Friday, January 22, 2010

கொஞ்சம் டார்வின், கொஞ்சம் நீயூட்டன்


உலகிலேயே ரொம்ப உன்னதமான கருவி எது என்று கேட்டால், நீங்கள் எத்தனையோ வஸ்துக்களை உடனே சொல்லுவீர்கள்….கம்யூட்டர், கேமரா, ஐ ஃபோன், ராக்கெட், ஏவுகனை என்று எந்த நுட்பமான கருவியாக இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட நுனுக்கமான, ஸ்வாரசியமான, fully loaded அதிசயங்கள் பலவும் இருக்குற அதிஅசத்தலான கருவி, மனித மனம் தான். இது பேசும், யோசிக்கும், கற்பனை செய்யும், ஃபொடோ எடுக்கும், காபி அடிக்கும், கணக்கு போடும், எந்த அதிநவீன ராக்கெட்டை விடவும் மிக அதிகமான ஸ்பீடில் இடம், காலம், கட்டமைப்பு என்றூ எல்லாவற்றையும் தாண்டி ஓடும், ஒரே ஷணத்தில் வெவ்வேறு சேனல்களுக்கு மாறூம், தன்னை தானே புது புது விதங்களில் வெளிபடுத்தி, தினம் தினம் புது புது ஸ்வாரஸ்ய விளையாட்டுக்களில் ஈடுபடும், காதல், பாசம், பெருமை, ஆசை என்று பல உணர்ச்சிகளை உண்டுபண்ணூம், அதிகபட்ச சந்தோஷம், அதிக பட்ச துக்கம் என்று நேர் எதிரான நிலைகளை நிமிடங்களில் ஏற்படுத்தும்…..இப்படி இத்தனை அம்சங்கள் இருக்கும் உலகின் மிக பிரத்தியேகமான இந்த கருவியை நாம் எப்படி கொண்டாட வேண்டும்!

ஆனால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? இந்த உன்னதமான கருவியை வெறூம் நினைவேற்றுதல் என்கிற ஒரே ஒரு வேலைக்காக மட்டும் பயன்படுத்தி, அதற்கு மதிப்பெண்கள் வேறு போட்டு, பாஸா ஃபெயிலா என்றெல்லாம் சொல்லி, எல்லைகளே இல்லாத இந்த கருவியை, சின்னஞ்சிறு கடுகு சைஸ் வட்டதினுள் அடைத்து, அற்ப விஷயத்திற்காக பயன்படுத்தி அதை கொச்சை படுத்துகிறோம்.

இது ஒரு கொடுமை போதாதென்று, மதம், மொழி, இனம், பிராந்தியம், மரபு என்றெல்லாம் வெவ்வேறு குட்டி குட்டி வட்டங்களை போட்டுக்கொண்டு, இந்த மனம் எனும் மிக வலிமையாக கருவியின் காலில் சங்களிகள் மாட்டிவிடுகிறோம்….கம்பீரமான சிங்கம், யானை, கரடியை எல்லாம், ஒரு கூண்டில் அடைத்து அதன் தன்மையை அடியோடு அழித்துவிடுவது மாதிரி, நம் மனம் எனும் இந்த அலாவுதின் விளக்கை, வெறுமனே, அலங்கார பொருளாக அலமாரியில் வைத்து விடுகிறோம்.

இப்படி தங்கள் மனம் சிறை பட்டிருப்பதே தெரியாமல், பெரிதாய் வாய் கிழிய பேசிக்கொள்ள வேறு செய்வார்கள்: ”தமிழ் பொண்ணூங்கனா இப்படி தான் இருக்கணும், எங்க ஊர் பழக்க வழக்கம் இது தான், இதை மாற்றவே முடியாது, எங்க குலவழக்கம் இது தான் இது தான் எங்க பாரம்பரியம், இதை மாற்றீனால் பெரிய தப்பாயீடும்” என்று ஏதாவது வெற்று செண்டிமெண்டை விடா பிடியாக பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்.

