கொள்ளவே முடியாது. அவனுக்கு முன்கூட்டியே சில/பல பெண்களோடு பரிச்சையம் இருந்தால் தான், தன் மனைவியை அவன் சரியாக புரிந்துக்கொண்டு நடக்க முடியும். எப்படியும் அவனை பெற்றது ஒரு பெண் தானே, அவள் இதை எல்லாம் சொல்லி கொடுத்திருக்க மாட்டாளா? என்றால், அநேக சந்தர்பங்களில் பல தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு இதை எல்லாம் சொல்லி தருவதே இல்லை. காரணம் தாய்-மகன் உறவில் நிபந்தனைகள் இருப்பதில்லை, மகன் மோசமாக நடந்துக்கொண்டாலும் தாய் சகித்துக்கொள்வாள். பின்னே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!

இப்படி பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் மகன்களை பெண்களுக்கு தோதாக பக்குவப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தான், ஒவ்வொரு ஆணுக்கும் குறைந்த பட்சம் ஒரு தோழியாவது இருந்தே ஆக வேண்டும். அப்போது தான் அவனுக்கு பொதுவாக பெண்களின் மனம், குணம், உடலியக்கம், அவளுடைய தேவைகள், அபிப்ராயங்கள் ஆகியவற்றை புரிந்துக்கொண்டு பழக முடியும். பெண்களிடம் இப்படி கொஞ்சமாவது பரிச்சயம் இருந்தால் தான் அவள் என்ன பேசினால் அதற்கு என்ன அர்த்தம்? எந்த நேரத்தில் அவளிடம் எதை பேச வேண்டும் என்பது மாதிரியான விவஸ்தை அவனுக்கு உண்டாகும். இப்படி எல்லாம் பக்குவப்பட்டால் தானே அவன் சிறந்த ஹஸ்பெண்ட் மெட்டீரியில் ஆக முடியும்!

அதற்காக அவன் ஓவராய் நிறைய ஸ்நேகிதிகளோடு உறவாடி, அவர்களுக்கு சேவகம் செய்வதிலோ, கடலை போடுவதிலோ தன் முழு பொதுதையும் செல்வழித்தால், அப்புறம் இதனாலேயே பல புது பிரச்சனைகள் உருவாகும். யார் வெறும் ஸ்நேகிதி, யார் விவகாரமான ஸ்நேகிதி என்று தரம் பிரித்து, சண்டை போடுவதிலேயே காலத்தை வீண்டிக்க முடியாதே!

இதற்கு நேர் எதிராக, பெண்களை நிமிர்ந்தும் பார்க்காத உத்தம சிகாமணி எவனையாவது திருமணம் செய்தாலோ, அவன் அறியாமையிலேயே உறவை சொதப்பி கெடுத்துவிடுவான். அவனுக்கு பெண்ணியல் பாடங்களை சொல்லி தர மனைவி வருட கணக்கில் மெனக்கெட வேண்டி இருக்கும்!

அதலினால் ஸ்நேகிதிகாள், ஆரோகியமாய், அளவாய் பெண்களுடன் நட்புக்கொள்ள தெரிந்த ஒருவனை பார்த்து தேர்ந்தெடுங்கள். அந்த தோழிகளின் உபயத்தால் அவன் உங்களை சரியாக புரிந்துக்கொள்வான். இதனால் உங்கள் இல்வாழ்க்கை இன்பமாய் இருக்கும்!

நான் இதுவரை சொன்ன இன்கிரீடியண்ட்ஸ் எல்லாம் இருக்கும் ஆணாய் பார்த்து சலித்தெடுத்து தேர்வு செய்து விட்டீர்களா? வெரி குட். இவனை எப்படி எல்லாம் ஹாண்டில் செய்ய வேண்டும் என்கிற உயர் கல்வி சமாசாரங்களை இனிமேல் பார்ப்போம்!

11 comments:

flower said...

these type of person may be 0.01%
nowadays boys are very active.man is having all sense like woman.he is not a road engine to handle.

Ramya Ram said...

@Flower: I don't agree with this. Being interacting with men right from school, college, office..I would definitely say that there are lots of people who still can not understand a girl's world. Because of which, they face a lot of problems in their personal life.

சாணக்கியன் said...

எல்லாம் சரிதான் டாக்டர். இப்படி பெண்களோடு பழகி அவர்களது எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு செயல்பட செயல்பட ஆண் தன் சுயத்தன்மையை வெகுவாக இழந்துவிடுவாதான உணர்வு எழுகிறதே?

இரசிகை said...

ada......

vijay tv il paaththa(pothikaiyilum) dr.shaliniyaa?
:)

santhosham!
vaazhthukalum!

flower said...

@ramya raman: Your expectation is more.Can you explain one incident...?

athi said...

Dear Dr shalini

ungalin pechu enakku romba pidikkum.

athi

Anitha Manohar said...

Dear Dr.

Very informative, educative and excellent article.

Thanks a lot

bharathi said...

Dear Doctor,
I go for u.Though i ve never been studing psychology, am also thinking that a man who has a good girl friend in his life, can easily understand his partner's feelings and expectations.

ராஜ நடராஜன் said...

//ஷே குயராவை பற்றி கேள்விபட்டிருப்பீர்களே. இவர் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த ஒரு மருத்துவர், ஆனால் இவரை கூபா நாட்டின் தீவிரவாத போராளியாக தான் உலகமே அறியும். //

சே குவார தான் எல்லோருக்கும் நண்பன்.

நீங்க டாக்டர் சாலினியா அல்லது வேற தளத்துக்கு வந்து விட்டேனா?முதல் பின்னூட்டம் வேற

இன்னொரு நாள் வருகிறேன் பின்னூட்டத்துக்கு.

தனி காட்டு ராஜா said...

//அட மடசாம்பிராணீயே//

ஹி ஹி ஹி ..........
இந்த வசை சூப்பர் ....சின்ன வயசுல எங்க பக்கத்து வீட்டு தாத்தா இப்படி என்னை திட்டுனப்ப கேட்டது ....

vaigai said...

HI mam,

first of all thank for u.Bcos ur talk abt man is absolutely for many persons.Actually when a girl understand abt a man abt this fully then the divorce case will be definetly decrese.Really this generation girls are of high expectation since they have been brought up with lots of care and love by their parents as they are having one or 2 children. so when they come to knw abt man(husband) as this kind,she will think and try to change and try to habdle well and they will be friends and will have love for ever.Before ur advice itself i was in search why this boys are not understnading the girl feel,i asked many abt their husband(mom,mother in law,sister in law etc)in search whether my husband only not understand or all...finally this was there in all family.Then i changed my way of handle and i succeeded now.My handle was very similar to u.And i support this will make great and good result.