Thursday, December 23, 2010

ஆண்குறி சின்னங்கள்

மனித பெண்கள் தமக்கு அதிக சுகத்தை தரும் ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்த காலத்தில், ஆண்களுக்குள் எக்க செக்க போட்டி தலைதுக்க ஆரம்பித்தது. ”அதிக சுகத்தை தர வல்லவன் நான்” என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்பட, இதற்குண்டான கருவியின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.


நீளமான தந்தத்தை கொண்ட கடாவை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண்யானைகள் கூடும், இதனலேயே ஆண் யானைகளுக்குள், தந்தத்தின் அளவை வைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது. அதே போலத்தான் மயில். மிக நீளமான தோகையை கொண்ட சேவல் மயிலோடு தான் பெண் மயில் சேர விரும்பும்….இதனால் சேவல் மயில்களுக்குள்,

“யாருக்கு நீண்ட தோகை?” என்கிற போட்டி நடக்கிறது. மிகவும் இனிமையாக பாடத்தெரிந்த ஆண் குயிலோடு தான் பெண் கூடும், இதனால் குயில் ஆண்களுக்குள் பாட்டு திறமையில் போட்டி நடப்பது உண்டு……….இப்படி உலகில் எல்லா ஜீவராசியிலும் பெண்ணை கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாய் வெளிபடுத்துவைதை போலவே, மனித ஆண்களும் தங்கள் இனபெருக்க உறுப்பை ஒரு “வீரிய விளம்பரமாய்” வெளிபடுத்த ஆரம்பித்தார்கள்

இதனால் மனித ஆணின உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான் மிகவும் நீளமாக இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது. இத்தனைக்கும் மனித பெண்ணின் ஜனன குழாய் என்னவோ எல்லோருக்குமே அதே பத்து செண்டிமீட்டர் தான், இதனுள் சென்றடைய அதே பத்து செண்டிமீட்டர் நீளமுள்ள கருவி இருந்தாலே போதும், ஆனால் போட்டி என்று வந்து விட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும். இதனால் மனித ஆணின உறுப்பு நீளத்தில் பல வேறுபாடுகள் ஏற்பட, இத்தனை வேறுபாடுகள் இருப்பதால் ஆண்களுக்குள் இது குறித்த ஒரு போட்டி மனப்பாண்மை உண்டானது.

ஆடைகளே இல்லாத அந்த காலத்தில், மிக சுலபமாய் தூரத்தில் இருந்தே ஒரு ஆணின் அளவுகளை கணக்கிட்டு, அவனை தரம் பிரித்திருக்க முடியும். பெண்கள் இதை எல்லாம் சட்டை செய்கிறார்களோ, இல்லையோ. ஆனால் ஆண்கள் மத்தியில் யாரும் சொல்லித் தராமலேயே இந்த ஒப்பீடு ஆரம்ப காலம் துவங்கி இன்று வரை நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. தன் நீளத்தை நினைத்து கவலைபடும் ஆண்கள் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றும் பெரும்பாலான ஆண்களின் சுயமதிப்பீடே அவர்களின் இந்த அளவை பொருத்து தான் இருக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு இது குறித்த தாழ்வு மனப்பாண்மையே ஏற்படுவதும் உண்டு. ”அளவை அதிகரிக்க ஒரு மாயஜால வைத்தியம்” என்று யாராவது போலி டாக்டர் பொய்யாக, ஒரு பிட் நோட்டீஸ் ஆடித்து ஒட்டினாலும் உடனே அதை நம்பி, இதற்காக பணத்தையும் நேரத்தையும் செல்விட தயாராக இருக்கிறார்கள்.

ஆடை இல்லாத அந்த காலத்தில் பெண்களும், அவர்களை விட அதிக மும்முரமாய் ஆண்களும், வெறும் பார்வையை வைத்தே எதிரில் இருக்கும் ஆணை மிக துல்லியமாய் அளவிட முடிந்தது, அதனால் அதில் போலித்தனங்கள் இருந்திருக்க வாய்பில்லை. ஆனால் ஆடை அணியும் கலாச்சார மாற்றம் ஏற்பட்ட உடனே, “யாருக்கு தெரிய போகுது, பேராண்மை மிக்கவனாகத்தான் காட்டிக்கொள்வோமே” என்ற போக்கு தலை தூக்க ஆரம்பித்தது. அவரவர் ஊரில் இவ்வடிவில் ஏதாவது வஸ்து தென்பட்டால் போதும், உடனே ஆண்கள் எல்லாம் அதை தேடிப்பிடித்து, எடுத்து, வந்து மிக சரியாக தங்கள் இடுப்பில் செருகி வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் குச்சி, காய், கொம்பு, மரவுறி மாதிரியான phallic symbolsசை அணிய ஆரம்பித்த ஆண்கள், வேட்டையில் இன்னும் தேர்ச்சி பெற ஆரம்பித்ததும், பிற மிருகங்களின் பல், தந்தம், தோகை, நகம், உலர்ந்த உடல் பாகம் என்று பலதையும் அணிய ஆரம்பித்தார்கள். இந்த சின்னம் அணியும் போக்கிலும் போட்டிகள் தலைதூக்க, அதிக சமூக அந்தஸ்து இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்பவன் இருப்பதிலேயே மிக நீளமான இந்த phallic symbolலை அணிய யத்தனித்தான். உலோகம் கண்டுபிடிக்கபிட்ட பிறகோ, கத்தி, வாள், அரிவாள், அதற்கு அப்புறம் வந்த காலத்தில் துப்பாக்கி, ரைஃபில், பிஸ்டல், என்று இந்த சின்னங்களை இடுப்பில் மாட்டிக்கொண்டார்கள் ஆண்கள்.