இன்னும் சிலர், “நம்ம நாட்டு கலாச்சாரம் இது தான், இப்படியே இருந்தா தான் நல்லது. நம்ம பாரம்பரியத்துல தான் நம்ம பெருமையே இருக்கு, இதை மாற்றவே கூடாது….” என்று ஏதாவது பெரிசு பிதற்றினாலும், “ எதற்கு வம்பு, நமக்கு உடன் பாடு இருக்கிறதோ இல்லையோ, பெரிசு சொல்லுகிறது, செய்து தொலைக்கலைன்னா, காதுல ரத்தம் வர வரைக்கும் ரம்பம் போட்டு பிராணனை வாங்கிடும், பிரச்சனை பண்ணாம பேசாம செய்துட்டு போயிடலாம்” என்று ஒப்பேற்றீக்கொண்டே இருப்பார்கள்

இதை விட தமாஷான இன்னொரு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள், “எல்லாரும் சொன்ன சரியா தானே இருக்கும், எனக்கெதுக்கு வம்பு, மெஜாரடி பக்கமே நானும் சாஞ்சிடுறேன்” என்று தன் சொந்த அறிவை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் மந்தை மிருகம் மாதிரி கூட்டத்தோடு கூட்டமாய் மேய்வதே மேல் என்றூ இருந்து விடுவார்கள்.

இதை விட கோமாளியாய் வேறு சில மனிதர்கள், “உயர் அந்தஸ்துல இருக்குறவங்க என்ன செய்தாலும் சரியா தான் இருக்கும், அதையே நாமும் காபி அடித்தால் தானே கவுரவமாக இருக்கும்”, என்று எந்த விதமான சுயசிந்தனையுமே இல்லாமல் யாரோ செய்யும் அர்த்தமற்ற காரியங்களை அப்படியே அடிபிரளாமல் தானும் பிரதியெடுத்து பின்பற்றுவர்.

இப்படி எத்தனையோ விதங்களில் அழகழகான சங்களிகளை மாட்டி, மனம் எனும் இந்த மாய விசையை அப்படியே மழுக்கடித்து, வெறும் ஒரு மெமரி ஸ்டிக்காய் மாற்றி விடுகிறார்கள்.

காலம் காலமாய் எல்லா ஊர்களிலுமே இப்படி ஒரு மனமுடக்கு முறை இயங்கி வந்துக்கொண்டே இருந்தாலும், ரொம்ப சில சாமர்த்தியசாலிகள் இந்த வலைகளுக்குள் எல்லாம் விழாமல் தப்பித்து விடுகிறார்கள். தங்கள் மனதின் முழு ஆற்றலையும் பிரம்மாண்டத்தினையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்…..இனம், மதம், மொழி, பின்புலம், பாலினம், பாடதிட்டம், என்றூ எல்லா விலங்குகளுக்கும் டிமிக்கி கொடுத்து, தன் சுயத்தை தேடி பிடித்து பிரகாசிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சார்லஸ் டார்வின்….இவர் இங்கிலாந்தின் ஒரு பிரபல குடும்பத்தை சேர்ந்த டாக்டரின் மகன். மகனும் தன்னை போலவே ஒரு டாக்டர் ஆனால் தான் தனக்கு பெருமை, பையனுக்கு பிழைக்க நல்ல வழி என்று நினைத்து அவர் அப்பா,, சார்லஸை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். சார்லஸ் அந்த கல்லூரிக்கு போய் மருத்துவத்தை தவிற மற்ற எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்…. வண்டுகளில் எத்தனை வகை, அதில் ஆண் எது பெண் எது, அவை எப்படி இனபெருக்கம் செய்கின்றன, மிருகங்களின் தோலை பதப்படுத்துவது எப்படி, பூமியின் மேல் பாரைகள் எப்படி தோன்றின…இதை எல்லாம் தெரிந்துக்கொண்டதற்க்காக, மருத்துவ கல்லூரியில் அவருக்கு என்ன கூடுதல் மதிப்பெண்ணா கொடுத்திருப்பார்கள்!

தலைவர் பாடத்தில் கோட்டடித்தார். அதனால் நொந்துபோன சார்லஸின் அப்பா, குறைந்த பட்சம் மதகல்வியில் ஒரு பட்டமாவது வாங்கினால், ஏதாவது ஒரு சர்ச்சில் பாதரியார் ஆக்கிவிடலாம், ஆயுசுக்கும் வருமானம் கிடைத்துவிடும், என்று திட்டமிட்டு, சார்லஸை கேம்பிரிட்ஜில் சேர்த்தார். அங்கேயும் சார்லஸ் வண்டு பிடிக்கிறேன், வாத்து வளர்க்கிறேன், பாறைகளை ஆராய்ச்சி செய்கிறேன், தீவுகளுக்கு சுற்றிபயனம் போய் பவள பாரைகளை பார்த்துவிட்டு வருகிறேன், என்று எப்போதுமே ஓ பி அடித்துக்கொண்டே இருந்தார். நல்ல வேளையாக அவர் பேராசிரியருக்கு சாரல்ஸ் மேல் ஒரு பிரியம் என்பதால் கடைசி நேர தனிடியூஷனெல்லாம் வைத்து எப்படியே ஓப்பேற்றி, பையனை பாஸாக்கி விட்டார்.

இப்படி பாஸான பிறகும் டார்வின், குட் பாயாய் போய் ஏதோ ஒரு மாதா கோயிலில் பங்குதந்தையாய் சேர்ந்துக்கொள்ளவில்லை, அதற்கு நேர்மாறாய் சம்பளமே இல்லாமல் சும்மா ஒரு கப்பலில் போய் உலகை சுற்றி பார்க்க பயணம் மேற்கொள்ள விரும்பினார். சும்மா இருப்பாரா, சார்லஸின் அப்பா? கூடாது என்று கராராய் கண்டிஷன் போட்டார். ஆனால் சார்லஸ் விடவில்லை. நைஸாக தன் தாய் மாமாவிடம் சொல்லி, அப்பாவை கன்வின்ஸ் பண்ண வைத்து, சம்பளமில்லாத கப்பல் வேலைக்கு போயே போய்விட்டார். அந்த கப்பலில் உலகம் முழுக்க சுற்றி வந்தபோது தான், பைபிளில் சொன்னது போல உலகத்தையும், அதில் வாழும் உயிர்களையும் கடவுள் என்கிற ஓர் ஆசாமி ஒரு வாரத்தில் படைத்ததாக சொல்வதெல்லாம் சுத்த கட்டுகதை என்று கண்டுபிடித்தார். பரிணாம வளர்ச்சி ஏவல்யூஷன், எனும் மிக முக்கியமான ஓர் அறிவியல் புரிதலை எப்போது தான் கண்டு கொண்டார்.

டார்வினுக்கு முன்னாலும் எத்தனையோ பேர் உலகத்தை சுற்றி இருக்கிறார்களே. ரொம்ப தூரம் போவானேன், நம்மூர்காரர்களே, கடாரம் கொள்ளவும், கம்போஜம் கொள்ளவும், வணீகம் செய்யவும் திரைகடலோடி, எத்தனையோ வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்களே….இவர்கள் எவர் கண்ணிலும் படாத இந்த பரிணாம வளர்ச்சி என்கிற சங்கதி எப்படி சார்லஸ் டார்வின் கண்ணில் மட்டும் பட்டது?

அதே மாதிரி தான் நியூட்டன்…அப்பிள்கள் முதன்முதலில் சாகுபடி ஆன காலத்தில் இருந்தே எத்தனை கோடி ஆப்பிள்கள் எத்தனை கோடி மனிதர்களின் எதிரில் விழுந்திருக்கும்?….அந்த அத்தனை கோடி மனிதர்களுக்கும் தோன்றாத புவீஈர்ப்பு சக்தியின் புரிதல் நியூட்டனுக்கு மட்டும் எப்படி சாதியமானது?

சிம்பிள்! டார்வினும் நியூட்டனும், சொல் பேச்சை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கும் சோம்பேறிகள் இல்லை. யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே கேட்டுக்கொண்டு இராமல், “ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எதனால்? யாரால்? எப்போது? இப்படியே தான் இருக்க வேண்டுமா? வேறு எப்படி எல்லாம் இருக்கலாம்?” என்று தங்களுக்கு விதிக்கப்பட்ட விலங்குகளை தாண்டி, தங்கள் மனதை முழுதாக விரித்து எந்த வித திரைகளுமே இல்லாமல், நிர்வாணமான பார்வையால் உலகை பார்த்ததினால் தான் அவர்களால் திடுக்கிடும் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முடிந்தது.

இப்படி, “சுயமாக யோசிப்பேன், சரி என்று பட்டால் தான் செய்வேன்”, என்று அழிசாட்டின்யம் செய்யும் இந்த மனிதர்களை பல பேருக்கு பிடிக்காது. ஆனால் விசித்திரம் என்ன தெரியுமா, இந்த மாதிரி ”லாஜிக் இல்லைனா ஒத்துக்க மாட்டேன்”, என்று பிடிவாதம் பிடிக்கும் இம்மனிதர்களால் தான் மனித சமுதாயமே உயர்ந்திருக்கிறது.