இந்த சின்னங்களை எல்லாம் கண்டு பெண்கள் உண்மையிலேயே மயங்கி போனார்களா என்பது கேள்விக்குறி தான், ஆனால் மிக வலிமையான சின்னங்களை அணிந்த ஆண்களை கண்டு பிற ஆண்கள் அடங்கிபோனதென்னவோ உண்மை தான். ஆனால் கலாச்சாரம் வளர வளர, இப்படி பகிரங்கமாய் விளம்பரபடுத்துவது அநாகரீகம் என்கிற கருத்து வலுபெற்றது. அதனால் நார்மலான ஆண்கள் இப்படி அப்பட்டமாய் வெளிபடுத்துவதில்லை. ஆனால் மனநலம் குன்றிய நிலையில் பல ஆண்கள் இதில் அப்பட்டமாய் ஈடுபடுவதை பார்க்கலாம். இவர்களை தவிற மற்ற ஆண்கள் எல்லோரும், மிக நாசூக்காக தங்கள் திறமைகளை கொண்டு தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயல்வதையும் மனித வரலாறு முழுக்க காணலாம். கற்களை செதுக்கும் ஆற்றலை பெற்றதுமே ஆண், மிக பெரிய ஆணின உறுப்பு வடிவங்களை செதுக்கி வைத்தான்…………இன்றும் இது போன்ற பல புராதன ஒபிலிஸ்க் சிற்பக்கற்களை எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் மாதிரியான நாடுகளில் பார்க்கலாம்.

இதன் பிறகு பெருமதங்கள் தோன்ற ஆரம்பிக்க, சமன துறவிகள், நிர்வாண கோலமாய் இருப்பதையே ஒரு மகத்தான் ஆண்மீக முக்திநிலை என கருதினார்கள். அதனால் ஆணின் நிர்வாணம் மீண்டும் அவன் பேராற்றலை பறைசாற்றுவதாக கருதப்படலானது. கிட்ட தட்ட 700 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் வேறு மூலைகளில் கிறுத்துவ பெருமதம் பரவ ஆரம்பித்தது. சமணம், நிர்வாணத்தை மேம்பட்ட ஒரு சாதனையாக கருதிய காலம் போய், ஆடை இல்லாத நிலையை “மஹாபாவம்” என்று கருதும் மனநிலைக்கு மனிதர்கள் மாறி இருந்தார்கள். அதனால் கிறுத்துவ தேவாலயங்கள் நிர்வாணத்தை தடை செய்தன. ஆனாலும் மனித ஆணின் ஆரம்பகால குணம் மாறி இருக்கவில்லை………..விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன.

அதற்குள் இந்தியாவிலும் சமய மாற்றம் ஏற்பட்டிருந்தது, சமணம் தோற்று, சைவம் ஓங்க ஆரம்பித்தது. சமணத்தில் முழு ஆணின் நிர்வாணம் வணக்கத்திற்குரியதாய் போற்ற பட்டிருந்தது. சைவத்திலோ இது இன்னும் நுணுக்கமாகி, ஆண் உடலில் மற்ற பாகங்களை நீக்கிவிட்டு, வெறும் அவனுடைய இனக்குறியை மட்டும் வழிபாட்டிற்கு உரியதாக கருதும் மனநிலை உருவாகியது. லிங்க வழிபாடு பரபலமாக, தன் வீரியத்தையும் ஆற்றலையும் செல்வாக்கையும் காட்டிக்கொள்ள முயன்ற ராஜ ராஜ சோழன் மாதிரியான அரசர்கள், இருப்பதிலேயே மிக பெரிய அளவு ஆணினச் சின்ன லிங்கத்தை ஸ்தாபித்து, தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயன்றார்கள். இன்றும் பல நாடுகள் தங்கள் பேரந்தஸ்த்தை காட்டிக்கொள்ள, மிக பெரிய கோபுறம், என்று மெனக்கெட்டு ஆணினக்குறி வடிவில் கட்டுவதை பார்க்கிறோமே. அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம்.