புத்தர், மஹாவீரர், ஏசு,முகமது மாதிரியான மெய்ஞானிகள் ஆகட்டும், நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன், டாக்கின்ஸ், ஹாக்கிங் மாதிரியான விஞ்ஞானிகள் ஆகட்டும், லூதர், ராமானுஜர், லிங்கன், பாரதியார், நேரு, பெரியார் மாதிரியான சமூகஞானிகள் ஆகட்டும், எந்த துறை ஞானியாக இருந்தாலும், அவர்களில் பிறவி குணம் ஒன்று தான்: ஏற்கனவே யாரோ எவரோ, சொன்னதையோ, செய்ததையோ, அப்படியே நம்பி, பழைய கட்டமைப்புகளுக்குள் மட்டும் இருந்து யோசிக்காமல், எல்லா வரம்புகளையும் தகர்த்தெரிந்து விட்டு, எந்த வித எல்லைகளுமே இல்லாத தாரள போக்குடன், திரைகளே இல்லாத நிர்வாண பார்வையால் இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்து புது புது விதங்களில் யோசித்து, யாருக்கும் புலப்படாத பல அரிய கண்டுபிடுப்புகளை அநாயாசமாய் சொல்லிவிடுகிறார்கள்.

அதே நிர்வாண பார்வை கொஞ்சம் நமக்கும் இருந்தால் நம்முடைய சிந்தனை எப்படி மாறும்? கொஞ்ச நேரத்திற்கு நாம் யார், என்ன, எந்த ஊர், எந்த மதம், எந்த மொழி, எந்த ஜாதி, என்ன பாலினம், அவ்வளவு ஏன் மனிதர்கள், பூலோகத்தை சேர்ந்தவர்கள் என்கிற எல்லா பிரக்ஞைகளையுமே மறந்து, வேடிக்கையாய் ஒரு விளையாட்டில் ஈடுபடலாமா? வேற்றுலகில் இருந்து பூமிக்கு வந்த ஒரு புது ஜீவராசியாய் உங்களை எண்ணிக்கொள்ளுங்கள்… அதுவும் சாதாரண சோப்லாங்கி ஜீவராசி இல்லை, நியூட்டன் மாதிரி, டாவின் மாதிரி, நுனுக்கமாய் யோசிக்கிற பேரறிவாளியான வேற்றுலக அமானுஷ்யர் நீங்கள் என்று வைத்துக்கொள்வோமே….இப்போது, திரும்பி, இந்த பூலோகத்தையும், அதில் மனிதன் என்று பேர் சொல்லிக்கொண்டு திரியும் இந்த ஜந்துவையும் பாருங்கள். சாதாரண பார்வையில் அல்ல, எந்தவித முன்பதிவுகளுமே இல்லாத அந்த ஸ்பெஷல் நிர்வாணப்பார்வையால் பாருங்கள்….திடுக்கிடும், பல ஸ்வாரசியமான சமாசாரங்கள் உங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும்….

16 comments:

Anonymous said...

Nice article. Am always eager to read your posts.

-Sulo

தென்றல் said...

நன்றி, டாக்டர்!

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே !

PARIMALA said...

Dear Dr.
Though you post blogs both in English and Tamil, when I read your Tamil blogs, the impact is more.The content, language and the way you say is so simple, straight, as if someone sitting and talking to me.Keep expressing.What you say will be a learning experience for all age group people.More than everything, "THE TRUTH" in your content make me think and admire.

சவுக்கு said...

Simply fabulous doctor. Kindly do write often.

Anonymous said...

can you write how to handle ladies

Ahmed said...

One of the best posts I have ever read. Please continue your good work.

-Ahmed

flower said...

very interesting blog..

flower said...

very interesting blog..

தருமி said...

//தன் சொந்த அறிவை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் மந்தை மிருகம் மாதிரி கூட்டத்தோடு கூட்டமாய் மேய்வதே மேல் என்று இருந்து விடுவார்கள். //

இதுல ரொம்ப படிச்ச "மேதாவிகளும்" அடக்கம்.

தருமி said...

கீழேயுள்ள என் பதிவு நினைவுக்கு வந்தது. முடிந்தால் பாருங்கள்:

http://dharumi.blogspot.com/2005/07/35.html"

தருமி said...

//டாக்கின்ஸ், ஹாக்கிங் மாதிரியான விஞ்ஞானிகள் ஆகட்டும், //

ஆஹா ... நமக்குப் பிடிச்ச ஆட்கள்!

கண்ணகி said...

அவரவர்மனதை சுயசோதனை செய்யும் பதிவு.,,,டாக்டர்....

sumathi said...

Interesting to read your article. very well written

ராஜ நடராஜன் said...

By Search of Darwin the title induced me to read.

Good one!

Unknown said...

hlo madam,
ungaloda arvin varthaigal sindhika vaikuthu madam.. charlas darwin evalution theory book and his hietory ah tamil laguage la translate seithu upload pannunga madam,