இப்படி எல்லாம் ஆணினச்சின்னங்களை விஸ்தாரமாய் விளம்பரபடுத்தினால் மற்ற ஆண்கள் பயந்து போட்டியில் இருந்து விலகிக்கொள்வார்கள்; பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்

24 comments:

Ponchandar said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள். வாழ்த்துகள் ! பாராட்டுகள் ! !

Unknown said...

மற்றதுஎல்லாம் சரி,
ஆனால் ராக்கெட், குண்டுக்ளின் வடிவத்துக்கு , எரொடைனமிக்ஸ் தியரி தான் காரணம், ஆண் குறி பற்றிய போட்டியாக இருக்க வாய்ப்பு இல்லை.

நம் அப்துல் கலாம் ராக்கெட் விஞ்ஞானிதான். அவர் ராக்கெட்டை வடிவமைத்தது பெண்ணை கவரவா?
அப்படி அவர் எந்த பெண்ணை கவர்ந்தார் ?

டி அர் டி ஓ வில் பெண் விஞ்ஞானிகள் நிறைபேர் உள்ளனர்.
அவர்கள் ஏன் பெண்களை கவர வேண்டும் ?

ராகெட் பற்றி நாசாவின் தளம்:
http://exploration.grc.nasa.gov/education/rocket/bgmr.html

உங்களில் ஒருவன் said...

மேடம் நான் உங்களுடைய ஆனந்த விகடன் பகுதியை படித்து வருகிறேன், தாங்கள் மனித உடலை படித்த வகையில் மனித உடலின் பகுதிகள விளக்கலாம், ஆனால் பரிணாமம் என்பது ஒரு கோட்பாடே அன்றி அறுதியிட்ட அறிவியல் சான்று அல்ல, பரிணாமத்தை பற்றி விவாதிக்க தாங்கள் தயாரா? பார்க்கவும் http://ethirkkural.blogspot.com/

Anonymous said...

இந்த பதிவில் முரண் படுகிறேன். சில தவறான புரிதல் கொண்டுள்ளீர்கள்.
இயற்கையிலேயே ஓவல் வடிவப் பொருட்களுக்கு பிரேத்தேக குணங்கள் உண்டு. காற்றை கிழித்து பறக்க முடியும்[விமானம்] நீரை பிரித்து செல்லமுடியும்[நீர்முழ்கி] டுயல் அக்ஷன் செய்யும் சுழல் விசையின் வடிவமும் ஓவல்[சுரிய மண்டல சுற்றுப் பாதை]

Vettipayal said...

வணக்கம் டாக்டர்,உங்களின் ஆண் பெண் தொடரை அனந்த விகடனில் தொடர்ந்து படித்து வருகிறேன் விளக்கமான கட்டுரைகள் அருமை,உங்களின் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது.இன்றுதான் இந்த blog கண்டேன்.keep it up

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மனித இனம் இன்றும் ஆண்குறியை மையப்படுத்தியிருப்பது வியப்பாக இருக்கிறது.

puduvaisiva said...

ஷாலினி பல இடங்களில் புரிதலின் முரன்பாடுகள் உள்ளது.

விட்டில் பூச்சிகள் விழ சிறு வெளிச்சம் போதும்
அதுவே இயற்கை அதுபோல் செயற்கை மலர்களை - தேடி
தேனீக்கல் செல்வதில்லை.
வீரமும் விவேகமும் இங்கு தமிழனின் அடையாளம்
இதில் அரசனும் ஆண்டியும் ஒன்று...

Anonymous said...

லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள்
அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும்
சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது
சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு
வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும்,
ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய
மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும்
அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம்.
சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம
வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும்
ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.
``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்''- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள்
உரைக்கப்பட்டுள்ளன.
சிவலிங்கத் திருமேனி குறித்து பலர் பலவாறாகக் குறிப்பிடுகிறார்கள்.
அவரவரர் இயல்புக்குத் தக்கபடி அனுமானிக்கின்றனர்.
குதர்க்கிகள், அசூயைக்காரர்கள், விபரீத மனம் படைத்தவர்கள், அல்ப
புத்தியால் ஆண்டவனை அளக்க நினைப்பவர்கள் தங்களின் அறியாமை மற்றும்
பொறாமையால் தவறான பல கருத்துகளை கூறுகிறார்கள்.
காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்கிறபடி சிலர், சிவலிங்கத்
திருமேனியை மனித உறுப்புடன் தொடர்பு படுத்தி மயங்குகின்றார்கள்.
மதத்துக்குள் இருக்கும் பிரிவினைப் பூசலும், சில அந்நியர்களின்
அறியாமையுமே இதற்குக் காரணம் எனலாம்.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய்,
ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும்
இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது

Anonymous said...

Doc,

Check out this post.

Anonymous said...

LINGATHTHAI AANURUPPUDAL OPPIDUTAL THAVARU.OTHU VERU ITHU VERU

Anonymous said...

நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் சொந்த எண்ணங்களே தவிர விஞ்ஞானம் அல்ல

valai said...

நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் சொந்த எண்ணங்களே தவிர விஞ்ஞானம் அல்ல

jothi said...

//அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம்.//

அதுதான் கார‌ணமா என‌த்தெரிய‌வில்லை. ஆனால் அறிவிய‌ல்பூர்வ‌மான‌ த‌க‌வல் இருக்கிற‌தா என‌ப்பார்க்கிறேன்,..

jothi said...

ப‌திவிற்கு ந‌ன்றி

Anonymous said...

மிகவும் அருமையான, அனைவரும் அறிய வேண்டியதொரு பதிவு இது... இன்னமும் பப்புவா நியு கினி, வனுவாத்து நாடுகளில் இருக்கும் பழங்குடி மக்களில் உள்ள ஆண்கள் ஆணுறுப்பு போனற வடிவத்தை ... கட்டி நடனமாடுகிறார்கள். இன்னமும் நம் இந்து மதத்தில் லிங்கம் என்பது ஆண் குறி என்றே பலருக்கு தெரியாமல் இருக்கின்றார்கள் ... அவை யாவும் PHALLIC, FERTILITY SYMBOLS என்று தெரிவதில்லை ... தொடருங்கள் .. மனித மனத்தின் ஆணிவேரை தொட இப்பதிவுகளை தொடர்ந்துப் படித்து வருகிறேன் ...

Anonymous said...

//பரிணாமம் என்பது ஒரு கோட்பாடே அன்றி அறுதியிட்ட அறிவியல் சான்று அல்ல,//

@ ஷாபிக் பரிணாமம் என்பது கோட்பாடையும் தாண்டி பல்வேறு உண்மைகளை அது நிரூபித்து விட்டது. சில சமயங்களில் மதமும் அறிவியலும் ஒன்றிவிட முடியாது. அப்போது மதத்தைக் கடந்து நாம் சில விடயங்களைச் சிந்தித்துத் தான் ஆக வேண்டும் ....

Kiruthigan said...

தங்களின் எழுத்துகள் ஆனந்தவிகடனில் படித்திருக்கிறேன்... இன்று இங்கு தங்களை சந்தித்தது மகிழ்ச்சி... பின் தொடர்கிறேன்...
நன்றி டாக்டர்

flower said...

no use of length without any strength.

yavano oruvan said...

@ flower, சூப்பரு! உங்க புருஷன் கிட்ட இருந்து தெரிந்துக் கொண்டதொ?

jayakumar said...

//இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான் மிகவும் நீளமாக இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது.//if it is true,then what about donkey?....please clear this doubt..

kamal salem said...

DR nallathan iruku irunthalum ennala nampa mudila any way padikkalam

kamal salem said...

ok dr nalathan iruku

ரூபன் said...

இதில் லிங்கத்தை பற்றி நீங்கள் கூறியது சரியாக இருக்கலாம்.

ஆனால் கோபுரங்கள், ரொக்கெட் என்பன ஆணுறுப்பை பார்த்து கட்டப்பட்டது என்பது முழு அபத்தம்.
நான் ஒரு பொறியியலாளன். இவை ஏன் இப்படி கட்டவேண்டும் என்பது சரியான விளக்கங்கள் உண்டு.

இவ்வாறு கட்டாவிடில், விமானம் பறக்காது, கட்டடங்கள் விரைவில் இடிந்து விடும். அதன் அமைப்பு மிகவும் வேறுபட்டால் கட்டும்போதே இடிந்துவிடும்.

உங்கள் பதிவுகளை பலர் வாசிப்பதுடன் அவற்றை முழுமையாக நம்புகிறார்கள்.
ஆகையால் தயவுசெய்து சரியான தகவல்களை மட்டுமே தரவும். தவறென கருதும் தகவல்களை தயவுசெய்து அகற்றி விடவும்.

N.Nandhu said...

linga shape having so many special properties, as i am an engineer i know about that very well, your understanding was poor in this, and also i noticed you try to dominate gents in this particular post, please try to change that approach, otherwise i can understand the readings and browsing behind this post that subject to appreciation.